Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22989
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம்.பி. By VISHNU 10 NOV, 2022 | 08:38 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் இன்று (10) விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புயங்கர பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். பொது மன்னிப்பு வழங்கப்பட்ட எண்வரின் 4 பேர் சட்ட சிக்கல் காரணிகளினால் சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர். இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் 09 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்துள்ளார். மிகுதியாகவுள்ள ஒருவரையும் விரைவில் விடுதலை செய்யுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/139675
  2. மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 05:21 PM (எம்.மனோசித்ரா) கடலில் 50 நாட்களுக்கும் அதிக காலம் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு 7.3 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்திருக்க முடியும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தேவையான 25 - 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனி வரி மோசடியால் அரசாங்கம் 1600 கோடி ரூபாவை இழந்துள்ளது. இழந்துள்ள இந்த தொகையை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 9 ஆம் திகதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதியாகும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்த திகதியிலேயே பல முக்கிய சம்பவங்கள் பதிவாகின. அதற்கமையவே இம்மாதம் 9 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பொலிஸார் அடக்குமுறைகளை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். தற்போது மக்களின் வாக்குகள் அற்றவர்களே நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருகின்றனர். தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நாமும் இணைந்து குரல் கொடுப்போம். மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீட் விரைவில் இலங்கையின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் , அதில் ஆச்சரியப்படுதற்கு ஒன்றும் இல்லை. உள்நாட்டில் மாத்திரமின்றி , சர்வதேசமும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் உள்ளது. கடந்த 52 நாட்களாக மசகு எண்ணெய் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலிலிருந்து மசகு எண்ணெண்யை தரையிரக்குவதற்கு 25 - 30 மில்லியன் டொலர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் இக்கப்பலுக்கு இதுவரையில் 7.3 மில்லியன் டொலர் தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்தப்பட்டுள்ள தாமதக் கட்டணத்தைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்ய முடியும். இந்தியாவினால் ரஷ்யாவிடமிருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமெனில் எம்மால் ஏன் முடியாது? இரண்டாம் தரப்பினர் ஊடாக இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாகக் காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் இதுவரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/139662
  3. ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 06:24 PM இலங்கையரான பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என இந்திய அமுலாக்கத் துறையினரிடம் டெல்லி நீதிமன்றமொன்று இன்று கேள்வி எழுப்பியது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சுமத்தப்பட்டவர்களின் பெயருடன் அமலாக்கத்துறை பணியகம் இணைந்திருந்தது இவ்வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் (37) மீது இந்திய அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டி இருக்கிறது. அதோடு சுகேஷிடமிருந்து 10 கோடி ரூபா மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால பிணை பெற்றுள்ளார். இவ்வழக்கில் நிரந்தர பிணை வழங்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், தெரிவித்தனர். மொபைல் போனில் உள்ள விடயங்களை அழித்து விசாரணையை தாமதப்படுத்தியதாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஜாக்குலின் நாட்டை விட்டு செல்ல விரும்பினார் என்றும், ஆனால் அவர் பெயர் வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றதால் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்றும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் முன்பு நிறுத்தி விசாரித்தபோது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டது. ஜாக்குலின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் இன்று நவம்பர் 10 ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன் அதுவரை ஜாக்குலினுக்கான பிணை நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜாக்குலினின் மனு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, '50 லட்சம் ரூபாவை நாங்;கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் நாம் கண்டதில்லை. ஆனால், ஜாக்குலின் 7.14 கோடி ரூபாவை வேடிக்கையாக செலவுசெய்துள்ளார். அவரிடம் பணம் உள்ளதால், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அவர் செய்து பார்க்கிறார்' என அமுலாக்கத்துறை சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். அதையடுத்து. வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் சுற்றறிக்கை (எல்ஓசி) ஜாக்குலினுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஜாக்குலினை இன்னும் கைது செய்யாமல் இருப்து ஏன் என கேள்வி எழுப்பியது. குற்றம்சுமத்தப்பட்ட ஏனையோர் சிறையில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஏன் வித்தியாசமான அளவுகோல்களை பயன்படுத்துகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் நாளை தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு வாங்கியதோடு, அவருக்காக மும்பையின் உயர்மட்ட ஜூஹூ பகுதியில் உள்ள பங்களாவுக்கு முன்பணம் கொடுத்ததாக இந்திய அமலாக்கப் பணியகத்தின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுகாஷ் சந்திரசேகர் 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139673
  4. இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா? கட்டுரை தகவல் எழுதியவர்,தினேஷ் உப்ரேதி பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES *** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது. இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன. *** என்பதை பார்த்து நீங்கள் இங்கே ஏதோ ஒரு வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறீர்களா? அது அப்படி இல்லை. இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்கியின் (அரசு அல்லது தனியார்) பெயரை நிரப்பி, அதை தேடினால் இதற்கான விடை கிடைக்கும். கடன் ரைட் ஆஃப் (கணக்கேட்டில் இருந்து நீக்குவது) விவகாரம் சமீப காலத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.29 லட்சம் கோடி கடனை ரைட் ஆஃப் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமையின் கீழ் கோரப்பட்ட தகவலில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. (பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒவ்வொரு மூன்றாவது மாதமும் இந்த ரைட் ஆஃப் தொகை பகிரங்கப்படுத்தப்படும். இந்த முடிவுகளில்,ரைட் ஆஃப் செய்யப்பட்ட கடன்களின் அளவு குறித்து வங்கிகள் தனது பங்குதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ) கனரா வங்கியின் இந்தத்தகவல் வெளி வந்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசைக் குறிவைக்கத் தொடங்கினர். வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் அரசை குறைகூறினர்.அரசு வங்கிகள் கடனை ரைட் ஆஃப் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கடன் தள்ளுபடி பற்றிய எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் உண்மையா அல்லது அரசு வேண்டுமென்றே தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை மறைக்கிறதா? கடன் தள்ளுபடியின் இந்த மர்மத்தைத் தீர்க்க, முதலில் வங்கி செயல்முறையை புரிந்துகொள்வோம். வங்கிகள் கடனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். உண்மையில் வங்கி வணிகமானது வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்வதைக் காட்டிலும் கடன் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டையும் வங்கி செய்வது அவசியம். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடன் என்பது சொத்தாக இருக்கிறது. ஏனெனில் அவை வங்கிக்கு வட்டிவருமானத்தை தருகின்றன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனாக கொடுக்கும் தொகையை, வட்டியுடன் சேர்த்து வசூலிக்கின்றன. மறுபுறம், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் வங்கியின் பொறுப்பு. வங்கிகள் இந்த தொகையை கடன் வழங்க பயன்படுத்துகின்றன. ஆனால் வங்கிகள் அதை வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். ரைட் ஆஃப் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடன் பெற்றவர்கள், அதை திருப்பிச்செலுத்தும் நிலைமையில் இருந்தாலும், வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் அவர்கள் வில்ஃபுல் டிஃபால்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப்பெறும் நம்பிக்கை முற்றிலும் முடிவுக்கு வந்ததும், வங்கி இவர்களுக்கு கொடுத்த கடனை வாரா கடன் என்று வகைப்படுத்தி அதை ரைட் ஆஃப் செய்கிறது. ஆனால், ரைட் ஆஃப் செய்வது என்பது கடன் தள்ளுபடி என்று அர்த்தமில்லை. வங்கிகள் தங்கள் கணக்கேட்டை தெளிவாக வைத்திருக்க மட்டுமே இதைச் செய்கின்றன. அதற்கும் ஒரு செயல்முறை உண்டு. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கிகள் முதலில் இதுபோன்ற கடனை, வாரா கடனாக (NPA) அறிவிக்கிறது. அதை திரும்பப் பெறமுடியாமல் போகும்போது அது ரைட் ஆஃப் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை எதிர்கொள்ள சட்டத்தையும் அரசு உருவாக்கியுள்ளது. அதன் கீழ் தப்பியோடிய தொழிலதிபர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சட்டபூர்வ நடைமுறையை கடைப்பிடித்து அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடன் வசூலிக்கப்படுகிறது. இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல்1 ஜூன் 2022 இன்று அறிமுகமாகிறது இ-ரூபாய்: இந்தியாவின் டிஜிட்டல் கரன்சியை எப்படி பயன்படுத்துவது?1 நவம்பர் 2022 ரெப்போ வட்டி விகித உயர்வு உங்கள் செலவுகளை எப்படி பாதிக்கிறது?1 அக்டோபர் 2022 NPA என்றால் என்ன? NPA (வாரா கடன்) வை புரிந்துகொள்வதற்கு முன், வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, வங்கியில் ரூ.100 டெபாசிட் இருந்தால், அதில் ரூ.4.5 (சிஆர்ஆர் தற்போது 4.5 சதவிகிதம்) ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்பட்டிருக்கும். CRR என்பது பண இருப்பு விகிதத்தைக் குறிக்கிறது. 18 ரூபாய் (தற்போது SLR 18 சதவிகிதம்) பத்திரங்கள் அல்லது தங்க வடிவில் வைத்திருக்க வேண்டும். SLR என்பது Statutory Liquidity Ratio – கட்டாய பணபுழக்க விகிதம். பட மூலாதாரம்,GETTY IMAGES மீதமுள்ள 77 ரூபாய் 50 பைசாவை வங்கி கடனாக தரலாம். அதிலிருந்து பெறப்படும் வட்டியில் இருந்து, அது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகைக்கான வட்டியை அளிக்கிறது. மீதமுள்ள பகுதி வங்கியின் லாபமாகும். வங்கிகளுக்கு, ஏதேனும் சொத்து (கள்) அதாவது கடனில் இருந்து வட்டி வருமானம் கிடைப்பது நின்றுவிட்டால் அது NPA ஆக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. வங்கியால் கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையின் அசல் அல்லது வட்டியின் தவணை 90 நாட்களுக்குத் திரும்ப வரவில்லை என்றால், வங்கிகள் அந்தக் கடனை NPA வில் வைக்க வேண்டும். NPA வாக இருப்பதற்கான விதிகள் என்ன ஒரு கடன் கணக்கு வருங்காலத்தில் NPA ஆகிவிடுமா என்பதைக் கண்டறிய ரிசர்வ் வங்கி விதிகளை உருவாக்கியுள்ளது. இதன் கீழ், வங்கிகள் தங்கள் கடன் கணக்குகளை சிறப்பு குறிப்பு கணக்குகளாக (SMA) வைக்க வேண்டும். ஒரு கடன் கணக்கை NPA வாக அறிவித்த பிறகு, வங்கி அந்த NPA கணக்கை 'சப் ஸ்டாண்டர்ட் சொத்துகள்', 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்'(Doubtful asset) மற்றும் 'இழப்பு சொத்துக்கள்'(Loss asset) என மூன்று வகைகளாக பிரிக்க வேண்டும். கடன் கணக்கு, ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு NPA பிரிவில் இருந்தால், அது 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' பிரிவில் அது ஓராண்டு இருந்தால் அது 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்' என்று அழைக்கப்படுகிறது. கடனை இனி திரும்பப் பெற முடியாது என்று வங்கி கருதும் போது, அது 'இழப்பு சொத்துக்கள்'என வகைப்படுத்தப்படுகிறது. "பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி NPA விதிகளை கடுமையாக்கி, சுமார் அரை டஜன் விதிகளை நீக்கியது. இப்போது கடனை திருப்பிச்செலுத்தாத விவகாரத்தில் 180 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் அந்த கணக்கை, திவால் செயல்முறை மூலம் மேலே கொண்டுசெல்ல வேண்டும்,” என்று வங்கி நிபுணர் காஜல் ஜெயின் தெரிவித்தார். "புதிய விதியின்படி, 2,000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாத சந்தர்ப்பங்களில் வங்கி அதிகாரிகள் 180 நாட்களுக்குள் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இல்லையெனில், அதை திவால் செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டும்,"என்று அவர் குறிப்பிட்டார். வீட்டுக் கடன் பெறுவது எப்படி? வட்டியை பேரம் பேசி குறைக்க முடியுமா?15 செப்டெம்பர் 2022 வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை4 செப்டெம்பர் 2022 "வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தாத விவகாரங்கள் அதிகரித்து வருவது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் அதற்கான தீர்வுகாண வங்கிகளுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் இந்த என்பிஏக்களை ’நஷ்டமாக’ காட்டித்தான் ஆகவேண்டும். வங்கிகளின் இந்தக் கடன் மூழ்கிவிட்டது, இனி திரும்பப் பெறவே முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல," என்று பொருளாதார வல்லுநர் சுனில் சின்ஹா கூறினார். கடன் தள்ளுபடி என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவர் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்றால், கடனைத் திருப்பிச் செலுத்த அவருக்கு வழி இல்லையென்றால், அத்தகையவர்களின் கடன்கள் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் எல்லோருமே இந்த தள்ளுபடி வரம்பிற்குள் வருவதில்லை. இந்த வகை கடன் தள்ளுபடி பொதுவாக விவசாயிகளுக்கு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. மோசமான விளைச்சல், பருவமழை அல்லது வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில், பெரிய வணிக நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனை ரைட் ஆஃப் செய்வதைவிட, அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை விரும்புகின்றன என்று பொருளாதார விவகார நிபுணர் சுதீப் பந்தோபாத்யாய் கூறுகிறார். “ரைட் ஆஃப் செய்வதை விட வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி சிறந்தது. இதற்குக் காரணம், வங்கி தனது முழு கடன் தொகையையும் அரசிடமிருந்து திரும்பப் பெறுகிறது. கடன் வாங்கியவரும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏழை விவசாயிகள்) கடன் சுமையில் இருந்து விடுபடுகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார். “விவசாயிகளின் ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அரசு கூறினால், இந்த 1000 ரூபாயை அரசு வங்கிக்கு வழங்கும் என்று அர்த்தம். அதேசமயம், ரைட் ஆஃப் விஷயத்தில் வங்கிகள் வாராக் கடன் என்று அதை வகைப்படுத்த வேண்டும். நிச்சயமாக இது அவர்களின் லாபத்தை பாதிக்கிறது."என்று சுதீப் தெரிவித்தார். ரைட்ஆஃப் மற்றும் வேவ்ஆஃப் கதை பெரும்பாலும் புள்ளிவிவரங்களின் வித்தைதான். ஒருவேளை இதனால்தான்’புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது, ஆனால் அவை முழு உண்மையையும் தெரிவிப்பதில்லை’ என சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது. https://www.bbc.com/tamil/articles/c10m37d9zrro
  5. காலநிலை மாற்றம் குறித்த 5 தவறான புரிதல்கள் - உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அவசரத்தை மிகைப்படுத்த முடியாது. புவி வெப்பமயமாதல் குறித்து சமூக வலைதளங்களில் பலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர். எகிப்தில் தற்போது 27ஆவது காலநிலை உச்சிமாநாடு நடைபெற்றுவருவதால், காலநிலை மாற்றம் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பான தவறான தகவல்களும் அதிகம் பரவிவருகின்றன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம். காலநிலை மாற்றம் என்பது உண்மையல்ல சிலர் காலநிலை மாற்றம் உண்மையில்லை என்று நம்புகின்றனர். அவர்கள் இந்தப் பிரச்னையை சதிக்கோட்பாடுகளாக கருதுகிறார்கள். புவி வெப்பமடைதல் என்பது ஒரு ரகசியமான உலகமயக் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன புரளி என்று அவர்கள் நம்பலாம். மற்றவர்கள் இது பணம் சம்பாதிக்கும் திட்டம் அல்லது நமது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் குறைக்கும் ஒரு மோசமான சூழ்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், இத்தகைய கருத்துகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. 99 சதவிகித விஞ்ஞானிகள் சில மதிப்பீடுகளின்படி காலநிலை மாற்றம் உண்மையானது மற்றும் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். 1850ஆம் ஆண்டு முதல் உலக சராசரி வெப்பநிலை 1.1 செல்சியஸ் உயர்ந்துள்ளதாக காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (IPCC) கூறுகிறது. இதன் விளைவாக, தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமடைந்து உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை வெப்பமாக்கியுள்ளதாக 2021ஆம் ஆண்டின் ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. “காலநிலை மாற்றம் தற்போது இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை நம்புவதற்கு இந்தாண்டின் தீவிரமான வானிலை நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானி எல்லா கில்பர்ட். காலநிலை மாற்றம் மேற்கத்திய நாடுகளின் பிரச்னை புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு முக்கிய காரணமாக உள்ளது. இது சூரியனில் இருந்து வெப்பத்தை இழுத்து, பூமியை சூடாக்குகிறது. அதிகப்படியான உமிழ்வுகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகள் பொறுப்பேற்றுள்ளன. எனவே ஏழை நாடுகளில் உள்ள பலர் காலநிலை மாற்றத்தை தீர்ப்பதை ஒரு மேற்கத்திய பிரச்னையாக கருதுகின்றனர். ஆனால் காலநிலை மாற்றத்திற்கு எல்லைகள் கிடையாது. அது ஏற்கனவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. உதாரணமாக, சமீபத்திய பாகிஸ்தான் வெள்ளத்திற்கு புவி வெப்பமடைதல் முக்கிய காரணமாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாற்றத்தால் ஏழை நாடுகளே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதற்கான பல காரணங்களில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவர்களிடம் போதுமான திறன் இல்லாததே முக்கிய காரணமாகும். "காலநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னை” என்கிறார் ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லிசா ஷிப்பர். COP27 உட்பட, காலநிலை தொடர்பான விவாதங்களில் ஏழை நாடுகளின் கருத்துகள் ஏன் கேட்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். COP27 மாநாட்டில் காலநிலை நீதி தொடர்பான விவாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் தொடர்ச்சியான குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் ‘வெப்பமான பூமி’ என்ற யோசனை மேலோட்டமாக பார்க்கும் போது சுவாரசியமான ஒன்றாகத் தெரியலாம். ரஷ்ய அதிபர் புடினின் ஒரு கருத்தை உதாரணமாகக் கூறலாம். "வெப்பமான ரஷ்யாவில், மக்கள் குளிர் தாங்கும் உடைகளுக்கு குறைவாக செலவழிப்பார்கள் மற்றும் தானிய அறுவடை அதிகரிக்கும்" என்று 2003ஆம் ஆண்டில் புடின் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தப் பார்வை ரஷ்ய சமூக ஊடகங்களில் இன்றும் வெளிப்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன?6 நவம்பர் 2022 காலநிலை மாற்றம்: ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள்3 மார்ச் 2022 காலநிலை மாற்றம்: 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை8 பிப்ரவரி 2022 இங்கு பிரச்னை என்னவென்றால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எந்தவொரு ஆதாயமும் கிரகம் முழுவதும் ஏற்படும் பெரும் பாதிப்பால் அர்த்தமற்றதாகிறது. ஐபிசிசியின் மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸ் அதிகரித்தால், காலநிலை மாற்றத்தால் உலகிற்கு 54 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும். இதுவே, 2 செல்சியஸ் அதிகரித்தால் 69 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்படும். மத்திய கிழக்கு நாடுகளில் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதைக் காணலாம். பசிபிக் தீவு நாடுகள் உயரும் கடல்மட்டத்தின் கீழ் மறைந்து போகலாம். மேலும், பல ஆப்பிரிக்க நாடுகள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம். வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறிவருவதால் ரஷ்யா போன்ற குளிர் நாடுகளில் கூட ஏற்கனவே காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகிறது. கடல் மட்டம் உயரவில்லை, இது அலைகளின் செயல் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்ட வெப்பமயமாதலின் 90 சதவிகிதத்தை கடல்கள் ஏற்கனவே உறிஞ்சிவிட்டன. இதனால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்பநிலை அதிகரிப்பதால் கடல்களும் விரிவடைகின்றன. சமூக ஊடகங்களில், காலநிலை மாற்றத்தை சந்தேகிப்பவர்கள் கடல்மட்ட உயர்வை ‘அலைகளின் வேலை’ என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது. அலைகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி காலப்போக்கில் சமநிலையை அடையும் சிறிய தினசரி மாற்றங்களைக் குறிக்கின்றன. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் உலக கடல் மட்டம் 160 முதல் 210 மிமீ வரை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை விட சற்று அதிகம் எனக் கூறும் எடின்பர்க் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கென் ரைஸ், இந்தச் செயல்முறையின் வேகம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். இந்த மாற்றம் வெறும் கண்களுக்கு அரிதாகவே தெரிந்தாலும், இது ஏற்கனவே தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல்மட்டம் உயரும்போது கரையோர அரிப்பு துரிதப்படுத்தப்பட்டு வெள்ள அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம்15 அக்டோபர் 2021 பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்; பாதிக்கப்படும் ஏழை நாடுகள்17 ஜனவரி 2020 விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், 2100ஆம் ஆண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 மீ உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் பொருள், தற்போது கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக ஆசியாவில் வசிக்கும் மக்கள் விரைவில் தங்கள் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதையோ அல்லது நீருக்கடியில் இருப்பதைக்கூட பார்க்கலாம். இது மிகவும் தாமதம் காலநிலை மாற்றம் தொடர்பான தலைப்புச் செய்திகளைக் கண்டு கவலைப்படாமல் இருப்பது கடினம். கடைசி வாய்ப்புகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள் பற்றிய அனைத்து பேச்சுகளும் மிகப்பெரியதாக இருக்கலாம். இது, இனி எதுவும் செய்ய முடியாது என்று எண்ணைத்தையும் சிலருக்கு கொடுக்கலாம். நமக்கு இரண்டு வழிகள் இல்லை. காலநிலை ஏற்கனவே மாறி வருகிறது. அந்த மாற்றங்களின் தாக்கம் வரவிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உணரப்படும். ஆனால் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடியை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதற்கு காலநிலை விஞ்ஞானிகளுக்கு நன்றி கூற வேண்டும். பசுமை இல்ல வாயு உமிழ்வை நாடுகள் மிகப்பெரும் அளவில் குறைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களைக் கைப்பற்றுவதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அவர்களின் செயல் திட்டங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு என்பதால் COP27 போன்ற உச்சிமாநாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது பாதிப்பைக் குறைக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு செயலும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று கூறும் விஞ்ஞானி கில்பர்ட், நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு சுருங்குகிறது, ஆனால் அது இன்னும் இருக்கிறது, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும் என்கிறார். https://www.bbc.com/tamil/articles/ck7el8dwdm2o
  6. வேலூரில் அரை நிர்வாண ராகிங்: சஸ்பெண்ட் ஆன ஏழு பேர் மீது போலீஸில் புகார் - முழு விவரம் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள விடுதி மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. "The Walking Race" எனப் பெயரிடப்பட்டு, அக்டோபர் 9ஆம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில் பல கேலிவதைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் சிலர் அரை நிர்வாணமாக நடந்துசெல்லும்போது அவர்கள் மீது தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாயை வைத்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. சிலர் பின்னோக்கி நடந்து செல்கிறார்கள். சிலர் தேங்கியிருக்கும் மழை நீரில் தண்டால் எடுக்கிறார்கள். இரு மாணவர்களை கட்டிப்பிடிக்கச் சொல்கிறார்கள். இலங்கை பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு8 பிப்ரவரி 2020 செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி இறப்புக்கு ராக்கிங் காரணமா?1 மே 2022 இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மருத்துவர், இது தொடர்பாக ரெடிட் தளத்தில் பதிவாகியிருந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரியின் இயக்குநர் விக்ரம் மேத்யூஸிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். "கல்லூரியில் பகடிவதை நடந்ததாக கல்லூரி நிர்வாகத்துக்கு முகவரி, பெயர் இல்லாமல் மின்னஞ்சல் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு புகார் வந்தது. படக்குறிப்பு, செய்தியாளர்களை சந்தித்த வேலூர் சிஎம்சி இயக்குநர் விக்ரம் மேத்யூ அதில் 7 மாணவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 7 பேரையும் இடைநீக்கம் செய்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு பேராசிரியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளோம். ஏற்கெனவே கல்லூரியில் உள்ள பகடிவதை தடுப்பு குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. இந்த அறிக்கைகள் வந்த பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பகடிவதையை எந்த விதத்திலும் ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என விக்ரம் மேத்யூஸ் தெரிவித்தார். தற்போது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாக அந்த வீடியோவிலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய இயலவில்லை. கல்லூரியில் புதிய மாணவர்கள் திங்கட்கிழமைதான் சேர்ந்தார்கள் என்பதால், தற்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக கல்லூரி முதல்வர் சார்பில் வேலூர் காவல்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. "எங்களிடம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். புகார் இன்னும் வரவில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா. 2016ஆம் ஆண்டில் இதே நவம்பர் மாதம், இந்தக் கல்லூரி விடுதியின் மாணவர்கள் குரங்கு ஒன்றை பிடித்து அதை துன்புறுத்தி கொன்றதாக நான்கு மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c89p98qjqn2o
  7. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் : அமைச்சர் அலிசப்ரி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 04:04 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம் ) போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது மாத்திரம் முழுமையான அவதானம் செலுத்தாமல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பேரிழப்பினை பாடசாலை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்பட்ட பல இலட்ச வழக்குகளை துரிதமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். அத்துடன் காலத்திற்கு தேவையான பல சட்டங்களை இயற்றினோம், பழமையான பல சட்டங்களை திருத்தம் செய்தோம். எமது நாட்டில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகள் உள்ளார்கள்.நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் நீதித்துறையில் கட்டமைப்பில் உள்ள சிறப்பு விடயங்களை இலங்கையில் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். சிறு வயதினை உடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றி வளைப்பதை இலக்காக கொண்டுள்ளோம், ஆனால் உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார கோணத்தில் பார்க்கப்படுகிறார்கள். போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்தப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது, ஆகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகள் தான் நாட்டை இல்லாதொழிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள், முக்கிய தரப்பினர் உட்பட பலர் தொடர்புப்பட்டுள்ளார்கள். ஆகவே போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு போதைப்பொருள் உள்வருவதை தடுக்கவும்,விநியோகத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அறியவில்லை. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை பாடசாலைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களுக்கு புனர்வாழ்வு உட்பட மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/139652
  8. டி20 உலக கோப்பை: இந்தியாவின் கனவு கானல் நீரானது - படுதோல்விக்கு காரணம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ஃபாக் பதவி,பிபிசி தமிழ் 10 நவம்பர் 2022, 11:21 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா படுதோல்வி அடைந்திருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலக கோப்பை கைகூடவில்லை. 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது இந்தியா. ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து. பொய்த்துப் போன நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் அரையிறுதி ஆட்டத்தை போன்றே இரண்டாவது அரையிறுதியிலும் ஒரு அணியின் ஆதிக்கமே முழுவதுமாக மேலோங்கியிருந்தது. ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா ஒருவேளை டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் செய்திருக்கும். அதனால் எங்களுக்கு இது எந்தவிதத்திலும் பாதிப்பில்லை என பெரியளவில் நம்பிக்கையுடன் பேசினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால் அந்த நம்பிக்கை அவரது பேட்டிங்கில் துளியும் தென்படவில்லை. இங்கிலாந்தை அச்சுறுத்தும் அடிலெய்ட் மைதானமும் விராட் கோலியும் - ஏன் தெரியுமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை6 மணி நேரங்களுக்கு முன்னர் டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 இந்தியாவின் தோல்விக்கு தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி இந்த தொடரில் ஒருமுறை கூட 50 ரன்களை கூட சேர்த்ததில்லை. அதே போல பவர்பிளேவில் அதிக ரன்களை குறிக்க இந்த இணை தவறியது. இந்த உலக கோப்பை தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 அரை சதங்களை பதிவு செய்தார். ஆனால் இன்றைய முக்கிய ஆட்டத்தில் வெறும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். ரோஹித் சர்மா - கோலியுடன் இணைந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுவும் நடக்கவில்லை. அவர் 27 ரன்களில் வெளியேறினார். குறுகிய பவுண்டரிகளை கொண்ட அடிலெய்டில் ஒரு சிக்சரை கூட ரோஹித் விளாசவில்லை. இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை ஹிட் மேன் என அறியப்பட்ட ரோஹித்தால் சமாளிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை தந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி நிதானமாக விளையாடி அரைசதம் பதிவு செய்தார். முதல் 15 ஓவர்களில் இந்தியா வெறும் 100 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறிக் கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா களத்திற்குள் வந்து அதிரடி காட்டினார். பந்துகள் பவுண்டரியை நோக்கி பறக்க 33 பந்தில் 63 ரன்களை எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. எனினும், இந்தியாவின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கையில்தான் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் கோணல் முற்றிலும் கோணலானது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப அமைந்தது புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவர். பெரும்பாலும் பந்துகள் அவுட் ஸ்விங்காக மாற, அதை லாவகமாக பவுண்டரிக்கு விளாசினார் ஜாஸ் பட்லர். முதல் ஓவரில் மட்டுமே 3 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது இங்கிலாந்து. இந்திய அணியின் பவுலர்களை மாற்றிப்பார்த்தும் இங்கிலாந்தின் ரன் மழையை நிறுத்த யாராலும் முடியவில்லை. பவர் பிளே முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. அதுவே இந்தியாவின் வெற்றியை கிட்டதட்ட பறித்த தருணம். இங்கிலாந்து அணி எந்த ஒரு சிறிய தவறையும் செய்யாமல், அற்புதமான ஷாட்களை ஆடி ரன் வேட்டையை தொடர்ந்தது. அலெக்ஸ் ஹேல்சும் ஜாஸ் பட்லரும் மாறி மாறி அரைசதம் விளாசினர். தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விக்கெட்டை கூட இந்தியாவால் எடுக்க முடியாமல்போனது. 49 பந்துகளில் பட்லர் 80 ரன்களும் 47 பந்துகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுக்க, அதிரடி சிக்சருடன் அபார வெற்றியை ருசித்தது இங்கிலாந்து. ரோஹித் சர்மா அணி களத்தை விட்டு சோகத்துடன் வெளியேறியது. கேப்டன் ரோஹித்தின் முகம் முற்றிலும் வாடிப்போன நிலையில், பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். தடுமாறிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து ஒரு அற்புதமான கிரிக்கெட்டை ஆடியிருந்தாலும் இந்தியாவின் பந்துவீச்சில் பெரிய சிக்கல் இருப்பது மீண்டும் தெளிவாகியிருக்கிறது. பவர் பிளேவில் தொடர்ந்து இந்தியா தடுமாறுகிறது. புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் பெரியளவில் வேரியேஷன் இல்லாமல் போனது, அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுக்கத் திணறியது. ஃபீல்டிங் சொதப்பல், சுழற்பந்துவீச்சால் எந்த பலனும் கிடைக்காதது உள்ளிட்டவை இந்தியாவின் படுதோல்விக்கு பிரதான காரணிகளாக அமைந்தன. இந்தியா அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தாலும் சில நல்ல போட்டிகளை விளையாடியிருக்கிறது என்றே நிபுணர்கள், விமர்சகர்கள் கருதுகிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. 1992 உலக கோப்பையை போன்று இந்த தொடரிலும் பாகிஸ்தான் மேஜிக் நிகழ்த்துமா? அல்லது இதே அதிரடியில் இங்கிலாந்து கோப்பையை உச்சி முகருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். "ஆட்டம் ஏமாற்றம் தருகிறது" பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை என்று கூறினார். 16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாக் அவுட் சுற்றை பொறுத்தவரை அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம். புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை. நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம். இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தது’என்றார். https://www.bbc.com/tamil/articles/cld5d6xd6ego சித்தப்பா சொன்னார் பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் தோற்பதை விட இங்கிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது அணி வீரர்கள் வசைமழையில் இருந்து தப்பிவிட்டார்கள்.
  9. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்டுள்ளோம் : ஜனாதிபதி அறிவிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 08:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம். சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றிய நிலையில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சர்வசேத நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் மாத்திரம் தான் செல்ல வேண்டும். ஆனால் தற்பொழுது ஏனைய நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது. ஜப்பான்,சீனா மற்றும் இந்தியா என்பன பரிஸ் கழக அங்கத்துவ நாடுகளல்ல. அந்த பேச்சுவார்தைகளிலும் திருத்தங்கள் வரலாம் . அவர்கள் இலக்கு ஒன்றை தந்துள்ளனர். இது 4 வருட திட்டம். உடன்பாடுகள் நிறைவடையும் வரை ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம். சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் அறிவிப்போம் என்றார். விமல் வீரவங்ச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி,தனிப்பட்ட கடன் , சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெற்ற கடன் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இரு தரப்பு கடன் இதில் பிரதானமானது. வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் அது உடன்பாட்டுக்கு வரும் என கருதுகிறோம்.தனிப்பட்ட கடன் தொடர்பில் சிக்கல் இருக்கும் என்று கருதவில்லை. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏதாவது ஒரு நாடு உடன்படாவிட்டால் ஏற்படும் தாக்கம் குறித்து விமல் வீரவன்ச எம்.பி.மீண்டும் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி , இங்கு இரண்டு மாற்றுவழிகள் தான் உள்ளன. கடனை ரத்துச் செய்வதா அல்லது கடனை மீளச் செலுத்தும் காலப்பகுதியை நீடிப்பதா ஆகிய இரண்டு வழிகள் குறித்தே ஆராயப்படும். அதில் ஒரு மாற்று வழியை தேட முடியுமாக இருக்கும் என்றார். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் உதவியில் மாற்றம் வரும் நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என சந்திம வீரக்கொடி எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, குறிப்பிட்ட எல்லைக்குள் தான் நாம் செயற்படுகிறோம். அந்த எல்லைக்கு மாற்றமாக ஏதும் நடந்தால் நாம் அது பற்றி அறிவிப்போம். மக்கள் மீது அதிக சுமையேற்றுவதா ? நேரடி வரியை அதிகரிப்பதா ? என்பது குறித்தும் அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பிலும் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மூன்று வழிகள் தான் உள்ளன என்றார். https://www.virakesari.lk/article/139670
  10. அநேகமா இறுதிப்போட்டியின் பின் இந்த விபரங்கள் மாற வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன்.
  11. இந்தோனேஷிய விமானம் வீழ்ந்தமைக்கு விமானியின் தவறும் காரணம்: விசாரணையாளர்கள் By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 05:10 PM இந்தோனேஷியாவில் கடந்த வருடம் 62 பேர் பலியான விமான அனர்த்தத்துக்கு விமானியின் தவறும் காரணம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். விஜயா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் எஸ்ஜே-182 விமானம், கடந்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதி, ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிதுநேரத்தில் ஜாவா கடலில் வீழ்ந்தது. இதனால் மேற்படி போயிங் 737-300 ரக விமானத்திலிருந்த 62 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணை விபரங்களை இந்தோனேஷிய வான் போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வெளியிட்டனர். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கெப்டன் நூர்கயோ உதோமா இது தொடர்பாக கூறுகையில், விமானத்துக்கு எரிபொருள் விநியோகிக்கும் சாதனத்தில் ஏற்பட்ட கோளாறும், விமானியின் மெத்தனப் போக்கும் இச்சம்பவத்துக்கு காரணம் என்றார். https://www.virakesari.lk/article/139664
  12. பெரிய அடி ஏதும் விழும் என நினைக்கிறாரோ? அல்லது பின்னிருந்து இயக்குபவர்கள் கையை விரிச்சிட்டாங்களோ!
  13. டி20 உலக கோப்பை: கண் கலங்கிய ரோஹித் ஷர்மா - ட்ரெண்டாகும் ‘கேப்டன்சி’ பட மூலாதாரம்,GETTY IMAGES 44 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியா, இந்த முறை ரோஹித் தலைமையில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்தின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது. ஆட்டத்தின் போக்கு இந்தியாவிடம் இருந்து மாறத் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பரபரப்புடன் காணப்பட்டார். முகமது ஷமி ஃபீல்டிங்கின்போது செய்த தவறால் ஆத்திரம் அடைந்தார். டிரிங்க்ஸ் பிரேக்கின் போது வீரர்களுடன் ஆலோசித்த சமயம், அவர் முகத்தில் கோபமும் பதற்றமும் தெரிந்தது. ஆட்டம் முற்றிலும் இங்கிலாந்து வசம் மாறியபோது, மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டார். போட்டி முடிந்ததும் இங்கிலாந்து வீரர்களுடன் கைகுலுக்கிய பிறகு, டக் அவுட்டில் அமர்ந்து கண் கலங்கினார். அவரது முகம் முற்றிலும் வாடிப்போய் இருந்தது. பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்திய காட்சிகள் வெளியாயின. டி20 உலக கோப்பை: இந்தியாவின் கனவு கானல் நீரானது - படுதோல்விக்கு காரணம் என்ன?31 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தை அச்சுறுத்தும் அடிலெய்ட் மைதானமும் விராட் கோலியும் - ஏன் தெரியுமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 ஐபிஎல் தொடரை சுட்டிக்காட்டிய ரோஹித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லருடன் (வலது) கைகுலுக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (இடது) தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை. 16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாக் அவுட் சுற்றை பொருத்தவரை, அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனியாக நெருக்கடியை சமாளிக்க சொல்லித் தர வேண்டியதில்லை,” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம். வீரர் புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை. நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம். இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தன,” என்கிறார். ரோஹித்துக்கு கேப்டன்சியில் பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2017ல் எம்.எஸ்.தோனி கேப்டன்சியில் இருந்து விலகியபோது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். அந்த ஆண்டே விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களம் கண்டார் ரோஹித். 2021 டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதும் ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனவரி 2022-ல் டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அனைத்து ஃபார்மேட்களிலும் கேப்டனாக அவர் செயல்படத் தொடங்கினார். டி20 போட்டிகளில் இதுவரை 51 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது. டி20 தொடர்களில் பெருவாரியான வெற்றிகளை இந்தியா குவித்திருந்த போதிலும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தொடர் தோல்வியால் வெளியேறியது. தற்போது டி20 உலக கோப்பை அரையிறுதியிலும் தோல்வியுடன் வெளியேறியுள்ளது. “ஒரு அணிக்கு 7 கேப்டன் தேவையா?” பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி எப்போதெல்லாம் மோசமான தோல்விகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் கேப்டன்சியும் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இணையத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பொறுப்பு குறித்து பல விமர்சனங்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பல பேர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா தவிர்த்து, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் அணியை வழிநடத்தியுள்ளனர். இதனை சுட்டிக்காட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார். “ஒரு அணியை கட்டமைப்பது கேப்டனின் பொறுப்பு. நமக்கு கீழ் உள்ள அணியுடன் தொடர்ந்து ஒரு வருடமாவது பயணிக்க வேண்டும். இந்த ஆண்டு இந்தியாவுக்காக எத்தனை தொடரில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார்? அணிக்கு ஒரு தலைவர்தான் இருக்க வேண்டும். 7 பேர் இருந்தால் அணியை வழிநடத்துவது கடினம் தான்” என முன்னணி கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல கேப்டன்சி பொறுப்பு எவ்வளவு கடினமானது என்பதை ரோஹித் தற்போது உணர்ந்திருப்பார் என்கிற வாசகத்துடன் விராட் கோலியின் ஷேஷ்டேகும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cyxyxngg5x2o
  14. பையா பொறுமையா இருப்பம், பெரிய தலையள்(சாமியார் இப்பவே கழுவி ஊத்துறார்.) எல்லாம் பேசாம இருக்கேக்க நாங்க சின்னப்பொடியள் மௌனமா இருப்பம்!👍 இன்னும் 2 நாள் தானே, ஞாயிறு மாலை/இரவு தெரிந்துவிடும். வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி.🤫
  15. இரவில் ஓரளவு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது! 220வோல்ற் மின்சாரம் எனில் உயிராபத்து மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும், 110வோல்ற் எனின் ஆபத்து குறைவு என நினைக்கிறேன்.
  16. யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது போத்தல் தாக்குதல் By VISHNU 10 NOV, 2022 | 05:22 PM யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது 9 ஆம் திகதி புதன்கிழமை இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139665
  17. இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 04:56 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெடக்ளால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகதிபெற்றது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனையுடன் கூடிய 170 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். இந்தியாவை விட மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து பவர் ப்ளே நிறைவில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 86 ஓட்டங்களுடனும் ஜொஸ் பட்லர் 49 பந்ந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 80ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது 4ஆவது அரைச் சதத்தைக் குவித்த விராத் கோஹ்லி சரியாக 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழழந்தார். இதனிடையே கோஹ்லி 42ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார். மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அவர்களை விட ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 6 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/139657
  18. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 02:19 PM இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடோவின் மனைவி, குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை தனது வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தீர்மானித்துள்ளது. பாஜகவில் ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு இணைந்தார். அவரை எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஜம்னாநகர் வடக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தர்மேந்திராசின் எம். ஜடேஜாவை நீக்கிவிட்டு ரிவாபா ஜடேஜாவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது 182 வேட்பாளர்களில் முதல் கட்டமாக 160 பேரின் விபரங்களை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் தர்மேந்திராசின் எம். ஜடேஜா உட்பட 38 பேர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. குஜராத் சட்டசபைத் தேர்தல்கள் எதிர்வரும் டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. (S) https://www.virakesari.lk/article/139632
  19. குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறென தேரர்களால் தொடரப்பட்ட வழக்கு : ரவிகரன், சிவநேசன் ஆகியோர் பிணையில் விடுதலை By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 01:32 PM முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர். பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர். இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர். அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், இன்று (நவ.10) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிசாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிசார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139622
  20. ஓமானில் ஏலம் விடப்பட்டு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் விபசாரத்தில் - பொலிஸ் பேச்சாளர் By VISHNU 10 NOV, 2022 | 03:37 PM வீட்டுப் பணிப் பெண்களாகப் பணி புரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் ஆட்கடத்தல் கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களையும் பெண்களையும் வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்புவதாக அவர்களிடம் உறுதியளித்து ஓமானுக்கு அனுப்புகின்றன, மேலும் அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாட்டுகளுக்குள் நுழைய சுற்றுலா விசாவே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஓமானை சென்றடைந்ததும் அவர்களின் வயது மற்றும் தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, ஏலம் விடப்பட்டு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/139646
  21. முன்மாதிரி திட்டம் இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் ஹபரண பகுதியில் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் ஒரு முன்மாதிரி யானை - மனித மோதலை தடுப்பதற்கான செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றியளித்த திட்டமாக கருதப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் யானை -மனித மோதலை தடுப்பதற்காக சமூகமட்டத்திலான மின்சார வேலி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆய்வு தொடர்பான விஞ்ஞானி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு அந்த கிராமத்தை சுற்றி ஒரு யானைகள் வராத முறையில் மின்சார வேலியை அமைக்காமல் அதற்கு மாறாக வீடுகளை சுற்றி மின்சார 3 வேலி அமைத்தல், மக்களின் பயிர் செய்கைகள் இருக்கின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல், மக்கள் அடிக்கடி நடமாடுகின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல் என்ற அடிப்படையில் சமூகமட்ட மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.
  22. விக்கெட் இழக்காமல் வென்றதால் இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. அதோட எடுத்த ஓட்டமும் போதாதென நினைக்கிறேன்.
  23. 429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது By VISHNU 10 NOV, 2022 | 03:12 PM (எம்.வை.எம்.சியாம்) காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல் பகுதியில் காங்கேசன்துறை கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மீன்பிடி படகொன்றிலிருந்து 429 கிலோ 40 நிறையுள்ள கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் முழங்காவில் மற்றும் மண்டதீவு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் காங்கேன்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139641
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.