Everything posted by Justin
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா? யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை, வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன். மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?
-
சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
ம்..தயிர் றைத்தா என்பது இலங்கையின் பாரம்பரிய உணவா? இன்று தான் கேள்விப் படுகிறேன். சமைத்த தம்பிக்கும் தெரிந்திருக்காதென நினைக்கிறேன்😂. https://pacificties.org/im-sri-lankan-oh-youre-basically-indian/
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இலங்கையின் IMF வழியிலான பொருளாதார மீட்சியை அனுர திரும்பவும் பாதாள லெவலுக்கு இறக்கினால், தமிழர்களுக்கு ஒரு பாதிப்பும் வராதென்கிறீர்களா? கடந்து போன பொருளாதாரச் சரிவில் வடக்கு கிழக்கில் ஒரு பாதிப்பும் இருக்கவில்லையா? எனவே, ஒன்றுக்கும் பயனில்லாத "சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல்" என்ற ஒரு விடயம் ஒரு பக்கம். அனுர போன்ற ஒருவர் வந்து எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் ஆபத்து மறு புறம். இது 2004 இல் தேர்தல் பகிஷ்கரிப்பினால் மகிந்த பதவிக்கு வந்து தமிழர்களின் தலைவிதியை மாற்ற வழி சமைத்த "இராசதந்திரம்" போலல்லவா தெரிகிறது?
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன். தமிழ் வேட்பாளருக்கு தமிழரின் வாக்குகள்: உலகிற்கு எம் நிலைப் பாட்டை அறிவித்தல். இது moot point, பயன் மிகுந்த ஒரு விளைவாக எனக்குத் தெரியவில்லை. மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
பாவனையில் இருந்து விலகும் ஒரு தடுப்பூசிக்கு ஆதரவு அவசியமில்லையென்றாலும், இந்த தடுப்பூசி மீது வழக்குப் போட்டிருக்கும் குழுவின் நோக்கத்தைச் சுட்டிக் காட்ட இதை எழுத வேண்டியிருக்கிறது. மேலே "ஊசியால் பாதிக்கப் பட்டேன்" என்று கூறும் நபரின் வழக்கறிஞரின் கூற்று, கீழே தடுப்பூசி பாவனைக்கு வந்த போதே வெளியிடப் பட்ட product insert இன் இணைப்பு: https://www.ema.europa.eu/en/documents/product-information/vaxzevria-previously-covid-19-vaccine-astrazeneca-epar-product-information_en.pdf பக்கம் 4 இல் coagulation disorders என்பதன் கீழ், TTS எச்சரிக்கை வழங்கப் பட்டிருக்கிறது. பிறகெப்படி "AZ முதன் முறையாக இப்போது தான் ஒத்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்கள்? இப்படியான "அறிவுக் கோமாவில்" இருக்கும் கட்சிக் காரர்களை ஒன்று திரட்டி வழக்குப் போட்டு மருந்துக் கம்பனிகளிடம் பணம் சுருட்ட அலையும் வழக்கறிஞர்களை அமெரிக்காவில் ambulance-chasing வக்கீல் என்று அழைப்பர். அப்படிப் பட்ட ஒரு கேஸ் இது. என் அபிப்பிராயம், இவர்கள் போன்ற சட்ட துஷ்பிரயோகம் செய்வோரை AZ நேரடியாக வழக்கில் எதிர் கொண்டு, தோற்கடித்து சில மில்லியன் பவுண்ஸ் வழக்குச் செலவை உருவி விட்டு தெருவில் விட வேண்டும். ஆனால், கம்பனிப் பெயர் கெட்டு விடுமென்பதால் அப்படிச் செய்யாமல் தவிர்ப்பார்கள், சமரசமாகப் போவார்கள். இந்த ஊக்கத்தில் இன்னும் கள்ள லோயர் குழுக்கள் கிளம்பி அடுத்த வக்சீன் கம்பனிகளைக் குறி வைக்கும்.
-
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இந்தியன் எக்ஸ்ப்றஸ் போன்ற இந்திய ஊடகங்களில் இருந்து இந்த செய்தியைப் பிரதி செய்து போட்டிருக்கின்றன. இந்திய ஊடகங்களில் "பக்க விளைவை இப்போது தான் AZ ஒப்புக் கொண்டிருப்பது போலவும், அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும்" எழுதுகிறார்கள்😂. இந்த AZ Vaccine பக்கவிளைவுகள் பற்றி யாழிலேயே விவாதித்த பழைய திரிகள் இருக்கின்றன. அரிதான குருதியுறையும் பக்க விளைவை முதலில் கண்டறிந்து வெளியிட்டதே AZ இன் கண்காணிப்பு சிஸ்ரம் தான். அதன் பின்னரும், இது வரையில் இளம் பெண்கள் தவிர்த்த ஏனையோரில் இந்த தடுப்பூசி பாவிக்கப் பட்டே வந்தது. இப்போதுள்ள பிரச்சினை, AZ தடுப்பூசி ஒரிஜினலாக தயாரிக்கப் பட்ட வைரசை விட திரிபடைந்த வைரசு தான் இப்போது பரவி வருகிறது. ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் போல உடனடியாக இந்த AZ தடுப்பூசியை மீள வடிவமைக்க முடியாது. எனவே, பாவனையும் குறைந்து விட்டது. உற்பத்தியும் நிறுத்தப் படுகிறது.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
அஞ்சலிகள். மத்திய கல்லூரிப் பழைய மாணவர். இறுதிக் காலத்தில் இணக்க அரசியல் செய்யும் ஒரு அணியில் இருந்தார் எனவும் அறிந்தேன்.
-
யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு!
இதய சத்திர சிகிச்சையின் போது இரு குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எங்கும் கேள்விப் படாத நடைமுறையாக இருக்கிறதே?
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம் அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?). இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதை பாஞ் செய்ததாக எழுதவில்லை, ஆனால் இலங்கையில் இறங்கியதும் நடை உடை பாவனையில் உள்ளூர் காரர் போல மாறி "ஜோதியில்" கலந்து விடா விட்டால் இது போன்ற பிரச்சினைகள் வரலாம். பல வருடங்கள் முன்பு நானும் என் ஐரோப்பாவில் வசிக்கும் அண்ணரும் ஊர் போனோம். அவர் கடைக்கு மீன் வாங்கப் போனால் ஒரு கிராமத்திற்கே தேவையான கடலுணவுகளை தலையில் கட்டி அனுப்பி விடுவார்கள் மீன் வியாபாரிகள்😂. உடைகளை அவர் மாற்றிக் கொள்ளவேயில்லை, அது தான் காட்டிக் கொடுத்திருக்கிறது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இது வரை, இந்த மேற்கு சார்ந்த ஊடகங்கள் பொய்" என்ற "ரிபீட் பல்லவியைத்" தாண்டி, அந்த தரவுகளை நீங்கள் மறுத்து எந்த சான்றையும் தந்ததை நான் காணவில்லையே? இனிச் செய்வீர்களா? எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு உரையாடல் சந்தர்ப்பத்தில் உங்கள் கையை (handle) ப் பிடித்து அழைக்க எனக்கு அனுமதி இருக்கிறதா? அறியத் தாருங்கள்😎!
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்! பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி, இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அப்படியெதுவும் நடக்காது😂. இஸ்ரேலும், ஈரானும் என்னைப் பொறுத்த வரையில் புத்தி சாலிகள் (ரஷ்யாவை விட). துலங்கல் செய்யாமல் இருந்து தவறான சமிக்ஞையைக் கொடுக்காமல், பொருத்தமான எதிர்வினையை ஆற்றி விட்டு அடங்கியிருக்கிறார்கள். இனி proxy யுத்த முனைக்குத் திரும்பி விடுவர் இரு தரப்பும்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி. ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஏனைய கருத்துக்களில் மறுக்க எதுவும் இல்லை. ஆனால், ஸ்திரத் தன்மை இல்லாமல் இருப்பதை அனேகமான மேற்குலக நாடுகள் விரும்புவதில்லை. தங்கள் நலனுக்காக பல நாடுகளில் மேற்குலகம் ஸ்திரமின்மையை ஊக்குவித்தமை பனிப்போர் காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக் ஒரு அமெரிக்க நிர்வாகத்தின் பெரும் முன் யோசனையற்ற தவறு. ஆப்கானிஸ்தான் நேட்டோ போயிருக்க வேண்டிய இடம் தான், அமெரிக்க படைகள் அங்கே நடந்து கொண்ட விதம் தவறானாலும். சிரியாவின் ஸ்திரமின்மை - தோற்றுவாயோ, தற்கால நிலையோ- மேற்கின் முழுத்தவறல்ல. இது என் கருத்து. (நீங்கள் மட்டும் எழுதிக் கொண்டிருக்க எனக்கு லாங்லியில் இருந்து போனைப் போட்டுத் திட்டுறாங்கள், எனவே நானும் எழுத வேண்டியதாயிற்று😎!)
-
ஆமையும் தமிழனும்....
இவ்வளவு "நீண்ட" வாதப் பிரதி வாதம் ஒரு நகைச்சுவைப் பதிவை விளங்கிக் கொள்ள அவசியமாக இருந்திருக்கிறது என்பதைக் காணும் போது, உங்களிடம் இனி ஜோக்கே சொல்லக் கூடாதென பலர் இங்கே சுய குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர் என நம்புகிறேன்😂. "சிரிக்க சிறக்க "வில் இணைத்தால் இது போன்ற திரிகள் அகற்றப் படாதென அவர் அறிந்திருக்கிறார்😎. ஆனால், இணைத்ததன் நோக்கம் நகைச்சுவை தானா எனக் கண்டறிவது கடினம்!