Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 2009 க்கு பின், முன்னர் ஒரு காலம் இருந்தது - ஓமந்தைக்கு வடக்கே போக வெளிநாட்டுக்காரர் கொழும்பில் போய் ஆமி கிளியரன்ஸ் எடுக்க வேணும். பாவனையாளர் 100% புலம்பெயர் தமிழர்தான். அப்போ ஆங்கிலம்/ சிங்களம் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் இடையில் கிடைத்த சேவை வேறுபாட்டுக்கும், இப்போதும் மொழி தெரியாதோர், மாபிள் பீச், புறாத்தீவு, காங்கேசந்துறை பீச் போனால் கிடைக்கும் அரச படையினரின் உபசரிப்பையும் மனதில் வைத்து சொல்கிறேன். வீசா டெஸ்கில் ஆமிக்காரனை இருத்தினால்….கோவிந்தா….கோவிந்தா தான். உண்மையில் விமான நிலைய பாதுகாப்பில் கூட விமானப்படையை நீக்கி விட்டு தனியார் துறையை ஈடுபடுத்த போவதாக அண்மையில் வாசித்தேன். யுத்தம் இல்லாத நாட்டில் இராணுவம் முகாமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இராணுவ பிரசன்னத்தை சிவில் வாழ்க்கையில் குறைக்க கோரும் நாமே - மேலும் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதை “வழமை” என ஆக்குவதை ஊக்குவிக்க கூடாது. காரணம் அட்டையை நிரப்பாமல் போய் வரிசையில் நிண்டால் - கவுண்டருக்கு போய் பாஸ்போர்ட்+ETA ஐ கட்டினால், அட்டை எங்கே என கேட்டு, மீள போய் நிரப்பி வாருங்கள் என கியூவில் பின்னுக்கு அனுப்புவார்கள். எனக்கு முன் நின்ற தம்பதிக்கு இந்த முறை இப்படி நடந்தது.
  2. ஓம். முன்னர் ஏனைய நாடுகளிலும் இருந்தது ஆனால் இப்போ வழக்கொழிந்து போய்விட்டது. கம்போடியாவில் 2017 இல் நிரப்பிய நியாபகம். அதுதான் ETA அப்ளிகேசனில் எல்லா தகவலும் கேட்கிறார்களே, மீண்டும் ஏன் இந்த கார்ட் என்பது தெரியவில்லை. Red tape தான். அதே போல் விமானம் இறங்க முன்னர் ஸ்பிரே அடிப்பதும் இலங்கையில் மட்டும்தான். ஏதோ ஒரு பழைய சட்டம் இதை கட்டாயம் ஆக்கியுள்ளதாம்.
  3. மிகச் சரியான கூற்று அண்ணை. இப்பவும் அவர்களில் பலர். இந்தியா=இந்து= தமிழ் என்றே பார்க்கிறார்கள். உண்மையில் இப்போதும் விசா கொடுப்பதா இல்லையா என்ற முடிவை எடுப்பது இலங்கை இமிகிரேசன் அதிகாரிகள்தான். கவுண்டரில் இருந்து தரும் விண்ணப்பத்தை வாங்கி processing செய்வது மட்டுமே VFS. ஆனால் இதற்கே இந்த குறி குதிக்கிறார்கள். எனது கட்டுரையில் இனவாதம் எப்படி உள்ளது என கேட்ட கேள்விக்கு, அப்படியே உள்ளது, கொஞ்சம் உறங்கு நிலையில் உள்ளது என பதில் எழுதினேன். அதற்கான சாட்சி இதுதான்.
  4. நானும் account creation page வரைக்கும் போய்விட்டு, விட்டு விட்டேன். விரைவில் ஒரு குடும்ப உறவு போவார். அப்போ சொல்கிறேன்.
  5. 🤣 இந்த குற்றம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர், யேசு, புத்தர் இம்மூவரும் எந்த குற்றமும் எப்போதும் செய்யாதவர்கள் என்பது பிரபஞ்ச உண்மை🤣
  6. ஒ…சரியான லுச்சா கூட்டம்🤣. போவோரில் பெரும்பாலானோர் ஒன்லனில் எடுத்து விட்டே போவார்கள். அவ்வளவு பேரையும் ஒன் அரைவல் எடுக்க வைத்தால் - அமளி வந்தே தீரும்🤦‍♂️. தகவலுக்கு நன்றி.
  7. கோசானின் பயண கட்டுரையில் தாமிரா சொன்ன அட்வைஸை கேட்டிருந்தால் இந்த அவலம் வந்திராது🤣.
  8. எப்போதும் பஞ்சி பிடிச்ச கூட்டம் சிலது ஒன்லைனில் எடுக்காமல், அதே விசாவை on arrival எடுக்கும். ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள். இதில் ஒன்லைனில் ETS எடுக்காமல் வருவோர் - இமிகிரேசன் கவுண்டர் போக முன், அதன் அருகில் இருக்கும் on arrival கவுண்டருக்கு போய் ETS ஐ எடுத்து கொண்டு பின் இமிகிரேசன் கவுண்டர் போக வேண்டும். இந்த on arrival counter இல் தான், VFS வந்த பின் தாமதம் ஏற்படுகிறது. நான் நினைக்கிறேன் முன்பு இந்த கவுண்டரில் இருப்பதும் இலங்கை இமிமிரேசன் அதிகாரிகள் என்பதால் அவர்கள் அந்த இடத்தில் வைத்தே ETS ஐ issue பண்ணினார்கள். இப்போ VFS பணியாளர் form ஐ எடுத்து போய் இலங்கை அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்கள் ETS ஐ issue பண்ணி, திரும்பி VFS இடம் கொடுத்து, அதை மீள பயணிகளிடம் கொடுக்க நேரம் எடுக்கிறது. ஒன்லைனில் எடுத்து போனால் இந்த கால தாமதத்தை தவிர்க்கலாம்.
  9. வள்ளலார் போற்றத்தக்கவர். போற்றப்பட வேண்டியவர். ஆனால் சர்வதேசமையத்தை அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் அரசு அமைக்கலாம். பிகு ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் vs வள்ளலார் பாரிய தத்துவார்த்த மோதலாக அமைந்துள்ளது. முற்போக்குவாதிகள் வள்ளலார் வழியிலும், பிற்போக்குவாதிகள் நாவலர் வழியிலும் நின்றுள்ளனர். ஆர்வம் இருப்போர் தேடிப்படிக்கவும்.
  10. இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே… ப் பூ ஹா…ஹா.ஹா…🤣
  11. செத்தும் கொடுக்கும் சீதக்காதி கேப்டன் விஜயக்காந்த்❤️. #தெலுங்கண்டா என யார் கூறினாலும் #தமிழண்டா ❤️ என செயலால் நிருபிக்கிறார். இறந்த பின்பும்.
  12. என்னப்பா இது…திரிக்கையே படுத்து கிடக்கிற “சோஷலிஸ்ட்” - என்னை போய் திரியை வாசிக்க சொல்லிறியள்🤣. புதிய VFS நடைமுறைக்கு எந்த கருத்தாளராவது முட்டு கொடுத்த உதாராணத்தை போடுங்களேன்?
  13. ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.
  14. கங்கை காங்கேசந்துறை வந்தாலும், சிவகங்கை வாறது சந்தேகம்தான்🤣 உவயண்ட கப்பலில் போகவேணும் எண்டால் டயட்டில் இருக்க வேணும் போல கிடக்கு🤣
  15. பொதுவாக தரசான்றிதழ்களை அரச அமைப்பு, அல்லது தொழில்சார் கூட்டமைப்பு (industry body) வழங்குவதுதானே வழக்கம்? இவர்கள் தரத்தை உறுதி செய்ய இவர்களின் தராதரம் என்ன? பார்க்க ஒரு தனியார் கம்பெனி போல இருக்கிறது.
  16. எனக்கு ஒன்று விளங்கவில்லை. யாராவது தரவு பூர்வமாக தெரிந்தால் விளக்கவும். இலங்கையில் 16 வயது வரை கல்வி கட்டாயம். ஓ லெவல் வரை படித்து விட்டு ஏன் இவ்வளவு தொகையாக கொழுந்து பறிக்க போகிறார்கள்? கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய இடங்களில் உடல் உழைக்கும் வேலை செய்தாலே இதை விட அதிகம் சம்பாதிக்கலாம். தொழிலாளருக்கு கேள்வி இருந்தால் சம்பளம் தானாக கூடும். இவர்கள் வேறு துறைகள் (ஆடை தொழில்சாலை, உணவகங்கள், கட்டுமானம்) என நகரின் - கொழுந்து பறிக்க ஆள் இல்லாமல் போகும். உயிரே போனாலும் வடகிழக்கு தமிழர், சிங்களவர், சோனகர் கொழுந்து பறிக்க போவதில்லை. பிகு 1700 என்பது மிக சொற்பமான ஊதியம். இதையே போராடி பெறும் நிலையில் இந்த மக்கள். போராடியோருக்கு வாழ்த்து.
  17. உங்கள் பார்வையில் - மக்கள் என்ன செய்ய வேண்டும்? சிரிப்பு குறி கடைசி வசனத்துக்கு.
  18. தகவலுக்கு நன்றி. இவர்களை பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் ஆரம்பத்தில் இதை இந்தியர் ஒருவர் தொடக்கி இருந்தாலும் 2021 அமெரிக்க கம்பெனியான Blackstone Inc இதன் 75% பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. Kuoni எனும் லக்சறி சுற்றுலா முகவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதில் சீஈஓ சாக இருந்த இந்தியர் ஒரு side project ஆக ஆரம்பித்த விடயம், இன்று சுமார் 2 பில்லியன் டாலர் நிறுவனம். https://en.m.wikipedia.org/wiki/VFS_Global#:~:text=In October 2021%2C Blackstone acquired a majority stake in VFS Global.
  19. யாழில் இதை எதிர்க்க யாழ் என்ன இலங்கை பாராளுமன்றமா🤣. ஏன் இந்தியன், யூகே உதாரணம் கொடுக்கவில்லை? ஏன் என்றால் அப்போ இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போ செய்தியாகியபடியால் விபரங்கள் அலசப்படுகிறது. மேலே திரியில் யாருமே சிறிலங்காவுக்குகோ, VFS ஐ உள்ளே கொண்டு வந்தமைக்கோ முட்டு கொடுக்கவில்லை. மாறாக எல்லாருமே முன்னர் இருந்த முறை சீராகவே இயங்கியது, அரசியல்வாதிகள் கொமிசனுக்காக VFS ஐ கொண்டு வந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றே எழுதியுள்ளார்கள். நீங்களா முட்டு கொடுப்பதாக கற்பனை செய்து காற்றில் கம்பு சுத்துகிறீர்கள் சகோ. இன்னும் இந்த கேள்விக்கு பதில் வரவில்லை @MEERA
  20. இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார். தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம். நிச்சயமாக இது கொள்ளைதான். இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர். இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25. நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும். புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?
  21. படங்கள் அருமை. சுண்டிகுளம் போனால் பல சைபீரியன் கொக்குகளும் நாரைகளும் நிக்குமே? படம் எடுக்கவில்லையா?
  22. $50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். கொள்ளைதான் வேறு என்ன. இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது. ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும். தொடர்பான திரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.