Everything posted by island
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
சிறந்த கருத்து! 👍 நன்றி வீரப்பையன்.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் ! இன்று தமிழ் இனவாதப் பேச்சுக்களைப் முழங்குபவர்கள் போராட்ட வயதில் இருந்த போது ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் ! மே 17 வரை களத்தில் நின்ற, போராளிகளின் தாய், போராளி, ஆற்றல் மிகு பெண் ஆளுமை தமிழ் கவி அம்மா தன் முள்ளிவாய்க்கால் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றார்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
ஐரோப்பா வந்த புதிதில் நசனாலிற்றி உள்ள பெண்ணை திருமணம் செய்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று தேடி திரிந்த இவர், இன்று விரும்பியபடி வெளிநாட்டில் செற்றில் ஆகியதும் வருமானம் தரும் தாயக ஊடகவியலாளராகி பிழைப்பு நடத்துகிறார். தாயக அரசியல்வாதிகளடையே சிண்டு முடிவதில் இவர் வல்லவர்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
உங்கள் நினைவு சரியானது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிப் போக மறுத்தவர். ஈபிஆர்எலெவ் அமெரிக்க அலன் தம்பதியரை கடத்திய பின்னர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று இவரை விடுதலை செய்யவேண்டும் என்பது. அந்நேரத்தில் சிறையில் இருந்தபடி, அலன் தம்பதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கடத்தல்காரர்களுக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் அடங்கிய குரல் பதிவை இலங்கை வானொலி பலமுறை ஒலிபரப்பியது. இவர் பின்னர் இயற்கை மரணமடைந்ததாக ஊடகங்களில் வாசித்தேன்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
எனது முதல் கருத்து இனப்படுகொலை பற்றியதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அது எதிர்காலத்தில் எம்மவர் செய்யும் அறிவுபூர்வமான அரசியலைப் பொறுத்தது. ஆனால், தமிழர் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்று ஒருவர் கூறுவதை நம்பித் துள்ளிக்குதிக்கும் அளவுக்கு அறிவு உடையவர்களுக்கு தமிழர் இனப்படுகொலையை உலகம் ஏற்றுக்கொள்ளவைக்கும் அரசியலைச் செய்யும் திறன் இல்லை.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
நடக்க முடியாத விடயங்களைப் பற்றி பேசி ஆவேச உணர்சசி வசப்படுத்தும் பேச்சுக்களும் அதையொட்டிய அரசியலும் தமிழருக்கு எந்த முன்னேற்றதையும் கடந்த 75 வருடத்தில் தராதது மட்டுமல்ல பாரிய பின்னடைவையும் பேரழிவையும் தந்தது என்ற பட்டறிவால் வந்த நெருடலே. மக்களை அறிவின் பால் சிந்திக்கவிடாது இப்படி உணர்சசிவசப்படுத்தி அதன் மூலம் தாம் இலாபமடைவது சில கும்பல்களின் டிசைன்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
இந்த செய்தியை வாசிதததும் பதறிப் போன கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் அவசரம் அவசரமாக தூதகரத்தை இழுத்துப் பூட்டிவிட்டு தூதரக அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தலையில் துண்டை போட்டபடி அங்கிருந்து வெளியேறி இலங்கைக்கு பறந்துகொண்டிருப்பதாக இறுதியாக கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
உங்களது கருத்தில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. அப்படி நடந்தால் நிச்சயபாக ஈழத்தமிழர்களாகிய நாம் மகிழ்சசியடையவேண்டும். ஆனால் தமிழர் தரப்பில் தீவிர தமிழ் தேசியம் பேசி அரசியல் செயவோர் இதனை குழப்ப தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வர் என்பதே இன்றைய ஜதார்த்தம். இது வெறும் அனுமனம. என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பட்டறிவு அப்படி உள்ளது. தமிழர் தரப்பில் இன்றும் நெகிழ்வு தன்மையுல்லாது கற்பனாவாதத்தை பரப்பும் இறுக்கமான மனநிலையில் இருந்தபடி மக்களுக்கும் அவ்வாறான அரசியல் தூண்டுதல்களை செய்யும் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலமும் மறைமுகமாக அமைப்புகள் மூலமும் விதைக்கும் பலர் புலம் பெயர் நாடுகளில் உள்ளனர்.
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இதை செய்வதானால் இந்தியா தனியாக இதை செய்ய முடியாது. எப்படியும் 13 ம் திருத்த சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட புள்ளியில் இருந்து தான் இதனைத் தொடங்க வேண்டும். தமிழ் தரப்பில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ இதை ஆரம்பிக்க வேண்டும். இதனை யாராவது ஆரம்பித்தால் தமிழர் தரப்பில் இருந்தே பாரிய எதிர்பபும் அவர்களுக்கு எதிராக துரோகிகள் என்ற பிரச்சாரமும் பாரியளவில் நடத்தப்படும் என்பதே இன்றைய நிலை. அண்மையில் கூட பெரடல் வந்தால் கூட ஏற்று கொள்ள கூடாது. கொன்பெரடல் வந்தால் அதனை வேண்டுமானால் பரிசீலிக்கலாம் என்ற குரல்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்தது. இங்கு யாழிலும் அது பகிரப்பட்டது.
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
புலிகளை சாடி தான் எந்த கருத்தையும் எழுதவில்லை. போராட்டத்தை முழுமையாக தன்னிச்சையாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர்கள் தொடர்சசியாக செய்த தவறுகளை இறுதியில் அவர்களையும் அழித்து தமிழ் மக்களுன் போராட்டதையும் பாரிய பின்னடைவுக்கு கொண்டு வந்த ஜதார்தத்தை மட்டுமே எனது கருத்தில் தெரிவித்தேன்.
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
நீங்கள் கூறியபடி, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று போரை நடத்தியவர்களோ அவர்களுடன் நின்ற மக்களோ பிரமிக்கும் நிலையில் இன்று அவர்கள் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆக விட்டார்கள். ஆனால், அந்த முப்பது வருட ஆரம்பத்திலேயே யுத்தப் பிரதேசங்களில் இருத்து நைசாக தப்பி ஒடி வந்தவர்களே இப்படி ஆயாசமாக ஜாலியாக, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று கதையளந்து பிரமிக்க கூடிய நிலையில் உள்ளார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் கூறிய இந்த விடயத்துடன் ஈழத தமிழர் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியாக எப்போதும் நெருக்கமாக இருந்ததையும் அந்த மக்களை இந்திய இராணுவம் படுகொலை செய்வது தவறு என்பதை விரிவாக விளக்கி ஈழத்தமிழனின் குரலாக இந்த கடிதத்தைப் பிரசுரியுங்கள் என்று 1987 ல் நவம்பர் மாதம் இந்திய இராணுவம்- புலிகள் யுத்தம் தொடங்கிய வேளையில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று இதழ்களுக்கும் கடிதம் எழுதி, கட்டாயமாக போய் சேரவேண்டும் என்பதற்காக பதிவு தபாலில் அதை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரிக்க கூட இல்லை. அனேகமாக குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நாங்கள் எளிய தமிழ் பிள்ளைகள். இவை எல்லாம் மீம்ஸிலும் வட்ஸ்சபிலும் ரீல்ஸிலும் வந்தால் மட்டுமே நம்புவோம். 😂
-
மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன்
தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ் கட்சிகளிடம் பணம் இல்லை என்கு அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் நிலாந்தன். தமிழகட்சிகள் பாவமாம். புலம் பெயர் தமிழர் தான் உதவி செய்ய வேண்டுமாம். 1977 ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியில் கூட்டங்கள் தான் மிக பணச்செலவில் பிரமாண்டமாக ஒவ்வொரு ஊர்களிலும. நடத்தப்பட்டது. வானுயர பதாகைகள், கொடிகள், தலைவர்கள் வரவேற்க ஒரு சந்தியில் இருந்து அடுத்த சந்திவரை நீளமாக கட்டி வைக்கப்பட்ட சீன வெடிகள் என எல்லா கூட்டங்களும் களைகட்டியது. அரசியல் ஆய்வாளராக நிலாந்தன் அதை அறிந்திருப்பார். அப்படி இருந்த தமிழர் தரப்பு இன்றைய நிலையை அடைய என்ன காரணம் என்பதை ஆய்வாளராக நிலாந்தன் நேர்மையாக ஆராயவேண்டும். நிலாந்தன் உரிய காலத்தில் உரியவர்களிடம் இடித்துரைக்கும் அருமையான சந்தர்பபம் அவருக்கு கிடைத்தும் கிடைத்தும் அதை செய்யாது இன்று காலங்கடந்து புலம்புபவர்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
இலங்கை தமிழர்களின் தலைவராக யார் வருகிறார்கள் என்பது இங்கு முக்கியமல்ல. திரு.கஜேந்திரகுமருக்கும் அந்த தகுதி உள்ளது. ஆனால் தலைவராக வருபவர் தற்போதைய ஜதார்தத நிலையை அனுசரித்து moderate ஆகச் சிந்தித்து அரசியல் செய்து தென்னிலங்கை தரப்பபுகளோடு பேசி தனது பதவிக்காலத்துக்குள் சிறிது சிறிதாகவேனும் சில அடைவுகளை மக்களுக்கு பெற்றறுக் கொடுத்து இப்போது இருக்கும் நிலையை மேலும் பலப்படுத்திவிட்டு ஓய்வு பெறுபவராக இருக்கவேண்டும் வெறுமனே தனது வாழ்நாள் முழுவதும் தீவிர தேசியம் பேசி தான் சாகும் போது முன்னர் இருந்த நிலையை விட மோசமாக்கி நிலமையை மேலும் சிக்கலக்கி விட்டு தான் கண்ணை மூடுவதில் எந்த பலனும் இல்லை.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சமாதான காலத்தின் ஆரம்ப பகுதியில் ஐரோப்பா வந்திருந்த இளம்பருதி, நீங்கள் கூறிய அதே கருத்தையே இங்கும் மக்கள் சந்திப்புகளில் தெரிவித்திருந்தார். நான் நேரடியாக அக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன். அது மட்டுமல்ல சமாதான காலத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பா வந்திருந்த அமுதாப் உட்பட இயக்க உறுப்பினர்கள் அனைவருமே அரசியல் தீர்வு, பேச்சுவார்ததை தொடர்பாக அந்தந்த நாடுகளுன் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதையோ அது தொடர்பான அறிவு பூர்வமான செயல்களை செய்வதை விட தமிழ் மக்களை சந்தித்து அடுத்த யுத்த தயாரிப்புகளுக்கான நிதி சேகரிப்புக்கான தூண்டுதல்களையே மக்களுக்கு வழங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினர். மக்கள் சந்திப்புகளில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை. மாறாக ஜெயசிக்குறு, ஆனையிறவு சமர் தொடர்பான தமது வீர அனுபவ கதைகளையே பேசிஅடுத்த யுத்தத்திற்கு மக்களின் நிதி பங்களிப்புற்கு தயார்ப்படுத்தும் வேலைகளையே செய்தனர். இவை எல்லாம் ஐரோப்பிய நாடுகளால் நிச்சயம் அவதானிக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் வேலை செய்த செயற்பாட்டாளர்களும் அதையே சமாதான காலம் முழுவதும் செய்தனர். பின்னர் யுத்தத்தில் சொதப்பியதும்ம் அதே ஆட்கள் யுத்த நிறுத்தம் வேண்டி ஐரோப்பிய வீதிகளில் மக்களை திரட்டி ஆர்பாட்டங்கள் செய்தனர். அப்போது கூட யுத்த நிறுத்த கோரிக்கைகள் மக்களுடம் இருந்து வந்ததாக காட்டாமல் இயக்க கொடிகளுடனும் பிரபாகரனின் படங்களுடனும் புலிகளின் சார்பிலான ஆர்பாட்டங்கள் என்று ஐரோப்பிய நாடுகள் நம்பும்படியான வேலைகளையே பேதைத் தனமாக செய்தனர். இவர்கள் அனைவருமே இறுதி யுத்தத்தில் மக்கள் அழிவுகளுக்கு இலங்கை அரசுடன் இணைந்து கூட்டுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள்.
-
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!
நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது. இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
கந்தையர், கதையை மாற்ற வேண்டாம். கேள்விக்கு விடை தெரியாத ஒரு பரீட்சாத்தி தனது வசதிக்காக தானே ஒரு கேள்வியை எழுதி அதற்கு பதிலெழுதுவது போல் எழுதி உள்ளீர்கள். சர்வதேத்திடம் தீர்வு இல்லை அவர்களால் எந்த தீர்வையும் தர முடியாது, என்று கூறியவர் நீங்கள். அவ்வாறு நீங்கள் கூறியதற்கு, அப்படியானால் ஏன் வருடா வருடம் ஜெனிவா ஜநாவுக்கு தீர்வை வலியுறுத்தி செல்கிறார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு நீங்கள், என்ன தருவார்கள் என்று சும்மா அறிவதற்கே அதாவது விடுப்பு அறிவது போல அறிவதற்கே 40 வருடங்களாக தமது வேலைகளை விட்டு விட்டு வருடாவருடம் இருமுறை ஜநாவுக்கு செல்கிறார்கள் என்று கூறி அங்கு செல்பவர்களை அவமானப்படுத்தியதும் நீங்கள் தான். அதற்கான பதிலடியே எனது பதில். அதற்கு பதிலெழுத முடியாததால் அதை மடை மாற்றுவதற்கு முழு தமிழர்களையும் தேவையில்லாமல் உங்கள் வசதிக்காக இங்கு இழுத்தது நீங்கள் தான். ஐநவுக்கு போராட்டங்களுக்கு சென்ற தமிழர்கள் எவரும் எவரும் சர்வதேச நல்லுறவு எமக்கு தேவையில்லை என்று அடி முட்டாள்கள் போல் கூறவும் இல்லை கூறவும. மாட்டார்கள். அப்படிப் பேசுவது அடி முட்டாள்தனம் என்து அவர்களுக்கும் தெரியும். கந்தையர் நாம் எதை பற்றி விவாதித்தோமோ அதற்குள் மட்டும் நிற்கவும். தேவையில்லாமல் நான் கூறாத விடயங்களை நீங்களே இதற்குள் திணித்து அதற்கு பதில் எழுத வேண்டாம். நீங்கள் பட்டியலிட்ட அந்த பெரும் பாலான அறிவுசார் தமிழர் எவரும் இப்படியான லூசுத்தனமாக கருத்தை கூறவும் இல்லை கூறவும் மாட்டார்கள். அதனால் தான் அவர்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளார்கள் என்பதை மனதில் கொள்க. (அதற்கிடையில் கிடைத்தது சாட்டு என்று வரலாறு என்ற பெயரில் இராமாயணம், மகாபாரத காவியங்கள் எழுதும் ஒருவர் வேறு வந்து வேறு புலம்பி விட்டுச் சென்றுள்ளார். பாவம் 😂😂😂)
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
என்ன தருவார்கள. என றதை அறிய 40 வருடம் போனவர்கள் என்றால் அந்த அடி முட்டாள்களுக்கு தீர்வு கொடுக்க கூடாது. அது தான் நல்லது. Enjoy 😂😂😂😂😂😂😂
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சர்வதேசத்திடம் ஒன்றுமே இல்லை என்றால் கடந்த 40 வருமா வருடத்துக்கு இரண்டுமுறை ஜேனிவா ஐக்கிய நாடுகள் சபைக்கு மினக்கெட்டு பஸ் பிடிச்சு போய் ஒரு நாள் முழுவதும் „We want Tamil eelam“என்று ஏன் கத்தினார்கள்? இப்போதும் வருடத்திற்கு இரண்டுமுறை அங்கே ஏன் போகிறார்கள்? ஒன்றுமிலாத இடத்துக்கு போவது லூசுத்தனம் தானே! 😁
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
கந்தையர் நீங்கள் எதையும் உங்கள் விருப்படி கூறிவிட்டு போகலாம். அதை உலகம் கணக்கில் கூட எடுக்கப்போவதில்லை. சர்வதேச சமூகம், சக்தி வாய்ந்த நாடுகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் முக்கியம். அவர்களை பகைத்து ஒரு போதும. தனி நாடு எடுக்க முடியாது. உலகம் எமக்கு தேவையில்லை அவர்களது நல்லுறவு தேவையில்லை என்று தான் தோன்றி தனமாக நடந்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும். அது தான் நடந்தது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நீலனை கொன்றது சரி என்று இதே திரியில் எழுதி கொலையாளிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்போது அது கொலைக் குற்றம், அதற்கு தான் புலிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்கின்றீர்கள். எப்படியோ நீலனை கொன்றது தவறு, அது குற்றம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. சர்வதேச நாடுகள் குற்றம் என்று சொல்லி விட்டது. இவ்வாறான தவறுகள், கொலைகள் தமிழர்களையும் அவர்களது போராட்டதையும் பாதித்தது என்பதே எனது வாதம்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இலங்கை அரசு செய்த யுத்த குற்றங்களை சர்வதே நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமாம். ஆனால் புலிகள் செய்த படு கொலைகளை அவர்களின் ஆதரவாளர்களே தங்களுக்குள் விசாரணை செய்து அந்த கொலைகள் எல்லாம் நியாயமானவை தான் என்று தீர்ப்பு எழுதுவார்களாம். 😂😂
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அமெரிக்கா தர்மத்தின் பால் நின் றதில்லை என்றால் தமிழர் தரப்பு தர்மத்தின் பால் நின்றதா? சிங்கள பேரினவாத இன ஒதுக்கலுக்கு எதிராக போராட்டத்தில் உள்ள நியாயப்பாட்டை தவிர தமிழர் போராட்ட தரப்பின் செயற்பாடுகளும் தர்மத்தின் பால் நிற்கவில்லை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.