Everything posted by தமிழ் சிறி
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
அப்படி போடு அருவாளை.... இந்தத் தேர்தலுடன்.. சுத்துமாத்து சுமந்திரனை வெளியேற்றி, தமிழரசுக் கட்சிக்கு, மஞ்சள் தண்ணி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும். தந்தை செல்வா... உன்னத நோக்கத்திற்காக ஆரம்பித்த கட்சியை... சுமந்திரன், இனியும் சின்னா பின்னா படுத்துவதை அனுமதிக்க முடியாது. விருப்பம் என்றால், அவர் புது கட்சியை ஆரம்பித்து, தனது சுத்துமாத்தை தொடரலாம். வைத்தியர் அர்ச்சுனா, மேயர் மணிவண்ணன், K.V. தவராசா, அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் விடுதலைப் போராளிகள் என்று ஒவ்வொருவரும் தமது கொள்கைக்கு ஏற்ற மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்கும் திறமையும், துணிவும் உள்ள போது... சுமந்திரன்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல்... மற்றவனின் கட்சியில் அடாத்தாக ஒட்டிக் கொண்டு இருந்து.. அலப்பறை பண்ணுவது பைத்தியக்காரத்தனம். "கறையான் புற்று எடுக்க... கருநாகம் புகுந்த மாதிரி", சுமந்திரன் தமிழரசு கட்சியில் இனியும் இருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழரசு கட்சியில் இருந்து... சுமந்திரன் உடனடியாக, அடித்து விரட்டப் பட வேண்டிய ஆள்.
-
கருத்து படங்கள்
- எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத்
எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத். சமூக ஊடகங்களில் ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து எந்த நாட்டில் இருந்தும் கடனை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் , நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1406281- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்தச் செய்தியை கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது கந்தப்பு. விஜய்… தனது அரசியல் பிரவேசத்தின் முக்கியமான தமிழ்த்தாய் வாழ்த்திற்கும், கழகப் பாடலை எழுதவும் ஈழத்து கலைஞர்களை பயன் படுத்திக் கொண்டமை எமக்கு பெருமை சேர்க்கும் விடயம்.- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
ஸ்ரீதரன், வென்றாலும் பரவாயில்லை. 🙂 சுமந்திரன்... கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும், அம்புட்டுத்தான். 😂 பஞ்சாயத்து... முடிந்தது, எல்லாம் ஓடு. 🤣- 5 வயது பேரனின் கேள்வி
பாஞ்ச் அண்ணை…. பேரனுக்கு, நீங்கள் இங்கு வந்த காரணத்தை மறைக்காமல் சொல்லி விடுவதே நல்லது. எப்படியோ அவரின் பதின்ம வயதுகளில்… அவருக்கு உண்மை நிலவரம் தெரிய வரும் போது… தனது தாத்தா பொய் சொல்லி விட்டார் என்று அவரை கவலைப் பட வைக்க வேண்டாம்.- கருத்து படங்கள்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அல்வாயன்... நிச்சயமாக உதவி செய்வேன். எந்த இடத்தில் உதவி தேவை என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் முதலாவதாக கந்தப்பு எழுதிய கேள்விக் கொத்தை நீங்கள் பதில் எழுதும் பெட்டியில் பதிந்து விட்டு.. ஒவ்வொன்றாக, நிதானமாக பதில் எழுதிக் கொண்டு வர பெரிய பிரச்சினை இல்லை. அதுகும் நீங்கள் அண்மையில் ஊரில் நின்று விட்டு வந்ததால்... கள நிலைமை எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். ஆகவே... தயங்காமல் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் குறித்த அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406091- இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி!
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி! இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார். அத்துடன், ஈரானின் சக்தியையும் உறுதியையும் இஸ்ரேலை உணரச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றிய அவர், ஈரானிய தேசத்தின் இந்த சக்தியையும் உறுதியையும் சியோனிச (யூத தேசிய இயக்கம்) ஆட்சிக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது நமது அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும். இஸ்ரேலின் தீய செயலை மிகைப்படுத்தப்படவோ அல்லது குறைத்து மதிப்பிடப்படவோ கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். இஸ்ரேலிய போர் விமானங்கள் சனிக்கிழமை அதிகாலை ஈராக்கின் வான்வெளியில் இருந்து ஈரானின் பாதுகாப்பு ரேடார்களை நோக்கி நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது. தாக்குதல்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன. எனினும், இதன்போது ஈரான் இராணுவத்தில் பணியாற்றிய நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்திருந்தார். ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவியதற்கு பதில் தாக்குதல் இதுவென இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளி வந்துள்ள அயதுல்லா காமேனியின் கருத்துக்கள், காசாவில் சியோனிச ஆட்சி செய்த கொடூரமான அட்டூழியங்களை கண்டித்து, பத்தாயிரம் குழந்தைகள்/சிறுவர்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் தியாகத்தை மிகக் கொடூரமான போர்க்குற்றங்களின் அடையாளமாக எடுத்துக் காட்டியது. https://athavannews.com/2024/1406080- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அய்…. கோசானை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாஸ்…. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறிவார்கள். அதை எல்லாம் மனதில் வைக்காமல், @கந்தப்பு அவர்கள் நடத்தும் பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கணிப்பை சொல்லுங்கள்.- தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்களாகிவிட முடியாது - பிமல் ரத்நாயக்க
எல்லாம் போச்சா... சுமந்திரனின், அமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டார்களே. 😂 உளறு வாயனுக்கு, ஆப்பு வைத்து விட்டார்கள். 🤣- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம். 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம். 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம். 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம். 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை. 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம். 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை. 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை. 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை. 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம். 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம். 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம். 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) ஆம். 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம். 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம். 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம். 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை. 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) ஆம். 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம். 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம். 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி. 3 இடங்கள். 28) வன்னி தமிழரசு கட்சி. 3 இடங்கள். 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி. 2 இடங்கள். 30)திருமலை தேசிய மக்கள் சக்தி. 2 இடங்கள். 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 3 இடங்கள். 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி. 11 இடங்கள். 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 இடம். 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0. ஒன்றும் இல்லை. 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) அர்ச்சுனா இராமநாதன். வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி. 39) உடுப்பிட்டி தேசிய மக்கள் சக்தி. 40) ஊர்காவற்றுறை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி. 42) மன்னார் தமிழரசு கட்சி. 43) முல்லைத்தீவு. தேசிய மக்கள் சக்தி. 44) வவுனியா. தேசிய மக்கள் சக்தி. 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி. 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி. 47) திருகோணமலை தேசிய மக்கள் சக்தி. 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி. 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி. 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 5 இடங்கள். 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 இடங்கள். 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி. 1 இடம். 54)தமிழரசு கட்சி 7 இடங்கள். 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடம். 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 இடம் 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 14 இடங்கள். 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 54 இடங்கள். 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 138 இடங்கள். 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 2 இடங்கள். போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
@Kapithan கனடாவில் உள்ள கண் வைத்தியரிடம் கண்ணை காட்டி பரிசோதிப்பதற்குரிய செலவை கந்தையா அண்ணையின் அக்கவுண்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும். 😂- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
அபின், கஞ்சா கடத்தி பிடிபடுகிறவனை... பிணை எடுக்கிறவன் எல்லாம், சட்டத்தரணி என்ற போர்வையில்... பாராளுமன்றம் போக நினைப்பது கடைந்து எடுத்த முள்ளமாரித்தனம்.😂- இரசித்த.... புகைப்படங்கள்.
ரொய்லற் பேப்பரை விட... அதை பாதுக்காக்க போட்ட, பூட்டு விலை அதிகம்.- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஆயுதக் குழுக்கள் புடை சூழ... சொந்த மண்ணில் வாக்குச் சேகரிக்கும் சுமந்திரன்.- யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
சுமந்திரனின் அல்லக்கைகள் ஆயுதத்துடன் ஊருக்குள் நடமாடுவதை பார்க்க, மணிவண்ணனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மீது, தாக்குதல்களை நடத்தியவர்கள் இவர்களாகவும் இருக்கலாம். 😮 சொந்த ஊருக்குள், வாக்குச் சேகரிக்க ஆயுதம் எதற்கு? இதே ஆயுதத்துடன் சுமந்திரன்... சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் ஒரு அடி எடுத்து வைத்து நடந்து விட முடியுமா? சிங்களவனும், சோனகனும்... சுமந்திரனை, "*****" எடுத்து விடுவார்கள். சொந்த இனத்தவனை வெருட்டி... வாக்குச் சேகரித்து பாராளுமன்றம் போக வேண்டிய "ரவுடி" அரசியலை, சுமந்திரன் செய்வது ஏன்? இது மற்றைய கட்சிகளுக்கும் முன்னுதாரணமாகி.. ஆயுதத்தை தூக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட தெரியாத... *********** ************ சுமந்திரன்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
(விக்னேஸ்வரனின்....) மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி.- கருத்து படங்கள்
- மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு. மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். அத்துடன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளே மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் ஏற்படக்காரணமாக இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406017- எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!
எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி! எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை வென்றுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது. அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுயேட்சை குழு 2,568 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை வென்றது. தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 55,643 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1406013- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1405986- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
சுமந்தரனின் இந்தக் காணொளிக்கு... வாசகர் கொடுத்த பின்னூட்டங்கள். ஒரு பானை சோற்றுக்கு... ஒரு சோறு பதம் என்பார்கள். ஆனபடியால்.... மேலதிகமாக சுமந்திரனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. பிரித்தது சுமந்திரனேதான்.எனிமேல் உள்ள காலங்களில் சுமந்திரனை வெளியேற்றி நல்ல ஒரு கட்சியாக வலம் வரும் என நினைக்கிறேன். @varansinna807 கரு நாகத்தை விட அதிகம் நஞ்சு கொண்டவன் இந்த சுமந்திரன். @airportlimo3582 யாழ்மாவட்டமக்கள் இம்முறை தக்கபாடம் கற்பிப்பார்கள் @ponniahsanthakumar9428 நேரத்தை வீணாக்கும் பேட்டி @lfcmanwearemighty1495 வணக்கம் நெறியாளர் அவர்களே முதற்கண் சமந்திரனிடம் பேட்டி எடுத்தற்கு நன்றி 1 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சுமந்திரன் சொல்லாமல் வேறுவிதமாக பதில் சொல்லி தன்னை நல்ல வராக காட்ட முயல்கின்றார். 2 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சு -ம வழங்காது விட்டால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் . அதைவிட அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க விட கூடாது. 3 இந்த பேட்டியை பார்க்கும் புதிய கேள்விகள் கேட்கப்பட்ட இல்லை 4 இன்னும் நிறைய காத்திரமான கேள்விகளை கேட்டு இருகலாம் 5.இந்த பேட்டியை பார்க்கும் போது சு -ம தெரிவு செய்த கேள்விகளை தான் உங்களுடைய கேள்விகளாக கேட்டது போல இருந்தது . 6 ஒரு நெறியாளர் என்றால் பேட்டியளித்தவரிடம் எந்தவிதமான சமரசம் இல்லாமல் உங்களுக்கு சரி நினைத்ததை கேட்ட வேண்டும்.🎉🎉🎉🎉 @umepathyvalu926 இவர்களின் தூரநோக்கு அரசியல் சிந்தனை இல்லாமல் போனதால் இன்று திரிகோணமலை அம்பாறை போன்ற இடங்களில் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலையில் உள்ளது. @abicreations2130 இவ்வளவு காலமும் கிழித்தது கானும் நடையை கட்டு ராசா.. @thambysiva1217 புடுங்கின ஆணி எல்லாம் காணும் ,யாருக்கு கம்பு சுத்துறிங்க. @louiesbasti4606 தம்பி பூவன் நீர் பெரிய வீராப்பு கதைச்சிட்டு சுமந்திரனை நேரில் கண்டதும் பம்மிற மாதிரி இருக்கே? ஏன் மக்களின் கேள்விகளை நாகரீகமான முறையில் கேட்க என்ன தயக்கம் இதைப்பார்த்தால் நேர்காணல் நேர்காணல்மாதிரி தெரியவில்லை சுமந்திரனுக்கு விளம்பரம் செய்தமாதிரி இருக்கு!! @selliahsooriyapragasam3325 சுமந்திரன் ஐயா அவர்களே ஏதோ உங்களின் முகத்தில் பயம் தெரிகிறது.. எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசியலில் நன்றாக கதைக்கக் கூடியவர் தான் ...ஆனால் இந்தத் தேர்தலில் வெல்லக் கூடியவர் அல்ல... @Thegodisbes அது என்ன திருகோணமலையில் சேர்ந்து போட்டியிட முடியும் மற்ற மாவட்டம் மட்டும் முடியாது எல்லாம் பதவியை தக்க வைப்பது தான் திட்டம் இவர்களை எல்லாம் நம்பவே கூடாது என்பதே உண்மை 💯💯💯💯 @Piratheep1985 கேள்வியும் பதிலும் இழுவையாக இருக்கு இருவரின் வீராப்பும் எங்கே போனது என்று மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். @keethanchalijegarajah5278 அண்ணா மன்னிக்கவும் உங்கள் கேள்வியில் தலம்பல் தெரிகிறது அவரை நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். அவரல்ல இவர் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை.இது நேரத்தை வீணடித்த பேட்டி @thiyathiya4435 தம்பி பூவன், ஏன் பதுங்கி பதுங்கி பயந்து கேள்விகளை கேட்கின்றீர்கள்? கெட்டவனிடம் பேசும் போது இன்னும் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். இல்லாது போனால் ஊடக துறையும் ஒரு நாள் அழிந்து போகும். இவ்வளவுதான் உங்கள் வீராப்பு? @sutharsundar2192 கூட்டாச்சியில் ஒன்றும் கிழிக்க முடியல இனிப்போய் கிழிப்பிகள் என்பது உருட்டு. நீர் ஆர் தலைவருக்கு கட்டளை இட உமது கட்சிப் பதவி என்ன ??? த. கட்சியில் பொதுக்குழு கூடி முடிவு எடுக்க எடுக்க முடியாத???? எல்லா தீர்மானங்களையும் மத்திய குழுவும் நீரும் தான் எடுப்பீர்கள்??? @sivakumaranutharsan2301 - எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.