Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. பெரிய பூனை இன்றிரவு நித்திரை வராமல் உருண்டு பிரண்டு கொண்டிருக்கும்........ விடிவிடிய அது இன்னொரு கதை சொல்லும்........🤣
  2. 🤣........... நீங்கள் அலுவல்கள் காரணமாக இங்கே வருவது குறைவாக இருந்த சமீப நாளொன்றில், 'செத்தகிளிக்கு செட்டை முளைத்து அது பறக்குது. எங்கே வாலி...........' என்று யாரோ தேடினார்கள்..........🤣.
  3. 🤣......... மனைவி - துணைவி என்ற புகழ்பெற்ற அந்த கோட்பாட்டை வைத்து தான் நான் ஒரு தீர்வை முன்மொழிந்திருந்தேன்.........................🤣. இந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவருக்கு கூட ஆரம்பத்தில் ஒரு துணைவியார் சில சிக்கல்கள் கொடுத்தார் என்று எங்கோ பார்த்திருக்கின்றேன்......... ஆனால் இங்கு இருவருமே நாங்கள் மனைவிகள் தான் என்று நின்றால், சீமானின் நிலை பூனையை மடியில் கட்டிக்கொண்டு பயணம் போவது போல ஆகிவிடும்.......... சாட்சிக்காரனை விட சண்டைக்காரனிடம் சரணடையலாம்............ இன்னொரு கடைசி முயற்சியாக நேரடியாக பேசிப் பார்க்க வேண்டியது தான்........... இங்கு களத்தில் நீங்கள் பலர் இதை எல்லாம் எப்பவோ அணு அணுவாக ஆராய்ந்திருப்பீர்கள்..........👍.
  4. வரி வட்டி கிஸ்தி குஸ்தி................... என்று போகும் இந்தப் பூனைகள். ஒரு காலத்தில் துளியளவும் இரக்கம் இல்லாமல் ஐரோப்பியர்கள் உலகை எப்படிக் கொள்ளையடித்தார்களோ, இன்றைய நவீன நாகரிக உலகில் அதே தான் இதுவும்........😔.
  5. அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல. நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது. தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள். யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும். திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது. இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................
  6. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  7. 🤣........ ஒரேடியாக 24 மணிநேரமும் நகுக வேண்டும்.................. அவ்வளவு இடுக்கண்கள் இவர்களால்............. இவர்களைக் கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்குப் பதிலாக, என்னைக் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள்.......................🤣.
  8. மற்ற நாட்டவர்கள் இப்படியான ஒரு நாளை கரிநாள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.............. நாங்கள் ஒவ்வொரு நாளிலும் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, ஒரு கரித்துண்டாகவே நிற்கின்றோம்......................☹️. ஆனால் இப்படியானவைக்கும் இங்கு இந்த நாட்டில் வரவேற்புகள் இருக்கின்றன...............🫣. இன்று நடந்த நிகழ்வில் இருந்து இந்த வரி தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும் போல.............😜.
  9. பொதுவாக மேட்ச் ஃபிக்சிங் என்று அங்கே சிலர் குற்றம் சொல்லுவார்கள்.............. இந்த தடவை வித்தியாசமாக மாயம், மந்திரம் என்று சொல்லுகின்றார்கள் போல............. அவர்களில் ஒரு வீரரும் காசு கொடுத்து ஃபிக்ஸ் செய்யும் அளவுக்கு வேர்த் இல்லையும் போல..............😜.
  10. தங்களின் தோல்வி, அங்கு பெய்யும் மழை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று பாகிஸ்தான் கண்டுபிடித்துவிட்டது....................
  11. அவரே தான்...................👍. அவருடைய மகன் ஒருவரும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பு, ஆனால் வெவ்வேறு டிவிசன். பரஞ்சோதி மாஸ்டர் நல்லாத்தான் படிப்பித்தார் என்று நினைக்கின்றேன்........... எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை.................🤣. இப்பவும் இங்கே இராணுவ ஹெலிகாப்டர்கள் தாழப் பறந்து போகும் போது, பழைய ஞாபகங்கள் வரும்..................
  12. 🤣..................... அவர் அங்கே கை வைத்தார், இவர்கள் இங்கே கை வைக்கின்றார்கள்................. என்று தானே சொல்லுகின்றீர்கள். எனக்கென்னவோ சேதாரம் ஒரு பக்கம் மட்டும் தான் என்று தெரிகின்றது......
  13. 🤣.................. அங்கே எந்த அரசியல்வாதியின் பாதையிலும் பல நடிகைகள் வந்து போயிருப்பார்கள் தானே, விசுகு ஐயா....... சிலர் பகிரங்கமாகக் கூட இருப்பார்கள்................. இப்ப விஜய்க்கு கூட சொல்லுகின்றார்களே.................. கருணாநிதிக்கு, கமலுக்கு இருக்காதவர்களா......... பையன் சார், யுவர் ஆனர் என்று சொல்லிக் கொண்டே, நீதிமன்றில் (களத்தில்) கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கின்றீர்கள்............ வரப் போகின்றார்கள் காவலர்கள்.........🤣. 'விஜயலட்சுமி சரிதம்.......' முழுக்க வாசித்தேன். இதற்கு முன்னர் ஶ்ரீவித்யாவின் கதையைக் கூட வாசித்திருக்கின்றேன். கௌதமியின் கதை,........ இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. சீமான் மட்டும் தான் இப்படி இந்த விடயத்தில் மாட்டுப்பட்டு நிற்கின்றார்.
  14. அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.
  15. கார்த்திக் கதையோட கதையாக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்றும் சொல்லிவிட்டார்..................🤣. இந்திய அரசியலில் ஒரே ஒரு நடிகையால் இப்படி ஒரு தலைவரும் 15 வருடமாக இழுபட்டது கிடையாது......................... தினமும் இதே வேலையாகவே கிடக்குது..........
  16. அடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 டிரில்லியன் டாலர்கள் வரிக் குறைப்பிற்கு திட்டம் போட்டுள்ளனர். செலவில் 2.0 டிரில்லியன் குறைக்கும் திட்டமும் இருக்கின்றது. சரி, இவர்களால் செலவில் இரண்டு டிரில்லியனைக் குறைக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தக் கணக்கில் மட்டும் துண்டு விழும் 2.5 டிரில்லியன் டாலர்களுக்கு எங்கே போவது........... இன்னும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள், லலிதா ஜூவலரி விளம்பரங்கள் போல, வரும் போல....... நான் முதலில் தலைப்பை மட்டும் வேறொரு இடத்தில் பார்த்து விட்டு, ஏதோ ஒரு புதுவகை கிரெடிட் கார்ட் போல என்று போக, பிறகு தான் தெரிந்தது இது அமெரிக்கக் குடியுரிமை என்று....... எங்களின் பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. எப்பவும் ஒரு சிறியளவு காசையாவது மாதம் மாதம் எடுத்து, காசாகவே சேர்த்து வைத்துக்கொள்வார்கள். அது அவர்களின் ஒரு திருப்தி என்று விட்டுவிட வேண்டியது தான்............... நாடு போகிற போக்கில், இங்கு ஒவ்வோரு வீடாக போய், இந்த அரசாங்கம் அதையும் கேட்டு வாங்குவார்கள் போல......
  17. பையன் சார், அன்றைக்கும் இந்த ஆச்சருக்கு எதிராகத்தானே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.................... ஆச்சர் காட்சை விட்டிடுவார், ஆனால் எங்களை விடமாட்டார் போல............🤣. எப்போதும் தமிழனா அடுத்த முக்கிய அமைச்சர்.........👍.
  18. அதுவே தான் நிழலி..................... இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன். 🤣.............. அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம். நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.
  19. 🤣.................. எங்களின் நட்புகளுக்கும், எங்களுக்கும் இருக்கும் பொருத்தம் தான் உள்ளதிலேயே சிறப்பான பொருத்தம்..................🤣. 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்......' கதைகளில் வருவது போல பல கதைகள் அன்று ஊரில் நடந்திருக்கின்றது. ஆனால் என்னுடைய வட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது....... வெறும் பார்வையாளர்கள் தான்..............
  20. தலைப்பு மட்டும் தான் இன்னமும் மிஞ்சி இருக்குது..................... இந்தக் கதை நான் எழுதினது இல்லை............ 🤣.
  21. இதற்காகத்தான் கோழிக்குஞ்ச கோழிக்குஞ்சு என்று ஒரே சொல்லாகவே சேர்த்து எழுதியிருந்தனான். அப்படி இருந்தும் நந்தன் அதைப் பிரித்து விட்டார்..........🤣.
  22. கமலுக்கு தனக்கு எவை தெரியாது என்றே தெரியாது................🤣. நேற்று இங்கு Warren Buffett அவருடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வருட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கடைசியில் இப்படி ஒன்றைச் சொல்லியிருந்தார்: என்னிடம் நல்ல விளையாட்டுத் திறமைகள் இல்லை. நல்ல குரல் எனக்கில்லை. மருத்துவம் சுத்தமாகத் தெரியாது. இப்படி எந்த விதமான தனித் திறமைகளும் என்னிடம் கிடையாது. அதனால் தான் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன்..........................
  23. நான் எழுதவில்லை, அல்வாயன்................... வேறு யாரும் எழுதியிருந்தார்களோ தெரியவில்லை. உங்களுக்கும் இந்த பஸ்களை தெரிந்திருக்கும் தானே..................
  24. நல்ல பகிடி, விசுகு ஐயா.................... கமலின் மநீம அழிந்தது பற்றி ஒரு எள்ளளவு கவலை வருகின்றது தான்................ அது அழியும் என்றே தெரிந்திருந்தாலும்.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.