Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அண்ணை அவசரத்தில செய்தியை வடிவா வாசிக்கேல்லையோ? முன்னர் கொடுத்த வருமான வரி தண்ட நோட்டீசுக்கு எதிரான விஜை இடைக்கால தடை பெற்றார் - அதன் வாய்தா விசாரணை இன்று. விஜை காங்கிரஸ் கூட்டணி வருமா தெரியாது. ஆனால் ஈழத்தமிழர்களின் ரத்தம் குடித்த கட்சி, இன எதிரிகள் என தன்வாயால் கூறிய காங்கிரஸின் தற்போதைய மாநில தலைவர் செல்வபெருந்தகையுடன் ஒரே மேடையில் பேசி, அண்ணன் தம்பியாக கட்டி குழாவி, அணில் என இருவரும் சக தமிழ் தேசியம் பேசும் விஜை நக்கல் அடித்த தருணம் (இன்று நடந்தது).
  2. இதில் எனக்கு உடன் பாடில்லை. ஈழதமிழரிடம் திரள்நிதி எடுத்து, தலைவர் மாவீரரை வைத்து கல்லா கட்டும் சீமானின் அரசியலும்… தனது நிலை, இடம், பொருள், காலம், ஏவல் அறிந்து, ஈழ தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜை சொல்வதும் ஒன்றல்ல. வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், நெடுமாறன், வீரமணி போல (பல விமர்சனங்கள் இருந்தாலும்) ஈழதமிழர் பற்றி உண்மையான கரிசனை கொண்ட பல அரசியல்வாதிகள் முன்பே சொன்னவைதான் இவை. ஒரு தமிழக அரசியல்வாதி ஈழதமிழருக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது வரவேற்க பட வேண்டியது, அனைவரையும் ஒரே சட்டியில் போட்டு நாமே வறுக்க கூடாது. 200 INR கிடைக்கும். ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂
  3. இது சம்பந்தமான திரியில் அலசி, அண்ணனை கிழித்து காயப்போட்டிருக்கு…நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும். சீமான் விஜையை முன்பே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பது உண்மை. ஆனால் ஸ்டாலின், சீமான் சந்திப்புக்கு பிந்தான் மிக கீழ்தரமாக விமர்சிக்கிறார். #வாங்கின காசுக்கு அதிகமாவே கூவிறாண்டா கொய்யால மொமெண்ட் சீமாம் சபரீசனை சந்தித்தார் என செய்தி போட்டது யுடியூப் ஊடகம் அல்ல. தமிழகத்தின் முண்ணனி நிறுவனமான விகடன். இது பொய்யானால் - சபரீசன், சீமான் இருவருக்கும் அது பெரிய அவதூறு. ஆனால் இரு கள்ளரும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் கள்ள மெளனம் காப்பது - விடயம் உண்மை என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கு. அண்ணி விடயத்தில் பாஜக வக்கீலை பிடித்து உச்ச நீதிமன்றை வளைத்த சீமான் - விகடன் மீது வழக்கு போட முடியாது என்பது நொண்டிசாட்டு.
  4. அவர்களுக்கும் டி ஆர் பி க்கு விஜைதான் தேவைபடுகிறார் போலும் 🤣. யார் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர் விடயம் எப்போதும் தமிழக தேர்தல் அரசியலில் ஒரு non issue தான். 83, 2009 இல் கூட அப்படித்தான். ஆனுர ஆட்சியில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் பலருக்கு கூட இது ஒரு non issue ஆகிவிட்ட நிலையில், புலம்பெயர் திரள் நிதிக்கு ஆசைபடுபவர்கள் மட்டும்தான் புலிகள், தலைவர் என கூவி கூவி வித்து கல்லா கட்டுவார்கள். படத்துக்கு 250 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வரும் விஜைக்கு திரள்நிதி-யாசகத்தில் ஆர்வம் இல்லாதிருப்பது வியப்பல்ல.
  5. அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣). முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?
  6. மொழிபெயர்ப்பு விஜையை தமிழ் நாட்டில் அரசியல் செய்ய வேண்டாம் என சொல்லவும் 🤣. பிகு விஜையும் ஒரு சராசரி அரசியல்வாதியே. தமிழ் நாட்டில் மீன் வள கொள்ளையர் = அப்பாவி மீனவர்கள் என்ற மாபெரும் விம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதை சர்வகட்சி கூட்டத்தில் ஏற்று கொண்டாலே ஒழிய, தனி ஒரு கட்சி இப்படி சொல்வது அரசியல் தற்கொலைக்கு சமனானது. விஜை அரசியல் தற்கொலை செய்யவில்லை, எனவே அவர் எமக்கு ஆதரவாக எழும்பும் சிறு குரல் கூட வேண்டாம் என சொல்லும் நிலையிலா நாம் இருக்கிறோம்?
  7. 👇 கிட்டதட்ட 15 வருடமாக சீமான் சொன்ன அதே விடயங்களை சொல்லி, அதனால் விஜைக்கு வாக்கு போடுவேன் என்கிறார் இந்த பெண். ஆனால் சீமான் மீது சாமன்ய மக்களுக்கு இந்த நம்பிக்கை வரவில்லை. இதற்கு சீமானின் குழப்ப, உள்ளடி, அநாகரீக, வெறுப்புவாத (மறைமுக சாதிய) அரசியல் பெரிய காரணி என்றாலும், உள்ளுணர்விலேயே அவர் ஒரு நம்பதகாதவர் என்பதை மக்கள் கண்டு கொண்டார்களோ என நான் எண்ணுகிறேன். https://youtube.com/shorts/0kurU1alclU?si=84CF_4ADbB3LiTRo
  8. அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣 பத்தோடு பதின்றோகவேனும் முக்கிய சந்தர்பங்களில் குரல் கொடுத்துள்ளார். போராட்ங்களிலும் கலந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று நேற்றைய நாகை உரையில் நான் அவதானித்த விடயம். ஏனையை பிரச்சனைகளை பற்றி விஜை பேசிய போது எழுந்த மக்களின் சத்தம், ஈழத்தமிழர் பற்றி சொன்ன போது அதே அளவில் வரவில்லை. இதுதான் எப்போதும் தமிழ் நாட்டின் மனநிலை. 2009 இலும் கூட. ஆகவே ஒரு அடையாள ஆதரவை மீறி வேறு எதை எதிர்பார்தாலும் அது எம் மடமையே.
  9. ஜெ - தமிழ் நாட்டு முதல்வர்களிலேயே “அதிசயம்” என்றால் அது ஜெ தான். அண்ணாவிற்கு பின் நாவலரை தள்ளிவிட்டு கருணாநிதி வந்ததை விட, எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் முதல்வரானதை விட… அவர் சாகும் போது, எம் ஜி ஆரால் கட்டம் கட்டப்பட்டு அரசியல் அநாதையாக கிடந்த ஜெ கட்சியை கைப்பற்றி எதிர் கட்சி தலைவி ஆனதும், 91 இல் முதல்வரானதும் பெரியதொரு அதிசயம் (miracle). ஏன் ஜானகி ஒதுங்கி போனார்? ஜெயின் மக்கள் ஆதரவு. அரசியலில் மிக சொற்ப அனுபவமே இருந்த ஜெ யை வெல்ல வைத்த ஒரே சக்தி அவருக்கு தானாக கூடிய மக்கள் கூட்டமும் அது வாக்காக மாறியதும் மட்டுமே. “கருணாநிதி ஒரு தீய சக்தி”, “ஊழல் குடும்ப ஆட்சி”, “சொன்னர்களே செய்தார்களா”, “நான் கேட்கிறேன் நீங்கள் செய்வீர்களா” - விஜையின் வியூகம் பல இடங்களில் எம்ஜிஆரை விட ஜெயை பின்பற்றுவதாகவே எனக்கு படுகிறது. எம்ஜிஆரை விட ஜெ யுடந்தான் விஜையின் அரசியல் வரவை ஒப்பிடுவது பொருத்தமானது என்பது என் பார்வை. அவருக்கு கூட்டம் வாக்காக மாறியது. இவருக்கு?
  10. நீங்கள் தமிழ் நாட்டவர் போலவே ஆகிவிட்ட ஒருவர் கட்டாயம் இந்த வித்தியாசம் உணர்திருப்பீர்கள். பொதுவாக, ஒருவன்-ஒருத்தி கான்செப்டுக்கு ஈழத்தமிழர் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழக தமிழர் கொடுப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு. அடிதட்டு, மத்திய, மேல் தட்டு என ஆண்கள் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் இருப்பது அங்கே அப்படி ஒன்றும் அரிதான செயல் அல்ல (ஈழ, புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிடும் போது). ஆனால் அதே இடத்தில் ஒரு பெண் கண்ணை கசக்கினால், சம்பந்தபட்ட ஆணுக்கு அன்று ஆரம்பிக்கும் ஏழரை. அது செபஸ்டியன் சைமனாக இருந்தால் என்னா மாதம்பட்டி ரங்கராஜாக இருந்தால் என்ன. திரிஷா அல்லது சங்கீதா பொதுவெளியில் வந்து புகார் சொல்லாதவரை விஜை ஓக்கே. நான் அறிந்த மட்டில் அப்படி இருவரும் விஜை மீதான வெறுப்பில் இல்லை என்பதே. ஆனால் இதை எப்படியாவது கிண்டி விட ஒரு below the belt அடிக்கு திமுக தயாராவதாக பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
  11. எப்போதும் சொல்லி கொண்டிருக்க நான் “சுமந்திரன் லவ்வர்ஸ்” நோயால் பீடிக்கப்படவில்லை 🤣
  12. சீமானுக்கான பஸ் போயே விட்டது. சீமானை போல் நாளொருவேடம் போட்ட அரசியல் வாதிகள், சாக்கடையான தமிழக அரசியலில் கூட அரிதிலும் அரிது. சீமான் ரஜனிக்கு சொன்னதுதான் இப்போ சீமானுக்கும். வெற்றிடம் சுடுகாட்டிலும்தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் எம்ஜிஆர் என்ற ஒருவரை மட்டும் வைத்து தமிழக அரசியலை எடை போடுகிறோம். எம் ஜி ஆர், திக, திமுகவில் இருந்து அதன் பின் அதிமுக வை தோற்றுவித்தார் மறுக்கவில்லை. ஆனால் ஜெ? எம் ஜி ஆர் காலத்தில் வெறும் பதுமையாக பல வருடம் கழித்தவர். பலவருட சினிமா அஞ்ஞாதவாசத்தின் பின், தமிழாராய்சி மாநாட்டில் நடனமாடி, எம் ஜி ஆரை மீள நெருங்கி, அரசியலுக்கு வந்து சத்துணவு திட்டம், கொபசெ, ராஜ்யசபா என சொற்பகாலம், அதற்குள் எம் ஜி ஆருக்கு தெரியாமல் அல்லது சொல்லாமல் டெல்லியில் லாபி செய்ததால் - முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். எம் ஜி ஆர் சாகும் போது கட்சி ஆர் எம் வி, ஜானகி பக்கம்தான் பெரும் அளவில் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில், மக்கள் ஜெ அணியை ஆதரிக்க, அரசியலில் கொட்டை போட்ட ஆர் எம் வி, நெடுஞ்செழியன், அறந்தாங்கியில் அசைக்க முடியாத திருநாவுக்கரசர், அடிதடி மன்னன் தாமரைக்கனி அனைவரும் ஜெக்கு பின் அணி திரள வேண்டியதாயிற்று. ஒரு திராவிட கட்சியை, ஒரு பிராமண பெண், நடிகை, சில வருட அரசியல் அனுபவம் மட்டும் இருந்த, நுனிநாக்கு ஆங்கில நடிகை, அண்ணா கால அரசியல்வாதிகளை எல்லாம் பின்னே தள்ளிவிட்டு, எம்ஜிஆரின் மனைவியை தள்ளி விட்டு, வெற்றிகரமாக வழிநடத்தவில்லையா? இதே போலத்தான் விஜயகாந்தும். நோய் வாய்ப்படாவிடின், மனைவியை மச்சானை தட்டி வைத்திருப்பின், அவன் முதல்வராக கூட ஆகி இருப்பார். எம் ஜி ஆர்…. ஜெ…. விஜயகாந்த்…. வேறுபட்ட அரசியல் அனுபங்களோடு, தமிழக அரசியல் ஒவ்வொரு படிநிலையில் சாதித்த ஆளுமைகள். விஜை? காலம் நிச்சயம் பதில் சொல்லும். ஆனால் விஜையிடம் தமிழகத்துக்கு தேவையான கொள்கை தெளிவு உள்ளது. பெரியார், அம்பேத்கர், அண்ணா என ஆதரவு வட்டத்தை பெருப்பிக்கும், சிந்தனை தெளிவு இருக்கிறது. நிச்சயமாக அதிமுக+பிஜேபி கூட்டணியில் சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்க்க தயார். ஆனால் பிஜேபியை கொள்கை எதிரி என கூறும் தெளிவு இருக்கிறது. சீமானிடம், அன்புமணியிடம், திருமாவிடம் இல்லாத, எம்ஜிஆர், ஜெ, விஜயகாந்த் இடம் இருந்த 2 விடயங்கள் விஜையிடமும் உள்ளன. மக்கள் இவன் நல்லவன் என நம்புவது சாதி மதம் கடந்து உயர் நிலையில் செயல்படுவது. இந்த இரெண்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் முதல்வராக முடியாது. இவை இரெண்டரையும் சீமான் பாழாக்கி பல வருடங்கள் ஆகிவிட்டன.
  13. ஆனால் பன்னீர், சசி, டிடிவி, எவரையும், அமித் ஷா சொன்னாலும் சேர்பதில்லை என்பதில் எடப்பாடி வென்றுள்ளதாகவே தெரிகிறது. அதேபோல் செங்கோட்டையனும் (தன்னை) மன்னிப்போம், மறப்போம் என அடங்கி விட்டார். அதேபோல் அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியது, டிடிவி மூலம் அண்ணாமலை ஆட ஆரம்பித்த கேமை BL சந்தோஸ் மூலம் தட்டி வைத்துள்ளது என முதல் சுற்றில் எடப்படி ஏறு முகம்தான் காட்டுகிறார். 2 ம் சுற்று - தேர்தலில் அதிமுக சீட்டுகள் எண்ணிக்கை 3ம் சுற்று - தேர்தலின் பின், பாஜக அதிமுகவை “அப்படியே சாப்பிடுவோம்” என சாப்பிடாமல் (வென்றாலும் தோற்றாலும்) எப்படி தடுப்பது. அடுத்த இரு சுற்றுக்களும் மிக கடினமானவை. பார்க்கலாம் உங்கள் பனையூரார் பற்றிய பார்வையில் மாற்றம் ஏதும் வந்துள்ளதா? வேர்க் புரொம் ஹோம், வீக் எண்ட் அரசியல்வாதி இனி புதிய டிரெண்ட்டோ? நாம் தான் பழைய முறையில் பிந்தங்கி விட்டோமோ என நினைக்கவும் வைக்கிறார் பனையூர் கிழார்.
  14. எடப்பாடி அமித் ஷா வீட்டுக்கு அதிமுக தலைகளோடு போயுள்ளார் என நியூஸ் பிரேகிங் ஆன பின்னேதான் அவர் வெளியே வந்தார். போனவர் வரத்தானே வேண்டும். ஆகவே மூடி மறைக்க வாய்பில்லை. எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.
  15. வாளையில் ஆடியவள், வயது போன பின்னும் காலை, காலை ஆட்டுவாளாம்🤣
  16. மாற்று கருத்து இல்லை. இதில் தமிழர் தரப்பில் பிழை இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு அரசாக அவர்கள் தரப்பில்தான் பிழை அதிகம். தெற்கில் ஒரு புராதன சின்னம் - ஒரு சிங்களவர் தனிசொத்தாக இருந்திருப்பின் - தகுந்த சட்ட, நட்ட ஈடு மூலம் அதை மீட்டிருப்பர். யாழில் வீதிகள் போடும் போது கூட இப்படித்தான் செய்தனர். வீதி அவர்களுக்குதேவை. இதை அழிய விட்டால் அவர்களுக்கு நல்லது. உண்மையில் இதை 2010 போய் சுத்தி சுத்தி படம் எடுத்த போது, கொஞ்சம் அருகில் இருந்தோரிடம் பேச்சு கொடுத்தேன். பின்னால் ஒரு கிணறு இருந்தது அதை ஒட்டி வேலிகள் போட்டு மக்கள் தம் இடங்கள் என அடையாளபடுத்தி இருந்தனர். ஆனால் கட்டிடம் காதலர் பெயர் கிறுக்கல்களால் நிரம்பி இருந்தது. ஆனால் கட்டிடம் இருந்த நிலம் வெளிபார்வைக்கு யாரும் உரிமை கோராது இருந்தது. தெற்கு லொரி டிரைவர்கள் தங்கி இருந்தனர். அதன் பின் சில வருடம் போகும் போது போய் பார்க்கவில்லை. 2012 அல்லது 14 இல் கடந்து போகும் போது தொல்பொருள் ஆராய்சி பலகை மாட்டி இருந்தது. 2024 இல் போன போது சில முட்டு கொடுப்புகள் இருந்தன. சில அவதானிப்புகள் பல கட்டுமானங்கள், பூங்காக்களை இதன் அருகிலேயே எழுப்பிய இயக்கம் கூட இதை அப்படியே விட்டார்கள். ஏன் என தெரியவில்லை. இது உண்மையில் சங்கிலியன் கால கட்டிடமா என்பது பலத்த சந்தேகத்துக்குரியது. ஏன் எண்டால் இதில் நான் கண்டது பலது ஐரோப்பிய கட்டிட முறை போல இருந்தது. ஆனால் தெற்காசிய கூறுகளும் இணைந்திருந்தன. முகப்பில் ஒரு பெரிய கல்வெட்டு இருந்தது - இதில் யாரோ சில கிறீஸ்தவ தமிழர்கள் பெயரே பொறிக்க பட்டிருந்தது. ஒரு திருமணம் பற்றிய கிரயம் என்பதாக நினைவு. எனது ஊகம் - இவ்விடத்தில் சங்கிலியன் அரண்மனை இருந்திருக்கலாம். பழைய நல்லூர் கோவிலும் இந்த இடத்தில்தான் இருந்தாக (முத்திரை சந்தையடி) சொல்வார்கள். அதன் அழிவின் பின், இந்த இடத்தை மதம் மாறிய ஒரு உள்ளூர் போர்த்துகேசருக்கு உதவிய, மதம் மாறி அவர்களின் உள்ளூர் ஏஜெண்ட் போல் ஆகிவிட்ட ஒருவருக்கு கொடுத்திருக்கலாம். அவர் அல்லது அவர் வழிவந்தோரே இதை எழுப்பி இருக்கலாம். எனது பார்வையில் இந்த கட்டிடம் 250 வருடத்துக்கு மேற்பட்டதாக தெரியவில்லை.
  17. இதுவே ஒரு புத்த கோவில் எனில் compulsory purchase order மூலம் உரிய நட்ட ஈட்டை கொடுத்து எப்பவோ காணியை வாங்கி இருப்பார்கள். இடிந்து விழும்மட்டும் காத்கிருப்பதே சிங்களத்தின் அணுகுமுறை.
  18. மேலே உள்ள விளக்கம், எழுதியவருக்கும், லைக்கியவருக்கும். 🤣🤣🤣 பொறுப்பு துறப்பு மேலே கருத்தாளரை அன்றி, வாக்கு ஒப்பீட்டு முறையையே அடிமுட்டாள்தனமானது என விளித்துள்ளேன். வாசிப்போர் எப்படி பொருள்கொள்கிறார்கள் என்பற்கு நான் பொறுப்பல்ல🤣.
  19. பரவாயில்லை, இப்போதாவது மலசலம் கலக்காமல் எழுத முயன்றுள்ளீர்கள். வாத்தியார் குட்டு வேலை செய்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் அடி முட்டாள்தனமான வாக்கு எண்ணிக்கை ஒப்பீட்டுக்கான பதில் கீழே. 36 இலட்சம் எடுத்தது 234 சட்டமன்ற தொகுதிகளில் 39 பாராளுமன்ற வேட்பாளர்கள் சேர்ந்து 🤣. சுமன் எடுத்தது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும். யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம். தமிழ் நாட்டின் மொத்த (234 தொகுதி) - ஆறு கோடி முப்பத்தாறு இலட்சம். பிகு மேலே உள்ள தரவுகளை உள்வாங்கினால் (முடிந்தால்)…. ஒரு தனி வேட்பாளர் 5.4 இலட்சம் வாக்காளரிடம் பெற்ற வாக்குகளையும்… 234 தொகுதியில் 39 வேட்பாளர் 6.3 கோடி வாக்காளரிடம் பெற்றதையும் ஒன்றென்ன எண்ணி ஒப்பிடுபவரின் அதி, அதி புத்திசாலிதனத்தை விளங்கி கொள்ளலாம். *2021 இல் திருவெற்றியூரில் சீமான் எடுத்தது 48,000 சொச்சம்.
  20. “விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்! Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST] அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம். நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான். https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்… இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார். சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது. #பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்
  21. எந்த இரு தடவை? 2010 இல் தேசியப்பட்டியல், 2015,20 இல் வெற்றி. 2024 இல் தோல்வி. இதுதான் சுமனின் தேர்தல் வரலாறு. மீண்டும் சொல்கிறேன் சுமன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடும். ஆனால் அரசியல்வாதிகள் மக்காலால் தேர்ந்தெடுக்கபடுவதும் இல்லாமல் போவதும் சகஜம். தந்தை செல்வா கூட காங்கேசந்துறையில் தோற்றார் அல்லவா? அரசியலை விட்டே போனாரா? நீங்கள் சொல்லும் மேற்கில் கூட பல உதாரணக்கள் உள்ளன, உங்கள் பாசத்துக்குரிய டிரம்ப் உட்பட. ஆகவே சுமனுக்கு வந்தால் தக்காளி சோஸ், சீமானுக்கு வந்தால் ரத்தம் என்பது இரெட்டை நிலைப்பாடே. அதைத்தான் அம்பலப்படுத்தினேன்.
  22. இங்கே ஒப்பீடு தமிழரசு, நாதக கட்சிகள் பற்றியதல்ல. கட்சிகள் மேற்கில் கூட ஒரு தேர்தலில் தோற்றவுடன் கடையை சாத்திவிட்டு கிளம்புவதில்லை. இங்கே ஒப்பீடு தேர்தலில் மக்களால் ஒருதடவை தேரப்பட்டு, ஒரு தடவை நிராகரிக்க பட்ட சுமனுக்கும்….போட்ட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் டெபாசிட் இழந்த சீமானுக்கும். கவனிக்கவும். நீங்கள் கூட அரசியல்வாதிகள் பற்றித்தான் சொல்லி உள்ளீர்கள். கட்சிகள் பற்றியல்ல. பிகு ஆட்டுக்குள் மாட்டை விடவில்லை. ஆனால்…. சுமந்திரன் ஒரு தேர்தல் தோல்வியோடு விலகி விட வேண்டும், என மேற்கை ஆதாரம் காட்டும் நீங்கள்… சீமான் எத்தனை தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் அதை ஆதரிக்கும் … இரெட்டை நிலைப்பாட்டை மட்டுமே சுட்டுகிறேன்.
  23. உங்கள் அளவுக்கு எனக்கு சட்ட அறிவும் இல்லை என்பதையும் ஏற்கிறேன் மை லார்ட். ஆனால் சட்டம் நாட்டுக்கு நாடு வேறுபடும். குரானை கிழித்தால் பாகிஸ்தானில் பெரிய குற்றம். சுவீடனில் அது குற்றமே இல்லை. இந்த விடயத்தில் இந்திய சட்டம் ஐரோப்பிய சட்டத்தில் முற்றிலும் வேறுபட்டது. திருமணத்துக்கு முந்திய பாலியல் உறவு சம்பந்தமான இந்திய, ஐரோப்பிய சமூகங்களின் பார்வை மாறுபட்டது, அதையே சட்டமும் பிரதிபலிக்கிறது. ஆனால் இப்போ இந்திய சமூகத்தின் பார்வை கொஞ்சம் மாறுகிறது, அண்மைய உச்சநீதிமன்ற தீர்புகள் இதையே காட்டுகிறன.
  24. உங்கள் அளவுக்கு எனக்கு இந்திய அரசியல் அறிவு இல்லை என்பதை நானும் ஏற்கிறேன். இதை நான் என்றும் மறுத்ததில்லை. அதனால்தான் சீமானை “சின்ன கருணாநிதி” என பத்து வருடம் முன்பே எழுதினேன். அப்போ அதை நீங்கள் கடுமையாக எதிர்தீர்கள். சீமான் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்கும் அரசியல்வாதி அல்ல, கட்டிடத்தை உடைத்து புதிதாக கட்டும் புரட்சியாளன் என துதி பாடுனீர்கள். இப்போ அதே சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி (100 கோடி என்கிறார்கள்) தானும் ஒரு leader அல்ல dealer தான் என்பதை நிறுவி உள்ளார். தம்பிகளுக்கு தொண்டை தண்ணி நஸ்டம், புலம்பெயர் தமிழர் சிலருக்கு திரள்நிதி நஸ்டம். சீமான் மீது பாலியல் வல்லுறவு வழக்கு இன்றும் இந்திய உயர் நீதிமன்றில் உள்ளது. பெரியார் தாயை புணர சொன்னார் என பொதுவெளியில் பொய்யை சொன்னவர் சீமான். ஆதாரம் இல்லாத இந்த குற்றசாட்டு சீமானின் உள்மன பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே. ஆகவேதான் என்பார்வையில் அவர் செ.சை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.