Everything posted by தமிழ் சிறி
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
குமாரசாமி அண்ணை…. இதைப் பார்த்து @nedukkalapoovan க்கு பிரசர் ஏறப் போகுது. 😂 🤣
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
சில காலத்திற்கு முன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு வள்ளத்தில் ஏஜென்சி அனுப்பி வைத்த மாதிரி இலங்கையிலிருந்தும் வள்ளம் பிரித்தானியா நோக்கி புறப்படலாம். சோமாலியா விளம்பரத்தில் 2500 பவுன்ஸ் கட்டினால் காணுமாம். 😂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. 🙏
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இது 333 ரூபாயாம்.- சிரிக்க மட்டும் வாங்க
ஒரு சரியான மனிதர்... எங்கு, எப்படி இருப்பார்? 😂- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அன்பின் நிர்வாகத்தினருக்கு... கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு யாழ் களத்தில் வழமையாக இடம் பெறும் முகப்பு மாற்றம் இன்னும் செய்யப் படவில்லை என்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். நன்றி.- கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி.
கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு. 83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும். நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது. 1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது. நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது. இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது. 1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர். அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது. இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது. கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2024/1393294- கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு
கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு. 83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும். நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது. 1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு ஜூலை என பிரகடனப்படுத்தியுள்ள, இந்த பௌத்த மேலாதிக்க அதிகாரவர்க்த்தினர் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுப்படுகின்றது. நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த ஒருசில அரசியல்வாதிகள், மற்றும் அரச தலைவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் தோளில் சுமந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதன்முறையாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிலேட்சத்தனமான முறையில் இனகலவரம் அரங்கேற்றப்பட்டது. இந்த இனகலவரம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களுக்கு இடையில் இரும்பு வேலியை வலுவாக தோற்றுவித்தது. 1983 ஜூலை 23 ஆம் திகதியன்று அதிகாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவச் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் அதிகமான ஒன்றுகூடியிருந்தனர். அதனால் கொழும்பில் 41 வருடங்களுக்கு முன்னர் இதே ஒரு நாளில் பதற்றமும் நிலவியது. இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானது. கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, வீடுகள், மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிலையங்கள் பெரும்பான்மை இனத்தவர்களினால் எரிக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்ததை போதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது இன்றளவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என வர்னிக்கப்படுகின்ற இந்த கலவரத்தை இன்றும் உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2024/1393294- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
டிரம்புக்கு இப்ப இருக்கின்ற முகவெட்டு, 1955´ம் ஆண்டு அவருக்கு 9 வயதாக இருக்கும் போதே வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. 🙂- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
பிரித்தானியாவின் நாடு கடத்தல் திட்டம் இரத்து – ஆட்கடத்தல் கும்பல்கள் விளம்பரம்! பிரித்தானியாவில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரிடம் விளம்பரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை இரத்து செய்துள்ளார். இதனைதொடர்ந்து, சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய உதவும் ஆட்கடத்தல் கும்பல்கள், “இனி பிரித்தானியாவலிருந்து நாடு கடத்தப்படமாட்டீர்கள்” என விளம்பரம் செய்து வருவதாக தெரிய வருகின்றது. அண்மையில் சமூக ஊடகமான டிக்டொக்கில் வெளியான சோமாலிய மொழி விளம்பரம் ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய விரும்பும் சோமாலியர்களைக் குறிவைத்து, “ருவாண்டா திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி ஒருவர் கூட நாடு கடத்தப்படமாட்டீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், “எங்களுடன் பயணித்தால் நீங்கள் பிரித்தானியாவில் இருக்க முடியும்” எனவும் குறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பாக பிரித்தானியாவுக்குள் அழைத்துச் செல்ல, 2,500 பவுண்டுகள் கட்டணம் எனவும் அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393268- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்! பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்தினார். போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க குறித்த திட்டம் உதவும் என ரிஷி சுனக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393284- வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
கந்தையா அண்ணை... சிலவேளை 650 மில்லியன் டொலர் என்று வரவேண்டியதை, ஆதவன் செய்தித்தளம் 650 மில்லியன் ரூபாய் என்று போட்டு விட்டதோ தெரியவில்லை. 😂 நீங்கள் சொன்ன மாதிரி... நாடு முழுக்க உள்ள திட்டத்துக்கு 650 ரூபாய் காணவே, காணாது. ஆனால்... இதுகள் எல்லாம் நடைமுறைப் படுத்துகின்ற செயல் திட்டங்கள் இல்லை என்று அரசாங்கத்துக்கே தெரியும். ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுகின்றது என்ற பெயரில்.. தமது இருப்பையும் காட்டி, வெறும் வாயை மென்று கொண்டு இருக்கின்றார்கள். அது மக்களுக்கும் நன்றாகவே புரியும். 🤣- வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை! விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன் பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393258- சம்பந்தர் காலமானார்
விசுகர்... மேலே கிருபன் ஜீ இணைத்த கட்டுரையை "வஞ்சகப் புகழ்ச்சி" என்று தமிழில் சொல்வார்கள். கட்டுரையாளர்... "சம்பந்தனை நிந்திப்பது நியாயமா" கேள்வியை கேட்டு, அவரே... சம்பந்தனை கழுவி ஊத்தியுள்ளார். 🤣 "நோகாமல் நொங்கு தின்னுற மாதிரி" சம்பந்தரை கிழித்து தொங்க விட்ட கட்டுரைதான் அது. 😂 ஆன படியால்... நீங்கள் "ரென்சன்" ஆகாமல், கொடுப்புக்குள் சிரியுங்கள். 🤣- லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
புகழ், பணம், பதவி என்று... அதி உச்சத்தை தொட்ட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்வும் லதா மங்கேஷ்கர் வாழ்வு போல் முடிந்ததும் இன்னும் இரு உதாரணம்.- ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
@Maruthankerny இனியும்... ஹிருணிகாவை ஊரில் விட்டு வைத்திருப்பது ஆபத்து. ஸ்பொன்சர் பண்ணி, அமெரிக்காவுக்கு கூப்பிட்டு... ஒரு "சின்னவீடு" எடுத்து குடுத்து விடுங்கோ.- கருத்து படங்கள்
- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
- யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது !
யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது ! நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 3,405 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393250- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி! இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை வந்தடைந்தனர். இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்வும் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் . இதேவேளை குறித்த டி20 தொடரில் இருந்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393182 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.