Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. உங்கள் பாடசாலை அனுபவம் எனக்குப் புதிது. எனது ஆசிரியர்கள் படிப்பிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். எனது ஆரம்பப் பாடசாலை அனுபவம் இப்படி இருந்தது. ஆசிரியர் கையில் சுட்ட பிரம்பிருக்கும். அதை வைத்துக் கொண்டே, “எங்கே நீ சொல்லு” என்று அவர் கேட்கும் போது நா வறண்டு குரல் தளர்ந்து வார்த்தைகள் தள்ளாடி அவை வெளியே வரும் போது, “அடியாத மாடு படியாது” என சுளீர் விழும். கலவன் பாடசாலை என்பதால் அழவும் முடியாமல், வீரனாக வாங்கிலில் அமர்ந்த நாட்கள்தான் அதிகம். சமீபத்தில் ஊர் போன போது குருவானவர்களைப் போய்ப் பார்க்கவில்லை. யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. புண்ணியவான்கள் போய்ச் சேர்ந்திருப்பார்கள். எனது தமிழ், சமய ஆசிரியர் ஏகாம்பரநாதன் 15.11.2019இல் காலமான போது நான் எழுதியது
  2. அகன்ற திரையில் பார்க்காமல் வீட்டில் ரிவியில் பார்த்ததால் பற்றுச்சீட்டைப் பற்றி கணக்கில் எடுக்கவில்லை. இந்தியாவில் உள்ளது போல் யேர்மனியில் பற்றுச் சீட்டில் கார் இலக்கங்கள் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம். ஒருநாளில் எல்லாவற்றையும் சமாளித்து ஒப்பேற்றிவிட்டு அதன் பிறகு காரைக் கண்டுபிடிச்சு, ஹொட்டல்வரை ஒருவர் போகிறார் எனபதெல்லாம் நடைமுறைச் சாதியமில்லை. அதை எல்லாம் எங்கள் கவனத்தில் வராத வகையில் கதையை நகர்த்திய இயக்குனர் திறமைசாலிதான். இந்த வருடம் வந்த படங்களில் மஹாராஜாதான் எல்லா ஊடகங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் சமீபத்தில் இணையத்தில் ‘ரயில்’ திரைப்படம் பார்த்தேன். 80களில் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்து வாழ்ந்த என் நினைவை ரயில் திரைப்படம், மீட்டிச் சென்றிருக்கிறது. நாங்கள் அன்று வேலைத் தளத்துக்குள் எங்கள் திறமைகளைக் காட்ட, அதனால் முதலாளிகளின் நம்பிக்கைகளை பெற்றுக் கொள்ள, அங்கே வேலை செய்து கொண்டிருந்த யேர்மனியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் வெளியேறும் போது, “இவங்களோடை வேலை செய்ய ஏலாது. எங்கை இருந்து வந்தாங்களோ?” என்று திட்டித் தீர்த்திருப்பார்கள். ஆனால் எங்கள் பின் புலத்திலும் ஒரு சோகம் நிறைந்த கதை இருந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்த ஒருவனுக்கும், ‘வடக்கன்கள் வந்து எங்கள் பிழைப்புக்கே உலை வைக்கிறாங்கள்’ எனப் பொருமும் தமிழ்நாட்டில் ஒருவனுக்குமான கதையாக ரயில் படக் கதை அமைந்திருக்கிறது. அறிமுகம் இல்லாத நடிகர்கள். ஆனாலும் நடிப்பில் அசத்துகிறார்கள். “வடக்கன் வந்து எங்களின்ரை. வேலையைக் குழப்புறான்” என்று எரிச்சல்பட்டு, நாயகன் கிடைத்த நேரம் எல்லாம் குடிக்கிறார். படம் முழுக்க போதையுடனே வருகிறார். அவரும் சரி, அவரது நண்பரும் சரி குடிகாரன்கள் என்னென்ன ஆட்டம் போடுவார்களோ அதை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நாயகி தனது நடிப்புத் திறமையை படம் முழுதும் நன்றாகக் காட்டியிருக்கிறார். வேலைக்குப் போகாமல் தினமும் குடித்து விட்டு வரும் கணவனுடன் போடும் சண்டைகளிலும், ‘வெளங்காமல் போ’ என்று மண்ணை அள்ளி எறிந்து கணவனுக்கு சாபம் இடும் காட்சிகளிலும் சரி அவரது நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. இந்த நடிகையை திரையில் இப்பொழுதுதான் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். வழக்கமான சினிமாப் பாணியில் இருந்து விலகி யதார்த்தமான படைப்பாக ரயில் திரைப்படம் இருக்கிறது. கதையில் குழப்பங்கள் ஏதுமின்றி ஒரு சீராகச் சென்று படம் முடிகிறது. ரயில் திரைபபடம்,ஒரு படமாக மட்டும் இல்லாமல் ஒரு பாடமாகவும் இருக்கிறது. படத்தில் மசாலாக்கள் இல்லாததால் சிலருக்கு அலுப்புத் தட்டலாம். ஆனாலும் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல பாராட்டப் பட வேண்டிய படமும் கூட. நல்ல திரைபடத்தைத் தயாரித்தார் என்ற திருப்பதியைத் தவிர இந்தத் திரைப்படத்தால் தயாரிப்பாளர் பணம் ஏதும் சம்பாதிக்க வாய்ப்பில்லைத்தான். பங்கேற்ற அனைவரையும் பாராட்டலாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்
  3. நானும் பார்த்திருந்தேன். உங்களை கவர்ந்த மாதிரி என்னை படம் பெரியளவில் கவரவில்லை. ஒன்று, விஜய் சேதுபதியின் முன்னைய படங்களை நினைவூட்டும் நடிப்பு, வசன உச்சரிப்புகள் அலுப்பைத் தருகின்றன. இரண்டு, படங்களில் இருந்த ஓட்டைகள். முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் என்பதைப் பற்றி இயக்குனருக்கு கவலை இருக்கவில்லை. இதுதான் முடிவாக இருக்கப் போகிறது என்பதை ஊகிக்கக் கூடியவரையிலான திரைக்கதை அமைப்பு…. பாரதிராஜாவால் நிற்கக்கூட முடியவில்லை. உட்காரவைத்து கிடைத்த ஒருநாள் ‘கால்சீட்’டில் காட்சிப் படுத்தியிருக்கிறார் போலும். படத்தில் நான் ரசித்தது சிங்கம் புலி, அபிராமியின் நடிப்புகளை. படம் நேர்கோட்டில் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருவதால் படம் தப்பித்துக் கொண்டது.
  4. கனக்க சொல்ல விரும்பவில்லை. உங்களைப் பற்றி நீங்களே சொல்லும் போது நான் என்ன பெரிதாக சொல்ல இருக்கு? கிளிநொச்சிக் கொள்ளைக்காரி விசயம் கேள்விப்பட்டதும் ஆரண்யகாண்டம் படம் நினைவுக்கு வந்துவிட்டது. இந்த ஆரண்யகாண்டத்தை கவிஞர் வேறு ஒன்றுக்கு கையாண்டிருப்பார். அந்தப் பாடல் வரிகள், ‘ஆரண்ய காண்டமதைத் தொடங்கு அயோத்தி பஞ்சணையில் உறங்கு சாகுந்தலம் படிக்க இறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு அம்மம்மா என்னம்மா…’
  5. புலிகள் இயக்கத்தில் சேர்ந்தால் சங்கு மார்க் சாரங்கள் தருவார்கள் என்று அன்று ஒரு கதை இருந்தது. ஜேஆர் கூட ‘சாரம் கட்டிய பெடியள்’ என்றுதான் சொல்லியிருந்தார். சாரம் ரங்கூனில் தேசிய உடை. சாரம் என்பதை பெரும் கதையாக வரவேண்டியது அதைக் குறுங்கதைக்குள் அடக்கி மற்றவர்களைப் பேச வைத்திருக்கிறீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.