Everything posted by goshan_che
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தும்பளையான். உங்கள் மாமாவின் கருத்தே எனதும். இடையில் எண்ணத்தை கைவிட்டிருந்தாலும், இப்போ ஓய்வூதிய காலத்தை பாதியளவு ஊரில் கழி(ளி)க்கலாம் என்ற நினைப்பு மீண்டும் துளிர் விடுகிறது. பிகு ஓய்வூதியம் எடுக்க இன்னும் 20+ வருடம் இருக்கு. இதெல்லாம் ஜுஜிபி. 🦁+💃 கதையையே எவரும் கேள்வி கேட்கவில்லை. இப்படி எல்லாம் மினெகெடாமலே….🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர். இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு. திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான். அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு. நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான். சரியே. அவர்களுக்கு அவர்கள் முதிசத்தை பார்க்க அதிக விலை போட்டால், வர மாட்டார்கள். ஆகவே சலுகை விலை. ஆனால் இங்கே எம்மிடம் கொள்ளை அடித்ததை விண்சர் மாளிகையில் போய் பார்க்கவே எமக்கு டிக்கெட் போடும் இவர்களுக்கு அங்கே ஏன் சலுகை விலையில் கொடுக்க வேண்டும். இந்தியாவிலும் இதேதான்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
என் வழி 3ம் வழிதான். ஆனால் 2 க்கு 1 பரவாயில்லை.
- IMG_6004.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
காங்கேசந்துறை-கொழும்பு தொடருந்து. இப்போ தற்காலிகமாக அனுராத புரம் வரை ஓடுகிறது. குளிரூட்டிய பெட்டி. யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் துட்ட காமினி, எல்லாளனின் நாற்பதாண்டு கால ஆட்சியை போரில் வென்ற பின் அமைத்த ருவான் வலிசாயா. சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரசு மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லாளன் சமாதி என நம்பப்பட்டு, இப்போ விகாரை என புதுக்கரடி விடப்படும் தலம். நான் ஒரு வீரவணக்கம் போட்டு வந்தேன். இசுறுமுனி காதலர்கள். இதை பார்க்க போகும் வெளி நாட்டுக்காரர் 10 டொலர் அழுகிறார்கள். பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள் 🤣.
- IMG_6067.jpeg
- IMG_6052.jpeg
- IMG_6048.jpeg
- IMG_6033.jpeg
- IMG_5895.jpeg
- IMG_5896.jpeg
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இப்படித்தான் கடனை அடைக்க முடியும் 🤣. அண்மையில் நடந்த ரோயல் தோமியனில் ரணில் பேசும் போது, “எல்லாரும் கையில் பியர்ரோடு நிக்கிரியள், சந்தோசம், போத்தலுக்கு 18% வட் வரும்” என கூறினார். உள்ளூர்காரனையே இப்படி உருவினா, டொலர் பார்ட்டியள சும்மா விடுவார்களா?
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஓம் Sir, சோசல் காசில் வாழும் நான் என்ன காலையில் எழும்பி வெட்டி முறிக்கவோ…. நல்ல தூக்கம். இனி எழும்பி அடுத்த கொலிடே எங்கே என ரிசேர்ஜ் பண்ணப்போறன். நீங்கள் எப்படி, பகல் முழுக்க வழமை போல் களவுதானோ?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் அப்படி சொல்லவுமில்லை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இது சரியான தகவலாக தெரிகிறது. அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம். நன்றி. நல்லதுக்கு காலமில்லை🤣
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
கூகிள் டிரான்சிலேட்டர் பாவித்திருபார்களோ….சேர்?🤣
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
என்ன மறந்து விட்டீர்களா Sir பெருமாள் ? நான் இருப்பது இலங்கை அரசின் புலாய்வு கொடுப்பனவில், அல்லவா? ஆகவே யூனிவேர்சல் கிரெடிட் எல்லாம் எனக்கு, சும்மா நொறுக்கு தீனி வாங்கும் காசு🤣.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தட்டி கேட்கவேண்டும். ஒண்டில் ஆதாரம் இல்லாமல் “தட்டி”. இல்லை என்றால் சட்ட ரீதியாக. இப்போ கைக்கொண்ட இரெண்டுக்கும் இடைப்பட்ட வழி, நல்லதை வொட தீயதையே தரும். தருகிறது. 👆🏼👍
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நான் நினைப்பது: இங்கே எடுத்தால் 20, அங்கே எடுத்தால் 30 எனில். பேசாமல் அங்கேயே போய் எடுக்கலாம்? எடுக்கும் போது - கவுண்டரில் விளக்கத்தை கேட்டு வந்தால். அடுத்த முறை போகும் போது அங்கே அல்லது இங்கே எடுக்கலாம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
என்ன ஜோக்கா, இரெண்டும் இருந்தாலும் ஆட்கள் கூட என்றால் வரிசையில்தான் நிற்க வேண்டும். போன மாசம் No Limit இல் ஒரு 20 நிமிடம் கியூவில் நிண்டுதான் வாங்கினேன். எங்கள் சிறி @தமிழ் சிறி அண்ணா கூட இலங்கை போன நேரம் நோ லிமிட்டின் முந்திய கடையான ஹவுஸ் ஆப் பேசனில் வரிசையில் நின்றுள்ளார், அது செய்தியாக யாழில் வந்தது. அவர் போன்ற செல்வ சீமான்களே வரிசையில்தான். இங்கே நிற்பவர்கள் ஏழைகள் இல்லை. ஆனால் ஆட்களை அனுப்பி உடுப்பு வாங்க பெரும் முதலைகளமில்லை. பாஸ் இவர்கள் ஏழைகள் இல்லை. உழைக்கும் வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம். போற போக்கில் இலங்கையில் கார் வைத்திராத எல்லாரும், பஸ் ரயிலில் போவோர் எல்லாரும் ஏழைகள் என அடிச்சி விடுவியள் போல🤣. இது எல்லா நாட்டிலும் தானே? கனடாவில் நீங்கள் எப்படி? வாரம் முழுக்க குப்புற படுத்து கிடந்து விட்டு, வார இறுதியில் மரத்தில் காசை புடுங்கியா பொருட்கள் வாங்குவது🤣?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நாம் வாழுவதில் கூட இல்லாத சந்தோசம் இன்னொருவன் வீழ்வதில் உள்ளது - என்பது தொன்று தொட்டு தமிழர் நம் வாழ்வியல்தானே🤣. #சும்மா பகிடிக்கு🙏 இல்லை ஏழைகள் இந்த கடைகளில், இந்த படம் காட்டும் தோற்றத்தில் இருக்க மாட்டார்கள். அதே போல் அவர்கள் நாளுக்கு நல்ல உடுப்பு எடுத்தாலும், இப்படி பட்ட கடையில் இன்றி, நடைபாதை கடையிலோ அல்லது துணி வாங்கி தைத்தோதான் போடுவார்கள். நீங்கள் கனடா வந்த பின் ஏழ்மை, ஏழைகளை நூதனகாட்சி சாலையில்தான் பார்த்தீர்களோ? அப்படி இருக்கிறது உங்கள் ஏழ்மை பற்றிய புரிதல்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான். ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது. 2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம்.