இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ...
2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை.
ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.
தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம்.
கனடாவில், 2021 கார்த்திகை மாதம்...
மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.
அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது"
கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது.
மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில்,
"ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்"
எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது....
தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு!
அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு!
அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு!
அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு!
மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை!
“இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது.
தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது.
தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன்.
ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி.
பாராட்டுகள் Karthick Nanthan
பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
(copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)