Everything posted by satan
-
தமிழரசுக்கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்!
அடுத்து, அர்ச்சுனாவின் இரட்டை வேடம் கலையுது. ஒருபக்கம் நான் தமிழேண்டா! மறுபக்கம் அனுராவுக்கு எடுத்துக்கொடுப்பு. வெகுவிரைவில் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் அறிகுறிகள் தெரிகின்றன.
-
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அவர்களும் கைது செய்யப்படுவார்கள். எடுத்தவுடன் பெரிய தலையில் கைவைக்காமல் சின்னவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, ஆறுதலாக இறுதியாக, உறுதியாக கைவைக்கும்போது எதுவும் சொல்லி தப்பிக்க முடியாது. அதாவது அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் அது இதென்று.
-
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கரணம் தப்பினால், இவர்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கும் ஆயுதம் இவர்களை அழிக்கும். ஆகவே, இவர்கள் நிதானமாக, விரைவாக அவர்களை உள்ளே அனுப்பவேண்டும். அவர்கள் படுகிற அவஸ்தை, விடுகிற அறிக்கைகளை பாத்தா: இந்தமுறை தப்பமுடியாது போலிருக்கு. மக்களும் கைவிட்டு விட்டார்கள். பிச்சை எடுத்து வீடு கட்டுவோம், இறந்த உடலை பதப்படுத்துவோம் என அறிக்கைகள் தூள் கிளப்புகிறது. உடலை பதப்படுத்துவோம் என்றவரை உள்ளுக்கை சேர்க்க வேண்டாமென எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஊழல்வாதிகளெல்லாம் மஹிந்தாவுக்காக அழுகிறார்கள், அவர் நிழலில் தாங்கள் தப்பிப்பதற்காக.
-
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்!
முதல்வர் விக்னேஸ்வரன் காலத்தில் அப்படி பணம் ஏதும் திருப்பி அனுப்பப்படவில்லை தாங்கள் அதை சரியாக செலவிட்டதாக அறிக்கை விட்டிருந்தார். மற்றோரு குற்றச்சாட்டும் இருந்தது. அதாவது, அபிவிருத்திக்கான பணத்தினை முன்கூட்டியே அனுப்புவதில்லை என்றும் காலந்தாழ்த்தி அனுப்புவதால் குறிப்பிட காலத்திற்குள் அந்த பணத்தை செலவிடமுடியாமையினால் திருப்பி அனுப்பப்படுவதாகவும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் அதை அரசாங்கத்தோடு ஆலோசித்து குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அரசும், தமிழ் தலைமைகளும் இதய சுத்தியோடு மக்களுக்கு சேவை செய்வதில்லை. பலமுறை சிங்கள தலைமைகள் வைத்த குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சனையை தீர்க்க விரும்புவதில்லை, தங்கள் நலனையே நினைத்து செயற்படுகின்றனர் என. அவர்கள் கேட்க்காவிட்டாலும் அரசாங்கம் என்கிற முறையில் இவர்கள் தங்கள் குடிமக்களுக்கு செய்யவேண்டியதை செய்திருக்கலாம் நினைத்திருந்தால். அவர்களுக்கு சன்மானம் அளித்து அவர்கள் வாயை அடைப்பதும் இவர்கள் தான். தங்கள் பக்கம் மக்களை இழுப்பதற்காக எது வேண்டுமானாலும் சொல்லலாம், அதிலும் அவர்கள் நலனே இருக்கும். அனுரா, தானே தொடர்ந்து நாட்டை ஆள வேண்டுமென நினைக்கிறார், அது தவறில்லை. ஆனால் நேர்மையில்லாமல் தந்திரத்தை கையாண்டால் அது நிறைவேறாது.
-
தமிழரசுக்கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்!
கட்சிக்குள் இடையில் வந்து பூந்த கோடரிக்காம்புகளை அதிகாரம் செலுத்த விட்டது யார் தவறு? ஏன் அவர்கள் தவறு விடும்போது, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலாய் அவரை முறியடிக்க முடியவில்லை? இனியாவது எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து, வெளிநடப்பு செய்யுங்கள், நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து ஒழுங்காற்று நடவடிக்கை எடுங்கள். அவருக்கு தெரியும், கட்சிக்குள் பிணக்கு இருப்பதை வெளியில் தெரிவிக்கவோ, கட்சிக்கு களங்கம் ஏற்படவோ உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள், அதனால் தான் என்ன செய்தாலும் கட்சியின் நலன் விரும்பிகள் மௌனம் காப்பர். சுமந்திரனுக்கு கட்டுப்பாட்டு, கட்சி ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாது, வந்தேறி. அதனால் அவர் உளறிக்கொண்டு, கட்சியை இரண்டுபடுத்திக்கொண்டு திரிவார். அவர் வாய்க்கு வந்தபடி மற்றவர்களை விமர்ச்சிப்பார், தன்னை யாராவது விமர்ச்சித்தால்; ஒழுங்காற்று நடவடிக்கை என்பார். இந்தளவுக்கு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவ்வளவு அதிகாரம் செலுத்த ஏன் விடுகிறீர்கள்? சாணக்கியன் அடுத்தது. சிங்களகட்சியில் நின்று வெல்ல முடியாதவர் இடையில வந்து பூந்து, சும்மா படங்காட்டிக்கொண்டு அவர் அடுத்த முதலாளி. ரொம்ப துள்ளினால் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
-
சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? - நிலாந்தன்
இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் முன்னோக்கு சிந்தனையில்லாத சர்வாதிகாரி சம்பந்தனே! தன்னோடு தோளோடு தோளாக நின்ற மாவையரை அவர் மதித்ததேயில்லை. சொல்லப்போனால், சுமந்திரனுக்கு முன்னாலேயே அவரை கடிந்துள்ளார். சம்பந்தன் மேல் உள்ள மரியாதை, வயதுக்கு கொடுத்த மதிப்பு, கட்சி உடைந்து போகக்கூடாது என்கிற எண்ணம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார். அவ்வாறே ஏனைய உறுப்பினர்களும் சம்பந்தனை பகைக்காமல் நடந்து கொண்டனர். அதை அவர்களின் பலவீனமாகவும், தான் ஏதோ சாணக்கியன் போலவும் நடந்துகொண்ட சம்பந்தர். தனக்குப்பின் கட்சியை அநாதரவாக விட்டுச்சென்ற முட்டாள். அதை சுமந்திரன் என்கிற பேராசை பிடித்த ஊழல்வாதி சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எந்த இலட்சியம், திறமை இல்லாத இரண்டு நரிகள் சிங்கத்தின் வாலோடு வால் இணைத்துக்கொண்டு திரியுதுகள். இவர்களுக்கு எதிராக அம்பு திரும்பும்போது புலம்புவதை தவிர வேறுவழியிருக்காது. சுமந்திரனை இவர்கள் பாதுகாத்து காப்பாற்றியதும் அவரின் அடுத்த இலக்கு இவர்கள்தான். சுமந்திரனுக்கு பதவியாசை மட்டுமல்ல, அவருக்கு இருப்பது தன்னைவிட அறிவாளியில்லை என்கிற ஒரு மனநோய்.
-
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகும்போது, மக்கள் சொல்ல வேண்டும். அப்படி இவர்கள் சொர்க்க தங்கமாய் இருந்தால்; இலங்கையில் வேறொரு அரசாங்கம் இனிமேல் பதவியேற்கவேண்டிய தேவையில்லை என்கிறீர்கள்? எனது எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் நம்மடையள் சிலதுகள் அதை தடுக்குதுகள் போலிருக்கே தமது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக.
-
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சொந்த குடிமக்களையே கொன்றும், புதைத்தும், பலவந்ததாக காணாமல் ஆக்கியும், சொந்த இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு அவர்களின் பூர்வீக காணிகளில் விகாரைகளை கட்டி அபகரித்துக்கொண்டு, அதிகாரத்தை காட்டி மிரட்டும் நாடு இது. அது, மற்றைய நாட்டு மக்களை பாதுகாத்து, தனது அடாவடியை மறைத்து, பிரச்சாரம் செய்யுதாம். "ஓதுறது பிரித், இடிக்கிறது சிவன் கோயில்."
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
இந்த ஆலயத்தை இடிக்க முடிந்ததென்றால், ஏன் தையிட்டி விகாரையை இடிக்க முடியாதென்று ஆளுநரையும் அர்ச்சுனாவையும் கேட்க்கிறேன். சட்டம் எல்லோருக்கும் சமம். அன்று, மத குருக்கள் என்று கூறிக்கொள்ளும் அடாவடிகள் செய்த முறைபாட்டுக்கமைய கோவிலுக்குரிய காணியில் அனுமதி பெறாமல் காட்டியதற்காக இடித்தார்கள். ஆனால் இங்கு வேறொருவருக்கு பொதுமகனுக்கு சொந்தமான காணியை அபகரித்து, எந்தவொரு அனுமதியும் இல்லாமல், வெறும் ஆக்கிரமிப்புக்காக கட்டப்பட்ட விகாரையை இடிப்பதில் என்ன பிரச்னை? அங்கு உள்ள மக்களால் தமது வழிபாட்டிற்காக கட்டப்பட்ட ஆலயம் அது. இது, வழிபடுவதற்கு ஆட்களே இல்லாத, அதிகாரத்தை நிலைநாட்ட கட்டப்பட்ட திருட்டு விகாரைக்கு, வக்காலத்து வாங்க சில தரகர்கள். அப்படி இடிக்க முடியாதென்றால், மற்றைய அரசுகளுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வித்தியாசம்? புதிய மொத்தையில் பழைய கள். இதற்கு ஏன் பெரிசாக அலட்டிக்கொள்ள வேண்டும் நாம்?
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி உட்ப்பட அந்த மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும்.
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
இந்த அடாவடிக்கு நாம் இடம் கொடுத்தால், இந்த பௌத்த மத, இன பரம்பல் வடக்கில் கூடும். மாற்றீடு, இழப்பீடு என்று சொல்வார்கள். அதிலும் பார்க்க, சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. மதிலென்றாலென்ன, வீடென்றாலென்ன, விகாரையென்றாலென்ன ஒன்றே கடைபிடிக்க வேண்டும். வேண்டுமானால், ஆளுநர் காணியிலோ, அர்ச்சுனாவின் காணியிலோ விகாரையை கட்ட பரிந்துரை செய்யலாம். கலந்துரையாடுகிறார்களோ, அச்சுறுத்தி வற்புறுத்துகிறார்களோ தெரியவில்லை. தானாகவே சிங்கள குடியேற்றம், இராணுவ இருப்பை அங்கீகரிக்கிறார்கள்.
-
அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
நேற்று, மாவையரின் வீட்டில் கல்லுளி மங்கன் போல் அமர்ந்திருந்த அவரைப் பார்த்து நானும் அதைத்தான் நினைத்தேன். மாவையரின் இரத்த அழுத்தம் அதிகரித்ததற்கு இந்த பதவியாசை பிடித்த தலையாட்டிகளே காரணம். மாவையர் ஒன்றும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேனென அடம் பிடிக்கவில்லையே. தர்மப்படி, கொள்கைப்படி, சட்டப்படி தலைவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியை பொறுப்பெடுக்கும்படியே கேட்டுக்கொண்டார். அதை மறுத்து காரணமில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று முடக்கி வைத்திருப்பது யார்? அந்த தீர்ப்பு வரும்வரை மாவையர்தான் தலைமைபொறுப்புக்கு உரியவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்தால்; கட்சியின் முடிவை ஏற்காமல், எதை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள், என்று நீதிபதி கேட்டால்; சட்டமேதை என்று சொல்லிக்கொள்பவர் என்ன பதில் சொல்வார்? நான் தலைவனாகும்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்பாரா?
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
விசயத்திற்கு ஏற்ற தலைப்பு போட முடியாத வக்கற்ற பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள் உள்ளவரையும், மக்களும் ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
-
அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அவர்களுக்காக நீதிமன்றம் வரை சென்றவர், எதிர்க்கட்சி கதிரையை பறி கொடுத்தவர்.
-
அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
வகுப்பறையில் கெட்டித்தனமான மாணவர்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பர். அதே நேரம் கெட்டித்தனத்தை வெளிப்படுத்த முடியாத மாணவர், குசும்புகள், கோள் சொல்லுதல் மூலம் எல்லோரின் கவனத்தை தம் பக்கம் ஈர்ப்பர். சம்பந்தப்பட்ட கடந்த அரசாங்கங்களோடு கூடிக்குலாவும்போது சவால் விட மறந்து விட்டார். இப்போ, அனுராவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப சவால் மேல் சவால் விட்டு தன்னை வெளிப்படுத்துகிறார். இது கொஞ்ச நாளைக்கு ஓடும் இன்னொரு செய்தி அகப்படும்வரை.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
உங்களின் குடும்ப ஆட்சியால் ஏமாற்றமடைந்த மக்களே அனுராவை தேர்ந்தெடுத்தனர். ஆகவே அவர்கள் சார்பாக கோரிக்கை வைப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் ஊழல் செய்திருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விட்ட இவர், இப்போ தம்பியை கைது செய்தவுடன், எங்களை கைதுசெய்தால் பொருட்கள் விலையேறுமென பயமுறுத்துகிறார். தந்தையாரோ, எப்போ அரசாங்க வாசஸ்தலத்தை விட்டு நான் வெளியேறவேண்டுமென நேரடியாக எனக்கு அறியத்தாருங்கள், நான் வெளியேறி விடுகிறேன் என கோரிக்கை வைக்கிறார். சரியான நகர்வை நோக்கி பயணிக்கிறாரோ அநுர? தேர்ந்தெடுத்த மக்களே விரட்டி விட்டார்கள், தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்குபோடுவதை நிறுத்திவிட்டார்கள், தொடர்ந்து சிங்கள மக்களும் கைவிட்டுவிட்டார்கள். இவர்கள் இப்போதும் புலிகளை மறக்கமுடியாமல் நோபல் பரிசு எதிர்பார்ப்பில். அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
அவர்கள் சுரண்டிய பணத்தை மீட்க்கும்படியே அனுராவை சிங்கள மக்கள் தெரிந்தெடுத்தனர். இது ஒருபுறமிருக்க, அரகலிய போராட்டமே இவர்களை துரத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள். இதெல்லாம்எதிர்கால சந்ததி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது காறி உமிழவும் கூடும். பறவாயில்லையா? இலங்கை வரலாறு காணாத அவமானம் அடைந்தது போதாது பதப்படுத்துங்கள்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
பாதிக்கப்பட்ட, தான் சார்ந்த மக்களின் பாதிப்புகளுக்காக குரல் எழுப்பிய சிறிதரனுக்கு நிகழ்ந்த கெடுபிடிகளை, அதற்காக சொல்லப்படும் காரணங்களை பார்த்தால், அந்த காரணங்களை வெளியிட்டவர்களின் சேவையில் சந்தேகம் ஏற்படுகிறது. பிந்தைய தகவல்: தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும்போது சுமந்திரனையும் சி. வி. கே. சிவஞானத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் அடம்பிடித்தாராம். அதில் சிவஞானத்தை சேர்க்கலாம் சுமந்திரனை சேர்த்துக்கொள்ள முடியாது என கூறியதால், கூட்டம் கலைந்ததாம். ஏன் வெளிநாட்டு தூதுவர்களை, அரசியல் தலைவர்களை சுமந்திரன் சந்திக்கும்போது, தனியாகத்தான், ரகசியமாக சந்தித்தார். அவர்கள், தன்னை தனியாக வரும்படி அழைத்தார்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். இப்போ ஏன் அடம்பிடிக்கிறார்? அரசுக்கு உளவு பார்க்கவேண்டும், பதவி பெற வேண்டும். இந்த வேண்டாத கல்லை அகற்ற முடியாது, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
முன்னைய அரசாங்கங்களே, இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென கூறி பாதுகாப்பு அளித்தார்கள். சுமந்திரன் அரசுடன் சேர்ந்து செயற்படுவதால், அதாவது அவர்களுக்கு கால் கழுவுவதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என காரணமும் கூறினார்கள். பின்னர், அவருக்கு அப்படியேதும் அச்சுறுத்தல் இல்லை, அவர் பேரணியில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் கலந்து கொள்கிறார்,ஆகவே அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை அது விலக்கப்படும் என்று விளக்கமளித்தார்கள். (இங்கே கவனிக்கப்படவேண்டியது: பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கும் , விலக்கப்பட்டதற்கும் கொடுக்கப்பட்ட காரணங்கள்). ஆனால், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இது பற்றி அப்போது சுமந்திரனிடம் வினவியபோது, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தான் முறையிடவில்லை, பாதுகாப்பு கோரவில்லை என்றார். சரி...... அப்போ ஏன் எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மறுக்கவில்லை? அவர்கள் சொன்னது, அவர்கள் சந்தேகம், நான் அப்படி பாதுகாப்பு கோரவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை? ஏன் அந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவில்லை? சரி, அனுரா ஆட்சியில் சுமந்திரன் மக்களாலும் அவர் சார்ந்த கட்சிகளினாலும் நிராகரிக்கப்பட்டவர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எங்கேயும் அனுராவிடம் முறையிடவில்லை. தன்னிச்சையாக இந்தியாவுக்கே போய் பகிரங்கமாக படம்பிடித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது. அவர் சொன்னது! அப்படியிருக்கும் போது, நமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என்பவர்களின் பாதுகாப்பை குறைத்தவர்கள், வெறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் அவசியம், மர்மம் என்ன?
-
சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..!
அதுதான் சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. அதை நிறைவேற்றால் அவர் அயர மாட்டார். போலி அரசியல் வாதிகள், போலி சாமியார்கள், போலிப்பத்திரிகையாளர் சமுதாயத்தை அழிக்கின்றனர்.
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
தமிழ் மக்களும், சொந்த கட்சியும் இவரை நிராகரித்து விட்டார்கள். ஆனாலும் வெளியேறமாட்டேனென அடம்பிடித்து இந்த நரியை வைத்து காய் நகர்த்துகிறார். இந்தகூழ்முட்டைக்கு ஒரு பதவியை காட்டினால் போதும், சுமந்திரன் என்ன தன்னையே மறந்து பேசுவார். பார்த்தோமே! முதல் நாள் பேட்டி, சுமந்திரனை தூற்றி. இரண்டுநாள் கழித்து அதே சுமந்திரனை போற்றி பேட்டி. காரணம்; பதவி!
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்: சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே. இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அர்ச்சுனா, சைவ இந்துக்களை பற்றி தவறான கருத்து வைத்திருந்தால் அது நாட்டிலுள்ள எல்லா சைவ இந்துக்களையும் பாதித்திருக்கும். இவர்களை மட்டும் பாதிக்கும்படி அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என இவர்கள் அறிவிக்கவில்லை. இவர்களை மட்டும் பாதிப்பதுபோல் ஏதோ சொல்லியிருப்பார் போல. இங்கு பிரதேசவாதத்தை வலிந்து திணிப்பது நீங்கள். தமிழர், விடுதலை வேண்டி போராடினார்கள். வடக்கு படையணி கிழக்கிலும், கிழக்கு படையணி வடக்கிலும், ஒரே விடுதலைக்காக போராடினார்கள். அங்கே எங்கும் பிரதேசவாதம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்க்குரிய பதவிகள் வழங்கப்பட்டன. அது தமிழரின், இனத்தின் விடுதலைக்கான போராட்டம். இவர் இங்கு, இந்துக்கள் என்றும் கூறுகிறார், சைவர் என்றும் கூறுகிறார். அப்போ ஏன் நாட்டின் மற்றைய பகுதிகளில் உள்ள சைவர் இதை எதிர்க்கவில்லை என்றுதான் கேட்க்கிறேன். இது அவர்களுக்கு மட்டுமுரிய போராட்டமா என்று. நீங்கள் தேவையற்ற ஒன்றை செருகி பிரச்சனையை உருவாக்க துடிக்கிறீர்கள்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
ரணிலும் இப்போ இவர் மாதிரி புலம்பிக்கொண்டும் சாபம் போட்டுக்கொண்டும் திரியிறார். எப்போ ஆட்சி கவிழும், தான் கதிரை ஏறுவேன் என்று. இவரை மக்கள் பாராளுமன்றம் அனுப்பும்போது அவர்களுக்கு இவர் உதவி வேண்டும். இப்போ இவரை மக்களும் கட்சியும் நிராகரித்துவிட்டார்கள். யாருக்குமே உதவாமல் போய் விட்டார். "வெறுங்கை முழமிடுமா?" இவர் சவால் விட்டு கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். அவர் நினைக்கவில்லை, அனுரா அரசு வெல்லுமென்று, இரண்டிலொரு பெரும்பான்மைக்கட்சியே வெல்லும், எப்போதும்போல் தரகர் வேலை செய்து பிழைக்கலாமென்று தெனாவெட்டாக இருந்ததுமல்லாமல், அநாகரிக வேலை செய்ததுமே இவருக்கு ஆபத்தாக முடிந்தது. இனியாவது மக்களுக்கு சேவைசெய்து இழந்துபோன மரியாதையை கட்டியெழுப்பி மக்கள் மனங்களில் இடம்பிடிப்போம் என நினையாமல், குறுக்குவழியில் மற்றவர்களை பின்தள்ளி முன்னுக்கு வர முயற்சிக்கிறார். இது அவரோடு கூடப்பிறந்த குணம் மாறாது. அனுரா இவரை கூப்பிட்டு கதிரை கொடுக்கும்வரை சவால், கூக்குரல் நிற்காது.