Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 👉 https://www.facebook.com/watch/?v=1137664734195084👈 (அமெரிக்காவில் மோடி, டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு.) உள்நாட்டில் "ஹிந்தி படிங்கோ, ஹிந்தி படிங்கோ"னு சொல்ல வேண்டியது. வெளிநாட்டுக்கு போய் என்ன கேட்கிறாங்கனே தெரியாம, பதிலும் தெரியாம, கேள்வியும் புரியாம translators வச்சும் பயன் இல்லாம அப்பாவியா பேந்த பேந்த முழிச்சிட்டு இந்தியா வந்து நேருவையும், காந்தியையும், அம்பேத்கரையும் குறை சொல்ல வேண்டியது. காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லாம் ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலேயனை வெல்லவில்லை. அந்த காலத்திலேயே கப்பலில் வெளிநாட்டுக்கு சென்று, அன்றே படித்து பட்டம் பெற்று வட்ட மேஜை மாநாடுகளை நடத்தி வென்ற தலைவர்கள். சீனா அதிபரும் translators வைத்து இருப்பார். அவர் கெமிகல் engineer. அவர் doctor of law படித்தவரும் கூட. மொத்த Chinese cabinet ல் 75% PhD பட்டமோ, Techinical Masters முடித்தவர்கள். கெத்தா உட்காந்து அவிங்க சீன மொழியில் பேசினால் English ல் translation செய்த கதையும் உண்டு. நம்ம ஆளிடம் கேட்ட ஒரு கேள்விக்கு, இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன் என்கிறார் Trump. நம்ம கிட்ட இருக்கும் cabinet அப்படியா. கோமியம் விக்கிற specialist, மாட்டு hospital கட்டும் சாமியார்கள், குறி சொல்லும் ஜோசியர்கள், மயில் தனது கண்ணீர் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது என்கிற பிரபலம், நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்ற ஒரு uneducated bunch of people. படித்தவர்கள் பிரதமராக வருவது நம் நாட்டுக்கு மட்டுமல்ல அயல் நாட்டு கொள்கை- foreign policy மற்றும் trade negotiations-ல் வெல்ல வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். International arena-வில் கெத்தா இருக்கும். இதுல ஹிந்தியை வேற தூக்கிட்டு வந்து இந்தி படி , இந்தி படினு உருட்ட வேண்டியது. 56"சீ இன்னும் கூட பேட்டி கொடுக்காம இருக்க ஒரே காரணம் பதில் சொல்லத் தெரியாது என்கிறது மட்டுமல்லாமல், அவருக்கு கேள்விகளே புரியாது என்பதால் தான். இந்த ஒரே காரணத்தினால் தான் அக்சய் குமார் போன்றோருக்கு scripted பேட்டி கொடுக்கிறது, அதாவது கேள்வியும் நானே...அதற்கு பதிலும் நானே, இந்த கேள்விகளைத் தான் நீ கேட்க வேண்டும்! மும்மொழிக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பு தேவை இல்லாதது என்று நிரூபணம் ஆன தருணம், மோடியின் தற்போதைய அமெரிக்க பயணம். தமிழ், ஆங்கிலம் இரண்டே போதும் உலகையே வெல்லலாம். தமிழ்நாட்டின் பாதை தான் இந்தியாவுக்கு தேவை. Regional Language + English. #மும்மொழிக்கொள்கைதோல்வி #தமிழ் #தமிழ்நாடு N Deva 😂 🤣
  2. செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு! ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே குறித்த வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் எனவும், அவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில் உள்ள எல்ல பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார் எனவும், அந்த நேரத்தில் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி கீழே விழுந்துள்ளார் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1422131
  3. கட்டிய கணவனுக்கு... "ஐஸ்" கொடுத்து, பணிவிடை செய்யும் மனைவி கிடைப்பது, இறைவன் கொடுத்த வரம். 😂
  4. துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்! மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மகன் எல்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதேநேரம், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1422010
  5. நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: துப்பாக்கியை மறைக்க சட்டப் புத்தகத்தை பயன்படுத்திய சந்தேக நபர்! கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து ஆயுதத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ஆயுதம் கொண்டு வருவதற்கு சந்தேக நபர் சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு வந்துள்ளார். புதுக்கடை நீதிமன்றத்தின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தெரிவித்தார். இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற பிரதி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகலவை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை மற்றும் அதன் விளைவாக பொது பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422102
  6. கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்! கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டுள்ளார் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, செப்டம்பர் 13, 2023 அன்று, கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்படி, சந்தேக நபர் இன்று காலை புஸ்ஸா சிறைச்சாலையிலிருந்து கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அத்துடன் கணேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் முக்கிய போட்டியாளராவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் https://athavannews.com/2025/1422082
  7. கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு; பொலிஸார் வெளியிட்ட அறிக்கை! கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி போன்று வேடமணிந்து வந்த சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் அரச ஆரம்ப கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422076
  8. நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு! கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையின் போது, சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகளின் மேசையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், நாட்டிலேயே மிகவும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்த சம்பவம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. நேபாளத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி நாடு திரும்பியதும் கட்டுநாயக்க கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதாள உலக நபர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422063
  9. அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள ஒரு கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான டொல்பின்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், புதன்கிழமை (19) காலை நிலவரப்படி சுமார் 90 டொல்பின்கள் மாத்திரமே தற்சமயம் உயிருடன் உள்ள நிலையில், அவற்றை காப்பாற்றும் பணிகளில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் டொல்பின்கள் பொய் கொலைத் திமிங்கலம் (false killer whales) என்று நம்பப்படுகிறது, டாஸ்மேனியாவின் இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளில் இது போன்ற திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இதுவே முதல் முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொய் கொலைத் தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய டொல்பின் இனங்களில் ஒன்றாகும். மேலும் அவை 6 மீற்றர் வரை வளரக்கூடியவை. https://athavannews.com/2025/1422032
  10. அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.
  11. மறைந்திருந்து பார்க்கும், மர்மம் என்ன.... 😂
  12. நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு... 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. கறந்த பால் காம்பில் ஏறாது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?) 17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.) 18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான். (அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்). 19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம். 20. இறுகினால் களி. இளகினால் கூழ். 21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. (யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்) 22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு. (பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது) 23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது). 24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்). 25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். (நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.) 26. காற்றில்லாமல் தூசி பறக்காது. (நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி) 27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். (நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்). 28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. (துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?) 29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது. (பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி) 30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது. 31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான். (தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது. 32. வாங்குகிற கை அலுக்காது. (வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.) 33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும். (என்ன சாமர்த்தியம் பாருங்கள்!) 34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா? 35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு. 36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது. 37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி. 38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது. 39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான். 40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா? 41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்? 42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்? 43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. 44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன? 45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.
  13. சிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி கைது! மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை பெண்ணை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை பார்ப்பதற்காக வருகை தந்திருந்த மனைவியே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டுவந்திருந்த உணவுப் பொருளை சோதனையிட்ட போதே அதில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Athavan Newsசிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்...மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை பெண்ணை பொலிஸ...
  14. இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையிர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால், கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகள், மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய இந்திய மத்திய அரசாங்கமான பா.ஜ.க. அரசாங்கத்தை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆதரவினை வழங்கும்பொறுட்டு, அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும், காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1421951
  15. உக்ரேன் போர்; ரியாத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ரஷ்ய – அமெரிக்க அதிகாரிகள்! ரஷ்யா – அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள திரியா அரண்மனையில் கூடிய தூதுக்குழுக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் தலைமை தாங்கினர். ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் உடனிருந்தனர். அதேநேரத்தில், லாவ்ரோவ் கிரெம்ளினின் ரஷ்யாவின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரை பேச்சுவார்த்தைக்காக அழைத்து வந்தார். சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முஸயத் அல் அல்பன் ஆகியோர் கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் அவர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பில் உக்ரேனின் பிரதிநிதிகள் எவரும் பங்கெடுக்கவில்லை. இதனிடையே, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்களன்று, தனது நாடு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாவிட்டால் ரியாத்தில் எடுக்கப்படும் எந்த சமாதான உடன்பாட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறினார். ரஷ்யாவை தனிமைப்படுத்தும் அமெரிக்க கொள்கையை மாற்றியமைக்க ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இந்த சந்திப்பு அடையாளப்படுத்துகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான சந்திப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. கடந்த வாரம் ட்ரம்ப், உக்ரேன் மற்றும் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பார்வையை உயர்த்தியதுடன், போரை முடிவுக்கு கொண்டு வர இரு தலைவர்களுடனும் தெலைப்பேசியில் உரையாடினார். 2022 பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஜெலென்ஸ்கியும், புட்டினும் இதன்போது இணக்கம் வெளியிட்டிருந்தனர். Athavan Newsஉக்ரேன் போர்; ரியாத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ரஷ்ய...ரஷ்யா - அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்...
  16. கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்! டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக அவசரகால பணியாளர்களின் மீட்பு பணிகளுக்காக பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. விபத்தின் பின்னர் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் மாலை 5:42 மணிக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் துரதிர்ஷ்வசமான சம்பவத்தினால் 18 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டது. எனினும், மாலை 07.00 மணியளவில் பியர்சன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 என்று கூறினார். விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் இருந்தனர். அவர்களில் 22 கனேடியர்கள், ஏனையவர்கள் பன்னாட்டுப் பயணிகள் என்றும் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிபடுத்தினார். விபத்தின் பின்னர் திங்கட்கிழமை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யப்பட்டன. புறப்பாடும் வருகையும் மாலை 5 மணிக்குப் பின்னர் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது. டெல்டா ஏர் லைன்ஸின் 4819 விமானம், வார இறுதியில் டொராண்டோ பகுதியைத் தாக்கிய குளிர்காலப் புயலைத் தொடர்ந்து வீசும் பனிக்கு மத்தியில் மினியாபோலிஸிலிருந்து வந்தது. இந்த விமானத்தை அதன் துணை நிறுவனமான எண்டெவர் ஏர் இயக்குவதாக டெல்டா தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. கனடா போக்குவரத்து ஆணையகம், இது குறித்த விசாரணைகளை தற்சமயம் ஆரம்பித்துள்ளது. விசாரணைக்காக இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், விமான நிலையம் வழியாக பயணிக்கும் எவருக்கும் வரும் நாட்களில் தாமதம் ஏற்படும் என்றும் பிளின்ட் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1421841

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.