Everything posted by goshan_che
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அவதானம் வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் உயரும் அபாயம் என இலங்கை அரசு அறிவிப்பு!
- IMG_7456.jpeg
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
அண்மையில் இலங்கை ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, வடக்கு கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் 52 பாகை செண்டிகிரேட் வரை வெப்பம் கூடும் வாய்புள்ளதாம்.
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா🤣.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
அங்கே அப்படி இருப்பதால், விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது தெலுங்கன் என அவர் மீது இன ஒதுக்கல் செய்து மனம் நோகடித்தது சரி? இதுவா உங்கள் வாதம்? அது சீமானின் உள்ளாடையை சக கருத்தாளர் தேடுகிறார் என்று வந்த மிக கேவலமான கருத்துக்கு வந்த பதில். கே(அ)வலத்தை தந்தவனுக்கே (ருக்கே) அதை திருப்பி கொடு 😎 👍
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST] தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
ஓம் மற்றப்பக்கம்தான்….அத்தோடு இப்போ வட அரைகோளத்தில் கோடை ஆரம்பம் என்பதால் பறவைகள் இடம்பெயர்ந்தும் இருக்க கூடும். மற்றப் பக்கத்தால் போனாலும் சன நடமாட்டம் இன்றி கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். குறிப்பாக மம்மல் நேரம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
🤣 இதில் அடி சறுக்க என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவா. தெரிந்ததை எழுதுவதும், தெரியாததை அறிவதும்தானே கருத்துக்களத்தின் நோக்கம். இப்போ உங்கள் தயவால் இதை அறிந்து கொண்டேன். என் குடும்ப உறுப்பினர் விரைவில் போகிறார். உதவியாக இருக்கும். அதே போல் யாழ்கள உறவுகளுக்கும்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்தை கேலி செய்தமைக்கு நிகரான குற்றம் தான் தமிழன் என உணர்ந்து, செயலால் காட்டிய மனிதனை “நீ வந்தேறி, வாழலாம் ஆள முடியாது, நீ எல்லாம் சி எம் கனவு காண்பதே தமிழ் பிள்ளைகளுக்கு அவமானம்” என இன ஒதுக்கல் செய்தது என்பது என் அபிப்பிராயம்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நேற்று பார்ட்டியில் நிண்டதால் கேள்விக்கு உடனே பதில் போடவில்லை, மன்னிக்கவும். கருணாநிதி ஈழத்தமிழரை கருவறுத்தார். மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வைத்து விஜயகாந்த் உட்பட ஏனைய தெலுங்கு வம்சாவழிகள் மீது வன்ம அரசியல் செய்ய வேண்டியதில்லை. இங்கே நீங்கள் தமிழ் நாட்டு தமிழரை குற்றம் சாட்டுவதாக நினைக்கிறேன். ஆனால் விஜயகாந்த் ஆட்சியில் அமராமைக்கு மக்கள் மட்டுமே காரணம் இல்லை. அவரின் கூட்டணி முடிவுகளும், பிரேமலதா+சுதீசின் அப்பட்டமான “பெட்டி” டீல்களும் முக்கிய காரணம். மனநிலை மோசமானபின் யாரும் அவரை சீ எம் ஆக்க விரும்பமாட்டார்கள் - அந்த வகையில் அது சரியான முடிவே. அவரின் மனநிலையை கேலி செய்தது தப்புத்தான்.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
மிகவும் விரிவானதும், சிந்தனையை தூண்டக்கூடியதுமான பதில்கள். நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி. புலி தன் வரிகளை மாற்றாது என்பார்கள் - அதே போல் ஜேவிபி தன் இனவாதத்தை, கம்யூனிசத்தை கைவிடுமா? நான் NPP ஐ ஒரு முகமூடி என்றே பார்கிறேன். அத்தோடு - இனப்பிரச்சனைக்கு ஏனையோர் போல இவர்களும் ஒரு தீர்வைத்தானும் அறிவிக்கவில்லையே?
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
🤣 நிச்சயமாக ஒரு 1ம் உலக நாட்டில் இருந்து, சுற்றுலாவாக அல்லாமல் ஒரு கடமையாக போக வேண்டிய நிர்பந்தத்தில், 15 மணியளவை பிரயாணத்தில் செலவழித்து, இயல்பாகவே சுற்றுலா போவதில் நாட்டமில்லாத ஒருவர், நான்கு நாளைக்கு - இலங்கைக்கு அல்ல, சொர்கத்துகே போயிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்🤣. தவிரவும் எனது கட்டுரையை விளங்கி கொள்ள - இலங்கைக்கு கொவிட்டுக்கு முன்னான வருடங்களில் போன அனுபவம், கொவிட்/அறகளைக்கு பின் நாடு இருந்த நிலமை என்பனவற்றை அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்போதுதாம் 2024 இல் இலங்கை நாம் எதிர்பார்த்த படி மோசமாக இல்லை என எழுதியதை விளங்கி கொள்ளலாம். நீங்கள் இப்போதுதான் கொழும்பு ஏர்போர்ட்டுக்கே முதல் தரம் போனேன் என்கிறீர்கள் - ஆகவே நீங்கள் இலங்கையை “சொர்காபுரி” என நான் சொல்லியதாக தப்பாக விளங்கி, அதனால் ஏமாற்றம் அடைந்துள்ளீர்கள். இதனால்தான் என்ன விசயங்கள் அதிருப்தியாய் இருந்தன என படம் போட்டு விளக்க முடியுமா என கேட்டேன். உங்கள் அதிருப்திக்கான காரணம், தூசு, மாசு, wet-bathrooms/toilets, டாய்லெட் டிசு இல்லை (இன்னொரு திரியில் வெள்ளைகாரர் குறை பட்டதாக எழுதி இருந்தீர்கள்) இந்த வகை 1st world complaints என்றால் - அதற்கும் நான் எழுதியதுக்கும் சம்பந்தமில்லை. அதுதான் இலங்கை கொவிட்டுக்கு முன்பும், பின்பு எப்போதும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
கவலையை விடுங்கள் எந்த பதட்ட நிலையும் உருவாகவில்லை🤣. ஆனால் எனது எழுத்தை “மிகைப்படுத்தல்” என விபரித்தால் அது என் integrity சார்ந்த விடயம் என்பதால் பதில் கொஞ்சம் காரமாக வரும் 🤣. இரெண்டு திரிகளிலும் ஒரே விடயத்தையே அலசுவதால் overlap சகஜம். ஆனால் இங்கே நீங்கள் எழுதியதை பார்க்க இவை typical first world complaints என்பதாக படுகிறது. மீண்டும் சொல்கிறேன் இந்தியாவுக்கு கீழே இருக்கும் தீவு 3ம் உலக நாடான இலங்கை - நியூசிலாந்து இல்லை🤣. உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம். நானும் இந்தியாவிலோ, இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதில்லை. போய் இறங்கியதும் முதலில் முகத்தில் அடிப்பது வெக்கை, அடுத்தது வியர்வை நாற்றம். பயணக்களைப்பு, சீதோசண மாற்றம் - நிச்சயமாக முதல் மூன்று நாள் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கும். ஆனால் இவை அந்த நாடுகளின் அடிப்படை பண்புகள். சுற்றுலா போகும் நாம் தான் அவருக்கு பழக வேண்டும் அல்லது வேறு எங்காவது போக வேண்டும்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣. படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு. பிகு பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது. இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது. மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை. அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது. ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு. 1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும். 2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம். ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம். 3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும். ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல. ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும். உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல். Edited November 2, 2023 by goshan_che
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
தேடுகிறேன். இதே போல் வட மாநிலத்தவர் பற்றிய திரி ஒன்றுதான்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
மன்னிக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு. 4 நாளில் எவராலும் எந்த நாட்டை பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது. குறிப்பாக மத்திய தரை கோட்டை அண்டிய 3ம் உலக நாடுகளுக்கு மேற்கில் இருந்து போனால், அதுவும் நீங்கள் நீண்ட காலத்தின் பின் போயுள்ளீர்கள் - அந்த சூழலுக்கு இசைவாக்கம் அடையவே 3 நாள் எடுக்கும். எனக்கெல்லாம் இந்தியா போனால் முதல் மூன்று நாள் “ஏன் இங்கே வந்தோம்” என இருக்கும். ஆனால் மூன்று கிழமை முடிந்து இலண்டன் திரும்பும் போது, போகத்தான் வேண்டுமா என இருக்கும். நீங்கள் 4 நாள் துயர நிகழ்சி, ஒரு மாசு நிறைந்த நகரத்தில் ஓடி திரிந்து விட்டு - வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை வைத்து ஒரு நாட்டின் நிலையை எடை போட முடியாது. அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் டேஸ்ட் வேறுபடுவதும் உண்டு. உதாரணமாக நான் சொன்ன கொழும்பு புதுக்கடை தெருவோர கடைகளில் எனது வீட்டில் என்னை தவிர ஏனையோர் சாப்பிட மாட்டார்கள். அந்த சூழலையே பார்த்து முகம் சுழிப்பார்கள். அதே போல் ஒரு மண் கடையில் ரொட்டியும் பருப்பும் - பலர் இதில் என்ன இருக்கு என யோசிப்பார்கள். ஆனால் அதையே பலர் அசலான இலங்கை அனுபவம் என அனுபவிப்பார்கள். சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு. சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா இலங்கையில் அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
நீங்கள் முன்னர் சொன்னதை நான் சரியாக விளங்கவில்லை. நீங்கள் டிஸெம்பார்கேசன் கார்டை ஏலவே ஒன்லைனில் பதிந்து விட்டு போயுள்ளீர்கள். ஈழப்பிரியன் அண்ணை போல. அப்படியானோருக்கு பிரச்சனை இராது என நினைக்கிறேன். நான் இந்த கார்ட்டையே மறந்து போனேன். அங்கே போனதும் கார்ட்டை பார்த்ததும்தான் நினைவு வந்தது. பேனா - எப்போதும் பயணத்தில் பேனா எடுத்து செல்வது அவசியம். குறிப்பாக 3ம் உலக நாடுகளுக்கு போகும் போது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
உங்களுக்கு, முன்னர் விமான நிலையத்துள் படையினர் சோதனைகளை மேற்கொள்ளும் சமயம் (சென்னை விமானத்தில், போர்ட்டிங் பாஸ் எடுத்த பின் பொதி, உடல் சோதனை செய்வார்கள்) மொழி தெரியாத தமிழர்கள் இதே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஒன்றில் தெரியவில்லை அல்லது மறந்து விட்டீர்கள். அதேபோல் திரும்பி செல்லும் சமயம் அங்கே தமக்கு நிகழ்ந்த அலுப்புகள் பற்றியும் இங்கே பலர் எழுதியுள்ளனர். இராணுவத்தின் அளவை குறைக்க கேட்பதுதான் நாம் செய்ய வேண்டியது. மேலும் மேலும் இராணுவ மயப்படுத்துவதை அல்ல.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
ம்ம்ம்…ஏதோ நான் சொன்னது போலவே சிருஸ்டிக்க பார்கிறீர்கள். இலங்கை முதல் 5 சுற்றுலா நாடுகளில் உள்ளது என்பது ஒரு நம்பகமான இணையதளத்தின் செய்தி. அது மட்டும் அல்ல, இணையத்தில் trip advisor போன்ற இடங்களில் போய் வாசித்தாலும் - அதில் எழுதுபவர்கள் கூட seasoned travelers. இந்த அளவு இல்லாவிடிலும் நானும் கணிசமான அளவு பிரயாணித்துள்ளேன். இத்தனை பேரும் பொய் சொல்கிறார்கள் நீங்கள்தான் உண்மை சொல்கிறீர்கள். Numbers don’t lie. இலங்கைக்கு போகும் வெளிநாட்டவரின் அளவே போதும் உண்மை எது என விளங்க. இங்கே முதலிலேயே சொல்லி உள்ளேன். நான் இலங்கையில் நிலமை எதிர்பார்த்ததை போல மோசம் இல்லை. என்றே எழுதினேன். அதை இலங்கை சொர்கபுரி என நான் சொல்லியதாக பலர் தாமாகவே கற்பனை செய்து கொண்டனர். அதை போலவே நீங்களும் டுபாய், சிங்கப்பூர் போல் இலங்கை மாறிவிட்டது என நினைத்துப்போனால் உங்கள் தப்பான விளக்கத்துக்கு நான் பொறுப்பில்லை. இலங்கை ஒரு 3ம் உலக நாடு - அது சுவிஸ் ஆகி விட்டது என நான் எங்கும் எழுதவில்லை. அப்படி விளங்கி இருந்தால் அது வாசிப்பவரின் பிழை. பிகு. உண்மையில் இலங்கையில் உங்களுக்கு அதிர்ச்சி வைத்திய தந்தவை எவை - என்பது பற்றி போட்டோ ஆதாரத்தோடு நீங்கள் எழுத போவதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
🤣திரியினை அப்படி உயிர்பித்து…சந்தையில் அதை விற்கவா முடியும்🤣. நான் எனது திரியில் சிறிலங்கனில் பண வரத்து இல்லை என்பதால் - பராமரிப்பை சரிவர செய்வதில்லை எனவே அதில் போக வேண்டாம் என்றே எழுதினேன். இங்கே வியன்னாவில் மெடிக்கல் எமெர்ஜென்சியில் இறங்கிய விமானம், அதன் பின் தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளாகி, ஹீத்துரு மூடும் நேரத்தை தவற விட்டு, மறுநாள் வந்துள்ளது. இது எதை காட்டுகிறது? கொஞ்சம் விலகி போனாலே தாக்கு பிடிக்க முடியாதளவு “மட்டு மட்டாக” விமானத்தை ஒப்பேத்தி ஓட்டுகிறது சிறிலங்கன். இதைதான் என் கட்டுரை எச்சரித்தது. உங்கள் அதிர்சிக்கான காரணங்களை, நான் எழுதியது போல் படங்கள் சகிதம் ஒரு திரி திறந்து எழுதுங்கள் - ஆராய்வோம். பயப்படாதீர்கள், இன்னொருவரின் திரி நீள்கிறதே என நான் வயித்தில் குத்தி, கிணத்தில் விழ மாட்டேன்🤣. இங்கே பலரின் திரிகளை நீட்டுபவனே நான் தான்🤣.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
கவலை வேண்டாம் ப்ரோஸ். பக்க விழைவு அரிதானது. Rare. சில வேளை ஊசி போட்டிருக்காவிட்டால், இப்ப நாங்கள் எவராவது ஒருவரை நினைவு திரியில்…நல்லவர்…வல்லவர் என எழுதிகொண்டிருப்பம். அதிகம் நியூரொபின் எடுத்தாலும் பக்க விழைவு வரும். எல்லா மருந்து பக்கெட்டிலும் எழுதி இருக்கும். நாமிருக்கும் நாடுகளில்தான் எத்தனை இறப்புகள் - இருப்பினும் யாழ்களத்தில் அத்தனை உறவுகளும் பத்திரமாக கொவிட்டை தாண்டி வந்துள்ளோம் எண்டால் அதன் மிக பெரிய காரணி, தக்க பாதுகாப்பை எடுத்தது + ஊசி போட்டது. #Just chill
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இல்லை சார்….அங்கே இதே கொள்கையை முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது சார்….இப்போதைக்கு முயற்சிக்கும் வாய்ப்புகளும் இல்லை சார். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே சார்? முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் விபரமாக, வட கிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவில் வேறு எங்கும் யாரும் போய் வாழலாம். கிட்டதட்ட ஈயுவில் இருக்கும் freedom of movement போல், இந்தியாவில் மாநிலங்கள் இடையே உள்ளது. இந்த freedom of movement பெரும்பான்மை பிரித்தானியருக்கு (எனக்கல்ல) பிடிக்காத படியால் பிரிட்டன் பிரெக்சிற் கேட்டு வெளியே வந்தது. இப்போ இங்கே ஐரோப்பிய எழுந்த மானமாக வந்து குடியேற முடியாது. அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாடு இருக்கும் வரை இதை தடுக்க முடியாது. ஆக, TN-exit தான் ஒரே வழி. எந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சி இதற்கு தயார்?
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
மெய்தான்… விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட….அவர் இறந்ததும் அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு, பாட்டெல்லாம் படிச்சு சீன் போட்டார் எண்டால் பாருங்கோவன்😎.