Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது போத்தல் தாக்குதல் By VISHNU 10 NOV, 2022 | 05:22 PM யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது 9 ஆம் திகதி புதன்கிழமை இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139665
  2. இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 04:56 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெடக்ளால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகதிபெற்றது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனையுடன் கூடிய 170 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். இந்தியாவை விட மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து பவர் ப்ளே நிறைவில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 86 ஓட்டங்களுடனும் ஜொஸ் பட்லர் 49 பந்ந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 80ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது 4ஆவது அரைச் சதத்தைக் குவித்த விராத் கோஹ்லி சரியாக 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழழந்தார். இதனிடையே கோஹ்லி 42ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார். மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அவர்களை விட ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 6 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/139657
  3. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 02:19 PM இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடோவின் மனைவி, குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை தனது வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தீர்மானித்துள்ளது. பாஜகவில் ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு இணைந்தார். அவரை எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஜம்னாநகர் வடக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தர்மேந்திராசின் எம். ஜடேஜாவை நீக்கிவிட்டு ரிவாபா ஜடேஜாவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது 182 வேட்பாளர்களில் முதல் கட்டமாக 160 பேரின் விபரங்களை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் தர்மேந்திராசின் எம். ஜடேஜா உட்பட 38 பேர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. குஜராத் சட்டசபைத் தேர்தல்கள் எதிர்வரும் டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. (S) https://www.virakesari.lk/article/139632
  4. குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறென தேரர்களால் தொடரப்பட்ட வழக்கு : ரவிகரன், சிவநேசன் ஆகியோர் பிணையில் விடுதலை By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 01:32 PM முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர். பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர். இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர். அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், இன்று (நவ.10) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிசாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிசார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139622
  5. ஓமானில் ஏலம் விடப்பட்டு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் விபசாரத்தில் - பொலிஸ் பேச்சாளர் By VISHNU 10 NOV, 2022 | 03:37 PM வீட்டுப் பணிப் பெண்களாகப் பணி புரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் ஆட்கடத்தல் கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களையும் பெண்களையும் வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்புவதாக அவர்களிடம் உறுதியளித்து ஓமானுக்கு அனுப்புகின்றன, மேலும் அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாட்டுகளுக்குள் நுழைய சுற்றுலா விசாவே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஓமானை சென்றடைந்ததும் அவர்களின் வயது மற்றும் தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, ஏலம் விடப்பட்டு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/139646
  6. முன்மாதிரி திட்டம் இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் ஹபரண பகுதியில் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் ஒரு முன்மாதிரி யானை - மனித மோதலை தடுப்பதற்கான செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றியளித்த திட்டமாக கருதப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் யானை -மனித மோதலை தடுப்பதற்காக சமூகமட்டத்திலான மின்சார வேலி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆய்வு தொடர்பான விஞ்ஞானி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு அந்த கிராமத்தை சுற்றி ஒரு யானைகள் வராத முறையில் மின்சார வேலியை அமைக்காமல் அதற்கு மாறாக வீடுகளை சுற்றி மின்சார 3 வேலி அமைத்தல், மக்களின் பயிர் செய்கைகள் இருக்கின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல், மக்கள் அடிக்கடி நடமாடுகின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல் என்ற அடிப்படையில் சமூகமட்ட மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.
  7. விக்கெட் இழக்காமல் வென்றதால் இந்தியாவின் பந்துவீச்சின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. அதோட எடுத்த ஓட்டமும் போதாதென நினைக்கிறேன்.
  8. 429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது By VISHNU 10 NOV, 2022 | 03:12 PM (எம்.வை.எம்.சியாம்) காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல் பகுதியில் காங்கேசன்துறை கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மீன்பிடி படகொன்றிலிருந்து 429 கிலோ 40 நிறையுள்ள கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் முழங்காவில் மற்றும் மண்டதீவு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் காங்கேன்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139641
  9. கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு கட்டுரை தகவல் எழுதியவர்,டிஃபனி டர்ன்புல் பதவி,பிபிசி நியூஸ், சிட்னி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது. அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது. நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர். அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். பாலியல் புகார்: ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - முழு விவரம்6 நவம்பர் 2022 பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு9 நவம்பர் 2022 செக்ஸ்சோம்னியா: பிரிட்டனில் பேசப்பட்ட ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது7 நவம்பர் 2022 அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் “பலவந்தமாக” பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார். “புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை” என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் “தெளிவாக” இருந்ததாக காவல்துறை கூறுகிறது. அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார். பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், “அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது” பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது. குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது. டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. "கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cg3l9j1e290o
  10. INDIA 168/6 ENG (16/20 ov, T:169) 170/0 England won by 10 wickets (with 24 balls remaining) எனக்கும் சுவியண்ணைக்கும் புள்ளி கிடைக்கப்போகுது.
  11. யுத்த காலத்தில் தற்போதைய புலனாய்வுப் பிரிவினர் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்போம் - பொன்சேகா By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம் ) நாட்டின் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் அதிருப்தி நிலை காணப்படுகிறது. இவர்கள் யுத்த காலத்தில் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருப்போம். ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நிறைவு பெறும் வரை இலங்கைக்கு எவரும் ஒரு டொலர் கூட அனுப்ப கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. 30 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, அனைத்து செயற்பாடுகளையும் அப்போதைய அரச தலைவரே முன்னெடுத்தார். விலைமனுகோரலுடன் தொடர்புப்படவில்லை, ஆனால் விலைமனுகோரல் சபையில் உறுப்பினராக இருந்த காரணத்தினால் 30 மாத காலம் சிறைக்கு சென்றேன். இவ்வாறு தண்டிக்க வேண்டுமாயின் பல அரசியல்வாதிகள் தற்போது சிறையில் இருக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கபோவதில்லை. துறைகளில் காணப்படும் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்ததால் மாத்திரமே ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்கள் பயன்பெற முடியும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவை பார்ப்பதற்கு சென்றேன். தங்காலைக்கு சென்ற போது கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டார்கள். வசந்த முதலிகேவை கொழும்புக்கு அழைத்து சென்றமை தொடர்பில் எவரும் அறியவில்லை. நாட்டில் பயங்கரவாதம் உள்ளதா, வசந்த முதலிகே பயங்கரவாதியா என கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரியிடம் வினவிய போது, பயங்கரவாதம் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டார். இவ்வாறான நிலை காணப்படுமாயின் புலனாய்வு பிரிவு எதற்கு. தற்போதைய புலனாய்வு பிரிவினர் நல்ல வேளை யுத்த காலத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நாங்கள் பிரபாகரனின் தடுப்பு காவலில் இருந்திருப்போம். வசந்த முதலிகே,உட்பட மத குருவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். இவ்விருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைiயை அரசாங்கம் நிறுத்தும் வரை அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மனித உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளித்தால் ஒத்துழைப்பு வழங்க தயார். ஜனநாயகத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படும் வரை ஒரு டொலர் கூட சர்வதேசத்தில் வாழ்பவர்கள் இலங்கைக்கு அனுப்ப கூடாது என்பதையும் வலியுறுத்துகிறேன். போராட்டம் நடத்த வேண்டாம், நாடு பாதிக்கப்படும் என குறிப்பிடும் தொழிற்துறை தரப்பினர்கள் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துடன் ஒன்றிணை வேண்டிய தேவை எனக்கு கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/139642
  12. யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:53 PM யுக்ரைன் யுத்தத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் படையினரும் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என அமெரிகக்h கணிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினரும், ஒரு லட்சம் யுக்ரைனிய படையினரும் யுக்ரைனில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மிலி கூறியுள்ளார். அத்துடன், மோதல்களில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் எனவும் அவர் கூறிழயுள்ளார். அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு மீள செல்வதற்காக யுக்ரைன் விடுத்துள்ள சமிக்ஞைகள், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என அண்மைய நாட்களில் கூறி வருகிறார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து விளாடிமிர் புட்டின் நீக்கப்பட வேண்டுமென ஸெலேன்ஸ்கி கூறிவந்தார். ஆனால், அந்த நிபந்தனையை தற்போது அவர் கைவிட்டுள்ளார். யுக்ரைனில் தனது 5937 படையினர் இறந்ததாக ரஷ்யா இறுதியாக கடந்த செப்டெம்பரில் தெரிவித்திருந்தது. தனது 9000 படையினர் இறந்ததாக யுக்ரைன் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/139650
  13. 204 கோடி டொலர் (75,195 கோடி ரூபா) ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது! By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:30 PM அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில், 204 கோடி டொலர்கள் (சுமார் 75,195 கோடி இலங்கை ரூபா, சுமார் கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியுடைய ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் வெல்லப்பட்ட மிகக் கூடுதலான ஜக்பொட் பரிசு இதுவாகும். பவர்போல் எனும் லொத்தர் சீட்டிழுப்பிலேயே இப்பாரிய பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தனி ஒரு சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 160 கோடி டொலர்களாக அதிகரித்து சாதனை படைத்தது. ஆனால் அன்றைய தினமும் இப்பரிசு வெல்லப்படவில்லை. அதையடுத்து கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை சீட்ழுடிப்புக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 2.04 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் இச்சீட்‍டிழுப்பு திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்தது. ஆனால், அதிக ‍‍டிக்கெட் விற்பனை காரணமாக தரவுகளை பரிசீலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது, இச்சீட்டிழுப்பில், கலிபோர்னியா மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியான ஒரு லொத்தர் சீட்டுக்கு இப்பரிசு கிடைத்துள்ளதாக பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். வெற்றியாளர் ஒரே தடவையில் சுமார் 140 கோடி டொலர்களை பெற முடியும். அல்லது மொத்தத் தொகையான 204 கோடி டொலர்களை 30 வருடங்களில் தவணை முறையில் பெற முடியும். இந்த ஜக்பொட் பரிசை வென்றவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. லொத்தர் சீட்டு விற்பனை செய்தவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர் இதேவேளை. பரிசுக்குரிய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 கோடி இலங்கை ரூபா, 8 கோடி இந்திய ரூபா) போனஸாக பவர்போல் லொத்தர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஜோசப் சஹாயாத் என்பவரே இவ்வாறு 10 லட்சம் டொலர் போனஸ் தொகையை பெற்றுள்ளார். இவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வதை தான் விரும்புவதாக கூறும் ஜோசப் சஹாயெத், இவ்வளவு பெருந்தொகை பரிசு தனக்கு கிடைத்த போதிலும் வேலைசெய்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு கடையில் பணியாற்றச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார். ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் (மத்தியில்) கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டமை இதுவே முதல் தடiவாயகும். 2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வெள்வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/139643
  14. INDIA 168/6 ENG (13/20 ov, T:169) 140/0 England need 29 runs in 42 balls. Current RR: 10.76 • Required RR: 4.14 • Last 5 ov (RR): 56/0 (11.20) Win Probability:ENG 99.73% • INDIA 0.27%
  15. ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டு செய்தியாளர் 10 நவம்பர் 2022, 06:18 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர், லார்ட்ஸில் சதம் அடித்தார், பின்னர் அடிலெய்டில் ஒரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லத் துனை செய்தார். ஆனால் அவர்கள் பந்துவீச்சிற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களில் யாரும் பேட்டிங்கில் மட்டும் தடம் பதிக்கத் தவறிவந்தனர். கபில் ஒரு இயல்பாகவே பந்து வீச்சைப் போல, பேட்டிங்கிலும் எதிரணியினருக்கு அச்சத்தை ஊட்டினார். அவர் தனக்கே உரித்தான தனி பாணியில் மிக நேர்த்தியாகத் தனது சாதனைகளைப் புரிந்து வந்தார். அதனால் அவர், தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். 16 ஆண்டுகால வாழ்க்கையில், காயம் காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூடத் தவறவிட்டதில்லை. டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?9 நவம்பர் 2022 'அஷ்வின் மீது நம்பிக்கை இல்லை' - கபில்தேவ் கூறியதற்கு என்ன காரணம்?8 நவம்பர் 2022 கபிலின் இடத்தை நிரப்ப, தேர்வான ஹார்திக் பாண்ட்யா - இலங்கையின் காலேயில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததுடன் அதே தொடரில் ஒரு சதமும் (ஏழு சிக்ஸர்களுடன்) அடித்தார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த அடுத்த டெஸ்டில், அவர் 93 ரன்கள் எடுத்தார். நாட்டிங்ஹாம் டெஸ்டில் 28 ரன்கள் கொடுத்து, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தானும் ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்தபோது, உண்மையிலேயே அவர் கபிலின் இடத்தை நிரப்பினார். கடந்த ஓராண்டில், 29 வயதான பாண்டியா, டி20 கிரிக்கெட்டில், சுமார் 150 ரன்கள் என்ற சராசரியுடன் இந்தியாவின் தேர்ந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். மேலும் இறுக்கமான சூழ்நிலைகளில் மகேந்திர சிங் தோனி போன்றே, அமைதியை வெளிப்படுத்தினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், உலக டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இது டி-20 ஆட்டங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பரின் பிற்பகுதியில் அவர் இந்திய அணி, டி-20 தொடரில் விளையாட நியூசிலாந்திற்கு ஹார்திக் பாண்ட்யா தலைமையில் செல்கிறது. அவரது திறமைகள் மற்றும் உடல் நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஆட்ட வகை இது. பாண்ட்யா, 140 கிலோ மீட்டர் (87 mph) என்ற வேகத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசுவது, அது வரை இந்தியாவிற்கு இல்லாத ஒரு ஸ்திரத் தன்மையைக் கொடுத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றே பலர் நினைத்தனர். இந்தியா இந்தக் குறுகிய கிரிக்கெட் வடிவத்திற்கு ஒரு ஃபினிஷரை வளர்த்தெடுத்துள்ளது. இப்போது மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை உற்று நோக்கி வருகிறது. அதே போல பாண்ட்யாவும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பாண்ட்யா காயமடைந்தது குறித்து, முன்னாள் தேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இது தீவிரமானது என்று எங்களுக்குத் தெரியும். மருத்துவ அறையில் அவரால் நகரக் கூட முடியவில்லை, அவர் தனது தலையை மட்டுமே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்து வந்தார். அவர் மிகவும் அதிக வலியால் துன்பப்பட்டார். அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப மிகவும் உறுதி வேண்டும்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார். இந்த ஆண்டு ஆகஸ்டில், பாண்டியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பையில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஒரு சிக்சருடன் இந்தியாவிற்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காயமடைந்து வெளியேறிய அதே மைதானத்தில், அதே அணிக்கு எதிராக, அதே போட்டியில் பாண்ட்யா இதைச் சாதித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியுள்ள, இடது கைச் சுழற்பந்து வீச்சாளரான இவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்ட்யாவுடன் இணைத்துப் பாண்ட்யா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த இணை, சிறந்த கிரிக்கெட் வசதிகள் வேண்டி, இளம் வயதிலேயே சூரத்தில் இருந்து குஜராத் மாநிலத்தின் பரோடாவுக்கு இடம் பெயர்ந்தனர். இது அவர்களின் தந்தை எடுத்த முன்னெடுப்பு. இது குறித்து இந்த வறிய குடும்பத்தின் புதல்வர்கள் எப்போதும் நன்றியுடன் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரேவின் அகாடமியில் இச்சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜான் ரைட், ஹார்திக் பாண்ட்யாவைத் தேர்வு செய்தார். அவரது ஆரம்ப விலை $16,000 (£13,841). மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் $1.7 மில்லியனுக்குத் தக்கவைக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஐபிஎல் அறிமுக ஆட்டக்காரர்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமை வகித்த அனுபவம் இவரது திறமையைப் பறைசாற்றியதால், இப்போது தேசிய அணிக்குத் தலைமை வகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். சூழ்நிலைகள் பாண்ட்யாவை இந்த நவீனகால கிரிக்கெட் வீரராக - T20 ஸ்பெஷலிஸ்ட் ஆக நிர்ப்பந்திக்கலாம். சிவப்பு பந்து கிரிக்கெட்டின் போக்கும் அதற்குத் தேவையான உடல் வலிமையும் இதிலிருந்து மாறுபட்டது. அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஆறில் ஒரு பங்கு ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார். ஆனால் டி20 சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 60% ஆடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெலிந்த உடல் வாகு கொண்ட இவர், பந்தை அடிக்கும் வேகம் வியப்புக்குரியது. அதே போல், பந்து வீசும் வேகமும் பேட்ஸ்மேனை வியக்கச் செய்யும். ஒரு ஃபீல்டராகவும் அவர் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியா அவரை ஒரு வகை கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருத்திப் பார்ப்பது பரிதாபகரமானது. அவர் ஆட்டத்திற்கு ஒரு தனி விறுவிறுப்பைக் கொண்டு வந்து, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்கிறார். தன்னை இரண்டாவது கபில்தேவாக மட்டுமல்ல, முதல் ஹார்திக் பாண்ட்யாவாகவும் உருவாக்கிக்கொண்டுள்ளார். அது மிகச் சிறந்த விஷயம். https://www.bbc.com/tamil/articles/cml4dl7jjnpo
  16. தனுஷ்க விடுதலையானதும் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் - எஸ்.பி.திஸாநாயக்க By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:27 AM (எம்.மனோசித்ரா) பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக விரைவில் விடுதலையாவார். அவர் விடுதலையானதன் பின்னர் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தினார். பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , தனுஷ்க குணதிலக தொடர்பில் கேட்கப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்வது சாதாரணமானதொரு விடயமாகும். அவுஸ்திரேலியாவில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களைப் போன்று , திட்டமிட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர். எனவே குறித்த கிரிக்கட் வீரர் மீது மாத்திரம் முழுமையாக குற்றஞ்சாட்டி விட முடியாது. வழக்கு விசாரணைகளின் நிலைமைகளை அவதானிக்கும் போது அவர் விரைவில் விடுதலையாவார் என்பது நிச்சயமாகும். அவ்வாறு அவர் விடுதலையானதன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/139590
  17. INDIA 168/6 ENG (9/20 ov, T:169) 91/0 England need 78 runs in 66 balls. பாகிஸ்தான் இந்தியா இறுதிப் போட்டி நடக்காது போல?!
  18. ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது! By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:34 AM ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை வழங்கியதாகவும், அவர் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக கைதாகி பிணையில் இருப்பதாகவும் தெரிவித்தார். குறித்த நபருக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரிடம் நீதிவான் வினவியதோடு, சந்தேகநபர் அதனை முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139599
  19. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியமைக்கான காரணத்தை விளக்கினார் சரத் வீரசேகர By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை முறையாக பின்பற்ற தவறியதாலே கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள்கொள்வனவு செய்திருந்தால் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது என சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தோம். இதனாலேயே இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்து இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. நாட்டை கொண்டு செல்வதற்கு அந்நியசெலாவணி அவசியமாகும் . கடந்த காலங்களில் கொவிட் தொற்று நிலைமையால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. எனினும் இந்த நிலைமை மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை. அத்துடன் எரிபொருள் நெருக்கடியின் போது ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இந்தியா எரிபொருளை கொள்வனவு செய்தது. அவர்களால் முடியுமென்றால் எமது வெளிநாட்டு கொள்கை நடுநிலையென்றால் ஏன் எங்களால் முடியாது என்று நான் அமைச்சரவையில் கேட்டிருந்தேன். அப்போது அமெரிக்காவுக்கு அடிபணிவதால் அதனை செய்யவில்லை. ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள் கொள்வனவு செய்திருந்தால் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது. http://island.lk/wp-content/uploads/2021/09/gotabaya.jpg ஆனால் நாங்கள் செய்ய வேண்டியதை செய்யாது ரஷ்யா,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிட்டது. இதனாலேயே கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு நாட்டை விட்டு வெளியில் போக வேண்டி ஏற்பட்டது. அவரால் பொருளாதார கொள்கை முறையாக பேணப்படாமையே இதற்கு காரணமாகும். வெளிநாட்டு கொள்கையின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றவில்லை. பொருளாதார கொள்கையின் அடிப்படைகளுக்கு முரணான வகையிலேயே செயற்பட்டனர். இறுதியில் இந்தியாவும் அமெரிக்காவும் அவரை கைவிடும் நிலைமை ஏற்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/139585
  20. இலவச மருத்துவம், இலவச கல்விச் சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியான செய்தி அடிப்படையற்றது - செஹான் சேமசிங்க By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:13 AM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாவிட்டால் சமூக கட்டமைப்பு மிக மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும்,அதனை எவராலும் தடுக்க முடியாது. இலவச மருத்துவம், இலவச கல்வி சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். இலவச கல்வி.மருத்துவ சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி கட்டளைச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறுகிறது. எதனையும் மறைக்கவில்லை,மறைக்கவும் முடியாது.சகல விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் அனுமதி கிடைத்தவுடன் நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம்.உணர்வு பூர்வமான விடயங்களை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. பல்வேறு காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை.பொருளாதார மீட்சிக்காக நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வரி அதிகரிப்பு குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தோல்வியடிடைந்தால் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் காணப்பட்ட மிக மோசமான நிலைமையை போன்ற தன்மை பன்மடங்கு அதிகரிக்கும், இதனை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அவசர தேவையாக பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பிலான விடயங்கள் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருசில ஊடகங்கள் அரசியல் நோக்கத்திற்காக உண்மை விடயங்களை திரிபுப்படுத்தி பிரபல்யமடைகின்றன.அரசாங்கம் என்ற ரீதியில் பிரபல்யமடையும் நிலையில் நாடு தற்போது இல்லை. வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் மருந்து விநியோகத்திற்கு கட்டணம் அறவிடுமாறும்,அரச பல்கலைக்கழகங்களில் கட்டணம் அறவிடுமாறும் சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றதாகும்.இலவச மருத்து சேவை, இலவச கல்வி சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தல், பொருளாதாரத்தை முன்னெடுத்தல் மற்றும்,பொருளாதாரத்தை வளர்ச்சிப் பெற செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தலுபக்கான ஆரம்பக் கட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த செப்டெம்பர் மாதத்தை காட்டிலும் ஒக்டோபர் மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/139584
  21. வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எஸ்.சிறீதரன் By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:11 AM (இராஜதுரை ஹஷான்) வியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழ் புலம்பெயலாளர்கள் தொடர்பில் ஐ நா அகதிகளுக்கான நிறுவனம் மனிதாபிமான கண்ணோட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சில வரி திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே சிறீதரன் எம்.பி இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 303 தமிழ் புலம்பெயலாளர்களுடன் சென்ற கப்பலொன்று கடலில் இன்று வியாட்நாமிய கடற்படையினரால் மீட்கப்பட்டு நாடொன்றின் எல்லைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குழந்தைகள் உள்ளிட்ட 303 பேர் மனித பேரவலத்தில் சிக்கியுள்ளனர். ஆசியாவின் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நிரந்தரமான வாழ்வை வாழ முடியாதுஇ தங்களின் சொத்துக்களை விற்று சென்றுள்ளனர். இந்த மனித பேரவலத்திற்கு மத்தியில் அவர்கள் தங்களை நாடொன்றில் வசிக்க தஞ்சம் கோருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனுக வேண்டும். ஏன் இவர்கள் இங்கிருந்து இடம்பெயர காரணமென்ன? ஏன் இங்கு வாழலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாது போனமைக்கான காரணம் என்ன? அவர்கள் நம்பக்கூடிய அரசியல் தீர்வை வழங்காமையினாலேயே உயிரை பணயம் வைத்து ஆபாத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கனடா நோக்கி சென்றதாகவே கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையிலும் ஏன் இவர்கள் இப்படி போக வேண்டும். இங்குள்ள நிலைமைகளே காரணமாகும். இங்குள்ள அடிப்படை பிரச்சினையாக 40 வருடங்களுக்கு மேலாக இங்கு இனப்பிரச்சினை உள்ளது. இதன்போது யுத்த தளவாடங்களுக்காக அரசாங்கம் கடன் வாங்கியது. இலங்கை இப்போது கடனில் சிவப்பு எல்லைக்குள் போயுள்ளது. இதற்கு யுத்தமும் காரணமாக அமைந்துள்ளது. இப்போது நாட்டின் தலைவர்கள் சிந்தித்தால் தமிழ் தேசிய இனத்தின் அடிப்படையை புரிந்துகொண்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் போது புலம்பெயர்ந்தவர்களின் பணம் மற்றும் சர்வதேசத்தின் கவனம் மூலம் இந்த நாட்டுக்கு மாற்றங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறான சிந்தனை இல்லாமையே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றன என்றார். https://www.virakesari.lk/article/139582
  22. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 நவம்பர் 2022 படக்குறிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தப் பயணத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியப் பங்கை வகித்திருக்கிறது" என்று குறிப்பிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பதிவிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்தத் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பதிவிட்டார். "உச்சநீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது" என்றார் அவர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 ''EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?8 நவம்பர் 2022 EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: எதிர்ப்பவர்கள், வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?7 நவம்பர் 2022 'உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற தீர்ப்பு - முக்கிய தகவல்கள்7 நவம்பர் 2022 அதேபோல சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி பி சிதம்பரமும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பதிவிட்டார். "உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதிலிருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3:2 விகிதத்தில் தீர்ப்பு வந்திருப்பது, எதிர்கொள்ளவேண்டிய முரண்பாடான கேள்விகளை முன்வைக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வரையறையும் சரியானதாக இல்லை. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு உதவவில்லை" என்று அவர் பதிவிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இந்தத் தீர்ப்பை ஆதரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது, "கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்மான நிலைப்பாடு" என்றார். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்ப்பை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக பெரும்பகுதி சமுதாயம் சிரமப்பட்டது, சமூகநீதி வழங்கப்படவில்லை, இப்பொழுது எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல" என்று கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்துவந்திருக்கிறது. 1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால், 1992ல் வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில், இந்த ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. வெறும் பொருளாதார அளவுகோலை வைத்துமட்டும் ஒருவரை பிற்படுத்தப்பட்டவராக அடையாளம் காணமுடியாது என்றது நீதிமன்றம். இதற்குப் பிறகு 2004ல் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான ஆணையம் ஒன்று அதே ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2006 ஜூலையில் மறுபடியும் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ தலைவராக நியமிக்கப்பட்டார். நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?10 அக்டோபர் 2022 பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்?9 ஜூலை 2019 ஆனால், பொதுமான புள்ளிவிவரங்கள் இந்த ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை, தமிழ்நாடு, பிஹார் மாநிலங்கள் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்தன. இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 2010 ஜூலை மாதம் அப்போதைய சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாஸ்நிக்கிடம் அளித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதன் பரிந்துரைகள் பொதுவெளியிலும் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2019ல், அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 103வது திருத்தத்தின் மூலம் இதனை முறைப்படி அமல்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமல்லாமல் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் காங்கிரசின் தலைவருமான உதித் ராஜும் இந்த இட ஒதுக்கீட்டு தொடர்பான தீர்ப்பில் உள்ள முரண்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறார். 50 சதவீதத்தையும் தாண்டி இட ஒதுக்கீடு தரலாம் என்று நீதிமன்றம் கூறியிருப்பதைக் கடுமையாக கண்டிக்கிறார் அவர். "நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேல் ஜாதி மனநிலையை வலியோடு கவனிக்கிறேன். இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து தான் உயர்த்திப் பிடித்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கிறது. SC/ST/OBC இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் மட்டும் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது" என்று அவர் கூறியிருக்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மிக உணர்வுகரமான பிரச்னையாக இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கின்றன. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் சனிக்கிழமையன்று நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது. அ.தி.மு.கவைப் பொருத்தவரையில் இதுவரை எடப்பாடி கே. பழனிச்சாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார். வி.கே. சசிகலாவும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்திருப்பதோடு, சீராய்வு மனு தாக்கல்செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c90ge3n8j72o
  23. பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது - என்ன நடந்தது? 9 நவம்பர் 2022 காணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளி யார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி துணைவியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார். இருந்தபோதும், அந்த நேரத்தில் "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று அந்த நபர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவம் குறித்து நார்த் யார்க்ஷயர் காவல்துறை கூறுகையில், "23 வயதான ஒரு நபர் பொது ஒழுங்கை மீறிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றது. கூட்டத்தில் இருந்தவர்கள், "கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள்" என்றும், எதிர்ப்பாளரை நோக்கி "உனக்கு அவமானம்" என்றும் குரல் எழுப்பினர். காணொளிக் குறிப்பு, யார்க்கில் அரசர் சார்ல்ஸ் மீது முட்டைகளை வீசிய நபர் கைது செய்யப்பட்டார் யார்க்ஷயருக்கு அலுவல்பூர்வமாக அரசர் வருகை தந்த இரண்டாம் நாளில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பயணத்தின்போது அரசருடன் அரசி துணைவியாரும் டான்காஸ்டருக்கு பயணம் செய்தார். இந்த அரச தம்பதியை யார்க்கில் நகரத் தலைவர்கள் வரவேற்றனர், அப்போது எதிர்ப்பாளர் தரப்பில் இருந்து அரச தம்பதியை நோக்கி ஏராளமான முட்டைகள் வீசப்பட்டன.அந்த நேரத்தில் லார்ட் மேயர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அரசர் சார்ல்ஸ் கைகுலுக்கியபடி இருந்தார். திடீரென்று தரையில் விரிசல் விழுந்த முட்டை ஓடுகளைப் பார்க்க சில நொடிகள் அரசர் நின்று கீழே பார்த்தார். முட்டைகள் அரச தம்பதி மீது விழாதபோதும் அந்த பகுதியில் இருந்து இருவரையும் உடனடியாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதேவேளை மற்றொரு அதிகாரிகள் குழு, அரசரின் வருகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளுக்குப் பின்னால் சந்தேக நபரை தரையில் தடுத்து கட்டுப்படுத்துவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, மறைந்த தமது தாயின் சிலையை திறப்பதற்காக நகருக்கு வருகை தரும் அரசை வாழ்த்த மக்கள் திரண்டிருந்தபோது எதிர்ப்பாளரின் குரல்கள் கேட்கப்பட்டன. சம்பவத்தை நேரில் பார்த்த ப்ளாசம் ஸ்ட்ரீட் கேலரியின் உரிமையாளரான கிம் ஓல்ட்ஃபீல்ட், தனது கடையின் வாசலில் நின்று தம்பதியின் வருகையை "மகிழ்ந்து" கொண்டிருந்தபோது "திடீரென சத்தமும் முட்டைகளும் பறந்தன" என்று கூறினார். "நான் முழுவதையும் பார்த்தேன், போலீசார் தடுப்பு மீது ஏறி அந்த நபரின் மேலே படுத்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர். "அதற்குள்ளாக அந்த நபரால் ஐந்து முட்டைகளை வீச முடிந்தது." "சத்தம் தொடங்கும் போது கமில்லா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனால் மிக விரைவாகவே நிலைமையை காவல்துறையினர் கையாண்டனர். அந்த நபரின் அவமானகர செயல் ஒரு அழகான தருணத்தை கெடுத்துவிட்டது," என்கிறார் கிம் ஓல்ட்ஃபீல்ட். எதிர்ப்பாளரால் வீசப்பட்ட முட்டைகள் சம்பவம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசர் எவ்வளவு ஆபத்தை சந்திக்கக் கூடிய சூழலில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்கிறார் அரண்மனைக்கான பிபிசி செய்தியாளர் சீன் கோக்லான். நடந்த சம்பவம் குறித்த அவரது பார்வை: "அரசர் சார்ல்ஸ் நலம் விரும்பிகள் அடங்கிய கூட்டத்திடம் மிகவும் அணுகக்கூடிய நபராகவே இருந்துள்ளார். மக்களுடன் கைகுலுக்கி வருவதும் நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வதும் என மக்கள் சந்திப்பு பயணத்தின்போது உண்மையிலேயே அவர் ஒரு அரசரைப் போலவே மாறினார். அரசர், தனது தாயின் மரணத்திற்கு அடுத்த சில நாட்களில் மக்களைச் சந்தித்த போது அவர்களின் அரவணைப்பை அனுபவித்ததாகவே தோன்றுகிறது. நேற்று அவர் லீட்ஸின் வீதிகளில் வரிசையாக நிற்கும் கூட்டத்தை வாழ்த்தினார். அந்த தருணத்தை பதிவு செய்த செல்பேசி புகைப்பட கிளிக்குகளையும் அவர் எதிர்கொண்டார். ஒரு அமெரிக்க அதிபரை சுற்றியுள்ள அடர்த்தியான பாதுகாப்பிற்கு சற்று குறைவாகவே இந்த நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு இருந்திருக்கும். எனவே பிரிட்டனில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், இத்தகைய கூட்டத்தின் சீரற்ற தன்மையால் இனி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வரும் மக்களில் யார் எதை எடுத்து வருவார்கள் என யாருக்குத் தெரியும்? ஆனால் பாதுகாப்பாக வலம் வருவதற்கும், மக்களிடையே அணுகும் முகமாக இருப்பதற்கும் இடையே எப்போதும் ஒரு பாகுபாடு இருக்கவே செய்யும். இதுவே கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருந்தால் அரசருக்கும் கூட்டத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்வின் மறுபுறம் 'இவர் என் ராஜா அல்ல' என்ற பதாகையுடன் சில போராட்டக்காரர்கள் காணப்பட்டனர். அவர்கள் நின்றிருந்த சில அடி தூரத்தில் இருந்து தான் முட்டைகள் வீசப்பட்டன. ஆனால், நடந்த நிகழ்வால் அரசர் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. காவல்துறை விரைவாக எதிர்வினையாற்றியது. ஆனால் அதற்குள் முட்டைகள் வீசப்பட்டு விட்டன," என்கிறார் சீன் கோக்லான். யார்க் நகருக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும் அரசரை லார்ட் மேயர் வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வில் நின்றிருந்த கூட்டத்தில் அரசர் சார்ல்ஸ் குழப்பமில்லாமல் தோன்றினார். இத்தகைய பாரம்பரிய நிகழ்வில் அரசரின் தாய் ராணி இரண்டாம் எலிசபெத் 2012ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இப்போது அரசர் மற்றும் அரசி துணைவியார் யார்க் மின்ஸ்டரில் மாட்சிமை வாய்ந்த அரசியின் சிலையை திறப்பதற்காக யார்க்கிற்குச் வந்துள்ளனர். மறைந்த அரசியாரின் மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட அவரது முதல் சிலையின் திறப்பு விழா நிகழ்ச்சி இதுவாகும். யார்க் பேராயர், ஸ்டீபன் காட்ரெல், "நடந்த சம்பவம் பொதுமக்களை சந்திப்பதில் இருந்து அரச தம்பதியை தடுக்காது," என்று கூறினார். அவர் பிபிசியிடம் பேசுகையில், "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சில சமயங்களில் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் இருக்கிறார்கள். நாம் சந்திக்க முடியாத அளவுக்கும் அரட்டை அடிக்க முடியாத அளவுக்கும் சிந்தனை கொண்ட மக்கள் அல்லாத ஒரு நாட்டில் உண்மையில் உலகில் வாழவே நான் ஆசைப்படுகிறேன்," என்கிறார். "நிச்சயமாக அரசியும் அரசி துணைவியாரும் இதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மக்களுடன் [பின்னர்] கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் தங்களை பாதித்து விட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராயர் ஸ்டீபன் காட்ரெல். படக்குறிப்பு, வீசப்பட்ட முட்டைகள் அரச தம்பதி மீது விழவில்லை படக்குறிப்பு, யார்க்கில் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் கமில்லாவை காண அலைமோதிய மக்கள் கூட்டம். பின்னர், செளத் யார்க்ஷயரில் உள்ள டான்காஸ்டருக்கு அதன் நகர அந்தஸ்தை முறையாக வழங்குவதற்காக அரசர் வந்தபோது, அவரை உள்ளூர் மக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர். சார்ல்ஸ் மற்றும் கமில்லா பின்னர் முட்டை மற்றும் வாட்டர்கெஸ் சாண்ட்விச்கள் உள்ளிட்ட மெனுவுடன் கூடிய விருந்து அடங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, டான்காஸ்டருக்கு நகர அந்தஸ்தை வழங்குவதற்காக மேன்ஷன் ஹவுஸுக்கு வந்த அரசர் தமது நலம் விரும்பிகளைச் சந்தித்து கைகுலுகுக்கிறார். https://www.bbc.com/tamil/global-63571699
  24. கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 09:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை. அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதனிக்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை வங்குரொத்து அரசாங்கத்தின் மூலம் மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம் பாலமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர். அப்படியென்றால் ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்தில் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருக்கின்றது. நாட்டுக்கு அதனை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் அச்சப்படவேண்டும் என கேட்கின்றோம். அத்துடன் பல்வேறு வரிகளை அதிகரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையே செயற்படுத்துகின்றோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியென்றால் விலை, கட்டண அதிகரிப்புகளுக்கும் இதுவா காரணம். உடன்படிக்கைகளை மறைத்துக்கொண்டு செயற்படும் அரசாங்க்ததுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கம் அழைக்கின்றது. அத்துடன் இந்த நாட்டின் இலவச சுகாதார துறை, கல்வித்துறையை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் வாக்குறுதி அளித்திருக்கின்றதா என ரசாங்கத்திடம் கேட்கின்றோம். சில பிரதான அரச வைத்தியசாலைகளில் கட்டணங்களுடன் சில சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவதா? என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம். அத்துடன் திருட்டுத்தனமான ஒப்பந்தங்களின் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இதுவே மொட்டின் கொள்கையாகும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இல்லை. அரசாங்கம் எமது கட்சியில் இருந்து பழி எடுப்பதற்கு பயந்து நாங்கள் யாரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. எமது உறுப்பினர்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/139581
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.