Everything posted by satan
-
மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று, வெகுவிரைவில் மஹிந்த குடும்பம் கைதுசெய்யப்படவுள்ளதாக வெளிவந்துள்ளது. அதனால் இவர்களும் இப்படியான செய்திகளை கசிய விடலாம். எல்லாம் ஆசுப்பத்திரி கேசுகள் தான். நேற்று நாமலின் அடிப்பொடிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்காக துள்ளிக்குதித்தார்கள், அதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு நாள் நெருங்கி விட்டது. அச்சுறுத்தல் அதே நேரம் அனுதாபம் இது இவர்களின் வழமையான வேலைதானே. கொந்தளிக்கிற நாலுபேரை உள்ள போட்டால் மற்றவர்கள் தானாக மறைந்துவிடுவார்கள்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
கனடாவுக்கு எதிராக கண்டனத்தை செய்யாமலா விட்டிருக்கும்? வழக்கு என்பது போடமுடியாது, எங்கே போடுவது, ஐ. நாவிலா? அங்கே இவர்களுக்கெதிரான இந ஒடுக்குமுறை பாக்கி இருக்கிறதே? அவர்கள் நாட்டில் எதை கட்டவேண்டும், கட்டக்கூடாது என தீர்மானிப்பது அந்த நாட்டு மக்களும் அரசாங்கமுமே தவிர இந அழிப்பை செய்த இலங்கை அரசாங்கமல்ல. தனது நாட்டில் இந, மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டு, மற்றைய நாடுகளுக்கு அச்சுறுத்தல், கண்டனம், போதிப்பு. இப்போ கனடா இலங்கையின் மொழியிலேயே பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளும் இதனை பின்பற்றக்கூடும். ஏனெனில் இந்தப்போரினாலேயே தமிழர் அந்தந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர், அந்த நாடுகளும் அவர்களை ஏற்றுக்கொண்டன.
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
ஒன்றுக்கு தப்பினால், இன்னொன்றில் மாட்டத்தானே செய்வார். இங்கு எமது பதிவுகளை பலநாடுகளில் உள்ளோர் வாசிக்கின்றனர் போலுள்ளது. இனி காரியம் ஆகலாம். இல்லை அடுத்த விமானத்தில் பசிலே வந்து இறங்கி விடுவார். அதனை சிங்கள அரசு விரும்பாது செய்யாது அதற்கு காரணமும் உண்டு.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஏன் கொழும்பை தவிர்த்து விட்டீர்கள்? முன்பு கொழும்பில் பல சைவ உணவகங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் கூட புங்குடு தீவாருடையதாம். இப்போ பிரான்ஸிலுள்ள தமிழரில் பாதிக்குமேல் பெரும் பணக்காரர் அவர்கள்தானாம். எனது தூரத்து உறவினர்கள் கூட புங்குடுதீவில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். பணத்துக்காக அல்ல பழக்கம். நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தபோது, பல குடும்பங்கள் எமது வீட்டை சுற்றி வசித்தார்கள். அவர்களும் இடம்பெயர்ந்தவர்களே. அருமையான, இரக்கமுள்ள குடும்பம் ஒன்று. அவர்கள் இப்போ பிரான்சில் இருப்பார்கள் என நினைக்கிறன். அப்பவே அவர்களது பெரும்பாலான உறவினர் பிரான்சில் இருந்தார்கள், இவர்களும் அங்கு போகப்போவதாக கூறியிருந்தார்கள். கந்தையர், இனிமேல் நீங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் புங்குடுதீவை குறிப்பிடலாம் அவர் கோவிக்கமாட்டார் பெருமைப்படுவார்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சந்தேகமேயில்லை கழுதைதான்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
தமிழர் வாழும் நாடுகளெங்கும் நினைவுத்தூபிகள் எழும்பி இந அழிப்பை பறை சாற்ற வேண்டும். அப்போதான் சிங்களம் வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்படியும் ஒருநாள் வளமாக சிக்கப்போகிறது. தான் எவ்வளவு மறைத்தாலும், தன்னை யாரும் நம்பவில்லை என்பதை இந்த ஒரு தூபியே சான்று. தெருவெங்கும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் நின்று தாங்கள் நடத்திய தமிழருக்கு எதிரான கொடுமைகளை சொல்லி இன்னும் அதுபோல் நடவாது ஒதுங்கி இருங்கள் என அச்சுறுத்திக்கொண்டு, சாட்சியம் சொல்லிக்கொண்டும் அவர்களின் நிலங்களில் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டும் இந அழிப்பு நடைபெறவில்லை என கூச்சல் போடுவது எந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கிறார்களே, இவர்களால் எப்படி சரியானதை சிந்திக்கவும் நாட்டை கட்டியெழுப்பவும் முடியும்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வேலன் சுவாமிக்கு இருக்கிற மரியாதை குறையுதா, சுமந்திரனுக்கு குறைந்த மரியாதை எகிறுதா என வரும் காலங்கள் நிரூபிக்கும்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்திருந்தால் ஒரு நினைவுத்தூபியோடு நின்றிருக்கும். இப்போ, வாயைக்கொடுத்து கனடா முழு மாநிலத்திலும் சர்வதேச நாடுகளிலும் தமிழ் இந அழிப்பிற்கு சான்றாக நினவுத் தூபிகள் எழ தூண்டிவிட்டுள்ளது இலங்கையின் அவசியமற்ற, நிஞாயமில்லாத கண்டனம். உண்மையை ஏற்றுக்கொள்ள துணிவில்லை, மனச்சாட்சியில்லை, இதில் வேறு குரைப்பு.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இன்னும் தீவிரமடைவதோடு தானாகவே இந்தியா மாட்டிக்கொள்ளும் .இலங்கை, இந்தியாவை கொம்பு சீவுவதுபோல் தெரிகிறது சில விடயங்களைப்பாத்தால். இது இந்தியாவின் யுத்தமென மஹிந்தா, பொன்சேகா அறிவித்துவிட்டனர். ஆனால் கனடாவில் இந்தியாவின் அச்சுறுத்தல் எல்லாம் வேகாது. அஇந்தியாவுக்கும் சேர்த்துதான் கனடா சொல்லும் செய்தி இந்த நினைவுத்தூபி. இந்தியாவுக்கு கனடாமேல் கடுப்பு இருக்கிறது அதை காட்ட முடியாது. உள்நாட்டில் சில கருத்துக்களை ஈழத்தமிழருக்கெதிராக விடலாம். இந்தியாவும் காலிஸ்தான், காஷ்மீர் மக்களை இப்படியொரு நிலையிற்தானே வைத்திருக்கிறது!
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இலங்கையில் அது நடக்கவில்லையென மறுக்கப்படும்போது, உலகெங்கும் தமிழ் இந அழிப்புக்கான தூபிகள் எழும். இறுதியில் இலங்கையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுமா? பொறுத்திருந்து பாப்போம். மனிதர் ஒருவழியை மறுக்கும்போது, பலவழிகள் திறக்கப்படும். விதி எங்கோ அழைத்துச்செல்கிறது.
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
விசுகர்! கட்டாயம் உங்கள் பணமும் இதில் இருக்குமென்றே நினைக்கிறன். தொண்ணூறு கோடியில் கட்டிடம் கட்டுமளவிற்கு அதை பராமரிப்பதற்கு, அங்கே அவ்வளவு மக்கள் இருக்கிறார்களா? வருங்காலத்தில் இதை பராமரிப்பார்களா? மக்களின் தேவைக்காக கட்டப்பட்டதாக தெரியவில்லையே?
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
அது சாமியார், நீதிமன்றத்திற்காக விபத்து, வைத்தியசாலை அனுமதி, வைத்தியர் அறிக்கை. அமெரிக்க வைத்தியசாலையில் புத்தர் சிலை வைக்கலாமா, வைத்தியசாலை உடை தவிர வேறு உடை அணியலாமா என்பதை யஸ்ரின் உறுதிப்படுத்தவேண்டும். அல்லது பசில் வீட்டை வைத்தியசாலை ஆக்கிவிட்டார்களா தெரியவில்லை? ஒரு வைத்தியசாலை அறிக்கை, விமானப்பயணத்தை மட்டும் ஏன் விளித்து எழுதியது? நோயாளிகளுக்கு பொதுவான அறிவித்தல் கொடுப்பார்கள், நாம் பயணம் செய்ய இருப்பதை தெரிவித்தால் மட்டுமே பிரத்தியேக விளக்கம் கொடுப்பார்கள். ஒரு சாதாரண கதிரையில் இருந்து விழுந்து ஆறுமாதம்...... விளங்கவில்லையா? கைதை தடுக்கும் வழி! இங்கிருந்திருந்தாலும் இந்த நாடகந்தான் நடந்திருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவின் மகனை விசாரணைக்கு அழைத்தபோது, நான் நினைக்கிறன் ஒரு பாட்டி அவரின் பெயர் டெய்ஸீ என. அவருக்கு மறதி நோய் அவருடைய பணம் அது என்றும் அவரால் இப்போது நினைவு படுத்த முடியாதென்றும் அறிவித்தார்கள். உண்மையிலேயே அது அவரின் பணந்தானா? அவருக்கு மறதிநோய் இருப்பது உண்மைதானா என யாரும் உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அசைவ உணவகம் என்று போராட்டம் வெடித்தது இப்போ அனுமதியில்லாமல் திறக்கப்பட்டது சைவ நெறி கற்பிக்கப்படவேண்டும் என்று சைவத்தை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகள் சிங்கள பௌத்தத்துக்கும் தமிழ் சைவத்துக்கும் அதிக வித்தியாசமில்லை நமக்கு சைவ தமிழ் ஈழம் கேட்க்கிறார்களா இதில நாம் எங்கே ஒன்றிணைந்து போராடுவது எங்கே சைவ கோவில்கள் இடிக்கப்படுகிறதோ முரண்பாடுகள் தோன்றுகிறதோ அங்கே எல்லா மத தமிழர்களும் எதிர்க்கிறார்கள் ஒரு சமூகத்தில் மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் போது ஏற்படும் அழிவுகளை கண்டும் நாம் திருந்தவில்லை ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பெயர் மதமோ அது சார்ந்த அபிமானமோ இல்லை மத வெறி இப்போ வேலன் சுவாமி பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது போகப்போக இன்னும் வரும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி! ஓ, அப்படியா! நானேதோ இந்தத்திரியில் விவாதிக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன். பாவம் சுமந்திரனை நீங்கள் ஏன் இதற்குள் இழுத்து வந்து வேலனுக்காக வாதாட பரிந்துரைத்தீர்கள்? இதுதான் பக்கா அரசியல்!
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
சாய், பக்கத்திலிருந்த புத்தர் கூட கைவிட்டு விட்டாரே பசிலை? கையிலை எத்தனை மீற்றர் நூல் கட்டியிருந்தும் பயனில்லை, பிறகேன் அதை ஓதி கட்டுகிறார்கள்?
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்படியா நான் அதைக்கவனிக்கவில்லையே?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அது ஒன்றுமில்லை, ஒரு சில மாதங்களுக்கு முன், ஒரு இஸ்லாமியர் நல்லூருக்கு சொந்தம் கொண்டாடி, இப்படி ஒரு கதை சொன்னார். தாயின் கற்பத்தில் இருந்த குழந்தையை புலிகள், தாயின் வயிற்றை கீறி வெளியே எடுத்தார்கள் என்றொரு உண்மைக்கு புறம்பான கதையை பரப்பி அப்பப்போ முபாறக்அப்துல் மஜீத் என்பவர் தமிழர்மேல் தனக்குள்ள வெறுப்பை கக்குவார். அதை சிலர் உண்மையென நம்பி அனுதாபம் தெரிவிப்பது. அதுவே அவர்களுக்கும் சாதகமாகிறது, தாம் சொன்ன பொய் உண்மையென சாதிப்பார்கள் எதிரிகள். உங்களைப்போல் யார் ஆதாரம் கேட்டு தெளிகிறார்கள் நம்புவதற்கு முன்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூரில் கோயில் வலயத்திற்குள் வசிப்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை. அப்போ அவர் அங்கே தனது நிறுவனத்தை நடத்துவதால் அவருக்கு என்ன பயன்? அங்கே கொள்வனவு செய்ய வருவோர் யார்? அவர்களுக்கு அந்த ஊரின் கோவிலின் புனிதம் தெரியாததா? ஒன்று புரிகிறது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அங்கே அசைவம் விற்பனை செய்யப்படுகிறது, அல்லது அங்குள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பது. ஒரு தொழில் ஆரம்பிப்பவர், அந்த சூழ்நிலை அறியாமல் அங்குள்ளவரின் அறிமுகமேதுமில்லாமல் விற்பனையை ஆரம்பித்து இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதற்கிடையில் தரகராக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
இவரை தூஷண பிக்கர் என்பதை விட, அடாவடி பிக்கர் என்பது தான் பொருத்தம். ஒருதடவை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கெல்மெட் போடாமல் பயணிக்கிறாரென நடுவீதியில் சட்டத்தை கையிலெடுத்து அடாவடி பண்ணினார், சில மாதங்களுக்கு முன் ஒரு பிக்கு இதே தவறை செய்த போது, காவற்துறையினர் விசாரிக்கும் போது, தான் ஒரு பிக்கு, கெல்மெட் போடத்தேவையில்லை, தனக்கு நாட்டுச்சட்டங்கள் பொருந்தாது என வாதிட்டார். சட்டம் ஏன், எதற்காக பாவிக்கப்படுகிறது? ஹெல்மெட் போடாவிட்டால் யாருக்கு கேடு என்பதை கூட புரியாமல் விவாதம் செய்தார். அது இருக்க, இவர் பாவித்த மின்கட்டணத்திற்கான நிலுவையை செலுத்தவில்லை, இணைப்பை துண்டிக்கப்போன ஊழியரை தூஷணத்தால் திட்டி அடித்து திருப்பி அனுப்பினார். அன்றிலிருந்துதான் இவருக்கு தூஷணப்பிக்கர் என்கிற பெயர் வெந்திருக்கும். இவர்களின் அடாவடிக்கு பணிந்து போகும் சட்டம், காவற்துறை, ஜனாதிபதி இவர்களால் தாக்கப்படுவார்கள். இவர்களுக்கு சட்டம் நீதியின் மரியாதை தெரிவதில்லை. ஒருதடவை ஒரு கட்டிடத்தில் ஏறி நின்று சண்டித்தனம் விட்டார். நமது சாணக்கியன் எம்பியின் கூட்டாளியும் கூட!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோவில் ஆலய வலயங்களுக்குள் வாழ்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை என்றால், அவர் யாருக்கு, எப்படி அங்கு வியாபாரம் நடத்த முடியும்? எல்லா ஊரிலும் பல பிரபலமான சைவ, அசைவ உணவகங்கள் வந்துள்ளன. ஊர்விட்டு ஊர்வந்து யாரும் அசைவம் சாப்பிட வேண்டிய தேவையில்லை என நினைக்கிறன். ஒருவேளை தங்கள் இரகசிய உணவுமுறை, இந்தக்கடையால் வெளியே வந்துவிடுமென அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. கீழ் சாதிக்காரர் தேர் இழுக்கக்கூடாது, ஆனால் பல உயிர்களை காவு கொண்ட ஆமிக்காரர், இயந்திரங்கள் தேர் இழுக்கலாம் என்னும் வாதம் போன்றது. இவர்கள் தங்கள் சண்டித்தனத்தை தையிட்டியில் காட்டி விகாரையை அகற்றியிருந்தால் பாராட்டியிருப்பேன். எல்லாம் பெலயீனர்களிடந்தான் தமது சண்டித்தனத்தை காட்டுவார்கள். சரியான அணுகுமுறையை கையாண்டு பிரச்சனையை சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத பிரபல்யம் அடையப்போய் தங்கள் சண்டித்தனத்தை பிரபல்யப்படுத்தி பகைமையை வளர்த்திருக்கிறார்கள். எனக்கு அசைவம் பிடிக்காது, அசைவரையும் பிடிக்காது என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது, அச்சுறுத்துவது மனித நேயமுள்ள செயலல்ல. அதை மதங்கள் போதிப்பதுமில்லை. எல்லோரையும் மதிக்கும் பண்பு வேண்டும். இந்த பின்போக்கு தனமும் பாராளுமன்றத்தில் ஒலிக்கலாம். நாங்கள் ஒரு பகுதியினரை எமது நலன்களுக்காக அடக்கலாம், வெறுக்கலாம், விரட்டலாம். ஆனால் நமக்கு யாரும் அதை செய்யக்கூடாது. இதுதான் எமது வாதம், அப்பப்போ வெளிவருகிறது. பொங்கல் முடிந்தவுடன் மீன்கடைக்கு போவோரையும் கண்டிருக்கிறேன், கோயில் கொடியேறி விட்டது, வீட்டில் மாமிசம் சமைக்கஊடாது என வீட்டுக்கோழியை பிடித்து அடுத்த வீட்டில் சமைத்து சாப்பிடவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த வீடுகள் கோயிலின் பக்கத்திலேயே இருக்கின்றன. அது அவரவர் உணவுப்பழக்கம், சுதந்திரம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம், நீங்களும் அசைவம் சாப்பிடுவதென்றால் எங்கள் வலயத்தில் இருக்கலாமென யாரும் கட்டுப்பாடு போடுவதுமில்லை, அவர்களை விலக்கி வைப்பதுமில்லை. அடுத்தவரை மதித்து வாழ்வதே மதம். சாப்பாட்டில், சாதியிலில்லை. நாங்கள் வெளிநாடுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் பக்கத்தில், வீடு வாங்குவோம், கோயில் கட்டுவோம். ஆனால் ஊரில் உள்ளவர்கள் சைவ சமய சட்ட திட்டப்படி வாழ வேண்டும். நமது வீடுகளை விற்கும்போது, யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்போம், அங்கு சூழலில் இருப்பவர்களின் மனநிலையை கணக்கில் எடுக்க மாட்டோம், இந்த சாத்திரங்கள், வாதங்களை கையிலெடுக்க மாட்டோம். இதுதான் எமது நியதி.
-
அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு
யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை ஜே. வி. பி. ஆட்சியமைக்குமென. ஆனால் அது வென்றபோது அந்தக்கட்சியில் உள்ளோரும் எம்மைப்போன்று சித்திரவதைகளையும் இழப்புகளையும் வலிகளையும் சந்தித்தவர்கள், ஆகவே எமது வலி, இழப்பு, ஏக்கம் இவர்களுக்கு புரிந்திருக்கும், அதைவிட அனுரா மிகவும் இளமையானவர், முற்போக்காக சிந்திப்பார், மாற்றங்களை செய்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது கடந்தகாலத்தில் தமிழருக்கெதிராக செய்த அநீதிகளும் அறிந்தே இருந்தோம். ஜே. வி .பி. இல்லையென்றாலும் எங்களை நேரடியாக அழித்த ஒரு கட்சிதான் வந்திருக்கும். இந்த அனுரா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி எமது காயங்களை ஆற்ற மறுப்பாரானால், இனி சிங்களத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு, அவகாசம் வழங்கப்படுகிறது. எவ்வளவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அவர்கள் தமக்குத்தாமே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இனப்படுகொலை நடைபெறவேயில்லை என தம் மனச்சாட்சியை, பதவிக்காக ஏமாற்றுகிறவர்கள், ஆதாரத்துடன் நிரூபிக்கும்போது எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? இதுவரை காலமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, ஆதாரங்களை வெளிக்கொணரவுமில்லை இனிமேலும் எதுவும் நடைபெறாது என தைரியமாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் நினையாத நேரத்தில், நினைத்திராத மனிதர்களால் எல்லாமே வெளிவரும். அப்போ இவர்கள் எதையும் செய்யவோ, சொல்லவோ சந்தர்ப்பம் கிடைக்காது. அன்பையும் அஹிம்சையையும் கொண்ட மதத்தின்பேரால் இவர்கள் செய்த அனிஞாயங்கள் வெளிவரும்போது அந்த மதமே அவர்களுக்கு கைகொடுக்காது.
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும்
ம், ஏமாந்து களைத்த மக்களை ஏமாற்றி பதவியில் அமர்ந்ததே ஜே .வி. பியின் வெற்றி. தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிப்போம் என்றார்கள், அதுபற்றிய உரையாடலின் நடுவே வெளியேறினார்கள், இனவழிப்பு ஒன்று நடைபெறவே இல்லை என்கிறார்கள், உண்மையை கதைத்தால் சட்டத்தால் அடக்குவோம் என அச்சுறுத்துகிறார்கள், நேரம் ஒரு கதை, ஆளுக்கொரு பேச்சு பேசுகிறார்கள். இதுதான் இவர்களின் கள்ள மனச்சாட்சி, கோழைத்தனம். இதனை துணிச்சல் என பிதற்றுகிறார்கள்
-
யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் - இளங்குமரன் எம்.பி
அப்போ, வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளுக்கு இராணுவத்தினர் பெயரில்லா உறுதி உள்ளது? தையிட்டி திஸ்ஸ விகாரை இவரது காணியிலா அமைந்துள்ளது?
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
மக்களை தலைவன் இல்லா மந்தைகளாக்கி, கட்சியை கூறு போட்டு வைத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன கேடு வரப்போகிறது? ஒன்று கட்சி அழியும் அல்லது இவர் பலாத்காரமாக வெளியேற்றப்படுவார். கட்சியால், மக்களால் நிராகரிக்கப்பட்டும் தலைமைக்கு அடிபட்டு, அடுத்தவர் பதவியை கவர்ந்து இதல்லாம் ஒரு பிழைப்பு? இதை சட்டம் தெரிந்த சாணக்கியன் என்று புகழ்ச்சி வேறு. இவர் பாராளுமன்றம் போனாலும் ஏளனப்படுத்தப்படுவார். அதற்குத்தான் இவ்வளவு அவசரம். பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைபவர்கள், கிடைக்கவில்லையென்றவுடன் கட்சியை பிரிந்து சென்றுவிட்டார்கள் என்று சொன்ன சுமந்திரனும், இங்கு சிலரும் கவனிக்க வேண்டும்; கட்சியின் அடாவடி, தன்னலம், ஓரங்கட்டல், குடைச்சல் தாங்காமல் மரியாதையாக வெளியேறினார்கள். ஆனால் மற்றவர்களை குறை சொல்லி, கட்சியை முடக்கி, உறுப்பினர்களை செயற்படவிடாமல் தடுத்து வைத்திருப்பதற்கு என்ன பெயர் சூட்டலாம்?
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
இவர் கட்சியிலுள்ளவரே, சில வாரங்களுக்கு முன், பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதை செய்திருப்பார்களென்றால், யுத்த காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்களென்று பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் சந்தேகம் எழுப்பியிருந்தார். இவரும் அங்கேதானே இருந்தார், ஏன் இவரால் பதில் சொல்லமுடியவில்லை? இதே அனுரா, பத்திரிகையாளர் சந்திப்பில், வடக்கில் உள்ளதுபோன்று தெற்கில் இராணுவ காவல் அரண்கள் இல்லை, இன்றும் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர்என்று சொன்னாரே, அதற்கு இவர் பதில் என்ன? நீங்கள் சம்பளத்திற்காக போரிட்டவர்களை நினைவு கூரலாம் என்றால், நாம் ஏன் நம் வீரர்களை நினைவு கூரக்கூடாது? நீங்கள் எங்கள் சொந்த மண்ணில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் என்றால், கனடாவில் உள்ள நினைவுத்தூபியால் எப்படி நல்லிணக்கம் குலையும்? பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தாலென்ன, படிக்காவிட்டாலென்ன எதுவும் மாற்றமடையாது? உரத்து சொல்லுங்கள், தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லையென, சர்வதேசம் எங்கும் இனவழிப்பிற்கான குரல்களும், நினைவாலயங்களும் கிளம்பும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் சிங்கள மக்களே, இனஅழிப்பினாலேயே இந்த நாடு அழிந்தது, தனித்து விடப்பட்டது என நீதி தேடி அலைவார்கள். சர்வதேசம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? ஆதாரங்களை அவரவர் புகைப்படங்களுடன் வெளியிட்டு நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. எங்களுடைய இன்றைய இந்த துயர நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐ .நா. சர்வதேச நாடுகளே காரணம்! ஏன் ஐ நா சபைக்கு காலத்திற்கு காலம் காவடி எடுக்கிறீர்கள்? கொழும்பில் தமிழரை தேடித் தேடி கொல்லவில்லையா? அல்லது அப்போது இவர் பிறக்கவில்லையா? இவரைப்போல் பொய்யன் வேறு யாருமில்லை. இனவழிப்பு நடைபெற வில்லையென்றால், விசாரணைக்கு தயங்குவதேனோ? அதற்கான காரணத்தை அறிவியுங்கள்! மைத்திரிபால சொன்னார், "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறி விட்டது." என, அப்போ இந்த வெளிவிவகார அமைச்சர் எங்கே போயிருந்தார்? தன்நாட்டில் நடந்தவை அறியாத, மறந்த இவருக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?