Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. யாரை நான் மரியாதை இல்லாமல் பேசினேன்? தனது அரசியல் இலாபத்துக்காக தனது எஜமானர்களிடம் கூலி பெறுவதற்காக இனவாத நஞ்சை விதைத்து அதை தமிழ் தேசியம் என்று கட்டமைக்கும் அயோக்கிய அரசியல்வாதி சீமானுக்கு என்ன மரியாதை வேண்டியுள்ளது? சீமான் விதைக்கும் இனவெறியானது சிங்கள இனவாதிகளை விட மோசமானது என்று நான் கூறியதற்கு காரணம் ஒரு சிங்கள இனவாதி தனது நாட்டில் வாழும் சக தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே இனவாதத்தை கக்குவார். வேறு நாட்டு மக்கள் மீது இனவாதத்தை காட்டுவதில்லை ஆனால் சீமானால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல புலம்பெயர் ஈழத்தமிழ் இனவாதிகளைப் பாருங்கள். தமது நாட்டைத்தாண்டி வேறு ஒரு நாட்டில் வாழும் கன்னட, தெலுங்கு, மலையாள மக்கள் மீதும் இனவெறியுடன் போட்ட வன்மப் பதிவுகளை பலவற்றைப் பார்ததுள்ளேன். இத்தனைக்கும் ஒரு கன்னடருடனோ தெலுங்கருடனோ மலையாளியுடனோ பழகி கூட இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு தொலைவில் வாழும் மக்கள் மீது கூட வன்மத்தை இனவெறியை கக்ககூடிய புலம் பெயர் சீமானின் தற்குறிகளை உருவாக்கியது சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதியே. மேலும் கூறினால், தாம் தஞ்சம் அடைந்த நாட்டில் வாழும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் மீது கூட (இங்கு யாழில் கூட பல பதிவுகள் உண்டு) வன்மத்தை கக்கும் அளவுக்கு இனவெறியர்கள் இவர்கள். அது தான் கூறுனேன், இவர்கள் சிங்கள இனவாதிகளை விட மோசமானவர்கள் என்று. இத்தனைக்கும் 1980 களின் ஆரம்பத்தில் ஈழப்போராட்டம் தொடங்கிய போது தமிழ் நாட்டில் வாழ்ந்த அனைத்து மக்களும் ஈழத்தமிழர் போராட்டதிற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து தார்மீக ஆதரவை கொடுத்ததே வரலாறு. மேலும் சீமானின் மனைவியோ சீமானோ கலப்பினமாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது வெறுக்கதக்கதல்ல. ஈழத்தமிழரும் மலையாள வழி வந்தவர்களே. ஆனால் அரசியலுக்காக தனது இலாபத்துக்காக இனவாதத்தை விதைக்கும் நச்சு செடி சீமான் என்பதையே சுட்டிக்காட்டினேன்.
  2. தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.
  3. தமது முழுபலத்தையும் பாவித்து போராட்டம் செய்து விட்டு எதிரியால் அதை இலகுவாக முறியடிக்க பொன்னான வாய்ப்பையும் வழங்கி மொக்கயீனப்படுவதுப் பின்னர் அழுது புலம்புவதும் தமிழரின் வழமையான போராட்ட நடைமுறை. அதை மாற்ற யாராலும் முடியாது. 😂
  4. ஙெறுப்பு அரசியலை மட்டுமே மக்களிடம் விதைத்து மக்களிடையே இனவெறியை தூண்டும் சீமான் கட்சி அழிந்து போவதே தமிழர்களுக்கு நல்லது. இனவெறியை தூண்டி மனித நாகரீகமற்ற காட்டு மிராண்டிகளாக, தனது அடியாட்களாக தம்பிகளை வளர்பபதும், அதை வைத்து தனது அயோக்கிய தரகு அரசியலை நடத்தி பணவேட்டையீடுவதே சீமானின் நோக்கம். தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு மக்களுன் உரிமை சார்ந்தது. தமிழ நாட்டு மக்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசாங்கத்தை எதிர்தது நடத்தப்பட வேண்டியது. தமிழ் நாட்டு மக்களின் உரிமை அரசியலை கட்டமைத்து, அதற்கு ஆதரவாக இந்திய அரசை எதிர்தது எந்த போராட்டத்தையும் சீமானின் நாய் தமிழர் கட்சி நடத்தவில்லை. கட்சி உருவானதில் இருந்து தமிழ் நாட்டு மக்கள் உரிமைக்காக இந்திய அரசை எதிர்தது எந்த பாரிய போராட்டங்களும் நடத்தவில்லை. இந்திய மத்திய அரசு என்றால் பம்முவதும், உள்ளூர் கூட்டங்களிலும் பத்திரிகையாளரிடம் போதையில் குரைப்பதுமே சீமானின் தரங்கெட்ட அரசியல்.
  5. காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர். காளியம்மாளுக்கு இப்படியான தம்பிகளை விட்டு வெளியேறுவதில் தயக்கம் இருந்தது உண்மை.
  6. 2026 வரை மட்டும் அல்ல, அதற்கு பிறகும் உருட்டுவோம். நாங்கள் உருட்ட உருட்ட அண்ணன் தரகு வேலை செய்து பணத்தை சுருட்டோ சுருட்டென்று சுருட்டுவார். 😂
  7. காளியம்மாள் ஏற்கனவே அயோக்கிய அரசியல்வாதியான சீமான் தனது “ மூலம் செய்துவந்த அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவரை பிசிறுஎன்று அழைத்து, அந்த பிசிறை வெளியேற்ற வேண்டும் என்று சீமான் கூறினார். அவர் விரும்பியபடி அவரின் அயோக்கிய அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்த காளியம்மாள் வெளியேறி விட்டதால் சீமானின் அரசியல் தரகு பணவேட்டை அரசியலுக்கு இருந்த இடைஞ்சல் ஒன்று நீங்கியதால் சீமானின் மகிழ்சசி அடையலாம்.
  8. நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே. தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே! போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர். துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
  9. 2009 ம் ஆண்டின் பின்னர் இந்த கும்பல் எல்லாம் பல பிரிவுகளாக, கிட்ட தட்ட ஒரு பாதாள உலக கோஷ்டிகள் போலவே செயற்பட்டு வருகின்றன. யார் யார் எந்த குறூப் என்று கூட கண்டு பிடிக்க முடியாத நிலை. மக்களிடம் இருந்து திட்டமிட்டு கொள்ளையடித்த பணம், அதன் முதலீடுகள் எல்லாம் இவர்களை பல பிரிவுகளாக ஆக்கியுள்ளன போலும். நேர்மை சிறிதளவு இருந்திருந்தால் ஒரு நியாயமான கூட்டிணைவுடன் வெளிப்படை தன்மையுடன் இயங்கி மககளுக்கு பதில் கூறி ஒரு அறக்கட்டளையை உருவாக்கி மக்களின் நன்மைக்காக செயற்பட்டிருப்பர். இப்படி பாதாள உலக கோஷ்டி போல் ஒருவரை ஒருவர் போட்டு கொடுக்கும் வேலைகளை செய்திருக்க மாட்டார்கள்.
  10. இவ்வாறாக முன்முடிவுகளை எடுத்து விட்டு, அந்த முன்முடிவுகளை செயற்படுத்தும் வகையில் அரசியல் செய்வதும், பின்னர் பாத்தீர்களா நாம் அப்போதே சொன்னேனே என்று அழுவதும் தான் தமிழ் தேசியம் பேசிய தமிழ் தரப்பின் நிரந்தர கொள்கை அரசியல்.
  11. கட்டுநாயக்கா - யாழ்பாணம் விமான சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்மையில் சிறப்பானது. யாழ்பாணம் சர்வதேச விமான நிலையபாக இருப்பதால் ஐரோப்பாவில் இருந்து நேரடியாக யாழ்பாணத்திற்கு பயணம் முன்பதிவு செய்து கொள்ளும்்வசமி ஏற்படும். பயண பொதிகளை நேரடியாக யாழ்ப்பாணத்திற்கே அனுப்பலாம். ஐரோப்பாவில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
  12. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா எங்குமே, ஏன் அதை தாண்டி இலங்கையிலும் சாதி வெறி பரப்பப்பட்டதானது ஆயிரக்கணகான வருட வரலாற்றைக் கொண்டது. இந்து மதத்தை அடிப்படையாக கொண்டு தமது மேலாண்மையை பேண மற்றய மக்களை ஒடுக்க அவர்களுக்கு கல்வியை மறுத்து அது கட்டமைக்கப்பட்டது. அது பற்றி விவாதிப்பதே நீண்ட ஒரு தனி சப்ஜெக்ட். தற்காலத்தில் தேர்தல் அரசியல் கட்சிகள் சாதி வாரி வேட்பாளரை தேர்தல் வெற்றி என்ற யுக்திக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனவே தவிர மற்றப்படி சாதி வெறியை கட்சிகளாகவோ கட்டமைக்கப்பட்ட மக்கள் அமைப்புகளாகவோ யாரும் பரப்பவுல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கி விடுவதற்கான இட ஒதுக்கீடு அரசியலே கடந்த 100 வருட அரசியலாக அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்களின் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதுவும் தமிழ் நாடு மற்றைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக 69 விடழுக்காடுவரை இட ஒதுக்கீட்டை வழங்கு சாதி ஒடுக்குமுறையில் இருந்து மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனல் இனவெறி என்பது ஆபத்தானது மக்களை பிரித்து வெறுப்புகளை வளர்தது பேரழிவை உண்டாக்கக்கூடியது என்பதை அனுபவர்ரீதியாக உணர்ந்துள்ள நாங்கள் தமிழ் நாட்டில் இனவெறியை தூண்ட ஆதரவளிக்க கூடாது. ஈழ அரசியலில் உசுப்பேற்றுபவர்களை சாடி பல பதிவுகளை நீங்களே இட்டுள்ளீர்கள். நடைமுறை சாத்தியமான அரசியலை இலங்கையில் வலியுறுத்தும் நீங்கள் அங்கு இனவெறியளர்கள ஆதரிப்பது முரண்பாடாக உள்ளது. நாம் பட்ட துன்பம் அவர்களும் படடும் என்ற நல்லெண்ணமோ😂😂😂😂
  13. இந்த மனிமனின் பேச்சின் கவர்சசியை விரும்பிய கூட்டமே இனவாத தீயில் ஜேர்மமனி மூழ்க காரணமாயிற்று. இவரை போல் இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழையாக சீமான் இருந்தலும், தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும், கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர் தான். அதுவே மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மக்கள் அன்றைய ஜேர்மனியரை போல் ஏமாளிகளாக இல்லை என்பதை இந்த சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி உயிருடன் உள்ளவரை உணர்ததிக்கொண்டே இருப்பது ஆறுதலளிக்கும் செய்தி. தனது வாழ் நாளின் இறுதி நாள்வரை (சேடம் இழுக்கும் வரை) இனவெறியை தனது கூட்டத்திற்கு விதைத்து விட்டு இந்த மனிதர் போய் சேரட்டும். ஆனால் இவரது கருத்துக்கள் என்ற நஞ்சு தமிழ் நாட்டில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் அக்கறை. அந்த அக்கறையை சிம்ம சொப்பனம் என்று அர்ததப்படுத்தி கொள்ளக் கூடாது. இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.
  14. சீமானின் கொள்கை தமிழ் தேசிய கொள்கை அல்ல. இனவெறியை பரப்பி அரசியல் இலாபமடையும் அயோக்கிய அரசியல். இவரது வழி காட்டிகள் சிங்கள இனவாதிகளே. இவரது “ நாம் தற்குறிகள்” கட்சி தம்பிகளிடையே இனவெறி என்ற நஞ்சை பரப்புரை செய்து மேற்கு நாடுகளில் வதியும் ஈழத்தமிழ் மூடக்கூட்டத்திடம் பண வேட்டையாடுவதும், இனவெறி ஆர் எஸ் எஸ் மதவேறி கூட்டத்திடம் பேரம் பேசி பணவேட்டையாடி சொகுசாக வாழ்வதே சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதியின் திட்டம். ஏற்கனவே “தமிழீழ தேசமீட்பு நிதி” என்று தமிழ் மக்களின் வசூலித்த பணத்தை திருடிய மாபியாக் கூட்டமும் தனது முட்டாள் கூட்டத்தை entertain செய்ய சீமானின் இனவெறிக் காட்டு கத்தல்களை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் நாட்டு மக்களால் தான் முற்றாக நிராகரிக்கப்படுவோம் என்பது சீமானுக்கு நன்கே தெரியும். இருப்பினும், தனக்கு கிடைத்த கிடைத்த மூட தம்பிகளை பயன்படுத்தி பணவேட்டையை நடத்துவதே அவரது இலக்கு.
  15. உங்களுக்கு எந்த தொடர்பும் அற்ற தமிழ்நாட்டில் அந்த மண்ணில் வாழும் அந்த மண்ணின் மைந்தர களிடையே இனவாதத்தை வளர்ககும் வகையில் படு மோசமான இனவெறியை கக்கும் உங்களை போன்ற மோசமான இனவாதிகள் சிங்கள இனவாதத்தை பற்றி கதைத்து மூக்கு சிந்தி அழுவது ஏன்? வருடாவருடம் சிங்கள இனவாதத்தை பற்றி ஐநாவிடம் முறையிடுவது ஏன்? இங்கிலாந்தில் வாழும் ரூமேனியர் கிழக்கு ஐரோப்பியருக்கு எதிராக கூட இனவெறியை கக்கி கொண்டு சிங்கள இனவாதத்தை பறி பேசுவது எந்த வகையில் நியாயம். ஶ்ரீலங்கா சென்றால் அங்கு பவ்வியமாக சிங்கள அரசுக்கு விசுவாசமாக கோழைகளாக வாலைச் சுருட்டிக் கொண்டு அங்கு இருந்து விட்டு திரும்பி ஐரோப்பா வந்ததும் வீரமும் இனவெறியும் திரும்ப வந்து விடும்.😂😂 சிங்களவரை விட பல மடங்கு மோசமான இளவேறியர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாமலேயே, அடுத்தவன் நாட்டில் வந்தேறிகளாக இருந்து கொண்டு இவ்வளவு இனவெறி என்றால் உங்களுக்கு அதிகாரமும் நாடும் கிடைத்திருந்தால் என்ன பேயாட்டம் ஆடியிருப்பீர்கள்?
  16. இவர்கள் பாரவையில், தேசிய செயற்பாட்டாளர்கள், சீமானின் தறுதலைகள் எந்த கேவலமான சொல்லை பாவித்தாலும் அது வணக்கத்துக்குரிய சொல்லாகவே கருதுவர். அதனால் தான் அந்த அந்த கூட்டதில் கத்திய அந்த ரவுடி காட்டுமிராண்டிக் கூட்டதை கண்டிக்காமல், நாகரீகமாக கருத்து வைத்த உங்களை மீது கண்டிப்பு.
  17. பேரறிவாளன் ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். உண்மையில், தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது. உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் போன்ற கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே நன்றி கெட்டவர்கள்.
  18. கொஞ்சம் ஓவரா பேசிவிட்டார் என்றால் என்ன அர்ததம். கொடுத்த காசை விட ஓவரா கூவிற்றாண்டா கொய்யாலா என்று கூற வருகிறாரா அண்ணா மலை. சீமானை பொறுத்தவரை ஓவர கூவினா கூட காசு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருப்பார். தனது தற்குறி தம்பிகளுக்கு அறிவு வளர்சசி அடைந்து அவர்கள் தம்மை விட்டு போக முதலே காற்றுள்ள போதே தூற்றி கொள்ள நினைக்கிறார். அடுத்த பஜ்ச் தம்பிகள் கொஞ்சம் அறிவு உடையவர்களாக இருந்தால் என்னை தூக்கி வெளியில் போட்டாலும் போட்டுடுவாங்க, அதற்குள் உழைப்பதை உழைத்து விடுவோம் என்ற நப்பாசையில் ஒவரா கூவிற்றார் போல.
  19. ஈரோட்டில் பாஜக வின் வாக்குகளை சேர்த்தும் கட்டுப்பணம் கிடைக்கவில்லை என்பதை அறிந்த “நாம் தற்குறிகள்” தம்பிகளால் அதை பொறுக்க முடியாமல் ஒரு சிறிய கலந்துரையாடலுக்கு சென்று காட்டுமிராண்டிகள் போல் கத்தி அந்த கலந்துரையாடலை நடத்த விடாமல் சீமானை போலவே காட்டு கத்து கத்தி குழப்ப முயன்று, காவற்துறையால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அது ஒரு சிறிய கலந்துரையாடல். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமக்கு மன வளர்சசியோ அறிவு வளர்ச்சியோ இல்லை என்பதை கூட உணரும் அறிவு இவர்களுக்கு இல்லை போலிருக்கிறது. தாம் வாழும் நாட்டில் இனவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளோம் என்ற அறிவு கூட இல்லாமல் படு மோசமான இனவெறியை கக்கியுள்ளது இந்த சீமானின் காட்டுமிராண்டி கூட்டம். சிங்கள இனவாதத்தை பற்றி பேசும் அருகதை இந்த சீமானின் இனவாதிகளுக்கு கிடையாது. சிங்கள இனவாதிகளை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அதனால் தன் இந்த காட்டு மிராண்டிகளை மானசீகமாக ஆதரிக்கின்றனர்.
  20. சீமானின் தம்பிகள் என்றால் அறிவு அற்ற, நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்பது தெரிந்த விடயமே. அவர்களாக வந்து நாம் எந்த அறிவு வளர்சசியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் சீமானின் காட்டு மிராண்டி கூட்டமே என்பதை உறுதிப்படுத்தி சென்றார்கள்.
  21. பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை. இதன்படி பார்ததால் பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின் கணிப்பின்படி 114000 வாக்குகள் பெரியாருக்கும், 24000 வாக்குள் மட்டுமே பிரபாகரனுக்கு என்று எடுக்கலாமா? இதை தானே ஈழ அரசியல் உதாரணத்துடன் கோசான் @goshan_che தெளிவாக விளக்கி இருந்தார். இங்கு தெளிவான செய்தி பெரியாரோ பிரபாவோ இல்லை. சீமான் கும்பலின் நச்சு விதைகளை தூவும் அயோக்கிய அரசியலை தமிழ் நாட்டு மக்கள் என்றுமே ஏற்று கொள்ள போவதில்லை என்பதே செய்தி. சீமான் கும்பல் (விசிலடிச்சான் குஞ்சுகள்) திருந்தாவிட்டால் இப்படியே சீமான் தான் சாகும்வரை தனது தற்குறி தம்பிகளை ஏமாற்றி பணவேட்டை நடத்தி பலன் பெறுவது தான் சீமான் என்ற அரசியல்வாதியின் வாழ்ககை. அந்த கும்பலின் அரசியல் ஒரு சிறு கூட்டத்தோடு அடங்கி விடும். தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையில் இனவாத நச்சு விதைகளை தமிழர்களிடையே விதைக்கும் சீமான் கும்பலுக்கு நடு மண்டையில் போட்ட ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.
  22. சற்று அறிவு உடைய தம்பிகள் கட்டுபணம் கூட கிடைக்காத இந்த தாழ்ந்த வாக்கு வீதம் கூட எமக்கானதல்ல என்பதை புரிந்து கொண்டாலும், சொந்தமாக சிந்திக்க தெரியாத, சீமான் சொன்னதை கிளிப்பிள்ளை போல் உளரும் தம்பிகளுக்கு கண்கள் சிவக்க சிவக்க கோபக்கனலில் சிவப்பாக சிவப்பு சித்திரம் வரைவதும் இயல்பானது தான். 😂😂
  23. சீமான் கும்பலை கட்டுப்பணம் இழக்குமளவுக்ககு நடு மண்டையில் போட்ட ஈரோடு மக்ககளுக்கு வாழ்ததுக்கள். மிக தெளிவான செய்தி. பிரதான எதிர்க்கட்சி தேர்தலில் பங்கெடுக்காத நிலையில் திமுக ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகளை தற்காலிகமேனும் பெற்று அதை தமது வாக்குகளாக் காட்டும் சீமான் கும்பலின் வழமையான புருடா வேலையை கூடச் செய்ய முடியவில்லை. 15 வீதம் என்பது சீமான் கட்சி வாக்குகள் அல்ல. பாஜக போன்ற திமுக எதிர்ப்பு உதிரி வாக்குகள் வேறு வழியில்லாமல் சீமான் கட்சிக்கு போடப்பட்டுள்ளதை சாதாரண அரசியல் அறிவு உடைய மக்களால் கூட விளங்கி கொள்ள முடியும். சற்று அறிவு உள்ள தம்பிகளுக்கும் அது புரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.