Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. புலிகள் அவர்களை பணயக்கைதிகளாக வைத்து தம்மை காப்பாற்ற முனைந்தால்த்தான் இராணுவம் வேறு வழியின்றி அப்படி நடந்து கொண்டது என குதர்க்கம் பண்ணவும் நம்மில் சிலருண்டு பாத்துக்கதையுங்கோ!
  2. சும்மா அச்சுறுத்தலா, உண்மையாகவா? அவர் கட்டிலாலை விழுந்து வைத்தியசாலையில் அனுமதி பெறப்போகிறார்.
  3. நாட்டிலே தமிழருக்கெதிரான இனவழிப்பு கலாச்சாரம், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்கிறது நேற்று வந்த அர்ச்சுனாவை காரணம் காட்டும் சரத் வீர சேகர முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயல்கிறார். இவர் தெருக்களில் நின்று தமிழருக்கெதிராக விகாரையை சுற்றிவளைக்க கூவிக்கூவி ஆட்களை திரட்டும்போது, நாட்டிலே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கெடவில்லையா? என்ன மாதிரியான புத்திசாலிகள் நாட்டில்?
  4. பதவி அதிகாரம் தமக்கு வேண்டுமாம், அதற்கு மற்றவர்கள் ஆதரவு தரவேண்டுமாம், ஆதரவை கொடுத்து அவர்கள் பதவி பெற்றபின், ஆதரித்தவர்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமாம். அதனாலேயே வீடு குட்டிச்சுவரானது. இது தெரியாதவர்களா ஏனையோர்? ஏன் அவர்களுக்கு பதவியாசை இருக்கக்கூடாதா? சரி, இவர் சொல்லும் பதவி பவர் அதிகாரம் இருந்து இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்? இனிமேல் இவர்களுக்கு என்ன இருக்கிறது பதவி பெற்று மக்களுக்கு சாதிக்க? இவர்கள் பதவியை வைத்துக்கொண்டு வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது போதும். ஏதாவது நன்மை நடந்தாலும் அது தங்களாலேயே நிகழ்ந்தது என்று ஆர்பரிப்பார்கள். மக்கள் முதுகில் ஏறி சவாரி விட்டது போதும், வீட்டிலிருந்து கொட்டாவி விடுங்கள்.
  5. நீங்கள் எப்படி ஒப்பந்தம் எழுதியிருந்தாலும், சிவஞானம் சொல்லியிருக்கிறார், அதாவது தமிழரசுக்கட்சியை இல்லாமல் அழிப்பதற்காக, மட்டந்தட்டுவதற்காக, திட்டமிட்டு தாங்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். கள்ளன் நினைக்கிறது, மற்றவர்களும் தங்களைப்போல் தானென்று. தமிழரசுக்கட்சியை யாரும் வெளியிலிருந்து வந்து அழிக்கத்தேவையில்லை. அவர்களே போதும் அதை அழிப்பதற்கு, பெரும்பாலும் அழித்தே விட்டார்கள். தாங்கள் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவாய்ப்பெற்ற பெரும்பான்மை கட்சி என்று பீற்றிக்கொண்டு தெரிந்தவர்கள், மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கட்சியின் அலுவலகம் சென்று ஆதரவு தாருங்கள் என்று கெஞ்சியதும், பழம் முற்றி பாலில் விழுந்ததுபோல் டக்கிளஸ் ஒரு கேலிப்புன்னகையோடு, பெருமையாய், அகம்பாவமாய் நின்றதை பார்த்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தான் ஏற்கெனவே சொன்னதுதானாம், தமிழ்கட்சிகளோடு இணைந்து செயற்படுவோம் என்று ஆதாரம் வேறு சொல்கிறார். இருக்கட்டும்... அப்போ ஏன் இவ்வளவுகாலமும் இணைந்து செயற்பட முடியவில்லை? ஒருவரை ஒருவர் விமர்சித்து மக்களை ஏமாற்றினார்கள்? அரிய நேந்திரனின் கூட்டத்தில் பேசியவர்கள், ஆதரித்தவர்கள் எல்லோருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியவர்கள், இதற்கு என்ன சொல்லபோகிறார்கள்? பாராளுமன்றத்தேர்தலில் ஒரு விமர்சனம் வைத்தார்கள், அதாவது சில உறுப்பினர் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைந்தவர்கள் அது கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று. இன்று சிவஞானம் சொல்கிறார், ஆட்சி என்பது பவர், அதிகாரம், பதவி, அரசியல். அது இல்லையென்றால் என்னத்துக்கு வாய் பாத்துக்கொண்டிருப்பதற்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்போ சொல்லுங்கள்! யார் பதவியாசை பிடித்தவர்களென்பதை. தனக்குப்பின்னால் தனது பதவிக்கு ஆபத்து இருக்கிறது என்பதையே மறந்து பேசுகிறார். இவர்கள் மக்களுக்காகவா, பதவிக்காகவா அரசியல் செய்கிறார்கள் என்பதை போட்டுடைத்து விட்டார். இனி வருங்காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களுக்காகவோ அவர்களது இலட்சியத்துக்காகவோ அல்லது அவர்களின் விடிவுக்காகவோ செயற்படாது. மக்களின் தேவைக்காக உழைக்கும் தலைவர்கள், கட்சியை உருவாக்கி செயற்படவேண்டும். ஆயனை அழித்தார்கள், துணைபோனார்கள், மக்களை அடிமைகளாக்குவதற்கு. அதனால் பல ஓநாய்கள் உருவாகி அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழரசு என்று கனவு காண்பவர்களுக்கு அனுதாபங்கள். கஜேந்திரனோடோ அல்லது சுமந்திரனுக்கு சவாலானவர்களோடோ தமிழரசுக்கட்சி ஒருபோதும் இணையாது. சுமந்திரன் சொல்வதை, செய்வதை வாய்பொத்தி, காது பொத்தி அவரின் வாய் பாத்து கேட்டுக்கொண்டிருப்பவர்களோடேயே அவர்கள் கூட்டிணைவார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. இப்போ, கஜேந்திரனுக்கு ஒரு வாய்ப்பு, மக்களின் உணர்வறிந்து செயற்பட. தவறினால் எழுபத்தாறு ஆறுகால ஆண்டு அவகாசமெல்லாம் கிடைக்காது. தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்தால்; மக்கள் உங்களை தாங்கிக்கொள்வார்கள் என்பது கடந்தகால அனுபவம்.
  6. உலகம் எங்கே போகிறது? அவர்களை தண்டிக்கக்கூடாது, மற்றவர்களை அவர்கள் தண்டிக்கலாம், தடை செய்யலாம். யார் இவர்கள்? அடாவடி புரியும் வல்லரசுகளின், வாலரசுகளின் சட்டம், நீதியது.
  7. ம், உங்களுக்கு உதவிகளை செய்கிறோம், அதனால் அத்துமீறி உங்கள் கடல் வலயங்களில் மீன்பிடியில் ஈடுபடும் நம் கடற்தொழிலாளரை அனுமதியுங்கள். இவ்வாறே இலங்கை அரசும் எங்கள் நிலத்தில் கடந்து கொள்கிறது, பிச்சை கொடுத்து அடிமையாக்குவது.
  8. தன் இனத்தையே கொத்துக்கொத்தாக கொலை செய்த, செய்ய உதவிய பலபேர் தேர்தலில் நின்று அந்த மக்களாலேயே வெல்ல வைக்கப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றனர் என்றால்; இதுவும் சாத்தியமே.
  9. வக்கத்த அரசியல்வாதிகளுக்கு குழப்பங்களே அரசியல் முதலீடு. இவர்களை சிறைக்கு அனுப்பாவிடில் நாட்டில் குழப்பங்களும் பிரிவினைகளும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தெருவில் நின்று அரசியல்வாதி முதல் காவியுடை தரித்தவர்கள் வரை நாட்டை கொளுத்துவோம், இரத்த ஆறு ஓடப்பண்ணுவோம் என்று ஊழையிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழரின் இரத்த தாகம் எடுக்கிறது
  10. இரண்டுமே மூழ்கப்போகிற படகுகள். அதில் இரு பகுதியினரும் ஏறி சவாரி செய்யத்துடிக்கின்றனர். அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் கூட்டுச்சேர தூது, நாமே மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள், அடுத்த கட்சிகளின் ஆதரவில் ஆட்சியைப்பிடிக்க எந்தப்பேயோடும் கூட்டுச்சேர அழைப்பு. எங்கே இருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் பிழைத்த மாதிரித்தான். சுமந்திரன் அனுரவில் கடுப்பான கடுப்பில் இருக்கிறார். வாழ்த்து சொன்னார், நேரில் போய்ப்பார்த்தார், படம் பிடித்தார், அச்சுறுத்தல் விடுத்தார் ஒன்றுக்கும் அனுராவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அவரோ விடுகிற மாதிரியில்லை. தமிழ் மக்கள்யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுடனேயே அனுரா சேர்ந்து கொள்வார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவருக்கு தேவையில்லை, இவர்களோடு சேர்த்து இவர்களது எஜமானர்களையும் மக்கள் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.
  11. நல்ல முடிவு! பேரினவாத கட்சிகள் வேறு, ஈ. பி. டி .பி. கட்சி வேறல்ல. டக்கிளஸ், இப்போ தனித்து விடப்பட்டுள்ளார், அதில தமிழ்மக்கள் பாசம் பெருகி ஓடுவதுபோல் அறிக்கை, நிபந்தனை வேறு அவருக்கு.
  12. விசாரணை நடத்தி.....? இறந்த சிறுவனை மீட்டுத்தருவாரா? அவனுக்கு நிஞாயம் கிடைக்குமா?
  13. ஆமாம் உண்மை அதற்காகவே யாழ் நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது, தமிழர் தமது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு அவர்களது தொன்மைகள் அழிக்கப்பட்டு புதிதான சரித்திரமும் சின்னங்களும் முளைத்து பரப்பப்படுகின்றன, போதிக்கப்படுகின்றன. அவற்றிற்காக நமது தலைமைகளுக்கு விலைகளும் கொடுக்கப்படுகின்றன. தமிழருக்கெதிராக இனப்படுகொலை நடக்கவில்லை என்றது சிங்களம். அதற்கான ஆதாரம் இல்லை என்றது அவர்களின் கைக்கூலிகள். இன்று அத்தனையையும் தகர்த்து கனடாவில், நடந்தது இனப்படுகொலையே என்று உலகெங்கும் உரத்துச்சொல்கிறது நினைவுத்தூபி. ஒரு சட்ட மேதை, ஆதாரங்களை திரட்டி, உண்மையை நிரூபிக்க தவறிய பட்சத்தில் கனடா செய்து நிரூபித்தது. அதற்கு முதல் கனடாவுக்கு தெரியாதா இதனால் என்ன நடைமுறைச்சிக்கல் வருமென்று? அதற்கு பதிலளிக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, உறுதிப்படுத்திய பின்பே நிறுவுவதற்கு அனுமதி வழங்கியிருப்பார்கள். இவர்களோ அரசியல், வாக்குகள் என்று தங்களது வரலாற்று பதிலை வைத்து கொக்கரிக்கிறார்கள். வேறு நாடுகளெதுவும் விளக்கம் கோரவில்லையே. சரித்திரத்தை அழித்து விட்டோம் மூத்த இனத்தை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று இவர்கள் ஆறுதலடையலாம் இப்போதைக்கு. ஆனால் இந்த நினைவு தூபி உண்மையான சரித்திரத்தை சொல்லும், ஏன் அங்கு இனப்படுகொலை நடந்ததென தேடச்செய்யும் அதை பார்ப்போரை.
  14. சுட்டிக்காட்டியதற்கு நன்றி! தொன்மை என்பது மூத்த, பழைமை, முதல், பெருமை என்று பொருள்படும். இன்னும் பல சொற்களுண்டு. அதை மறைக்கவே எல்லா பின்வேலைகளும் நடக்கின்றன. புதிய சரித்திரம், வாழ்விடங்களில் இருந்து துரத்துதல், கொலை செய்தல், பழைய வரலாற்றுச் சின்னங்களை களவாடுதல் அழித்தல், தடுத்தல், புதிய சின்னங்களை அதிகாரத்தின் மூலம் நிறுவுதல் இவை எல்லாம் சான்றுகள்.. மொழி, மதம், சரித்திரம் இவையெல்லாம் தற்போது சுய நல அரசியலில் பெரும் பங்காற்றுகின்றன, அழிவை ஏற்படுத்துகின்றன. போரில் தான் செய்த கொடுமைகளை மறைத்து தர்மத்தை போதிக்க அசோக சக்கரவர்த்தி கையாண்ட ஆயுதம் பௌத்தம். அதை இலங்கைக்கு தனது மகள் மூலம் கடத்தினார்,அது இலங்கையில் சன்னதம் ஆடுது. சிங்களம் இலங்கையில் அன்றி வேறெங்குமில்லை, அது தோன்றிய இடத்திலேயே இல்லை. ஹிந்தி பேசுகிறர்கள் எழுத்து வேறு மாதிரியானது. அண்மையில் ஒரு பாகிஸ்தானியை எனது வேலை சம்பந்தப்பட்ட இடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்போ என்னுடன் வந்திருந்த இந்தியர் ஹிந்தியில் அவருடன் பேச ஆரம்பித்து விட்டார். நான் விளக்கம் கேட்ட போது, பாகிஸ்தானியர் சொன்னது தான், உருது, ஹிந்தி, பஞ்சாப் அல்லது குஜராத்தி (சரியாக நினைவில் இல்லை) மொழி பேசுவேனென்றார். இதில் ஹிந்தி, உருது இரண்டுமே ஒரு மொழி. அவர்கள் உருது என்கிறார்கள் இவர்கள் ஹிந்தி என்கிறார்கள். ஆனால் எழுத்துக்கள் ஒரே மாதிரியானவை அல்ல, அவர்கள் இடப்பக்கத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறார்கள் என விளக்கமளித்தார்.ஒருவேளை அரபிக் முறை எழுத்துக்களாக இருக்கலாம். இவை அவர்கள் எனக்குச் சொன்ன விளக்கங்கள்.
  15. இதனால் இவருக்கு என்ன நஷ்டம்? இவரை கைது செய்து நாலு சாத்து சாத்தினால் தெரியும் இவரின் வாய்வீரம். தமிழர்மேல் சட்டம் பாயும் என்று அச்சுறுத்தியவர் எங்கே போய்விட்டார்? சட்டம் தவறு செய்யும் எல்லோர் மேலும் பாராபட்சமின்றி பாய்ந்திருந்தால் இவர்கள் எல்லாம் முளைத்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. ஏதோ வடக்கு தன்வீட்டு சொத்துமாதிரி அலறுகிறார்.
  16. இனவழிப்பு என்பது மட்டுமல்ல, புலிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் சிங்களத்தின் இந ஒடுக்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடி தமது நிலத்தையும் பண்பாட்டையும் மக்களையும் விடுவிக்க போராடிய விடுதலை வீரர்கள் என்பதையும் நோக்கி சர்வதேசத்தை நகர்த்துகிறார்கள். இவர்கள் விடும் கண்டனம் கோசம் சவால் எல்லாம் நமக்கு ஆதரவாகவே திரும்புகின்றன. இனக்கலவரம் வெடிக்கும், இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பது, இவர்களது கடந்தகால வரலாற்றுக்கு சாட்சியம். பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற நடத்திய மனிதாபிமானப்போர் என்கிறது. அப்படியெனில் மக்களின் பாதுகாப்பை கருதாமல் அவர்கள்மேல் குண்டுகளை பொழிந்து, அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகளை தடுத்தது ஏன்? அவர்கள் தப்பித்து சென்று உயிர் வாழும் சந்தர்ப்பங்களை மறுத்து, வீதிகளை அடைத்து கெடுபிடிகளை ஏற்படுத்தியதும் ஏன்? அவர்கள் உயிர் காக்க தஞ்சமடைந்த இடங்களை அழித்து அவர்களை விரட்டியது ஏன்? சரணடைந்தவர்களை கொன்றது ஏன்? புலிகள் வெற்றிகொள்ளப்பட்ட பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது ஏன்? அவர்கள் நிலங்களில் அவர்கள் வாழ்வியலை தடுத்து அவர்களுக்கு பொருத்தமில்லாத விகாரைகளை எழுப்பி அவர்களை சீண்டுவது ஏன்? மக்கள் இவர்களிடம் புலிகளுக்கெதிராக முறையிட்டார்களா? பாதுகாப்பு கேட்டார்களா? இன்னுமேன் மாவீரர் தினத்தை நினைவு கூர முண்டியடிக்கிறார்கள்? இன்னும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அப்போ எங்கே தவறு புலிகளிலா சிங்களத்திலா? சர்வதேசம் ஒன்றும் முட்டாளல்ல என்பதை சிங்களம் தனது முடிவின்போது கண்டு அதிர்ச்சியுறும்.
  17. கந்தரோடையில் அன்று விகாரைகள் இருந்தன, அவை சைவ தமிழர்களால் தழுவப்பட்டது. பின் அதனை கைவிட்டு மீண்டும் தமது பூர்வீக மதத்தை தழுவியதாலேயே சைவ கோவில்கள் விகாரைகளாகி விகாரைகள் மறுபடி கோவில்களாகி இன்று சர்ச்சையாகியுள்ளது. அன்று நம் முன்னோர் சிலர் கிறிஸ்தவத்தை தழுவி, கைவிட்டதுபோல். அதையும் தவிர்த்து சிர்த்தாத்தன் சைவத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்க புறப்பட்டு, அவர் சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டது பௌத்தம். அது சிங்கள பௌத்தமல்ல. தமிழ் பௌத்தத்திலிருந்தே சிங்களம் தழுவியது அண்மையில் ஒரு சிங்கள தேரரே கூறியுள்ளார். நிற்க, இந்திய ஜனாதிபதி மோடியே தமிழே தொன்மையான மொழி எனக்கூறி தமிழில் விளித்ததாகசெய்திகள் வந்தது. அப்போ ஏன் இந்த கன்னடர் தமது எதிர்ப்பை காட்டவில்லை?
  18. இப்போதைக்கு இலங்கை செய்யக்கூடியது, வாயை மூடிக்கொண்டிருப்பதுதான். துள்ளிக்குதித்தால் உலகம் முழுவதும் ஆதாரத்துடன் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் நினைவுநாள் அனுஷ்ட்டிக்கப்படும். இனப்படுகொலை நடைபெறவில்லை, அதற்கான போதுமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று விதண்டாவாதம் பண்ணியவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். புலிகள் பயங்கரவாதிகளல்லர் என்கிற உண்மை வெளிவரும். உண்மைகள் மறுக்கப்படும்போது, அவற்றை குழி தோண்டி புதைக்கும்போது, அவர்கள் போடும் மண்ணின் மேலேறி வெளியே வந்து நிலைநாட்டும். மூடிய எல்லைக்குள் சாட்சிகளின்றி மக்களை அழித்து பயங்கரவாதிகளென முத்திரை குத்தி புதைத்த உண்மைகள், கனடாவில் கிளம்பி சிங்களத்தின் குடல் கலங்க வைத்துள்ளது. வேறு வழியின்றி இலங்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை. புலிகளை பயங்கரவாதிகளாகவும், தமிழரின் போராட்டங்களை குலைக்கவும் அனுப்பப்பட்ட முகவர்களாலேயே சிங்களத்தின் முகத்திரை கிழிக்கப்படும் நினைவுத்தூபிகளை சிதைக்க கிளம்பினால். போர் முடிந்த கையோடு, போரில் ஈடுபட்ட இராணுவ தளபதிகளை வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பி வைத்து அழகு பார்த்த முட்டாள்தனம், அவசரமாக, திருட்டுத்தனமாக அந்த நாட்டை விட்டு தப்பியோட வைத்தது. ஏன் அவர்களால் அங்கு நிலைத்து நின்று விசாரணையை எதிர்கொள்ள முடியவில்லை? அமெரிக்க வதிவிட அனுமதியுள்ள கோத்தாவால் அங்கு செல்ல முடியவில்லை? தமிழர் தாயகத்தில் நினைவு நாளை நிராகரிக்கலாம், சட்டங்கள் போட்டுத்தடுக்கலாம் அவை எல்லாம் வெளியில் உரக்கச்சொல்லும். சிங்களம் எத்தனைதான் கத்தினாலும் தன்னை நிரூபிக்க தோற்று விட்டது, அதன் முகவர்களுந்தான். அமைதியாக இருப்பதோடு தமிழருக்கெதிரான அடாவடிகளை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம். இல்லையேல் தானாகவே பொறியில் தலையை கொடுக்கும்.
  19. நானுங்கூட இப்படித்தான் யோசித்தேன். எத்தனை தமிழ்ப் பெற்றோர் பிள்ளைகளை பெற்று, எதிர்பார்ப்போடு வளத்தார்கள். இன்று பிள்ளைகளும் இல்லை, வாழிடமும் இல்லை, தனிமரமாக ஏக்கத்தோடும் வலிகளோடும் ஊமைகளாய் செய்வதறியாது திகைக்கிறார்கள். அதற்கு காரணமானவர்கள் அந்த வலியை உணரவேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும். ஆனால் ஜெ. ஆர் .ஜெயவர்தனா செய்த கொடுமைகளுக்கு சாதாரண மனிதன் போலவே அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாம், அவருக்கும் புற்றுநோய் என நினைக்கிறன். தாம் செய்த அனிஞாயங்களுக்கு வருந்தி தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது அவர்களின் இறுதிக்காலத்தில். ஆனால் யாரும் தங்களை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்வதில்லை. பண்டார நாயக்காவின் வாரிசுகள் அதனை தொடர்ந்தார்கள். அவர் தான் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளவுமில்லை சரி செய்யவுமில்லை. அவரின் மனைவி, மகள், மகன் அதன் வழியே தொடர்ந்தார்கள். சந்திரிகா இப்போ, அந்த தவறை ஒப்புக்கொண்டாலும் சரியான நேரத்தில் அதை செய்யாமல் காலத்தை தவறவிட்டு ஒப்புக்கொள்வதால், அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது. அரசியல் கதிரை ஏறுவதற்கு முன் தமிழருக்கு பிரச்சனையுண்டு, அவர்கள் எங்களால் வஞ்சிக்கப்பட்டார்கள், நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் அவற்றிற்கு முடிவு காண்போம் என வாக்குறுதியளித்து அதை பிரட்டிப்போட்டு, அதன் மேலே அரசியல் செய்து வருகிறார்கள் தற்போது வரை. குற்றம் செய்பவர் தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சரியென விளக்கமளித்து போதித்து வந்தால், அந்த வினை கட்டுப்பாடின்றி வளர்ச்சியுற்று இறுதியில் வீழ்ச்சியில் முடிவடையும் அதுவரை வீரியத்துடன் இருக்கும். அது அறமென போற்றப்படும் பின்பற்றப்படுபவர்களால்.
  20. இவராவது கட்சியை விட்டுப்போவதாவது. அப்படியிருந்திருந்தால் எப்பவோ போயிருக்க வேண்டுமே, ஏன் ஒட்டிக்கொண்டு இருந்தார்? பதவியாசை! இவர் சுமந்திரன் ஆளுமல்ல, சுமந்திரன் இவர் ஆளுமல்ல. ஒவ்வொருவரும் தம் நலனுக்காக ஒருவரை ஒருவர் பாவிக்கிறார்கள். இரண்டு கட்சி கூட்டத்திற்கு போகவில்லையாம் பிறகு போனவாரம், ஒன்று கூட்டத்திற்கு போகாததின் காரணத்தை சுட்டிக்காட்டி பிழையை திருத்திய பின் கூட்டத்திற்கு போயிருக்க வேண்டும், இல்லையேல் அன்றே கட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும். தான் ஓரத்தில் பேசாமல் இருந்தவராம். இவர் தலைவர்? இனிமேல் மாற்றிக்காட்டுவாராம், யாப்பை திருத்த முடியவில்லையாம், ஆனால் தலைவர் எப்படி? இந்தக்கேள்வியை விடுங்கோ, அதற்கு என்னால் பதில் சொல்லமுடியாது என நழுவுகிறார். அப்போ தலைமை என்பது பதவி மட்டுந்தான் செயற்பட தேவையில்லை, பதில் சொல்லத்தேவையில்லை, இது இவரின் விவாதம். வழக்கு போட்டவர் மீளப்பெறுவதற்காகவா என கேட்க்கிறார். இதுவரையில் இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒன்றுதானும் மீளப்பெறவில்லையா அல்லது சிவஞானத்திற்கு அறளை பிறந்து விட்டதா? இவர் ஒரு தலைவர் அவரை ஒரு பேட்டி. இன்று ஒரு பேட்டி கொடுப்பார் நாளை அதை மறுத்து வேறொரு பேட்டி கொடுப்பார். நேர்மையான நீதியான கட்சி என்று மக்கள் வாக்கு போடுகிறார்களாம். மக்கள் வாக்கு போடுவார்கள் என்பதற்காகவே இங்கு ஒட்டிக்கொண்டு இருந்து வேறு கட்சி தாவுபவர்களும் வேறு கட்சியிலிருந்து இங்கு வந்து ஓடிக்கொள்கிறார்களே தவிர இவர்கள் யாரும் உண்மை நீதியுள்ளவர்களல்ல. யார் பெரியவன் என்பதே கட்சிக்குள் இவர்களின் போட்டி.
  21. சிவநேசதுரை சந்திரகாந்தனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் வெளிவருமா?
  22. ஆயுதமேதுமில்லாமல் தங்கள் வாழ்வை கொண்டுசென்ற மக்களை இனவழிப்பு செய்து, தப்பியவர்களை கப்பலில் ஏற்றி விரட்டியதை மனிதாபிமானம் என்பீர்களா? தங்கள் இனம் அழிக்கப்படுவதை தடுக்க ஆயுதம் ஏந்தியதை பயங்கரவாதம் என்பீர்களா? தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தனியார் காணியில் விகாரைகள் எழுவதை தடுத்தீர்களா? இனவாதம் கக்கியவர்களை தண்டித்தீர்களா? தங்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களை சொந்த இடங்களில் குடியேற்றினீர்களா? காணாமல் ஆக்கியவர்களை உறவுகளிடம் ஒப்படைத்தீர்களா? போர்குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களாலேயே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர். கடிதம் எழுத்துவதாலேயோ, கண்டனம் தெரிவிப்பதாலேயோ நாட்டில் சுபீட்ஷத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நீங்கள் நினைத்தால்; உங்கள் அறம் பற்றியபுரிதலில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களுக்கு அறத்தை கற்பித்தவர்கள் தவறாக போதித்து வழி நடத்தியுள்ளார்கள். காசுக்கு வழக்கு பேசுவதற்கும், மக்கள் மேல் தொடுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் உங்களது புரிதலும் குற்றம் சாட்டுதலும். நீங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அதன் பின் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரா என்பதே கேள்வி. ஆமா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சிங்களம் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் உங்கள் முகவர்களாகவே செயற்பட்டிருக்கிறார்கள். அதையே காலங்காலமாக செய்து வருகிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை எங்களுக்கு. சட்டத்தை, அதிகாரத்தை எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தும் கனடாவில் பிரிவினைவாதம் தலைதூக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதை செய்யாமல் விட்டு, மற்றைய இனத்தின் சுதந்திரத்தை, வாழ்விடத்தை அபகரித்ததனாலேயே பிரச்சனை தோன்றியது. பிரச்சனையின் தோற்றுவாயே சிங்களம், பௌத்தம் என்கிற வெறியே. அதை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணாதவரை நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். மற்றைய இனத்தின் பாரம்பரியம், உரிமையை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களை சீண்டிக்கொண்டிருந்தால் சமாதானம் ஏற்படாது. உண்மை நீதி என்றால் என்னவென்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு நீதியமைச்சர் பதவி ஒரு கேடு. சரியாக சொன்னீர்கள். நீங்கள் நாட்டில் வன்முறைகளை தூண்டுவதும், இனங்களை பிரித்தாழுவதும், இனமத முறுகலை ஏற்படுத்துவதும் நாட்டை அழிப்பதும் உங்கள் அரசியல் தேர்தல் ஆதாயங்களுக்காகவே!
  23. எப்படியாவது நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி தம்மையும் தமது ஊழல்களையும் மறைத்து ஆட்சியை பிடித்து விடமாட்டோமா என்று ஒரு கூட்டம் அலையுது. இதை அனுர எதிர்த்து நடவடிக்கை எடுத்தால், அவருக்கெதிராக மக்களை திரட்டி அவரை ஆட்சியிலிருந்து விரட்டிவிடலாம் என்கிற முனைப்போடு இறங்கி வேலை செய்யுது. வேலையே இல்லாமல் தெருவில் கொக்கரித்துக்கொண்டு சுகம், பதவி, பணம் அனுபவித்தவர்கள், இப்போ சட்டம், விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் பழைய ஆயுதத்தை கையிலெடுத்து இருக்கிறது. இதில சமாதானத்துக்காக போரிட்டோம், மனிதாபிமான முறையில் போரிட்டோம், நல்லிணக்கம், இந ஒற்றுமை பற்றி பாடம் வேறு. அந்தபிக்குவை பிடித்து விசாரித்து, தண்டனை வழங்கி, புத்த அங்கியை பறித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிக்குகள் மத பணியை விட அரசியல் செய்வதை தடுக்க வேண்டும். இதை சரி செய்வது இலகுவான காரியமல்ல. "இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது." பணம் குறையுது, செல்வாக்கு சரியுது. அதை எதிர்கொள்ள திராணியில்லை, உழைத்து வாழ உடம்பு இடம்கொடாது, மீண்டும் கொள்ளையடிக்க முயற்சி இது. பயங்கரவாத சட்டம் எதற்கு இருக்கிறது, பயன்படுத்த எதற்கு தயக்கம்? இவர்கள் தயக்கம் அவர்களுக்கு தைரியம்.
  24. அற்ப சொற்ப நன்மைகளை காட்டி எங்களை அடிமைகளாக்க வேண்டாம், எங்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம், எங்களை விட்டு விலகி இருக்கச்சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு நன்மையானதை நாங்களே பெற்றுக்கொள்வோம். வலிய வந்து எங்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி அரசியல் செய்வது இந்தியா எனும் சகுனி. தாங்கள்சேர்ந்து அழித்ததை புனரமைப்புசெய்கிறார்கள். எதற்காக? பிராயச்சித்தமா? அழித்தவர் அதற்கான விலையை செலுத்துகிறார், இதற்கு உதவி என்கிற பெயரா? மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் மனிதாபிமான்களாம்? அழித்த உயிர்களை திரும்ப தர முடியுமா இவர்களால்? கோரிக்கைதான் வைக்க முடியுமா இவரால்? குட்டக்குட்ட குனிந்துகொண்டு, குட்டுகிறவனை புகழ்ந்து கொண்டே, தட்டிகேட்க்கிறவனை குற்றஞ்சாட்டிக்கொண்டே இருப்போம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.