Everything posted by இணையவன்
-
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
ஈழத் தமிழர் வரலாற்று நிகழ்வுகளோடு இனிமையான தருணங்களையும் உள்வாங்கிக் கடந்து வந்த பாதையை அருமையாக எழுதியுள்ளீர்கள். நாம் திரும்பிப் போக முடியாத மனதில் ஆழமாகப் பதிந்த அந்த நினைவுகளை அசை போடுவது இனிமை.
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
மத போதகர்களும் சாமியார்களும் சேரும் அரசியல் கூட்டுகளில் முற்றாக நம்பிக்கையில்லை. பல்வேறுபட்ட மதங்களைப் பிரதிபலிப்பவர்களின் ஒற்றுமை என்பதே பொய்யானது.
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பற்றிக் கேள்விப்படவில்லை. இது ஏன் பயன்படுத்தப்படுகிறது ?
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இதனுள் வரும் என்று நினைக்கிறேன்.
-
சாமி சிறீ பாஞ்
பாஞ்ச், மீண்டும் நலமுடன் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்ன பிழை வருகிறது என்று சரியாகச் சொன்னால் சரி செய்யலாம். கடவுச் சொல்லைக் கீழுள்ள இணைப்பில் 'Forgot your password?' என்பதை அழுத்தி அவரது ஈமெயில் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். https://yarl.com/forum3/login/
-
சென்று வாருங்கள் அண்ணா!
ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
இனிமேல் இவ்வாறான இடங்களுக்கு வந்து போராடுவதற்கு அரசியல்வாதிகளுக்குப் பதிலாக மறவன்புலவு சச்சிதானந்தன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 🙂
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
இந்தச் செய்தியில் பிடித்த விடயம், 4 இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாக ஆணித்தரமாகத் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுதான்.
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
நிகழ்ச்சி நடத்தி காணிகளை விடுவிப்பதாக விளம்பரப் படுத்திவிட்டு உரிமையாளர்களுக்குக் காணியைப் பார்வையிட மட்டுமே அனுமதித்துள்ளனர். இரு போன்ற விடயங்களை அரச பதவிகளில் இருப்பவர்கள் மூலமாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புகளால் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. ஆனால் தமிழர்களுக்குத் தொடர்ச்சியான பிரச்சனைகள் உண்டு என்பது தொடர்ச்சியாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் இவை தமிழர்களின்மேல் இழைக்கப்பட்ட அடக்குமுறைக்கு வலிமையான ஆதாரங்களாகவும் இருக்கும். 55 ஆயிரம் சதுர அடி பகுதிக்குள் மட்டும் பயணிக்கத் தடையா அல்லது இந்தப் பகுதிக்குள் வெடிப்பொருள்கள் இருப்பதால் 234 ஏக்கர் நிலங்கள் முழுவதுக்கும் செல்லத் தடையா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 55 ஆயிரம் சதுர அடி என்பது இரண்டு ஏக்கருக்கும் குறைவானது.
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
நோர்வே அயர்லாந்து நாடுகளிலிருந்து இஸ்ரெயில் தனது தூதுவர்களைத் திருப்பியழைத்துள்ளது. 28 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் பலஸ்தீனை அங்கிகரிக்கப்படும் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்கும் அறிவிப்பு ஒன்றினை நோர்வே முன்னெடுக்க உள்ளது. இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக ஸ்பெயின் அயர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரிப்பதாக அறிவிக்க உள்ளன. இஸ்ரெயில் தனது கண்டனத்தை எக்ஸ் இல் தெரிவித்துள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் : https://www.ouest-france.fr/monde/palestine/guerre-israel-hamas-plusieurs-pays-europeens-vont-reconnaitre-lexistence-dun-etat-palestinien-bd808140-17fc-11ef-89e1-9d0ea397ae43
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
விளைச்சலை அதிகரிக்க பூச்சிநாசினிகளைப் பாவித்தார்கள். இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட விளைச்சல் குறைந்தது. இப்போது இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸில் தேனீ வளர்ப்பு பற்றி விளிப்புணர்வு செய்கிறார்கள். பரிஸில் நான் வேலை செய்யும் 5 மாடிக் கட்டடத்தின் உச்சியில் மொட்டைமாடியில் தேனீ வறர்க்கிறார்கள். வருடத்தில் இரண்டு தடவை இதிலிருந்து கிடைக்கும் தேனை அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்று பராமரிப்புச் செலவை ஈடு செய்கிறார்கள். எனக்கு இலவசமாக தேனீ வளர்ப்புப் பற்றிய செய்முறைப் பயிற்சி வழங்கினார்கள். இப்போது இங்கு தேனீக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆசியாவிலிருந்து வந்துள்ள தேனீ போல் தோற்றமுள்ள ஒரு வித குழவி ஆகும்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
போரின் வீச்சு குறையலாம். ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும்.
-
இந்த ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க எலோன் மஸ்க் இலங்கை வருகை?
ஸ்டார்லிங்க் பல சர்ச்சைகளை உண்டக்கியதால் ஐரோப்பாவில் இதற்குக் கணிசமான எதிர்ப்பு உள்ளது. எலன் மஸ்க் தான் விரும்பினால் ஒரு நட்டில் ஸ்டார்லிங்க் மூலம் இணையச் சேவைகளைச் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும் என்று நிரூபித்திருந்தார். ஐரோப்பா சொந்தமாக IRIS² என்ற செய்மதி இணைய வழங்கலை உருவாக்கி வருகிறது. இதனால் ஸ்டார்லிங்க் ஐரோப்பாவில் காலூன்றுவது கடினம். உலகை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியின் இன்னொரு அங்கம் ஸ்டார்லிங்க்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இது மட்டுமில்லை. ஒரு நாட்டின் அதிபர் பயணிக்கும் விமானத்தில் இரகசிய சமிக்ஞைகள் பாதுகாப்பு அணியுடன் இருக்கும். விபத்து ஏற்பட்டாலும் அதன் இடத்தையாவது காட்டும். அத்துடன் ஹெலிகொப்டரின் நகர்வுகள் கண்காணிக்கப்படும். இவருடன் சென்ற ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பத்திரமாக உள்ளன. 40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
மொழிபெயர்ப்புக்கு நன்றி ரஞ்சித். இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமைதான் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒரு பகுதி சிங்களவரையாவது சிந்திக்க வைக்கிறது. இது புதிய சிந்தனை அல்ல. விஜய குமாரதுங்க போன்றவர்களும் முன்னெடுத்ததுதான். இன்று இச் சிந்தனையானது தமிழர்களுடன் சமாதானமாகப் போனால் நாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவரும் முன்னேற்றமடையலாம் என்பதைச் சிங்களவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் உரிமைக்காகப் போரடியது முடிவுக்கு வந்து பல வருடங்களின் பின் சிங்களவர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுடன் எம்மை நோக்கி வரக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் போராட்டங்கள் மூலம் இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கலாம். இதற்கு முக்கிய இடைஞ்சலாக இருக்கப் போவது இலங்கையின் பௌத்த பீடங்கள் தான்.