Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ரதி

  1. நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ...அவர் என்ன காரணத்திற்காய் தான் யூதர்களுக்கு ஆதரவு என்று எழுதி போட்டு ஒதுங்கி இருந்தார் என்றால் அவரை இந்தளவிற்கு போட்டு தாக்கி இருக்க மாட்டார்கள்..இந்த திரியில் சிலர் வெளிப்படையாகவே தாங்கள் யூதர்களுக்கு ஆதரவு என்று சொன்னார்கள் ஆனால் ஒருத்தர் கூட நன்னியளவிற்கு பலஸ்தீன மக்களது படுகொலையில் அல்லது இறப்பில் சந்தோசம் கொள்ளவில்லை ...அவரது கருத்துக்கள் ஓவராய் போனதால் தான் நான் முதலில் வந்து அவரை நிறுத்த சொன்னேன் . உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய் நன்னி விட்ட பிழைகள் உங்கள் கண்ணை மறைக்குது ...இதற்கு மேல் இந்த திரியில் இவரை பற்றி எழுத ஒன்றுமேயில்லை ...இவர் இந்த திரியில் வந்து எழுதி தன் மேல் உள்ள மரியாதையை தானே கெடுத்து கொண்டார் .தன் சுயரூபத்தையும் காட்டி விட்டார்
  2. நன்றாய் தோசையை திருப்பி ,திருப்பி சுடுங்கோ...அது உங்களுக்கு கை வந்த கலை அல்லவா ...நானும் நீங்கள் அவரது கருத்துக்கு ஆதரவு என்று எழுதவில்லை ...அவருக்கு ஆதரவு என்றே எழுதினேன். சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீம்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்த மட்டுவில் இருந்து வந்தவள் ..அவர்கள் செய்த அட்டுழியங்களை கண்டு வளர்ந்தவள் ...அப்படியிருந்தும் கூட அப்பாவி மக்கள் இறக்க கூடாது என்று நினைக்கிறேன் ..ஆனால் அவர்?
  3. அதையே தான் நானும் சொல்கிறேன் ...எந்த வித அடிப்படையில் அவர் அங்கு இருந்திருப்பார், அவர் அப்படிப்பட்ட ஆள் என்று அவரை தெரிந்த மாதிரி அவருக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்கள் ...அப்படி எழுதின படியால் தான் அதை இந்த திரியிலேயே பல இடங்களில் காண கூடியதாய் இருந்த படியால் தான் நானும் உங்களை கேட்க வேண்டி வந்தது
  4. இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?
  5. உதை என்னை குவோட் பண்ணி இணைக்கிறீர்கள்?...நான் ஹமாசுக்கு ஆதரவு என்று எங்கேயாவது சொன்னேனா?
  6. ஏன் புலிகள் விட்ட பிழையை எழுதினால் என்ன?...ஈஸ்டர் தாக்குதலுக்கு கோத்தா பதில் சொல்ல வேண்டும் ...மு.வாய்க்காலுக்கு இலங்கையரசு ,உலக நாடுகள் பதில் சொல்ல வேண்டும் ...ஆனால் புலிகள் விட்ட பிழையை மட்டும் கதைக்கப்படாது...இப்படிப்பட்ட நியாயங்களால் தான் எல்லோரும் சேர்ந்து எங்களை அழித்தவர்கள்
  7. 85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார்
  8. இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை
  9. அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
  10. நீங்கள் எங்கட பெடியங்களை சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்பிறன்
  11. எங்கே போர் நடந்தாலும், முதலில் இறப்பது அப்பாவி மக்கள் தான் ...நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களாய் இருந்தும் கூட ஒரு பக்கம் சார்ந்து இருந்து வெற்றிக் கூச்சல் போடுவதை பார்க்க வியப்பாய் இருக்கு
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா
  13. தொடருங்கள் சுவியண்ணா உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல்...வாழ்த்துக்கள்...நானும் தான் எழுத முயற்சிக்கிறேன்...முடியவில்லை முதல் பொண்டாட்டி பிள்ளை பெத்து தரேல்ல என்று துரத்தி விட்டவருக்கு மாதா நல்லருளை கொடுப்பா...இப்ப இப்படியானவர்களுக்கு தான் "கடவுள்" என்று சொல்பவர் அருள் புரிவார் . இல்லையா நிலாக்கா
  14. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்
  15. நெத்தலி புட்டை விட்டு விட்டீகள் அண்ணா ...அண்மையில் தான் ஒரு உணவகத்தில் கண்டு விட்டு வேண்டி சாப்பிட்டேன்...ஒரு நாளைந்து நெத்தலி தான் போட்டு இருந்தார்கள் £7 எடுத்து விட்டார்கள்😟
  16. அண்ணா நான் உங்களை மட்டும் சொல்லவில்லை ...நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி
  17. அதை எழுதும் போதே நீங்கள் மட்டும் தான் வருவீர்கள் என்று நினைத்தேன் ...உங்கள் பதிலுக்கு நன்றி அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட வசதி படைத்த பலர் கொழும்பில் இருந்து அகதியாக்கப்பட்டு வட பகுதிக்கு போய் திரும்பவும் கொழும்பில் வந்து வசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். பலர் உங்களை மாதிரி வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனால் இதே யாழிலேயே நீங்கள் பார்த்தீர்கள் என்டால் உங்களையும் சேர்த்து இன்னும் ஒரு சிலர் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்த்தால் ஒப்பீட்டளவில் குறைவு . பெரும் பான்மையானோர் இந்த போரை காரணம் காட்டி தங்களை வளப்படுத்தி கொள்ள [அதில் தவறு இல்லை .] இடம் பேர்ந்தார்களே தவிர நாட்டுப் பற்று, புலிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் ..அவர்களை முதன்மையாய் நினைத்தால் குறைந்த பட்சம் மு.வா சண்டையின் போதாவது ஊருக்கு போயிருப்போம். ஏன் கலவரத்தில் பாதிக்கப்படட அனைவரும் போய் புலியில் சேராமல் நாட்டை விட்டு ஓடினார்கள் ?...தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்று தானே!!...எல்லாருக்கும் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கனவு இருக்கிறது ...அதற்காய் உண்மையாய் போராடி மடிந்தவர்கள் சிலர் தான்
  18. அப்படியா தெரிந்தால் எழுதுங்கள் பார்ப்போம் .கருத்திற்கு பதில் எழுத முடியா விட்டால் இப்படி தான் பிதற்ற வேண்டி வரும் ...நான் ஏதோ உங்கள் குடும்ப தகவல்களை பொது வெளியில் கேட்ட மாதிரி துள்ளுகிறீர்கள் ..உங்களை மாதிரி ஆட்களை சந்திக்க வந்த என்னை சொல்ல வேணும்
  19. உண்மையை எழுதேலாட்டில் இப்படி எதையாவது சொல்லி சலாப்ப வேண்டியது தான் .எழுதுறது புனை பேர்ல அதில வேற உண்மையை எழுதேலாதாம் என்ட கதை வேற
  20. வாசித்து முடித்து விட்டேன்.உங்களுக்கு நல்ல எழுத்தாற்றலும் ,அதை விட நல்ல கற்பனையாற்றலும் இருக்கிறது ...தொடர்ந்தும் எழுதுங்கோ
  21. அவர் தமிழ்நாடாய் இருந்தால் தானே அவருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரிந்திருக்கும்.
  22. யாராவது மனசாட்சியை தொட்டு ,நெஞ்சை நிமிர்த்து சொல்லுங்கள் பார்ப்போம் சிங்களவனது இன துவேசத்தால் பாதிக்கப்பட்டு ,குடும்ப உறவுகளை எல்லாம் பழி கொடுத்து,சொத்து சுகங்களை எல்லாம் இழந்து வாழ வழியில்லாமல் நாங்கள் நாட்டை விட்டு வந்தோம் என்று ...உண்மையாய் பாதிக்கப்பட்டவன் போராட்டத்திற்கு போனான் ....பொருள் உழைக்கவும் ,வசதி வாய்ப்புக்களை பெருக்கவும் புலம் பேந்து விட்டு கொஞ்சம் கூட சூடு ,சுரணை இல்லாமல் கதைகள் என்றால் ...ஆட்களும் ,மண்டைகளும் 😠
  23. பெருமாள் ,அகஸ்தியன் ,நுணா, தமிழ்சிறி அண்மையில் பிறந்தாளை கொண்டாடிய அனைவர்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.