Everything posted by நிழலி
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!
ரம்ப் சீனா மீது 145 வீதத்தில் இருந்து 245 வீதமாக வரியை உயர்த்தப் போவதாக கூறியுள்ளாரே தவிர, உயர்த்தி விட்டதாக நான் எந்த செய்தி தளத்திலும் வாசிக்கவில்லை. ஆனால், ஆதவன் மட்டும் 245 வீதத்துக்கு உயர்த்தி விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. வேறு எவருக்காகவது இதன் உறுதித்தன்மை தெரிந்தால் சொல்லவும்.
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
அப்பாவி சிறுவர்கள் பாலியல் வதைக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் வதைக்குள்ளாகிய சிறுவர்களின் உளவியலிலும், ஆரோக்கியத்திலும் ஏற்படும் தாக்கம் அகல நீண்ட காலம் எடுக்கும். சிலருக்கு அதுவே ஆறாத ரணமாக வாழ் நாள் பூராவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் அந்த சிறுவர்களைப் பற்றி பெரியளவில் அக்கறைப்படாமல், குற்றம் செய்த காமுகன் எந்த கட்சியில் இருந்தான், எந்த கட்சிக்காரன் அதை மறைத்தான் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். நாங்கள் வெறுக்கும் கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் இதனையே சாக்காக வைத்து தூற்றுகின்றோம். உண்மையான அக்கறை எமக்கு இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள். அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
தம் படம் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக, இளையராஜா வின் இசையை பயன்படுத்தி நன்றாக காசு சம்பாதித்து விட்டு, அதற்கான பங்கை கொடுக்காமல் விடுவது தான் திருட்டு. இவர்கள் கண்டிப்பாக உரிய முறையில் பணம் கொடுத்து அனுமதி பெற்று இருக்க வேண்டும். Music rights படி இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளில் இசையமைப்பாளருக்கே பாடலின் உரிமை சொந்தம். அத்துடன் ராயல்டி மூலம் பெறப்படும் பணம் பாடலை எழுதியவருக்கு, அதை வெளியிட்ட இசை நிறுவனத்துக்கு பகிரப்படும். IPRS நிறுவனம் இந்தியாவில் இதற்காகவே உள்ளது.
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
நாங்கள் கோயில்களில் மாதவிலக்கான பெண்களை தீட்டு என்ற சொல்லி அனுமதிக்க மறுத்துக் கொண்டு, இந்த தமிழக சம்பவத்தை பார்த்து கோபம் கொள்கின்றோம்.
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
அனுர எந்த மொழியில் கையொப்பம் இட்டு இருப்பார்?
-
நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
பொதுவாக பாம்புகள் தீண்டும் போது எதிரியை பயமுறுத்த தன் விசத்தை மேலோட்டாமாகவே உட் செலுத்தும். எதிரியிடம் மாட்டுப்பட்டு தப்பிக்க முடியாத சந்தர்ப்பங்களில் தான் முழு விசத்தையும் உட் செலுத்தும். குருக்கள், பாம்மை பிடித்து முறுக்கியிருக்கின்றார் போலிருக்கு. உடனடியாக சிசிச்சைக்கு போயிருந்தால் தப்பியிருப்பார்.
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
உண்மைதான் சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறை, பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றை சுற்றி வளைத்தும், சிவப்பு நிறம் தீட்டி ஆதரித்தும் நீங்கள் எழுதும் கருத்துகளை நீக்கியதும், நீங்கள் எழுதிய அவ்வாறான கருத்துகளுக்கு எதிராக எழுதிய கருத்துகளை நீங்கள் மறைக்குமாறு கேட்டும் அவற்றை மறைக்காமல் விட்டதும் உண்மைதான். ஏனெனில் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதை எக்காரணம் கொண்டும் நானோ அல்லது என்னைப் போன்றே நடந்து கொள்ளும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களோ அனுமதிக்கப் போவதில்லை. இனியும் அவ்வாறுதான் நடந்து கொள்வோம். அத்துடன் இந்த என் பதிலுக்கு பின்னூட்டம் இடுகின்றேன் என்ற ரீதியில் மீண்டும் சிறுமிகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் உங்கள் கருத்துகளை, சிந்தனையோட்டத்தை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் நீங்கள் பதில்கள் இட்டால், அவற்றையும் நீக்குவோம். சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றவர்களை நியாயப்படுத்துகின்ற கருத்துகளை எழுதும் நீங்கள் ஆதிக்க வெறி பற்றி எழுதுவதும் சாத்தான் ஓதும் வேதங்களில் ஒன்று தான். நன்றி
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.
-
பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
நான் இதை வாசித்த பிறகு, இனி சாகும் போது கூட 'இப்படியாகிவிடுமோ' என்று பயத்தில் சாகவேண்டி இருக்கப் போவது என்று யோசனையுடன் இருக்கின்றன். நிம்மதியா சாகக் கூட விட மாட்டார்கள் போல கிடக்கு...
-
கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை
பிரச்சனைகளுக்கு காரணம் சொல்ல தேசிய மக்கள் சக்திக்கு (ஜேவிபி இற்கு) விலங்குகள் வரிசைக்கட்டிக் கொண்டு வருகின்றன. முதலில் குரங்குகள், பிறகு தெரு நாய்கள், இப்ப முதலைகள் என்று வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன. நுளம்புகளும் தம் பங்குக்கு சிக்கன் குனியா, டெங்கு என்று அடுத்த வரிசையில் வந்து நிற்கின்றன. இவற்றை காரணம் காட்டியே 5 வருடங்களை ஓட்டி விடுவார்கள் போலிருக்கு. @putthan இந்த பக்கம் வரவும். வந்து இந்த இடதுசாரிகள் பற்றி நறுக்கென்று நாலு வார்த்தை எழுதுங்கோ,
-
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது
அண்மைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் லிபரல் 6 புள்ளிகள் கன்சர்வேட்டிவ்வை விட முன்னுக்கு நிற்பதாகவே காட்டுகின்றன. கன்சர்வேட்டிவ் கட்சி, கார்பன் Tax விடயத்தினை மட்டும் அதிகமாக தூக்கிப் பிடித்து கொண்டு இருந்தார்கள். கார்னே வந்த உடனே ஏப்ரல் ஒன்றில் இருந்து அதை நீக்குவதாக அறிவித்த பின் கன்சர்வேட்டிவ் இற்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. அதுவும் வரும் ஏப்ரல் முதலாம் திகதி, சனம் gas விலையில் ஏற்படப் போகும் சடுதியான விலை குறைவை கண்டபின், முதல் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடும் என நினைக்கின்றேன். இதை விட, லிபரல் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக காட்டும் எதிர்ப்பை விட கன்சர்வேட்டிவ் காட்டும் எதிர்ப்பு மிக குறைவு. இந்த விடயத்தில் அவர்கள் ஏற்கனவே தோற்று விட்டார்கள் என நினைக்கின்றேன். அத்துடன் வலதுசாரிகளுக்கு எதிரான மனநிலை ட்ரம்ப் அங்கு ஆட்சிக்கு வந்த பின் இங்கு அதிகரித்து, அதுவும் கன்சர்வேட்டிவ் இற்கு எதிரானதாக அமைந்துள்ளது. என்ன நடந்தாலும் நான் கன்சர்வேட்டிவ் இற்குத்தான் வாக்களிப்பேன். இங்கு சுற்றுலா மற்றும் மாணவர் வீசாவில் வந்தவர்களுக்கு குறுக்கு வழிகளில் இந்த தொழில் விசா எடுத்துக் கொடுப்பதன் மூலம் கடந்த சில வருடங்களில் பெருந்தொகை பணத்தை உழைத்த ஒரு கூட்டம் இங்கு உள்ளது. கனடிய அரசு குடியேற்ற விதிகள் மற்றும் மாணவர் வீசாக்களை இறுக்கிய பின், இவர்களின் வருமானம் குறைவடைந்தமையால் மாற்று குறுக்கு வழிகளை தேடுகின்றனர்.
-
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது
போகிற போக்கைப் பார்த்தால் கனேடியர்கள் போலி வீசாவில் இலங்கைக்கு ஓடி/பறந்து போகும் நிலையும் ஏற்படலாம். தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெல்லும் சாத்தியம் அதிகரிக்கின்றது, அதே நேரம் ட்ரம் பும் வரி விதிப்பில் பின்வாங்கப் போவதில்லை. கனடாவை காப்பாற்ற எவராலும் முடியாமல் போகப் போகுது.
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே சிற்றுண்டிகளினை விற்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம். 🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது. கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு கேட்டதற்கு.. 🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்." 🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது. 🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம். 🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு : 077 275 9799 வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்.. Copy post https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
சந்திரசேகரர் இன்று நேற்று அல்ல ஜேவிபி யில் இணைந்து, எனக்கு தெரிந்தே இவர் கடந்த 30 வருடங்களாக இருக்கின்றார். மலையக தமிழரான இவர் பல ஜேவிபி சார்பான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஜேவிபி ஒரு கடும் இனவாதக் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் தான் சங்குக்கு வாக்களிப்பதன் மூலம் ஜேவிபியிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ஈற்றில் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பர் என கடந்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து எழுதி வந்தேன். ஆனால் இன்று இவர் வடக்கில் செய்யும் பல விடயங்கள், முக்கியமாக இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார். இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் வெறுமனே சந்திரசேகரனை குறிப்பிட்டு திட்டுவது அவர் மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது. மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா? நன்றி
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
எனக்கும் இதே கேள்விதான். சிவப்பு புள்ளியை தவறுதலாக போட்டு விட்டார் என நினைத்தேன்.
-
பார்த்தீனியம்
அவரின் எழுத்தினூடக முதலில் அறிமுகமாகி, இப்போது ஒரு நல்ல நண்பியாகவும் உள்ளார் எனக்கு. அவர் முகனூலில் எழுதும் எழுத்துகள் / குறிப்புகள் கூட அருமையாக இருக்கும். நான் விரும்பி வாசிக்கும் நாவல்களில் / சிறுகதைகளில் பல ஈழத்து மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் யதார்த்தனின் நாவலான 'நகுலாத்தை' தான் நான் வாசித்த அனைத்து நாவல்களிலும் மிகவும் பிடித்த நாவல். முடிந்தால் வாசியுங்கள் அதை. எம் மண்ணில் இருக்கும் குல தெய்வ / பெண் தெய்வ வழிபாடு, வன்னி மண்ணில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் சில, இறுதிப் போர் போன்றவற்றின் பின்னனியில் எழுதப்பட்ட நாவல் அது. யாழிலும் அது பற்றிய குறிப்பை எழுதியிருந்தேன்.
-
பார்த்தீனியம்
இந்த பார்த்தீனியம் இந்திய படையால் அல்லவா யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது? ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி 'பார்த்தீனியம்' என்ற நாவலை, இந்திய படையின் வருகையையும், அவர்களின் அட்டூழியங்களையும் பின்புலத்தில் வைத்து படைத்துள்ளார். ஈழத்தமில் இலக்கியத்தில் பார்த்தீனியம் நாவலும் ஒரு சிறு வரலாற்று ஆவணம். தமிழ்நதி மிகச் சிறந்த ஈழத்து படைப்பாளிகளில் ஒருவர். அண்மையிலும் தங்க மயில்வாகனம் எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்
-
மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக, தொழில்முறை வழக்கறிஞராக இருந்தவருக்கு அரசியலமைப்பு சட்டமோ அல்லது அடிப்படை உரிமை தொடர்பான சட்டமோ தெரியாமல் இருந்திருக்கு. நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் இல்லை என்று அளித்த தீர்ப்பையாவது புரிந்து கொள்ளும் அறிவு இருக்கின்றதோ தெரியவில்லை.
-
இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!
ஆதவன் பூநகரியைத்தான் இப்படி பூனேரி, பூனாரி என்று குறிப்பிடுகின்றதா, அல்லது பூனாரி என்ற ஊர் மன்னாரில் உள்ளதா?
-
அவளைத்தொடுவானேன்....???
அவர் யாவும் கற்பனை அல்ல என்று சொல்லி கதையை முடித்து விட்டார். இப்ப நீங்கள் தொடரச் சொல்லி கேட்டதால், இது தான் சாக்கு என்று ஓடிப் போய் அவளை (மீண்டும்) தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய போறார்.
-
அவளைத்தொடுவானேன்....???
நேர்மையாக எழுதி உள்ளீர்கள். உங்கள் வாழ்வனுபவங்கள் பல பாடங்களை தந்து உள்ளன உங்களுக்கு என்பதை உங்கள் எழுத்து காட்டி நிற்கின்றன.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
ஸ்ஸப்பா.... இவற்றுக்கிடையில் என்ன வித்தியசமாம்?