Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?! சிங்கலவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன கலவரங்கள், முஸ்லிம்கள் மீது நட்திய தாக்குதல்கள், தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதியால் ஒடுக்கி ஒரு பகுதி தமிழர்கள் மீது நடத்தும் சாதி கலவரங்களை எல்லாம் முள்ளிவாய்கால் பேரழிவேடு ஒப்பிட முடியாது. இது இரு தரப்பு கொடிய இராணுவ யுத்தம். இன்னும் பல வருடங்களாகியும் காணாமல் போன தமது உறவுகளை தேடி தமிழர்கள் அலைகிறார்கள். கண்ணி வெடி அகற்றும் முயற்சி இன்னும் நடைபெறுகின்றது.
  2. ஓம் சிலோவேனியா போர்ச்சுகல் விளையாட்டு முடிவடைந்த போது 0 - 0, மேலும் 30 நிமிடங்கள் நீடிக்கபட்டும் 0 - 0. பின்பு பெனால்டியி சர்ந்தர்பம் கொடுக்கபட்டு போத்துக்கல் 3 - 0 சிலோவேனியா பிரான்ஸ் 1 - 0 பெல்ஜியம்
  3. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவன் இறக்கும்போதுதான் தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள் ] முகநூல் ருவிட்டரில் இப்படி எல்லாம் வந்துள்ளதாக நானும் கேள்விபட்டேன். தமிழ் மக்களின் சாபக்கேடு தொலைந்தது தொலைந்தது சனியன் இறைவனுக்கு நன்றி.தமிழனுக்கு இனி விடிவுகாலம் தான். இது பொது மக்கள் கருத்தல்ல. இது பற்றி இலங்கை அனுபவம் கொண்ட ஒரு பெரியவர் சொன்னார் சம்பந்தன் அய்யா ஒரு மோசமானவர் என்று காட்டுவதற்கு திட்டமிட்டு சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இலங்கை இந்தியா தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே சொல்லியுள்ளனர். முகநூல் ருவிட்டரை பார்த்தால் சீமான் தான் திமுக அதிமுக எல்லாம் கிட்டவும் நெருங்க முடியாத தமிழ்நாட்டு முதல்வர்.
  4. 😂 இறந்தவர்களை நிந்திப்பது தமிழ் பாரம்பரியம் இல்லை பதிலுக்கு இல்லாததை எல்லாம் சொல்லி புகழ வேண்டும் என்பார்கள். அதன்படி புலிகள் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவையே இறந்த போது அஞ்சலி செலுத்தி புகழ்ந்தார்கள்.இப்போது அந்த தமிழ் பாரம்பரியம் என்னானது என்பது தெரியவில்லை. உங்கள் கருத்தை படித்துவிட்டு அவர் இறுதிவரை எவ்வாறு தான் செயற்பட்டார் என்று குழம்பினேன் ஜஸ்டின் அண்ணாவின் கருத்தில் இருந்து தெளிவு கிடைத்தது. "உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். "
  5. துரோகி பட்டம் வீட்டு அலுமாரி நிறைய அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எடுத்து தாராளமாக வழங்குவார்கள்.
  6. உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂 இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.
  7. இங்கிலாந்தும் இன்றைக்கு வெளியயே போக இல்லை 😄 கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து 2 - 1 சிலோவாக்கியா இது வரை ஸ்பெயின் 1 - 1 யோர்ஜியா
  8. தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...! தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி கோஷான் சே யாழ்களத்தில் தமிழரசு கட்சி தலைவரன இவர் தமிழ் பொது வேட்பாளர் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றாரே என்று காரசாரமாக சாடி இருந்தார்.அதை இவர் படித்து விட்டு ஏதாவது சொல்லுவோம் என்றுவிட்டு இப்படி சொல்கிறார். இனி எதிர்காலத்தில் இலங்கை ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படியான சந்தர்ப்பம் வரும் 😂
  9. 16 அணிகளின் சுற்றில் சுவிஸ் 2 - 0 இத்தாலி யேர்மனி 2 - 0 டென்மார்க் சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".
  10. இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள் தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  11. நேரடி கொள்ளை. நாங்கள் இலங்கைகக்கு மீன் கொள்ளையடிக்க இலங்கையின் தமிழர்களின் பிரதேசங்களுக்கு வருகின்ற போது இலங்கையில் இருந்து எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று உறுதியாக தமிழ்நாட்டு மீனவர்களும் திமுக தொடங்கி சீமான் கட்சிவரை உறுதியாக செயல்படுகின்ற போது தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசி தான் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பது வளவன் சொன்னது போன்று தமிழ்நாட்டு மீனவர்கள் நெடுந்தீவு மணற்காடு பருத்திதுறை பொலிகண்டிகாங்கேசன்துறை தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு பியரும் குடித்து வலைகளை உலர்த்திவிட்டு புத்துணர்வு பெற்று சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி மகிழ்ச்சியாக புறப்படுவார்கள்.. அவர்கள் பேச்சு வார்த்தையில் சொன்னார்களாம் கொள்ளையடிக்க நாங்கள் வருகின்ற போது கண்டுகொள்ள கூடாது.
  12. ஈழ தமிழ் மீனவர் தலைவர்கள் இலங்கை கடற்படை வீரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவருடைய ஊருக்கு சென்றுள்ளனராம்
  13. இரண்டாம் தலைமுறை கூட அப்படியான எண்ணங்கள் வைத்திருப்பை ஏற்று கொள்ள முடியாது.
  14. ஈழத்தமிழர்கள் எங்கடை ஆக்கள் என்ற சொல்லை சாதியை குறிப்பிட பாவிக்கின்றனரா.அப்படி இல்லை. மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்கள் சாதாணரமாக பாவித்து கேட்க கூடிய சொல் எங்கடை ஆக்கள். எங்கடை ஆக்கள் கடையில் உணவு வகை வாங்கும் போது முடிவு திகதி பற்றி அக்கறை கொள்வதில்லை. எங்கடை ஆக்கள் இலங்கை கோவில் திருவிழாவுக்கு இங்கே விரதம் இருப்பார்கள் இப்படி எங்கடை ஆக்கள் என்று அவர்கள் சொல்வது இலங்கையில் இருந்து மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழத்தமிழர்களை தான்.
  15. இது அவர்கள் ஏற்கெனவே சுற்று 16 க்கு என்று திட்டம் தாயாரித்து வைத்ததுவிட்டனர். A குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் C குறுப்பில் இரண்டாவதாக வருகின்ற அணிக்கும் போட்டி C குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் E குறுப்பில் மூன்றாவதாக வருகின்ற அணிக்கும் போட்டி. நடைபெறும். இதுவரை நடந்த விளையாட்டின் அடிப்படையில் A குறுப்பில் யேர்மனி முதலாவதாகவும், C குறுப்பில் இங்கிலாந்து முதலாவதாகவும் டென்மார்க் இரண்டாவதாகவும், E குறுப்பில் சிலோவாக்கியா மூன்றானதாகவும் வந்துள்ளன.
  16. இனி சுற்று 16 க்கு 29 யூன் 2024 சுவிஸ் - இத்தாலி யேர்மனி - டென்மார்க் 30 யூன் 2024 இங்கிலாந்து - சிலோவாக்கியா ஸ்பெயின் - யோர்ஜியா 1 யூலாய் 2024 பிரான்ஸ் - பெல்ஜியம் போத்துக்கல் - சிலோவேனியா 2 யூலாய் 2024 ருமேனியா - நெதர்லண்ட் ஒஸ்றியா - துருக்கி
  17. ✅ பேருந்தின் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தபட்ட போது முக்கோண எச்சரிக்கை வைத்திருந்தாலுமே லொறி சாரதி வந்து மோதி தான் இருப்பார்.
  18. நான் பிரபா தந்த அட்டவணையை பின்பற்றி விட்டேன்.😄 - June 26, 2024: Denmark vs Serbia, Munich [12:30 AM IST] ❎ - June 26, 2024: England vs Slovenia, Cologne [12:30 AM IST] ❎ இன்று விளையாடுபவை சிலோவாக்கியா 1 - 1 ருமேனியா உக்ரேன் 0 - 0 பெல்ஜியம் யோர்ஜியா 2 - 0 போத்துக்கல் செக்கியா 1 - 2 துருக்கி
  19. இன்று உக்ரேன் பெல்ஜியத்துடன் விளையாடுகின்றது. மற்றும் சிலோவாக்கியா - ருமேனியா டென்மார்க் - செர்பியா இங்கிலாந்து - லோவேனியாவும் இன்று விளையாடுகின்றன.
  20. ம்....தமிழ் நாடு போன்று கள்ள சாராயம் குடித்து இலங்கையில் மக்கள் இறந்து நான் கேள்விபடவில்லை. இன்னொன்று கவனித்தீர்களா தமிழ்நாட்டில் மது அருந்தாமல் இருப்பது என்று ஒன்று அவர்களுக்கு தெரியாது. அங்கே உள்ள அரசியல்வாதிகள் தொடங்கி மக்கள் வரை மது அருந்தாமல் இருப்பது என்றால் மதுவிலக்கு வேண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக. இலங்கையில் தமிழ் அரசியல்வாதிள் சிங்கல அரசியல்வாதிகள் மக்கள் யாருமே மதுவிலக்கு பற்றி பேசுவதே இல்லை. மேற்குலக நாடுகள் போன்று
  21. நீங்கள் சொன்ன மாதிரி தான் துருக்கியும். சிறுபகுதிதான் ஜரோப்பாவில் மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் அந்த சிறுபகுதியை சாட்டாக வைத்து நானும் யுரோப் தான் என்று துருக்கி😄
  22. ரஷ்ய அணிக்கு ஏற்கெனவே ஐரோப்பிய யுனியன் கால்பந்து கூட்டமைப்பு உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக தடைவிதித்துள்ளது. அடுத்த வருடம் சுவிஸ்சில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி 2025 ல் தகுதி பெறுகின்ற வாய்ப்பை ரஷ்யா இழந்துவிட்டது.
  23. அதை தானே சாதி முத்திரை குத்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அங்கே என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது) மேலே தெரிவிக்கபட்ட கருத்து போல் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் நடைமுறைபடுத்துவதே சரியான தீர்வு
  24. தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன் 2 -1 வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின் போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள் "நன்றி யேர்மனி " என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.