Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:49 AM இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 1,114 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரத்தில் 943 பேர் மட்டுமே பதிவாகியிருந்தனர். இதற்கமைவாக, நாட்டில் இவ்வருடம் 63,549 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 44 பிரிவுகளை டெங்கு அபாய பிரதேசங்களாக அறிவிக்க சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/139602
  2. கடன் வழங்கியவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள்- இலங்கைக்கு உலக வங்கி அறிவுரை By RAJEEBAN 10 NOV, 2022 | 10:52 AM கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பெஸ் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியும் உலகவங்கி தலைவரும் இலங்கையின் பொருளாதார நிலைமை சமூக நிலைமை இலங்கை பொருளாதாரத்தை துரிதமாக ஸ்திரப்படுத்தவேண்டிய நிலைமை குறித்து ஆராய்ந்தனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய கடன்நெருக்கடிக்கு உரிய தருணத்தில் பயனளிக்ககூடிய தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவரும் ஜனாதிபதியும் பொதுச்செலவீனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் அரச நிறுவனங்களிற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடினர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசதுறையின் பாரிய அளவை கருத்தில்கொண்டே இருவரும் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர். https://www.virakesari.lk/article/139603
  3. அல்ஹைதாவுடன் தொடர்பு - இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்தது அமெரிக்கா By RAJEEBAN 10 NOV, 2022 | 10:31 AM அல்ஹைதாவுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் என்ற முஸ்லீம் வர்த்தகருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அல்ஹைதாவின் நிதி உதவியாளர் மற்றும் மற்றும் வெளிநாட்டு சதிதிட்டங்களில் ஈடுபட்டுள்ளவருடன் தொடர்புகளை பேணியமைக்காக அமெரிக்கா இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் என்பவருடன் நிசார் தொடர்பிலிருந்தார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாடு தொடர்பிலான அலுவலகம் அறிவித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் அல்ஹய்தாவின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தனிநபர்களின் நடமாட்டம் மற்றும் சொத்துக்களை பயன்படுத்துவதை இலகுவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என முன்னர் அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாடு தொடர்பிலான அலுவலகம் அவரை தனது பட்டியலில் இணைந்திருந்தது. 2018 முதல் நிசார் லுக்மன் தலிப்பின் இலங்கைக்கான வர்த்தக சகாவாக செயற்பட்டார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அவர் 200,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139600
  4. வியட்நாமில் 306 இலங்கை அகதிகள்: கனடா செல்ல 5,000 டாலர்கள் கொடுத்ததாக தகவல் - முழு விவரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக இருந்துஇலங்கை 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.எ கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார். என்ன நடந்தது? இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு நேற்று முன்தினம் தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,VNA அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகளில் 264ற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அகதிகள் தற்போது வியட்நாமிலுள்ள முகாமொன்றில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். எங்கிருந்து பயணம் தொடங்கியது? இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காரணமாக பலர் வெளிநாடுகளை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது. 300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு8 நவம்பர் 2022 இலங்கை இறுதி யுத்தத்தில் 'புலிகள்' சரணடைந்தனரா? ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன?9 நவம்பர் 2022 இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?7 நவம்பர் 2022 இந்த அகதிகள் எவ்வாறு கனடா நோக்கி செல்ல தயாராகினார்கள் என்பது குறித்த தகவல்களை, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களே, அதிகளவில் இந்த கப்பலில் பயணித்துள்ளதாக, அந்த கப்பலில் பயணித்த இலங்கையர் ஒருவரின் சகோதரன், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கப்பலில் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர். அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர். முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாரிய தொகையை செலவிட்டு, கனடா நோக்கி செல்ல முடியாது போனமை குறித்து, உறவினர்களின் நிலைபாடு தொடர்பில், பிபிசி தமிழ், குறித்த கப்பலில் பயணித்த இலங்கை அகதியின் சகோதரனிடம் வினவியது. ''பணம் ஒரு புறத்தில் இருக்க, நாட்டிற்கு மீள வருகைத் தருவது என்பது சாத்தியமற்ற விடயம். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்புலத்தை கொண்ட ஒரு சமூகம். நாட்டிற்கு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் மீண்டும் பிரச்சினை வரும். எமது உறவினர்களும் அகதிகளாக சென்றார்கள் என்பதை வெளியில் சொன்னாலே, எமக்கு பிரச்சினை வரும். அதனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை விட, கனடா இல்லை, வேறொரு நாட்டிற்கு சென்றடைய வேண்டும். நாட்டிற்கு திரும்பி வருவது அவர்களுக்கு பிரச்சினை. இது தான் இப்போதைய நிலைமை. வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் காலப் பகுதியில் தமிழர்களுக்கு சரியான பிரச்சினை வரும் காலம். இந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தால், அவர்கள் மீது வேறு வழியில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது." என அவர் கூறினார். ''சுமார் 300 பேரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள். காணிகளை, சொத்துக்களை விற்பனை செய்து விட்டு, சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து என்ன செய்வது. நாட்டிற்கு திரும்பி அனுப்பினால், தற்கொலை செய்துக்கொள்வோம் என காணிகளை விற்பனை செய்து விட்டு போனவர்கள் கூறுகின்றார்கள். இதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. தமது பிரஜைகளை நாட்டிற்கு எடுப்பதற்கே இலங்கை முயற்சிக்கும். ஆனால், அவர்களுக்கு அது சிரமமானது. அகதிகளாக சென்ற தமது உறவினர்கள், மீண்டும் நாட்டிற்கு வருவது பாதுகாப்பற்றது என்பதே உறவினர்களின் நிலைப்பாடு.." என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, அலி சாப்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா? சர்வதேச முகவரி நிறுவனத்தின் ஊடாக, இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இது பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவரி நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். படக்குறிப்பு, நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறினார். https://www.bbc.com/tamil/articles/c2vxwdj8wd1o
  5. அமெரிக்கத் தேர்தல்கள்: இரு பிரதான கட்சிகளும் கடும்போட்டி By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 06:38 PM அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களின் பெறுபேறுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்கள் மற்றும் பல உயர் பதவிக்குரியவர்களும் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இத்தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு பல நாட்கள் செல்லும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி வெற்றியீட்டும் என்பதை கணிப்புகள் மூலம் முன்கூட்டியே பிரதான ஊடகங்கள் வெளிப்படுத்துவது வழக்கம். இதன்படி, இதுவரையான வெளியான பெறுபேற்று கணிப்புகளின்படி இரு கட்சிகளும் ஏறத்தாழ சம அளவிலான ஆசனங்களை வென்றுள்ளன. குறிப்பாக செனட் சபையைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி 47 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 46 ஆசனங்களையும் வென்றுள்ளதாக அசோஷியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. ஆனால், இரு கட்சிகளும் தலா 48 ஆசனங்களை வென்றுள்ளதாக சிஎன்என் தெரிவிக்கிறது. கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு 435 ஆசனங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் இதுவரையான பெறுபேறுகளின்படி 199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 178 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக சிஎன்என் கணித்துள்ளது. 199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 172 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக அசோஷியேடட் பிரஸ் கணித்துள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான அலை வீசும் எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட ஜனநாயகக் கட்சி கணிசமான ஆசனங்களை வென்றுள்ளது. எனினும் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றினால் அச்சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றுவ 2018 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதல் தடவையாக அமையும். https://www.virakesari.lk/article/139573
  6. நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு - பிரசன்ன ரணதுங்க By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 10:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முறைமை மாற்றத்திற்காக பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.ஜனாதிபதி அனுப்பிய கடிதம் சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமையவில்லை. பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிகள் அங்கத்துவம் பெற வேண்டும் என வெளிப்படை தன்மையுடன் அழைப்பு விடுத்துள்ளோம். அனைத்து விடயங்களையும் பிடித்துக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பின் பொறுப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். https://www.virakesari.lk/article/139542
  7. டி20 உலக கோப்பை: இது 1992 ஸ்கிரிப்ட்டா, 2007 ஸ்கிரிப்ட்டா? வைரல் ஆகும் மீம்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,விவேக் ஆனந்த் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அது அக்டோபர் 27-ம் தேதி, பெர்த் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடிக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. டி20 ஃபார்மெட்டில் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் அடிப்பது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல தான். ஆனால் அந்த மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது பாபர் ஆஸம் அணி. அதுதான் பாகிஸ்தான். எளிதில் வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் போட்டியில் தோற்பதும், நம்பவே முடியாத வகையில் ஒரு மிரட்டல் 'கம்பேக்' கொடுப்பதும் பாகிஸ்தான் அணியின் தனித்துவமான பாணி. தனது ஸ்டெயிலில் இதோ இன்னொருமுறை இறுதிப்போட்டி வரை வந்துவிட்டது பாகிஸ்தான் . விராட் கோலியின் விடாப்பிடியான போராட்டத்தால் கடைசி மூன்று ஓவர்களில் கோட்டைவிட்ட பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியடைந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் லாஹூருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான் என விமர்சனங்கள் குவிந்தன. 'நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்' - பாகிஸ்தான் நம்புவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் நியூஸிலாந்தை வீழ்த்தி வரலாற்றை புதுப்பித்த பாகிஸ்தான்5 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?9 நவம்பர் 2022 ஆனால், இந்தியாவை வீழ்த்தியிருந்த தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நேர்த்தியாக விளையாடி அநாயசமாக வீழ்த்தியது பாகிஸ்தான். பின்னர் நெதர்லாந்து அணி தென்னாப்ரிக்காவின் பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக வீழ்த்தும்போதெல்லாம் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இறுதியில் நெதர்லாந்து தென்னாப்ரிக்காவையும் கையோடு ஆஸ்திரலியாவில் இருந்து கூட்டிச் செல்ல, வங்கதேசத்துடனான போட்டியில் கவனமாக விளையாடி அரைஇறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்ட விதம் அபாரம். பந்துவீச்சோ, ஃபீலடிங்கோ, பேட்டிங்கோ எல்லாவற்றிலும் டாப் கிளாஸ். வெற்றி வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் மிக நேர்த்தியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. Instagram பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு "ஏ..எப்பர்ரா பாகிஸ்தான் ஃபைனலுக்கு வந்துச்சு" என மீம்ஸ் பறக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதில் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது 1992 உலக கோப்பை மற்றும் 2007 உலகக்கோப்பை. இது ஒருபுறமிருக்க, நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதால் இந்திய ரசிகர்கள் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் வென்ற ஒரே அணி இந்தியா மட்டும்தான். அயர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து ஒருவழியாக நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி ரன்ரேட் உதவியால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இதற்கிடையில் தான் இது அந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது, இது இந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது என ட்வீட், மீம்ஸ் எல்லாம் பகிரப்பட்டு வருகின்றன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 1992 ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் அரை இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆஃப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் அரை இறுதியில் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் சேஸிங்கில் வென்றது. இந்த முறையும் அரை இறுதியில் சேஸிங்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது. அந்த உலக கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த உலகக்கோப்பை தொடரும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்று வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் இருபது20 உலக கோப்பை 2022 அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES 1992 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இம்முறையும் இறுதிப்போட்டி மெல்போர்னில் தான் நடக்கிறது. 1992 இறுதி போட்டியில் பாகிஸ்தானும் இங்கிலாந்து அணிகளும் மோதின. அதில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது. இந்த முறை இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு வரும். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆகும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னொருபுறம் இது 2007 உலகக்கோப்பை ஸ்க்ரிப்ட் என ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES 2007 டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அதன்பின்னர் இன்றுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இரண்டு முறை டி 20 உலக கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. அதில் இந்த அணிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன. 2007 மற்றும் 2014 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்தியா விளையாடியது. 2007 மற்றும் 2009 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடியது. இங்கிலாந்து அணி 2010 மற்றும் 2016 உலக கோப்பைகளில் இறுதிப்போட்டிகளில் விளையாடியது. இதோ பாகிஸ்தான் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. அந்த அணியை எதிர்கொள்ளப்போவது இந்தியாவா, இங்கிலாந்தா என்பதை அறிய நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/crgqy2ny00ro
  8. யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் முகமாலையில் பரிசோதனை By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 09:55 PM யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் வெள்ளிக்கிழமை (11) முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி.சிவபரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (08)வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு- யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தினதும் வழித்தட அனுமதி பத்திரங்கள்,சாரதி அனுமதிபத்திரம் முகமாலையில் பரிசோதிக்கப்படுவது எனவும் அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பஸ்களும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கைதடியில் உள்ளூராட்சி அமைச்சில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாண கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பஸ் வவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தவை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139557
  9. இலங்கை இறுதி யுத்தத்தில் 'புலிகள்' சரணடைந்தனரா? ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கணவர் எழிலனுடன் அனந்தி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம் தோன்றி சாட்சியமளித்த இலங்கை ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த இந்த தகவலை பதிவு செய்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் நிரோஸ் குமார் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இலங்கை ராணுவத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு திருப்திகரமான பதில் வரவில்லை என்று கூறி அவர் - இது விடயமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கிணங்க கடந்த 3ஆம் தேதி விசாரணைக்காக ஆணைக்குழு கூடியபோது காணொளி வழியாக ஆஜரான பிரிகேடியர் நாகாவத்த, ”யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் புலிகள் இயக்க உறுப்பினர் எவரும் சரணடையவில்லை” என தெரிவித்தார இதன்போது ஊடவியலாளர் நிரோஸ் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகி - வாதங்களை முன்வைத்தனர். ஊடகவியலாளர் கோரிய தகவல்கள் படக்குறிப்பு, நிரோஸ் குமார் ஊடகவியலாளர் நிரோஸ் குமார், இலங்கை ராணுவத்திடம் சில விவரங்களைக் கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி, இலங்கை ராணுவத்தின் தகவல் அறியும் அதிகாரிக்கு விண்ணப்பமொன்றை அனுப்பி வைத்தார். 'இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்கள்' எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தில் 6 கேள்விகளுக்கான தகவல்களை நிரோஸ் கோரியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த எத்தனை பேர் ராணவத்தினரிடம் சரணடைந்தனர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எத்தனை பேர்)? புலி உறுப்பினர்கள் எந்தெந்தப் பகுதியில் வைத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அது தொடர்பான தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்; இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்12 செப்டெம்பர் 2022 விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்18 மே 2020 தமிழ்நாட்டில் என்ஐஏ விசாரிக்கும் மற்ற வழக்குகளின் நிலை என்ன?27 அக்டோபர் 2022 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடையும் போது, அவர்களைப் பொறுப்பேற்ற ராணுவ அதிகாரிகள், ராணுவப் படைப்பிரிவு போன்றவற்றின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்; சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யயப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்; புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதிகள் அல்லது உயர் பதவிகளில் இருந்தோர் எத்தனைபேர் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த ராணுவத் தளபதி, ராணுவப் படைப் பிரிவு போன்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பின் சரணடைந்த முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? சரணடைந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நிரோஸ் குமார் தனது விண்ணப்பத்தில் கேட்டிருந்தார். புலிகள் சரண் அடைந்தது யாரிடம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2019 ஜூன் 25ஆம் தேதி இதற்கு - எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை ராணுவத்தின் தகவல் அதிகாரி, புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என்றும், அவர்கள் இலங்கை அரசிடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அது தொடர்பான விவரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம் பெற்றுக் கொளள்ள முடியுமெனவும், அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திருப்தியடையாத ஊடகவியலாளர் நிரோஸ் குமார், தனது விண்ணப்பம் தொடர்பில் - இலங்கை ராணுவத்துக்கு மேன்முறையீடு செய்தார். அப்போதும், முன்னைய பதில்தான் ராணுவத்திடமிருந்து கிடைத்தது. இந்த நடவடிக்கைகளின் போது, தனது விண்ணப்பத்தினை தமிழில் சமர்ப்பித்திருந்ததாகவும் ஆனால், தனக்கு வழங்கப்பட்ட எழுத்து மூல பதில்கள் அனைத்தும், சிங்கள மொழியிலேயே கிடைத்ததாகவும் நிரோஸ் குமார் கூறுகின்றார். ராணுவப் பகுதிக்கு வந்தோரில் புலிகள் இருந்தார்களா எனத் தெரியாது ராணுவம் வழங்கிய பதில்களில் திருப்தியடைதாக நிரோஸ் குமார், 2019ஆம் ஆண்டு 10ஆம் மாதம் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு நேரடியாகச் சென்று, தனது விண்ணப்பம் தொடர்பில் முறையீடு செய்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதன் பின்னர், நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி, நிரோஸ் வழங்கிய முறைப்பாட்டை, தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது காணொளி மூலம் தோன்றி சாட்சியமளித்த ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த”யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை. அப்போது மக்கள் இடம்பெயர்ந்து ராணுவப் பகுதிக்கு வந்தார்கள். அவர்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தார்களா என எமக்குத் தெரியாது. எம்மிடம் வந்தவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை. அவர்களை பஸ்களில் ஏற்றி - உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம். அந்த முகாம்கள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அங்கு சென்றவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை அந்தப் பணியகம்தான் மேற்கொண்டது. அவ்வாறான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம்தான் பெற்றுக் கொள்ள முடியும்" என்று கூறியதாக ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தெரிவித்தார். ஆணையம் பிறப்பித்த உத்தரவு பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு பேரைக் கொண்ட தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில், இந்த விடயங்களை இலங்கை ராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி கூறியிருந்தார். இதன்போது ராணுவத்தின் கூற்றை மறுத்த ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தரப்பு சட்டத்தரணி ஸ்வஸ்திகா, ராணுவத்தினரிடம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தமை தொடர்பான சில ஆவணங்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார். ராணுவத்திடம் புலிகள் சரணடைந்ததாக அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அப்போதைய ராணுவப் பேச்சாளர் உள்ளிட்டோர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்த செய்திகள் இந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன. இரு தரப்பினரின் வாதங்களையும் கவனத்திற் கொண்ட ஆணைக்குழு, ஊடகவியலாளர் நிரோஸ் மற்றும் ராணுவம் ஆகிய தரப்பினர் தத்தமது நிலைப்பாடுகள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி விசாரிப்பதற்கும் நாட்குறித்தது. எனது கணவர் சரணடைந்ததை நேரில் கண்டேன்: எழிலன் மனைவி அனந்தி இறுதி யுத்தத்தில் தம்மிடம் புலிகள் எவரும் சரணடையவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பில், புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. படக்குறிப்பு, அனந்தி 2009ஆம் ஆண்டு இறுதி யுததம் முடிவுக்கு வந்தபோது, ராணுவத்திடம் எழிலன் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் கண்டதாகவும் அனந்தி சசிதரன் நீண்ட காலமாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக பேசிய அனந்தி, "ராணுவத்திடம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய்" என்கிறார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி - அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்ற எழிலன், ராணுவத்திடம் சரணடைந்ததை தான் நேரில் கண்டதாகத் கூறினார். ”முள்ளிவாய்க்காலில் இருந்து ராணுவம் அழைத்த இடத்துக்கு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மூன்று பிள்ளைகளும் வரிசையில் சென்றோம். அப்போது அரச உத்தியோகத்தருக்கான எனது அடையாள அட்டையை ராணுவத்தினரிடம் காட்டினேன். ராணுவ அதிகாரியொருவர் வந்து எனது அடையாள அட்டையைப் பார்த்து விட்டு, நீ இந்த வரிசையில் வரவேண்டாம், உனக்கான வரிசை அங்கேயுள்ளது என கொச்சைத் தமிழில் கூறி, நான் நின்ற வரிசையிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் நீக்கி விட்டார்”. ”அப்போது பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்று - ராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் சற்று தூரத்தில் நின்றிருந்த எழிலன், என்னைப் பார்த்து, 'நீ போ' என்பது போல் தலையசைத்தார். முட்கம்பிகளுக்கு இந்தப் பக்கம் நாங்களும் அந்தப் பக்கம் அவர்களுமான இருந்தோம். அப்போது அங்கு நின்ற பஸ்களை நோக்கி எழிலன் உள்ளிட்டவர்களை ராணுவத்தினர் அழைத்துக் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்” என, அனந்தி கூறினார். எழிலனை அழைத்துச் சென்றவர்கள் ராணுவ சிப்பாய்கள் இல்லை என்றும், ராணுவ உயர் அதிகாரிகளே அழைத்துச் சென்றனர் எனவும் அனந்தி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "எழிலனுக்கு அருகாமையில் நாங்கள் நின்றிருந்த ஒரு சமயத்தில் 'மாவிலாறு' 'எழிலன்' எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே எழிலனை ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்" எனவும் பிபிசி தமிழிடம் அனந்தி குறிப்பிட்டார். "அந்த இடத்திலிருந்து பொதுமக்களை பஸ்கள் ஏற்றிக் கொண்டு சென்றன. அதில் நானும் பிள்ளைகளும் சென்றோம். ஓமந்தையில் ஓரிடத்தில் பஸ் தரித்து நின்றது. அப்போது மற்றைய பஸ்ஸில் வந்த ஒருவர் என்னிடம் ஓடிவந்து, 'அனந்தி அக்கா, நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள். அங்கு ஆர்மி உங்களைத் தேடுகிறார்கள்' என்றார். புலிகள் இயக்க முக்கியஸ்தர்களோடு அவர்களின் குடும்பத்தினரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது, அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது" எனவும் அனந்தி கூறினார். தனது கணவர் எழிலன் ராணுவத்தினரிடம் சரணடைந்தமையை தான் நேரில் கண்டதை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியங்களின் போதும், தான் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் கூட அதற்குப் பிறகு திரும்பவில்லை என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பிய எம்பி பட மூலாதாரம்,@MASUMANTHIRAN படக்குறிப்பு, சுமந்திரன், எம்.பி இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று (நவம்பர் 😎 நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு அண்மையில் ராணுவம் பதிலளிக்கும் போது, தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், தாய்மாரும் மனைவியர்களும் ராணுவத்திடம் தங்கள் உறவுகளை தாங்களே கையளித்ததாக புகார் கூறுகின்றனர். இப்படியிருக்கும் போது, தங்கள் கண்கள் முன்பாகவே ராணுவத்திடம் பலர் சரணடைந்தமையை மக்கள் பார்த்துள்ள நிலையில், ராணுவத்திடமிருந்து இப்படியொரு அறிக்கை வெளிவருவதால், மக்கள் உடனடியாவே நம்பிக்கை இழந்து விடுகின்றனர்" என சுமந்திரன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cmm53y4m536o
  10. நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது 09 NOV, 2022 | 07:12 PM கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது. நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர்நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடி பாய்ந்து வருவதோடு போக்குவரத்தில் அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில் வெட்டிவிடும் செயற்பாடு (09) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாரம்பரியமாக விசேட பூசை வழிபாடுகளுடன் குறித்த நந்திக்கடல் ஆற்றில் மேலதிகமாக தேங்கியுள்ள நீர், பெருங்கடலில் வெட்டி விடப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன்(காணி) முல்லைத்தீவுமாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் சமாசம், சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139575
  11. சரியான நேரத்தில் நியூஸிலாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சாதனை மிகு அஸாம் -ரிஸ்வான் ஜோடி 09 NOV, 2022 | 09:28 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் சாதனை மிகு ஆரம்ப ஜோடியினர் ஸ்திரமான தொடக்கத்தை இட்டுக்கொடுத்து தமது அணியின் வெற்றியை இலகுபடுத்தினர். மிகவும் அவசியமான வேளையில் திறமையை வெளிப்படுத்திய பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் எட்டக்கூடிய ஆனால் சற்று சிரமத்தைத் தோற்றுவித்த வெற்றி இலக்கை பாகிஸ்தான் அடைவதற்கு உதவினர். எவ்வாறாயினும் நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடியபோது ஷஹீன் ஷா அவ்றிடி தனது முதலாவது ஓவரில் ஃபின் அலனையும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சனையும் ஆட்டமிழக்கச் செய்தததன் மூலம் தமது அணியின் வெற்றிக்கு வித்தி டப்பட்டதாக அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்தார். ஷஹீன் ஷா அவ்றிடி 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றில் பிரகாசிக்கத் தவறிய பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிக முக்கிய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதங்களைக் குவித்து நியூஸிலாந்தை வெளியேறச் செய்தனர். சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவர்களது இணைப்பாட்டங்கள் சாதனை மிக்கவை. நியூஸிலாந்துடனான வெற்றியின்போதும் அவர்கள் இருவரும் சாதனை நிலைநாட்டத் தவறவில்லை. இன்றைய போட்டியில் அவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 105 ஓட்டங்கள், இருபது 20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அவர்களது மூன்றாவது சத இணைப்பாட்டமாகும். இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் வேறு எந்த ஜோடியும் இந்த சாதனையை நிலைநாட்டவில்லை. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் பகிர்ந்த 9ஆவது சத இணைப்பாட்டமும் ஒரு சாதனையாகும். அவர்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய ஆரம்ப ஜோடியினர் 5 தடவைகள் சத இணைப்பாட்டத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் இருவரும் இணைந்து 2509 ஓட்டங்களை பாகிஸ்தானுக்காக பகிர்ந்துகொடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இருக்கும் ஜோடி 621 ஓட்டங்கள் குறைவாக பகிர்ந்துள்ளனர். இந்த வருட உலகக் கிண்ண அரை இறுதி போட்டிக்கு முன்னர் ஒரே ஒரு போட்டியிலேயே அதுவும் பங்களாதேஷுக்கு எதிராகவே பாபர் அஸாம் இரட்டை இலக்க எண்ணிக்கையான 25 ஓட்டங்களைப் பெற்றார். இன்றைய போட்டியில் ட்ரென்ட் போல்டிடமிருந்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாபர் அஸாம் கொடுத்த சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வே தவறவிட்டது அவருக்கு அதிர்ஷ்டமாக மாறியது. அதன் பின்னர் திறமையாகவும் தன்னம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் உலகக் கிண்ணத்தில் தனது முதலாவது அரைச் சதத்தைக் குவித்தார். பாபர் அஸாமைப் போன்றே இந்த உலகக் கிண்ணத்தில் மொஹமத் ரிஸ்வானும் முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அவர்கள் இருவரும் மீண்டும் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளமையும் ஷஹீன் ஷா அப்றிடியின் அற்புதமான பந்துவீச்சும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அணிக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றால் பாகிஸ்தானின் ஆக்ரோஷத்தை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படித்தான் இந்தியாவும். 2007இல் போன்ற மீள் இறுதி ஆட்டம் இடம்பெறுமா என்பதை அறிந்துகொள்ள இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவரை காத்திருப்போம். நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதும் பஞ்சாப் உட்பட பாகிஸ்தான் முழுவதும் இரசிகர்கள் ஆரவாரம் செய்து தமது அணியின் வெற்றியைக் கொண்டாடினர். https://www.virakesari.lk/article/139576
  12. போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW ECU போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN DRAW ENG போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED DRAW NED போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL DRAW USA போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA DRAW ARG போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DRAW DEN போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW MEX போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS DRAW FRA போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW CRO போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN DRAW GER போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW ESP போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN DRAW BEL போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW SUI போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW URU போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW POR போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB DRAW BRA போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN DRAW IRN போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW SEN போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW NED போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA DRAW ENG போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW TUN போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW POL போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN DRAW FRA போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW ARG போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW JPN போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR DRAW BEL போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN DRAW CRO போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW ESP போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW SRB போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW KOR போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW BRA போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW POR போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT DRAW NED போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW SEN போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW ENG போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW USA போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW DEN போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA DRAW FRA போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG DRAW ARG போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX DRAW MEX போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW BEL போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW MAR போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER DRAW GER போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP DRAW ESP போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW POR போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU DRAW URU போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW SUI போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA DRAW BRA குழு A: 49) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் QAT Select QAT Select ECU Select ECU Select SEN Select SEN 2 NED Select NED 1 50) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) NED #A2 - ? (1 புள்ளிகள்) SEN குழு B: 51) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG Select ENG 1 IRN Select IRN Select USA Select USA 2 WAL Select WAL Select 52) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) USA குழு 😄 53) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG Select ARG 1 KSA Select KSA Select MEX Select MEX 2 POL Select POL Select 54) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) ARG #C2 - ? (1 புள்ளிகள்) MEX குழு 😧 55) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA Select FRA 1 AUS Select AUS Select DEN Select DEN 2 TUN Select TUN Select 56) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) FRA #D2 - ? (1 புள்ளிகள்) DEN குழு E: 57) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP Select ESP 1 CRC Select CRC Select GER Select GER 2 JPN Select JPN Select 58) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) ESP #E2 - ? (1 புள்ளிகள்) GER குழு F: 59) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL Select BEL 1 CAN Select CAN Select MAR Select MAR Select CRO Select CRO 2 60) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) BEL #F2 - ? (1 புள்ளிகள்) CRO குழு G: 61) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA Select BRA 1 SRB Select SRB Select SUI Select SUI 2 CMR Select CMR Select 62) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BRA #G2 - ? (1 புள்ளிகள்) SUI குழு H: 63) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR Select POR 1 GHA Select GHA Select URU Select URU 2 KOR Select KOR Select 64) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) POR #H2 - ? (1 புள்ளிகள்) URU சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED USA NED 66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN ARG 67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX FRA 68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG SEN ENG 69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) ESP CRO ESP 70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA URU BRA 71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL GER BEL 72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR SUI SUI கால் இறுதிப் போட்டிகள்: கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) ESP BRA BRA 74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG ARG 75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) BEL SUI BEL 76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA FRA அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG BRA ARG BRA 78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA BEL FRA BEL மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் 79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG FRA ARG இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) BRA BEL BRA உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) ARG 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRA 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Cristiano Ronaldo 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) POR 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BRA கிரிக்கெட் போட்டியின் துணிவில் இதில குதிச்சிருக்கன் அடிபடாம பாத்துக்கொள்ளுங்க!
  13. அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப்படுவர். ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியிலும் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெறுவர் அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட சம்பியன்ஷிப் 2023இல் wildcard முறைமையில் பிரதான சுற்றில் இணைக்கப்படுவர். போட்டி விதிகளுக்கு அமைய இலங்கையிலிருந்து 4 வீரர்கள் இப் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டனர். ஆண்களுக்கான போட்டிக்கு கீரன் வைரவநாதன், செய்யத் ஸிஹார் ஆகிய இருவரையும் பெண்களுக்கான போட்டிக்கு சாஜிதா ராஸிக், விஷ்மி சேரசிங்க ஆகிய இருவரையும் இலங்கை டென்னிஸ் சங்கம் பிரேரித்திருந்தது. அவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தரவரிசைப்படி இலங்கையில் முதல்நிலை வகிக்கும் கீரன் வைரவநாதனுக்கு ஜப்பானில் அவுஸ்திரேலிய பகிரங்க ஆகிய தகுதிச் சுற்றுக்கான பாதை ( Road to Australian Open Asian Qualifiers in Japan) தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை டென்னிஸ் சங்க அரங்கில் இந்த மாத முற்பகுதியில் நடத்தப்பட்ட சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) 18 வயதுக்குட்பட்ட தர வரிசைப்படுத்தல் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவிலும் இரட்டையர் பிரிவிலும் கீரன் வைரவநாதன் இறதிப் போட்டிகளில் விளையாடி இருந்தார். அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் போட்டியில் பங்கபற்ற முதலாவது இலங்கையராக தகுதிபெறும் நம்பிக்கையுடன் கீரன் வைரவநாதன் தனது பயிற்றுநர் குயங்கா வீரசேகரவுடன் ஜப்பானில் உள்ள நாகோயாவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பயணிக்கவுள்ளார். தி 2023 டன்லொப் ரோட் டூ தி ஒஸ்ட்ரேலியா ஒப்பன் ஜுனியர்ஸ் ((The 2023 Dunlop Road to the Australian Open Juniors) என்ற பெயரிலான இப் போட்டியை அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கான பந்து பங்களாரான டன்லொப், ஜப்பான் டென்னிஸ் சங்கம், டென்னிஸ் ஒஸ்ட்ரேலியா ஆகியன இணைந்து நடத்தகின்றன. https://www.virakesari.lk/article/139491
  14. கந்தக்காடு புனர்வாழ்வளித்தல் நிலைய மோதல் விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமனம் By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 04:57 PM (எம்.மனோசித்ரா) கந்தக்காடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சையளித்தல் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை, நீதி அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 217 கைதிகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (07) இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139564
  15. நீர் குழிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 09 NOV, 2022 | 04:52 PM (எம்.வை.எம்.சியாம்) அம்பாறை, உஹன பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் விழுந்து ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உஹன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வயதும் 2 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழியில் வீழ்ந்த குழந்தை பெற்றோரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139567
  16. டி20: 1992 அரையிறுதி அற்புதத்தை மீண்டும் நிகழ்த்திய பாகிஸ்தான் கட்டுரை தகவல் எழுதியவர்,எம். மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் ஷதாப் கான் மற்றும் அணி வீரர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவும் இங்கிலாந்து ஆடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் ஆடும். நியூஸிலாந்து அணி பலமானது என்று கூறுவதெல்லாம் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கும் வரைதான் என்று வாசிம் அக்ரம் கூறியிருந்தார். சிட்னி மைதானம் அதற்கு இன்னொரு சாட்சியாகிவிட்டது. பாகிஸ்தான் அணி முதல் ஓவரைச் சந்தித்தபோது ஒரு ரன் எடுத்திருந்த பாபர் ஆஸம் தட்டிவிட்ட பந்து நியூஸிலாந்து விக்கெட் கீப்பரின் கையைத் தழுவிச் சென்றது. அப்போதே நியூஸிலாந்தின் வெற்றியும் நழுவிப் போய்விட்டது. அரையிறுதிக்குத் தகுதிபெறுமா என்று கருதப்பட்ட அணி கடைசி நிமிடத்தில் காட்சிகளையெல்லாம் மாற்றி அரையிறுதிக்குள் நுழைந்தததுடன், இதோ இன்று இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது போல இன்னும் கோப்பை வெல்வதுதான் பாக்கியிருக்கிறது. இறுதிப் போட்டிக்குச் செல்ல பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்கு25 நிமிடங்களுக்கு முன்னர் 'நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்' - பாகிஸ்தான் நம்புவது ஏன்?38 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் திணறடிக்கும் பந்துவீச்சு, துல்லியமான பேட்டிங் என போட்டியின் தொடக்கம் முதலே ஆக்கிரமித்து வந்த பாகிஸ்தான் அணி இன்னொரு முறை உலக கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஒரேயொரு போட்டியில் தங்கள் மீதான அனைத்து விமர்சனங்களையும் துடைத்து எறிந்துவிட்டது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணி தோற்கும், பிறகு காணாமல் போகும், அதன் பின்னர் எங்கிருந்தோ வந்து கோப்பையை வெல்லும் என்று சொல்வார்கள். நியூஸலாந்துக்கு எதிரான போட்டி அப்படித்தான் இருந்தது. உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி வென்றதில்லை என்ற வரலாற்றை கேன் வில்லியம்ஸால் இன்றும் மாற்றி எழுத முடியவில்லை. 1992 உலக் கோப்பை முதல் பாகிஸ்தான் அணியைப் பழி தீர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES யூஸ்டு பிட்ச் என்று கூறப்படும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட களத்தில் ஆடுவது இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் பேட்டிங்கில் அப்படியொரு சிரமத்தையும் காண முடியவில்லை. ஏனென்றால் அதன் பிறகு பாபர் ஆஸமும் ரிஸ்வானும் சேர்ந்து பந்துவீச்சாளர்களைத் திணறவைத்தார்கள். அடிக்கடி பந்துகள் பவுண்டரிகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. இந்தத் தொடரில் முதல் முறையாக நீடித்து நின்று ஆடியது இந்த இணை. பாபர் ஆஸம் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள் சோதனை கட்டத்தில் நியூஸிலாந்து டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசிப் போட்டியில் ஆடியே அணிகளே இதிலும் களமிறங்கின. முதல் ஓவரிலேயே ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த அணியைச் சோதனைக்கு உள்ளாக்கினார். அந்தத் தருணத்திலேயே பாகிஸ்தான் ரசிகர்களின் ஆராவாரம் சிட்னி மைதானம் முழுவதும் கேட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய பவர் பிளேயின் கடைசிப் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டத்தின் போது நியூசிலாந்தின் டிம் செளதி அவரை ரன் அவுட் செய்ய முயன்றபோது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தனது மட்டையை தரையில் படச் செய்தார். இந்த் தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் நியூஸிலாந்து அணிக்கு ஆறுததாக இருந்தது கேப்டன் வில்லியம்சனும் அவருடன் இணை சேர்ந்த மிட்சலும்தான். இவர்கள்தான் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்கள். 17 ஆவது ஓவரில் கேன் வில்லியம்ஸன் 46 ரன்களை எடுத்திருந்தபோது சாஹீன் ஷா அப்ரிடி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று போல்டானார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. டேரில் மிட்சல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் ஷாஹின் ஷா அப்ரிடியின் பந்துகள் விக்கெட்டுகளை நோக்கி அம்புகள் போலப் பாய்ந்து கொண்டிருந்தன. நான்கு ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்தின் அடித்தளத்தை நொறுக்கியவர் அவரே. 152 ரன்கள் இலக்கை எட்டும் பணியே சலனமே இல்லாமல் செய்து முடித்தது பாகிஸ்தான் அணி. பாபரும் ரிஸ்வானும் சேர்ந்து 105 ரன்கள் என்ற பெருங் கோட்டையைக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள். ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் ஆஸம் 53 ரன்களும் எடுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள் படிப்படியாக ரன் சேகரிக்க, கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 30 ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி வரலாறு இதற்கு முன் மூன்று முறை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதி இருக்கின்றன. ஆனால், ஒருமுறை கூட நியூஸிலாந்து வென்றதில்லை. 1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில். இப்போது நான்காவது முறையாக அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியிருக்கிறது பாகிஸ்தான். 1992-இல் என்ன நடந்தது? 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். அங்கிருந்து மீண்டுவந்த பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது வரலாறு. அந்த வரலாறு இந்த உலக கோப்பையிலும் திரும்பப் போகிறது என்று ஏற்கெனவே பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போட்டி அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cv2pjklj0l4o
  17. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில் அனாமிகா என்று குறிப்பிடப்பட்ட இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இருந்த கொடூரமான செய்தியால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், 2014ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தண்டனையை உறுதி செய்தது. ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று அதற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்றம் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த ஆண்களை விடுத்தது. அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கு “உறுதியான மற்றும் தெளிவான சான்றுகள்” இல்லையென்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES “2022ஆம் ஆண்டின் இந்தியாவில் நீதி இப்படித்தான் இருக்கும்,” என்று ட்விட்டரில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மனச் சோர்வைடைந்த அந்தப் பெண்ணின் தந்தையுடைய ஒளிப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளானது மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் மாநில அரசின் சமீபத்திய உத்தரவுடன் இந்தத் தீர்ப்பை சிலர் ஒப்பிட்டுள்ளனர். அனாமிகாவின் தந்தை என்னிடம் “நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சில நிமிடங்களில் பொய்த்துப் போனது” என்று கூறினார். “நாங்கள் நீதிக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யும் என்றும் என் மகளைக் கொன்றவர்கள் இறுதியாகத் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் நம்பினோம்,” என்று அவர் கூறினார். 19 வயதான அனாமிகா, தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா என்ற கீழ்நடுத்தர வர்க்க கிராமப்புறத்தில் வசித்து வந்தார். ஜனவரி 2012இல் அவர் தலைநகரின் புறநகர்ப் பகுதியான குர்காவுனில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருந்தார். கடந்த 8 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் பாலியல் வல்லுறவு எதிர்ப்பு ஆர்வலர் யோகிதா பயானா, “அவர் தனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார்,” என்கிறார். பிப்ரவரி 9, 2012 அன்று இரவு அனாமிகா மூன்று நண்பர்களுடன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சிவப்பு நிற காரில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். செக்ஸ்சோம்னியா: பிரிட்டனில் பேசப்பட்ட ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது7 நவம்பர் 2022 நியாண்டர்தால் பெண்களை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தினார்களா மனிதர்கள்?8 நவம்பர் 2022 ''EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?8 நவம்பர் 2022 நான்கு நாட்களுக்குப் பிறகு சித்திரவை செய்யப்பட்டதன் அறிகுறிகளோடு அவருடைய பாதி எரிந்த, கொடூரமாகச் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூரமான குற்றம் இந்தியாவில் தலைப்புச் செய்தியானது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு மிகவும் உறுதியானது என்று அரசுத் தரப்பு வாதிட்டது. குற்றம் நடந்த இடத்தில் மூன்று ஆண்களில் ஒருவரின் பணப்பையைக் கண்டுபிடித்ததாகவும் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினரை உடல் கிடந்த இடத்திற்கு அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை மீட்க உதவியதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. கைப்பற்றப்பட்ட காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரத்தக் கறை, விந்து மற்றும் முடி ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களும் வாகனத்தில் இருந்ததை நிரூபித்துள்ளனர். விசாரணை நீதிமன்றம் அந்த நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை “வேட்டையாடிகள்” என்று உயர்நீதிமன்றம் வர்ணித்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமையன்று, 40 பக்கங்கள் கொண உச்சநீதிமன்ற உத்தரவு, நீதிபதி பேலோ திரிவேதியால் எழுதப்பட்டது. அது, அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியது: “காவல்துறையின் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் பல இருப்பதாக” நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கடத்தல்காரர்களுடன் சண்டையிட முயன்ற ஓர் ஆண் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நண்பர்களால், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. “குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் ஆவணங்களைக் கொண்ட காரின் பம்பர், பணப்பை போன்ற கண்டுபிடிப்புகள்” பற்றிய டெல்லி காவல்துறையின் கூற்று, குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட முதல்கட்ட ஒளிப்படங்களில் காணப்படவில்லை. முதலில் சம்பவ இடத்திற்கு வந்த ஹரியானா போலீசார், தங்கள் அறிக்கையில் இந்த விஷயங்களைக் குறிப்பிடவில்லை. புலனாய்வு அதிகாரியின் பறிமுதல் குறிப்பில் பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. போலீசாரால் மீட்கப்பட்ட கைபேசி, உண்மையில் அனாமிகாவுடையதா என்பதை உறுதிசெய்ய பெண்ணின் தந்தைக்குக் காட்டப்படவில்லை. போலீசாரால் கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற காரில் குற்றச் செயல் இடம்பெற்றது தான் என்பதும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் கேள்விக்குரியவை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை விசாரிக்காதது “சந்தேக மேகத்தை” உருவாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES காரிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள், கைப்பற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதியன்றே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. “இத்தகைய சூழலில், தடயவியல் ஆதாரங்கள் சேதப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை நிராகரிக்க முடியாது,” என்று அவர் எழுதினார். “கொடூரமான குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போனால், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒருவித வேதனையும் ஏமாற்றமும் ஏற்படக்கூடும்” என்பதை ஒப்புக்கொண்ட உத்தரவில், “அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகள், மிகவும் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கு தொடுத்த அனாமிகாவின் குடும்பத்திரன் தரப்பு வழக்கறிஞர் சாரு வாலி கண்ணா என்னிடம் கூறினார். “இந்தத் தீர்ப்பு மிகவும் தெளிவற்றது. இது இந்த உயர்-தொழில்நுட்ப சிக்கல்களை எழுப்புகிறது. ஆதாரங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. ஆனால், அது காவல்துறையை குற்றம் சாட்டவில்லை,” என்று அவர் கூறினார். “உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று உத்தரவு கூறுகிறது. ஆனால், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான பல ஆதாரங்களைப் புறக்கணித்தனர்.” பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றும் அனாமிகாவின் தந்தை, திங்கட்கிழமை இரவு பணி முடிந்து நேராக நீதிமன்றத்திற்குச் சென்றதாகக் கூறினார். தீர்ப்பு வாசிக்கப்படும்போது பெற்றோருடன் நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த பயானா, அவர்கள் உணர்ந்த கோபம் மற்றும் ஏமாற்றத்தைப் பற்றிப் பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES “நான் மனம் உடைந்துவிட்டேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனவே பெற்றோர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நீங்கள் இதிலிருந்து கற்பனை செய்யலாம்,” என்று அவர் என்னிடம் கூறினார். இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று தனக்கு “ஒரு சதவீதம் கூட பயம் இருக்கவில்லை” என்றும் நீதிக்கான அவர்களின் போராட்டத்தில் இதுதான் “முடிவு” என்றும் அந்தக் குடும்பத்திற்கு உறுதியளிப்பதாகவும் பயானா கூறினார். “எங்களைச் சுற்றி அனைத்துமே சரிந்துவிட்டது. இந்த உத்தரவைப் பற்றி வழக்கறிஞர் எனக்கு செய்தி அனுப்பியபோது, என் முதல் எதிர்வினை அவநம்பிக்கையாக இருந்தது. நான் செய்தியைத் தவறாகக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.” உச்சநீதிமன்றத்திற்கு விசாரணை பற்றி கவலை இருந்தால், அவர்கள் வழக்கை மீண்டும் தொடங்கலாம். மற்றொரு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம் அல்லது வழக்கை மத்திய காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் என்று பயானா கூறுகிறார். “உண்மை என்னவென்றால், ஓர் இளம் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதிமன்றம் ஏதாவது ஒரு தீர்வை வழங்க வேண்டும்,” என்று கூறுகிறார். “வானத்திலிருந்து வந்த மின்னலால் நான் தாக்கப்பட்டேன்,” என்று அனாமிகாவின் தந்தை கூறினார். அவர் மனம் தடுமாறியிருந்தார். “உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது? பத்து ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்குச் சந்தேகமே வரவில்லை. பிறகு எப்படி அனைத்தும் திடீரெனப் பொய்யானது?,” என்று அவர் கேட்கிறார். https://www.bbc.com/tamil/articles/cje7wln5ggno
  18. இரசாயன உரங்களை அள்ளி வழங்கி விவசாயியை சோம்பேறியாக்கி, கடைசியா விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி அரிசிக்கு அவங்கள் சொல்வது தான் விலையாக இருக்கும்.
  19. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் ரத்தம்: உலகில் முதன் முறையாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லகர் பதவி,சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NHSBT ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்தம், உலகின் முதலாவது மருத்துவ பரிசோதனையில் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஒரு சில ஸ்பூன்கள் கொண்ட மிகவும் சிறிய அளவு ரத்தம் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு, அது எவ்வாறு மனித உடலில் செயல்படுகிறது என்று பரிசோதிக்கப்பட்டது. மொத்தமாக ரத்தப் பரிமாற்றங்கள் எப்போதுமே மக்களை சார்ந்தே இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வருகின்றனர். ஆனால், மிகவும் அரிதான ரத்த வகைகளை தானமாக பெறுவது கடினமாக இருப்பதால் ரத்தம் தயாரிப்பதற்கான இறுதியான இலக்கு என்பது, முக்கியமானது. சிக்கில் செல் அனீமியா (sickle cell anaemia)எனப்படும் உடல்நலக்கோளாறுக்கு தொடர்ந்து ரத்தம் தேவையை சார்ந்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற முறை தேவைப்படுகிறது. ரத்தம் துல்லியமாக பொருத்தமாக இல்லாதபட்சத்தில் உடலானது அதனை புறக்கணிக்கும். சிகிச்சையானது தோல்வியடையும். இந்த மட்டத்திலான திசு பொருத்தம் என்பது, மிகவும் நன்றாக அறிந்த ஏ, பி, ஏபி மற்றும் ஓ ரத்த வகைகளுக்கு அப்பாலும் செல்ல வேண்டும். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஷ்லே டாய், சில ரத்த வகைகள் மிக,மிக அரிதாக இருக்கின்றன. நாட்டில் 10 நபர்கள் மட்டுமே இதனை தானமாக தரக்கூடிய நிலையில் இருக்கமுடியும் என்று சொல்கிறார். இந்த தருணத்தில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பாம்பே ரத்த வகையானது ஒட்டு மொத்த பிரிட்டனிலும் 3 யூனிட் மட்டுமே இருப்பு இருக்கிறது. நியாண்டர்தால் பெண்களை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தினார்களா மனிதர்கள்?8 நவம்பர் 2022 செக்ஸ்சோம்னியா: பிரிட்டனில் பேசப்பட்ட ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது7 நவம்பர் 2022 பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்?1 நவம்பர் 2022 எவ்வாறு ரத்தம் வளர்த்தெடுக்கப்படுகிறது? இது பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், லண்டன் ஆகிய குழுக்கள் மற்றும் என்ஹெச்எஸ் ரத்தம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இணைந்த ஆய்வு திட்டமாகும்.நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த சிவப்பணுக்களில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது. # இது எவ்வாறு பணியாற்றுகிறது? ஒரு பைண்ட் ரத்தம்(சராசரியாக 470 மிலி) என்ற அளவில் வழக்கமான தானத்தில் அவர்கள் தொடங்குகின்றனர். ஒரு ரத்த சிவப்பணுவாக மாறக்கூடிய திறன் கொண்ட நெகிழ்வான ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க காந்த மணிகள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் ஆய்வகங்களில் பெரும் எண்ணிக்கையில் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவை, ரத்த சிவப்பணுக்களாக மாற வழிகாட்டப்படுகின்றன. இந்த செயல்முறைக்கு மூன்று வார காலம் ஆகும். 5 லட்சம் ஸ்டெம் செல்கள் எனும் தொடக்க தொகுப்பு, 50 பில்லியன் சிவப்பணுக்களாக கிடைக்கும். இது 15 பில்லியன் ரத்த சிவப்பணுக்களாக வடிகட்டி குறைக்கப்படும். இந்த முறைதான் இடமாற்றத்துக்கான சரியான வளர்ச்சி நிலையாகும். "எதிர்காலத்தில் எவ்ளவு சாத்தியமோ அவ்வளவு ரத்தத்தை நாங்கள் உருவாக்க விரும்புகின்றோம். பட மூலாதாரம்,NHSBT என் தலைமையிலான நோக்கம், அறைமுழுவதும் இருக்கும் இயந்திரங்கள் தொடர்ந்து ரத்தம் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்," என பேராசிரியர் ஆஷ்லே டாய் என்னிடம் தெரிவித்தார். முதலில் இரண்டு பேர் இந்த பரிசோதனையில் பங்கெடுக்கின்றனர். 10 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடமாவது ரத்தம் செலுத்தி பரிசோதிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அவர்கள் நான்கு மாத இடைவெளியில் 5-10 மில்லி ரத்தம் இரண்டு முறை தானமாக பெறுவார்கள். ஒருமுறையில் வழக்கமான ரத்தமும், இன்னொரு முறையில் ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தமும் அளிக்கப்படும். பெரும்பாலும் மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்படுவது போல இந்த ரத்தம் கதிரியக்கப் பொருள்களால் குறியிடப்பட்டிருக்கும். அப்போதுதான் விஞ்ஞானிகள் உடலில் எவ்வளவு காலத்துக்கு ரத்தம் நீடித்திருக்கிறது என்பதை கவனிக்க முடியும். வழக்கமான ரத்தத்தை விடவும், ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தம் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் பொதுவாக, அவை மாற்றப்படும் தேவைக்கு முன்பு 120 நாட்கள் நீடித்திருக்கும். வழக்கமாக தானமாக பெறப்பட்ட ரத்தம் இளம் மற்றும் பழைய ரத்த சிவப்பணுக்களைக் கொண்ட கலவையாக இருக்கும். ஆனால், ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்த சிவப்பணுக்களானது முழுவதும் புத்தம் புதிதாக இருக்கும். எனவே அவை 120 நாட்கள் முழுவதும் நீடித்திருக்கும். இது எதிர்காலத்தில் அடிக்கடி சிறிய மற்றும் குறைவான அளவில் தானம் பெறுவதை அனுமதிக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். பட மூலாதாரம்,NHSBT எனினும், கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருக்கின்றன. என்ஹெச்எஸ் நிறுவனத்தின் சராசரியான ரத்த தான செலவு 130 பவுண்ட் ஆகும். வளர்த்தெடுக்கப்படும் ரத்தம் அதிக செலவு பிடித்ததாக இருக்கும். எனினும் எவ்வளவு ஆகும் என்பதை ஆய்வு குழு தெரிவிக்கவில்லை. சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் அவைகளாகவே காலாவதியாகி விடும் என்பது இன்னொரு சவாலாகும். இது வளர்த்தெடுக்கப்படும் ரத்தத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. அது மருத்துவ ரீதியாக தேவைப்படும் அளவுகளில் உற்பத்தி செய்வதற்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். என்ஹெச்எஸ் ரத்தம் மற்றும் ரத்த மாற்றுத்துறை மருத்துவ இயக்குனர், டாக்டர் ஃபரூக் ஷா கூறுகையில், சிக்கில் செல் போன்ற குறைபாடுகள் கொண்ட மக்களுக்கு பாதுகாப்பாக செலுத்த கூடிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கான அடித்தளத்தை இந்த உலகின் முன்னணி ஆராய்ச்சி கொண்டிருக்கிறது," என்றார். https://www.bbc.com/tamil/articles/cgrx7j8l54no
  20. யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு! By T. SARANYA 09 NOV, 2022 | 04:17 PM ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139560
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.