தெரிந்த ஒருவர் (முன்னாள் போராளி) கண்டி வீதியில் கோழிகள் விற்பதை தற்செயலாக காண முடிந்தது. அடையாளம் காண முடியவில்லை. ஓட்டோ நண்பர் தான் அவர் யார் என சொன்ன பின் தான் தெரிந்தது யார் என்று. அவரிடம் சில கோழிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வரும்படி கூறி இருந்தேன். ஓட்டோ காரன் என்னை பார்த்து அப்பாவிடம்(எனது) உதை வாங்க போகிறீர்கள் என்றார். அன்று பின்னேரம் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு உணவும் கொடுத்து என்னாலான உதவியும் செய்து அனுப்பி இருந்தேன். வீட்டில் பேச்சுக்கு குறைவில்லை. உதவி செய்வது பறவாயில்லை. நீ போய் விடுவாய். புலனாய்வு வந்து எங்களை துளைத்து எடுத்து விடுவார்கள் என்றார்கள். நிலைமை அங்கு அப்படி உள்ளது.
பி.குறிப்பு: அப்போராளிக்கு வலது கண்ணும், வலது முன் கையும் பறி போயிருந்தது.
நன்றி தனி. வேறு நாட்டுக்கு போகிறீர்களா??