Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7216
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. பரீட்சை மண்டப வசலில் கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் மாப்பிள்ளையின் படத்தைப் போட்டால்தான் நிலமையை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.
  2. அதானியிடமும் ஒரு வார்த்தை கேட்பது நல்லது. 😂 பசுமை மின்சக்தியில் அதானியின் முத்த முதலீடு ஒரு பில்லியன் டொலர்களைத் தாண்டுகிறது. ரஸ்யாவின் 110 மெகாவாட் அணு மின் நிலையம் ஒன்று அமைக்க ஏறத்தாள 30 மில்லியன் டொலர் ஆகும். இது தவிர அதற்கான எரிபொருள், அணுக் கழிவுச் சேமிப்பு, பராமரிப்பு என்று ஏராளமான செலவு உண்டு.
  3. இலங்கை அரசாங்கத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் செய்தி. இந்த நிலையிலும் சிங்களவரின் இறுமாப்புக் குறையவில்லை.
  4. தனிமடலிலும் இதே மாதிரியான பதிலைத்தான் உங்களுக்குத் தந்திருந்தேன். விதண்டாவிதமாக எழுதிவிட்டு அதற்காக வாதிடும் உங்களுடன் தனிமடலில் உரையாடுவது நேர விரயம் என்பதால் அதற்கு மேல் பதில் தரவில்லை. நேரடியாகச் சொல்வதானால் பொழுதுபோக்குத் திரிகள் தவிர்த்து ஏனையவற்றில் விதண்டாவாதக் கருத்துகளும் வீண் புலம்பல்களும் யாழின் வளர்ச்சிக்குப் பாதகமானவை. அவை தொடர்ந்தும் நீக்கப்படும்.
  5. கபிதான், நீங்கள் இத் திரியில் முதலாவதாக எழுதிய கருத்து தவிர ஏனைய 5 கருத்துகளும் திரிக்குத் தேவையில்லாத உரையாடல்கள். இது போன்ற கருத்துகள் யாழுக்கு அவசியமற்றவை என்பதை நன்கு தெரிந்துகொண்டே எழுதுகிறீர்கள். ஆக்கபூர்வமாக நீங்கள் எழுதும் (அப்படி ஏதாவது எழுதியிருந்தால்) எந்தக் கருத்தும் நீக்கப்பட்ட மாட்டாது.
  6. மொத்த அறிவையும் கறுப்புப் பட்டியலுக்குள் அடக்காமல் வெளியில் வந்து தேடிப் பாருங்கள். 🙂 https://economictimes.indiatimes.com/topic/russian-rouble-ruble-news
  7. அண்மைக் காலமாக போதைப்பொருள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அல்லது அதன் பாவனையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே செய்தி ஊடகங்களில் வரும் என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்தபோது காணக் கூடியதாக இருந்தது. மற்றும்படி யாழ் ஊடகங்கள் பெரிதாக இது பற்றி எழுதுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வாசித்துவிட்டு இது சிங்கள அரசாங்கத்தினதும் இராணுவத்தினரினதும் திட்டமிட்ட தமிழ் சமுதாய அழிப்பு என்று கூறிவிட்டுக் கடந்து போனோம். இக் கருத்தில் முற்றுமுழுதான உண்மை இல்லை. போதைப் பாவனை தமிழர் பகுதியெங்கும் பரவிக் கொண்டே செல்கிறது. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனையைப் பழக்குவது, விற்பனை செய்வது யார் போன்ற தகவல்கள் பலருக்கும் தெரியும். பல ஊர்களில் இதற்குப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என கட்டமைப்புகளும் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது விதத்தில் ஒரு இளைஞர் குழு மறைமுகமாக இயங்கும். அல்லது மிகப் பெரிய குழு ஒன்றின் கிளை இருக்கும். இளைஞர்களுக்கு வேண்டியது ஒரு ‘கெத்து’. ஏதாவது ஒரு விததில் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத சில இளைஞர்களுக்கு அது இக் குழுக்களில் இணைவதால் கிடைக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நேரடியாகக் கைநீட்டுவது ஆதாரமில்லாத விதத்தில் அவதூறு செய்வதாக ஆகலாம் என்பதால் இதற்குமேல் வெளிப்படையாக இது பற்றி விவாதிக்க முடியாது. இதை எழுதுவதன் நோக்கம் குற்றவாளிகளைத் தேடித் தண்டிக்க வேண்டும் என்பதல்ல. அது முடியாத காரியம். ஆகவே இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று விவாதிக்கவே. சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை. இது பற்றித் தேடியபோது அருண் சித்தார்த்தின் சிவில் அமைப்புத்தான் கூகிளில் முன்னே வருகிறது. நான் நினைக்கிறேன், பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் கவனத்தைத் திருப்பலாம் என்று. உங்கள் கருத்து என்ன ? (திரியை நாற்சந்தியில் ஆரம்பிக்கிறேன். வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்)
  8. முதலில் தெரிய வேண்டியது இந்தப் பகிரங்கக் கோரிக்கையை விட்டது ரணிலுக்குத் தெரியுமா என்பது. தமிழ் அரசியல் வாதிகளின் வீர முழக்கங்கள் பல வீரகேசரியுடன் நின்றுவிடும்.
  9. ரணில் புலம்பெயர்ந்த தமிழர்களை நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். எமது தமிழ் அரசியல்வாதிகள் செய்ய மறந்த வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்று. புலம்பெயர்ந்த தமிழரின் முதலீடு தமிழர் பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சம். வெளிநாட்டவர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போராட வேண்டியவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே. இதனைத் தவறவிட்டதால் முதலீட்டாளர்கள் சிங்க்களவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  10. இறுதிப் போரில் மரணித்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்.
  11. இங்கு ஒருவர் தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டு விடுமுறையில் ஓடிவிட்டார். நின்றிருந்தால் துவைத்துக் காயப் போட்டிருப்பார்கள். 🤣
  12. புலிகளின் அரசியல் தலைமைக்கு நீங்கள் பாடம் எடுக்க முடியாமல் போனது எமது துரதிஸ்டமே. நான் நினைக்கிறேன், நான் மேற்கோள் காட்டி எழுதிய கருத்துக்குப் பதில் எழுத முடியாமல் வேறொரு கிளையப் பிடித்துத் திரியைத் திசை திருப்புகிறீர்கள். இந்தியாவோடு சேர்ந்து ஐநாவில் தமிழர்களுக்குக் கொஞ்சமேனும் ஆதரவாகக் கொண்டுவரும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வாதாடி முறியடிப்பது யார் ? 🤣
  13. இவை நீங்கள் எழுதியவைதானே ? உங்களாலேயே விளக்க முடியவில்லையா ? ஒரு விடயத்தை நக்கலடிப்பதாக இருந்தால் அதை மறுதலிக்கும் கருத்து உங்களிடம் இருக்க வேண்டும். மீண்டும் ஒரு தடவை, யாழில் எழுதுவது குழப்பம் விளைவிக்கவே என்று கூறப் போகிறீர்களா ?
  14. நிச்சயமாக. கல்லறையை அவமதித்தது கேவலமானது. ஆனால் இந்தப் பெண்ணின் நோக்கம் கல்லறையை அவமதிப்பதாக என்க்குத் தோன்றவில்லை. அப்படியானால் யாருக்கும் தெரியாமல் கல்லறையில் கிறுக்கியிருக்கலாம். சுதந்திரமான பேச்சுரிமை மறுக்கப்படும் நாட்டில் தைரியமாக முன்வந்து தான் சொல்லவேண்டியதை உலகிற்குத் தலைநிமிர்ந்து கூறிவிட்டார். ரஸ்யாவில் பலர் மௌனமாக தமக்குள்ளேயே இவரைப் பாராட்டியிருப்பார்கள்.
  15. மனிதாபிமானமா ? இதைப் பற்றி நான் இங்கு எழுதவேயில்லை 🤣 கட்டுரை களநிலமை பற்றியது. நான் எழுதியதில் எங்கு யதார்த்தப் பிழை என்று நீங்கள் வாதிடுங்கள். உங்கள் அநேகமான கருத்துக்களில் கேள்விகள் மட்டுமே உள்ளன. யாராவது பதில் எழுதினாலும் அதனை வாசிப்பதில்லை போலவே தோன்றும். உங்களுக்கு உலக அரசியல் தெரியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 😎
  16. பிரெஞ்சுக் காரர்கள் எந்த உணவை உண்டாலும் அருகில் ஒரு துண்டு பாண் இருக்கும். இடையிடையே பாண் துண்டுகளையும் சுவைப்பார்கள். சாப்பிட்டு முடியும்போது இறுதியாக உள்ள பாண்துண்டால் கோப்பையை ஒற்றி வழித்துத் துடைத்து ஒன்றும் மீதம் இல்லாதவாறு சாப்பிட்டு விடுவார்கள். 😀 5 - 6 வருடங்களுக்கு முன்னர் அடையார் கடை எனப்படும் இரவில் அதிக நேரம் திறந்திருக்கும் சிறு கடைகளை எம்மவர்கள் அல்ஜீரியர்களிடமிருந்து வாங்க வாங்கத் தொடங்கினார்கள். இன்று பரிசையும் பரிசைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல நூற்றுக் கணக்கான கடைகளில் ஏறத்தாள முழுவதையும் வாங்கிவிட்டனர். தற்போது பாண் கடைகளைக் குறிவைத்து வருகின்றனர். இது சுலபமானது அல்ல. இங்கு வேலை செய்பவர்களில் சிலருக்காவது டிப்ளோமா தகுதி இருக்க வேண்டும். மற்றும் ஏராளமான தரக் கட்டுப்பாடுகளும் உண்டு. தமிழர்களின் இவ்வாறான முன்னேற்றம் பெருமைக்குரியது.
  17. விசேட இராணுவ ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த ரஸ்யா இப்போது செய்வது தற்காப்புப் போர் (பிழைத்துப் போன நிலமை). உக்ரெயின் படைகள் தாக்கும் என்ற அச்சத்தில் 100 கிமீ நீளத்துக்கும் அதிகமான எல்லையில் தடுப்பரண்களையும் குழிகளையும் கிண்டி வருகிறது. ரஸ்யா விலகிச் சென்ற இடம் என்றால் என்ன ? ரஸ்யாவின் நோக்கம் ஒன்றுகூட நிறைவேறாமல் தனது பல்லாயிரம் இராணுவத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் இழந்து கைப்பற்றிய பகுதிகளை உக்ரெயினுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததா ? 😂 9 மாதங்களாக முயன்றும் பாக்மூத் நகரை ரஸ்யா கைப்பற்ற முடியாமல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உக்கிரமான சண்டை இங்குதான் கடந்த 4 மாதமாக நடைபெறுகிறது. இந்த நகரம் புதினுக்கு கௌரவப் பிரச்சனை. ரஸ்யப் படையினர் தவிர புதிதாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 இலட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் இந்தக் களமுனைக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு வக்னரின் 40 000 கூலிப் படையினர் வேறு. நல்லதுதான். இல்லாவிட்டால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். உங்களையும் என்னையும் புதினையும் விட உக்ரெய்னியர்களுக்குப் போர் நிலமை நன்றாக விளங்கும். ஏனென்றால் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள் 😂
  18. கடந்த 24 மணித்தியாலத்துக்குள் நீங்கள் 7 தடவை விருப்பப்புள்ளி பாவித்துள்ளதாக அட்மின் தரவு தெரிவிக்கிறது.
  19. அமைப்பு ஒன்றின் மூலம் அதிக தூரம் போக முடியாது என்பதால்தான் தோல்வி கண்டன. ஒரு உதாரணம். யாழில் ஒவ்வொரு கிராமத்திலும் மரங்களுக்குக் கீழ் கல்லாக இருந்த கடவுள்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தால் கோபுரங்களின்கீழ் குடியேற்றப்பட்டுத் தேர் இழத்துத் திருவிழா காண்கின்றன. திருவிழா என்பது மதிப்பிழந்து தேர் இழுக்கவே மக்கள் போதாமல் உள்ள நிலமைக்கு வந்துள்ளது. இந்தப் பணத்தை வேறு வகையாகச் செலவழிக்கலாம் அல்லவா ? உதாரணம் : - வீடுகளில் தனிப்பட்ட மழை நீர் சேகரிப்பு - இளைஞர்களுக்குப் பொழது போக்கும் வசதிகளை உருவாக்குதல் - இயற்கை எரிவாயு உருவாக்குதல் போன்ற சிறு தொழில்நுட்ப அறிவூட்டல்கள் - காணி வசதி உள்ளவர்கள் தேனீ வளர்த்தல் இப்படி ஏராளம் உண்டு.
  20. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமல்ல. நான் குறிப்பிட்டது ஓரளவேனும் எம்மால் துளித் துளியாகவேனும் செய்யக் கூடியது.
  21. தற்போதைய நிலையில் ஈழத் தமிழருக்குத் தீர்வு ஒன்றை யாரும் (தமிழ் அரசியல் வாதிகள் அல்ல) பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தீர்வைப் பரிசாகத் தர வேண்டிய நிலை யாருக்கும் தற்போது கிடையாது. இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று மட்டும்தான். பொருளாதார அறிவியல் நீதியாக எம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் தமிழினத்தை இலங்கையில் தக்கவைப்பது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் ஈழத் தமிழரைச் சூழ்ந்துள்ள தடைகளிலிருந்து வெளியேற வேண்டுமானால் மதம் சாராத பகுத்தறிவுள்ள சமத்துவமான பொருளாதார வளர்ச்சியுள்ள சமுதாயத்தையே எதிர்பார்க்கிறேன். இவ்வாறான சமுதாயத்தால் தான் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த முடியும். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.
  22. சின்ன வித்தியாசம்தான். எதிரி புனைவு மகாவம்சத்தைப் பலப்படுத்த தொல்லியல் ஆராதங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். நாங்கள் எமது வரலாற்றைப் புனைவுக் கதைகளால் சோடிக்க முயல்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் தெளிவாக இருக்கிறேன். எமது அரசியல்வாதிகள் பயணிக்கும் பாதை வேறு. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இடையில் போட்டிக்குச் சிலை வைத்து விளையாடுவது, கடையடைப்புக்கு அழைப்பது, ஜெனீவா வலம் வருதல், அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி இடையிடையே உணர்ச்சிவசப்படுவது, தீர்வுத் திட்டம், 13, எல்லாமே கண்ணாமூச்சு விளையாட்டுகள். இதற்குள் இந்துத்துவா சிவபூமி என்று தேவையில்லாத உபாதைகள். இவை வெளிநாட்டில் உள்ள சிலருக்கு உற்சாகத்தைக் கொடுக்கலாம். எனக்கு இல்லை.
  23. ம். மறுபடியும் சில தமிழர்களை உசுப்பேற்றும் முகப்புத்தக புரட்டல். அதுவும் ஒருத்தர் ஏன் எதற்கு என்றே தெரியாமல் ஜனநாயகம் பற்றிப் புலம்புகிறார். 😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.