Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. யாழ் மண்ணில் மக்களால் நிராகரிப்பு, கட்சி உறுப்பினர் நிராகரிப்பு, கட்சிக்குள்ள அடாவடி, சிறிதரனை தள்ளிவிட்டு அவர் பதவியை பறிக்க போட்ட திட்டம் பொட்டுக்கேடு. நான் நினைக்கவில்லை சத்தியலிங்கம் இனிமேல் இவருக்கு உதவுவாரென. எப்படியோ குறுக்குவழியில் நுழைந்தவருக்கு நேர் வழி சரிவராது. முதல் கொழும்பில் போட்டி என்று அறிவித்தவர் வேட்பாளரின் பின்புலம் ஆராய்வது சவால் என்கிறார். தானே போட்டியிட்டிருக்கலாம், பயம். நிரந்தரமாக நிராகரிக்கப்பட்டவன் என்கிற பெயர் எடுக்க. ஒரு சட்ட மேதைக்கு இந்த நிலையா? அதுதானே, பிரதமர் பதவியும் தானாக தேடிவரும். மனோவும் வாங்கோ வாங்கோ என்று கூப்பிடுகிறார், இவரோ பின்வாங்குகிறார், பின்வாசலால்த்தானாம் வருவார்.
  2. அவர்கள் தாம் தமிழர் இல்லை என்று சொன்னபின் செயலில் காட்டியபின் அவர்களை பற்றி கதைக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். சுமந்திரன் தமிழரசுக்குள் புகுந்தவுடன் அவர்களின் மேடைகளில் ஏறி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று முழக்கமிட்டார். அந்த உரிமையில அவர்களின் மதத்தைப்பற்றி ஏதோ சொல்லப்போக, வெடித்தது சர்ச்சை. தங்களைப்பற்றி கதைக்க வேண்டுமென்றால் சுன்னத்து செய்ய வேண்டுமாம். இது அவர்களின் குணம். இவர்களை பற்றி நன்மை கதைத்தாலும் ஒரு குழு, நீ சுன்னத்து செய்தியா? எப்படி நீ நம்மைப்பற்றி கதைக்கலாம் என்பார்கள். பிழையை சுட்டிக்காட்டினாலும் சண்டைக்கு இழுக்கும். ஆகவே அவரவர் சோலியை பார்ப்பதே நன்று. அவர்கள் எந்த இனத்தோடும் சேரார். ஞானசார தேரர் இந்த கதை சொன்னதற்கு காரணம், அவர்களின் மதத்தை விமர்சித்ததாலேயே சிறை சென்றார். அதற்கு பழி வாங்குகிறார் போலுள்ளது.
  3. இவருக்கு கிரிக்கெற்றில் கப்டன் பதவி கொடுக்க தயங்கியதே இவர் ஒரு தமிழர் என்பதற்காக, ஆனால் அவர் சிங்களத்துக்கே வக்காலத்து வாங்கினார். கதிர்காமர் சிங்களத்துக்காக ஓடியோடி வக்காலத்து வாங்கி தமிழரை அழிப்பது நிஞாயமாக்கினார், ஆனால் அவர் தமிழர் என்பதற்காக பிரதம மந்திரி பதவி வழங்கப்படவில்லை. தமிழரிடம் இருந்து வருமானம், தங்கள் செயலுக்கு வக்காலத்து தமிழர் கொடுக்க வேண்டும். ஆனால் பதவி, சம உரிமை, அதிகாரம் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. இன்னும் சுமந்திரன் பிரதமர் கனவோடு நகர்வதே வரலாற்றில் இருந்து பாடம் கற்கவில்லை என்பதற்கு உதாரணம்.
  4. மோசடி, கொலை, கொள்ளை செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அரகலய போராட்டம் யாருக்கு எதிராக நடந்தது? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் யார்? என்பது ஒன்றும் இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், மக்களுக்கு நன்றாகத் தெரிந்துதான் உரியவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத்தான் ஓடி ஒளிகிறார்கள் ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் ஏவலர்கள். நாட்டுக்கு யாராவது ஒருவர் சேவையாற்றி இருந்தால்; நாடு பாதாளத்திற்கு போயிருக்காது, இவ்வளவு ஊழல்வாதிகள் பெருகியுமிருக்க வாய்ப்பில்லை. உதயன் கம்மன்பில கூறினார் "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்த தேசம்." மைத்திரி சொன்னார் "நிரந்தர பகிர்வு பொறி முறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." அப்படி யாராவது நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியிருந்தால்; அவரை நீங்கள் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு.
  5. விஜய் தான் மீனவர்களை காப்பாற்ற தமிழகத்தில் போராடப்போகிறேன் என்று அறிவித்துள்ளார். அதற்குள் ஏன் ஜேசுநாதரையும் தகப்பனாரையும் இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்?
  6. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் தேர்தல் காலங்களில் உரத்துப்பேசுவர். பின்னர் மக்களுக்கு சம்பந்தமில்லாதது பேசுவர். கொடுக்கப்பட்ட காலத்தை வீணடித்துவிட்டு இப்போ சிலர் குரல் எழுப்புகிறார்கள். அந்தக்குரல் இனி எடுபடாது. கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் எப்போதும் ஒரே மாதிரியாக பேசுவர்.
  7. இவரை பொதுமக்கள்தான் பிடித்தார்கள், போலீசார் ஒன்றும் பிடிக்கவில்லை. இப்படி பொதுமக்கள் பிடித்து கொடுத்தவர்களிடம் வாங்கிக்கொண்டு மறுபக்கத்தால் ஓட விட்டவர்களும் உண்டு. இனி இவர் சிலரை காட்டிக்கொடுப்பர், அவர் வேறொரு பெயரை வெளியிடுவார், மொத்தத்தில் யூ ரியூபர்களின் அலட்டல் குறையும். மடக்கிப்பிடிக்கப்பட்டவரும், சர்ச்சைக்குரிய காணொளியில் இருப்பவரும் ஒரே ஆள்.
  8. ஹிஹி..... உண்மையில் தெரியவில்லையா? அல்லது குசும்பு பண்ணுகிறீர்களா? ஒருவேளை தனிப்பட்ட இடம் என்று நான் எழுதி விட்டதால் குழம்புகிறீர்கள் போலிருக்கிறது. அந்தரங்க பகுதியில்!
  9. ம், கிழக்கில் இருந்து ஒரு பெண் இவரிடம் உதவிகேட்டு ஒரு மேலதிக தேவையுடைய பிள்ளையுடன் வந்திருந்தார். அவரை இவர் சி. ஐ. டி. மாதிரி விசாரணை செய்கிறார். அவர் உண்மை சொன்னாரா பொய் சொன்னாரா என்று ஆராய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கக்கூடியதாக இருந்தது. அதனையும் பலர் பாராட்டியிருந்தனர். இவரே ஒரு ஏமாத்து, அதில விசாரிக்கிறாராம். ஏமாற்றுகிறவனுக்கு தான் தெரியும் அதன் நுணுக்கங்கள். தான் ஏமாற்றுகிறாராம் மற்றவர்கள் ஏமாற்றக்கூடாதாம், கற்றுக்கொடுப்பவரே இவர்தான். இன்னும் விட்டிருந்தால் அரசியல் ரவுடியாக வளர்ந்திருப்பார். எத்தனைபேரை அவமானப்படுத்தியிருப்பார், தலைகுனிய வைத்திருப்பார், பகட்டாக சுற்றியிருப்பார், செலவழித்திருப்பார், புலம்பெயர்ந்தோரை இழிச்ச வாய்களாக நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களின் காசில் இவருக்கு எகத்தாளம். எதை பாவித்து அதை செய்தாரோ, அதனாலேயே தாக்கப்படுகிறார். வேஷம் கலைந்தது.
  10. பொலிசார் கடமை செய்வதில்லை, தம் தொழிலை விஸ்தரிக்கிறார்கள். ஒவ்வொரு போலீசையும் சோதனையிட்டால் புரியும். விநியோகம் அல்லது யாரையாவது குற்றவாளியாக்குவதற்கு பயன்படுத்துகிறார்கள் தங்கள் சட்டைப்பையுள் இருப்பதை. போலீசாரே இதன் சூத்திரதாரிகள், அதிலும் தம்மை கேள்வி கேட்க்கும், தமக்கு எதிராக செயற்படும், தமக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்களை பழிவாங்கவும், போலீசார் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் புலிகளோடு தொடர்பு, ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று குற்றம் சுமத்தி பழிவாங்கினர். இப்போ, போதைப்பொருள். உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் போலீசாரே. இவர்களாலேயே வடக்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது போதைப்பொருள், வாள்வெட்டு. தங்களுடைய விநியோகஸ்தர் பிடிபட்டால்; மனநோயாளி, மதுவுக்கு, போதைக்கு அடிமையானவர் என்று காரணாம் வேறு சொல்வார்கள். போலீசாரே முதல் கிரிமினல் குற்றவாளிகள். அண்மையில் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு சான்று!
  11. நாடு முழுக்க பட்டி தொட்டி எல்லாம் இவரைப்பற்றி பேசுது, இவருக்கு இது தெரியாதது வினோதமே. வழக்கம்போல் முதலாளி உத்தியோகத்துக்கு போய் மாட்டுப்பட்டிட்டார். யார் யார் எவ்வளவு அனுப்பினார்கள், அதில் இவர் எவ்வளவு கையாடினார், எல்லாம் கக்குவார். என்னமாதிரி சுமுத்தா போன தொழில் இப்படியாகிச்சே.
  12. அது ரவுடிக்கூட்டம் இது நாலும் படிச்ச கூட்டம். ஒன்றை மறந்து விட்டீர்களோ, கேள்விப்படவில்லையோ? ஒருதடவை பிக்கு பாராளுமன்ற உறுப்பினரின், தனிப்பட்ட இடத்தில கூட கை வைத்தார்களாம்?
  13. இவருக்கு காசு அனுப்பினவையளையும் விசாரிப்பினமோ? கண்டிப்பாக அவர்கள் யாரென்று கிருஷ்ணா போலீசாரிடம் தெரிவிப்பார். அவைக்கும் கஸ்ரகாலந்தான்!
  14. வடக்கில் இருப்பது பயங்கரவாதமென எல்லோரும் சேர்ந்து ஒரு இனத்தை அழித்து வெற்றி விழா கொண்டாடினீர்கள், இப்போ அதன் விளைவை அனுபவிக்கிறீர்கள். மனம் வருந்தி, திருந்தி, மன்னிப்புக்கேட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும் உத்தரவாதமும் அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு, சம உரிமை வழங்காதவரை நல்லிணக்கமோ, சமாதானமோ, அமைதியோ நாட்டில் வர வாய்ப்பில்லை.
  15. யாரோ எடுத்தபடியாற்தான் நாமும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." இவர் தன் முதுகுச்சட்டையை கவனிக்க வாய்ப்பில்லை, களட்டிப்பார்க்கும் வரை.
  16. சத்தியமாய் பெருமாள்! இப்போ யாருக்கும் ஆதரவா கதைக்க பயமா கிடக்கு. இன்றைக்கு நமக்காக கதைக்கிறார் என்று ஆதரித்தா, அடுத்த நாள் எதிரா கதைக்கிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆசை, உண்மையாக, பணம், புகழ், பதவிக்கு எடுபடாத, நமக்காக கதைக்கக் கூடிய, நல்ல சட்ட நிபுணர் நம்மிடம் இருந்து தோன்ற மாட்டாரா என்பதுதான். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரையாம்." என்கிற மாதிரி. ஒரு அரைகுறை சட்ட மேதை, தானும் சாதிக்கிறார் இல்லை, யாரையும் விடுகிறாருமில்லை. எங்கே தன் போலித்திறமை வெளிக்கொணர்ந்து விடுவார்களோ எனபயப்படுகிறார். தேவையில்லாமல் யார் யாரையோ தனியாக சந்தித்து விட்டு பந்தா காட்டுகிறார். சகிக்க முடியவில்லை.
  17. அனுரா வீட்டை கண்டுபிடித்துப்போய், தேநீர் அருந்தி விட்டு புகழ்ந்த நபராக இருக்குமோ? மண்டை கழுவப்பட்டதுகள்.
  18. தென்னக்கோன், இந்தபதவிக்கு தகுதியற்றவர், இவரை நியமிக்க வேண்டாமென பல எதிர்ப்புக்குரல்கள் எழும்பின. ஆனால் அவை எவற்றையும் காதில் வாங்காமல் இவரை இந்தப் பதவிக்கு நியமித்தவர் மாண்புமிகு ரணில் எனும் தந்திரி. கோத்தபாய நாட்டுக்கு திரும்பி வந்தபோது தலைவராக இருந்த நீங்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்ட போது, அவரில் எந்த தப்பும் காணவில்லை என்று இந்த நபர் குறிப்பிட்டார். போர்குற்றவாளியான சல்வேந்திர சில்வாவுக்கு ஏன் பதவி வழங்கினீர்கள் என்று கேட்டபோது, விசாரணை செய்ததில் அவர் குற்றவாளியல்ல என்று கூறினார். அப்போ; தமிழருக்கெதிரான போரில் கொலைகளில், கொள்ளைகளில் இவருக்கும் பங்குண்டு. ஓடி ஒளியும் குற்றவாளிகளில் குற்றமில்லை என நற்சான்று அளித்து பதவி வழங்கியிருக்கிறார் என்றால், அவர்களின் தலைவர் யார்? அது அமெரிக்கா குற்றம் சாட்டியது, புலம்பெயர்ந்தோர் குற்றம்சாட்டியது என்று அலட்சியம் செய்தவர், நாட்டு, விசேடமாக சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் குற்றம் சாட்டிய போதும் விடாப்பிடியாக இவரை ஏன் ரணில் நியமித்தார்? அப்போ, தென்னக்கோன் செய்த குற்றங்களில் ரணிலுக்கு பங்குண்டு அல்லது ரணிலுக்காகவே இந்த குற்றங்களை இழைத்தாரா தென்னக்கோன்? ஊழல்வாதிகள் ஊழலை ஒழிக்க முடியுமா? குற்றவாளிகள் குற்றத்தை ஒழிக்க முடியுமா, தண்டிக்க முடியுமா? முதலில் அவர்களின் தலைவரை கைது செய்து தண்டியுங்கள், அங்கே சோதனைகளை ஆரம்பியுங்கள்.
  19. வைத்தியர் என்றால் கணக்குத்தெரியக்கூடாது என்றில்லைதானே. அவரும் பல வகுப்புகளில், பல பாடங்களை கற்றுத்தேறித்தானே வைத்தியரானார். எமது முன்னாள், இந்நாள் தலைவர்களுக்கு கணக்குத்தெரிந்திருக்கவில்லை என்பது இவர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தெரிந்திருந்தால்; ஏற்கெனவே ஒவ்வொரு வரவு செலவுத்திட்ட வாசிப்பு நேரம் இந்தக்கேள்விகள் எழுந்திருக்குமே
  20. ஞானசார தேரரின் நிலையை பாத்தீங்களா? அதனால மற்றைய மொட்டையள் அடக்கிக்கொண்டு இருக்குதுகள். ஒன்று புதுசா கிளம்புது, நாளடைவில் அடங்கும். ஞானசார தேரர் மற்றைய அரசியல் தலைவர்கள் போல் இவரிடமும் போனவர், இனவாதத்திற்கு இடமில்லை என்றதனால், தான் யாரோடு இருந்து, யாருக்காக ஆட்டம் போட்டாரோ, அவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்.
  21. ஆமா.... ரணில் சொல்வதை வாய்மூடி கேட்டுக்கொண்டிருப்பார்கள் என நினைத்திருப்பாரோ இவர்? அதைத்தான் பலமுறை கேட்டாயிற்றே. இனியென்ன புதுசா சொல்லப்போறார்? அலிசப்ரிக்கு கடுப்பை ரணில் மீது காட்டமுடியாது, உண்மையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் யுத்தக்குற்றம் நடைபெறவேயில்லை என்று சாதித்தவர்கள் வாயை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி இவரின் பதிலுக்கான விளக்கத்தை ஒவ்வொருவரும் கொடுத்தேயாக வேண்டும். அப்போ தெரியும் ரணிலின் முட்டாள்தனம். நாட்டில் பிரச்சனை இருக்கிறது, யார் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை, என ஒப்புக்கொள்கிறார். அப்போ, நான் பதவியில் இருக்கவில்லை என ஒப்புக்கொள்கிறார். ஆனா ஆறு தடவை நாட்டின் தலைமைப்பதவியில் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சித்தலைவராக இருந்திருக்கிறார், ஏன் இந்த முரண்பாட்டை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை, குரல் எழுப்பவில்லை? என கேட்டிருந்தால் இந்த ராஜதந்திரி என்ன பதில் சொல்லியிருப்பார்? பார்வையாளராக வந்தவர்களுக்கு ஏன் இலங்கை மீது பகையுணர்வு வரவேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கே நிஞாயம் வேண்டும் மற்றவர்களுக்கல்ல. அங்கு கேள்வி கேட்டவர்கள் இலங்கை அரசின் பயங்கரவாதத்தால் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள், அவர்களுக்கு கேள்வி கேட்க்கும் அதிகாரம் இருக்கு. அதனாலேயே அவர் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தார். அமைதி என்பது ராஜதந்திரமல்ல, பதில் சொல்லி மாட்டுப்பட விரும்பவில்லை. அவர் விரும்புகிறாரோ இல்லையோ உண்மை வெளிவரத்தான் போகிறது, ரணிலும் பதில் சொல்லியேயாகவேண்டும்.
  22. இலங்கையில் அமைதி, சமாதானம் நிலவினால்; அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அஞ்சுகிறார்கள். அதைவிட அனுர, சீனாவுடன் நெருங்குகிறார் என்பது வேறு பயம். அனுரவுக்கும் இது தெரியாததல்ல. தமிழரின் பிரச்சனையை தீர்த்துவிட்டால், நம் நாடு சமாதானமாக முன்னேறும். இந்தசகுனிக்கு வேறு வேலையில்லை இங்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.