Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3542
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by alvayan

  1. இன்றைக்கே அமைச்சருக்கு காட் அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....
  2. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் Sri Lanka PoliceSri Lankan TamilsCanada 1 மணி நேரம் முன் Kamal in உலகம் Report Share விளம்பரம் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார். எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார். இன அழிப்பு அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி அபகரிப்பு இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/urge-canada-s-police-to-apologize-to-tamil-people-1706799112
  3. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

    Sri Lanka PoliceSri Lankan TamilsCanada
     28 நிமிடங்கள் முன்
    Share
    •  
    •  
    •  
    Join us on our WhatsApp Group
    விளம்பரம்
     

    கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.

    கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

    எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

    தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் | Urge Canada S Police To Apologize To Tamil People

    இன அழிப்பு

    அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் | Urge Canada S Police To Apologize To Tamil People

     

    காணி அபகரிப்பு

    இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார். 

  4. 8 hours ago, ஏராளன் said: தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும். விட்டிராதீங்க....இறுக்கிப் பிடியுங்க..😄
  5. அதுதான் சார் ...நீண்டகாலமாக ஊருக்கே போகாமல் இருக்கிறன்..
  6. அடப் பாவமே எல்லாப் பழியும் கானடாக்காரன் மேல்தான்....அது சரி இப்பசனம் ஏன் கனடாவுக்கு வரத்துடிக்குது என்று விளங்குது....ராசியான் நாடு போலகிடக்கு..😁
  7. இது ஒரு கனடிய பத்திரிகைகாரனின் முகநூல்...படமும் இணத்திருந்தது... என்னால் இணக்கமுடியவில்லை...அந்த பாகிஸ்தானியின் அடையாள அட்டையும் ..வேறுசில போட்டோ அட்டைகளும்..
  8. அது உங்கடை கைவண்ணம் தானே.... 6 hours ago, vasee said: தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள். 1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள். 2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி. இப்படியும் இந்த திரியில் இருக்கிறதே...
  9. வடக்கு இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சீனாவிற்கு உதவியாக பாகிஸ்தானியர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் நடமாடியுள்ளனர். இந்தளவு பாகிஸ்தானியர்கள் வடக்கில் இதுவரை நடமாடியமை கிடையாது என வடக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். சீனர்களின் நடமாட்டம் காணப்படும்போது அவர்களை இலகுவில் அடையாளம் காண முடிகிறது என்றும் அவர்கள் நான்கு சில்லு வாகனங்களிலும் உள்ளூர் மக்கள் போன்று மோட்டார் சைக்கிலும் பயணிக்கும் அதேநேரம், இலங்கை, இந்திய மக்களின் முக சாயலை ஒத்த பாகிஸ்தானியர்கள் தற்போது நடமாடுவது இலகுவில் கண்டுகொள்வதும் கடினமாகவே உள்ளது என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஆறிற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் ஏன், எதற்கு எனத் தெரியாது தங்கியிருப்பதோடு கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய சமயம், அவர்கள் பொதுமக்களால் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்த போதும் சிறிது நேரத்தில் பொலிசார் அவர்களை விடுவித்து விட்டனர். இருந்தபோதும் பல பாகிஸ்தானியர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளனர். யாழில் தங்கியிருப்பவர்கள் அடிக்கடி தமது இருப்பிடத்தை மாற்றுகின்றனர். இதேநேரம் இவர்களின் வருகை பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது அமைந்துள்ளமையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றமையினல் கொக்குவில் பகுதியில் நடமாடிய பாகிஸ்தானயர் ஒருவரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஒளிப்படம் எடுத்துள்ளனர். இதேநேரம் இவர்களுடன் இரு உள்ளூர் இஸ்லாமியர்கள் இணைந்தே நடமாடுகின்றனர். அதில் ஒருவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்தபின்பு மேற்கொண்ட சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டவர். இவர் சரளமாக உறுது மொழி பேசும் வல்லமை கொண்டவர். இவர் பாகிஸ்தானின் கராச்சியில் கல்வி கற்றதனால் உறுது மொழியும் கற்றுக்கொண்டார். இதேநேரம் யாழில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் யாழில் உள்ள இடைநிலை அரசியல்வாதகள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளபோதும் என்ன பேசினார்கள் என அறியமுடயவில்லை (பிரதி பண்ணப்பட்டது ...நன்றி ..Naga Logendralingam Facebook) இப்படியும் யாழ்ப்பாணத்தில் நடக்குதாம்..
  10. தொடர்பு இருக்கிறபடியால்தான் போட்டிருக்கின்றேன்...ஆழ்ந்து வாசித்தால் தொடர்பு தெரியு... அதுசரி... அந்த சுரேன் விடையத்தில் ...நீங்கள் 8 பக்கம் நீட்டினது எந்த கட்டக்கரியில்...அதுகூடப் பரவாயில்லை/\...அமெரிக்காவில் இருக்கிற அண்ணனே ..ஆங்கில . பரவாயில்லை..உங்கட ஆதார..பொழிப்புக்களைப்பார்த்து..தலையச் சொறிந்தது ..ஞாபகம்..இல்லையோ..😋
  11. முன்னோட்டம் ஒன்று விட்டிருக்கிறன்....முகமூடிகள் கிழியத்தொடங்கியிருக்கு...அமைதி பொன்போன்றதுதானே.....
  12. இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை. ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை. தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம். கனடாவில், 2021 கார்த்திகை மாதம்... மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார். அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது" கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது. மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில், "ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்" எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது.... தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு! அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு! அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு! அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு! மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை! “இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது. தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது. தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன். ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி. பாராட்டுகள் Karthick Nanthan பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. (copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)
  13. இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க.. ( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை) · தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது. புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள். இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு. ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.
  14. உங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........! பாராட்டுக்கள்......ரஞ்சித் .......! 👍..... கிருபன் உவ்வளவு துல்லியம்...ஆமா...இங்கு சோளங்கன்...(கரண்வாய்தான்)>.கிரிக்கட்டு ரீமுமொன்று இருந்ததில்லே..அது இப்பவும் இருக்கா..
  15. கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் TorontoCanada 2 மணி நேரம் முன் Share விளம்பரம் கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டனம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனேடிய தமிழர் பேரவை கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. https://ibctamil.com/article/canadian-tamil-congress-toronto-office-fire-attack-1706632055
  16. வலியுணர்ந்த்தவருடன்....வலியடைந்த இடத்தில்....வலியை இன்றும் சுமந்த நீங்கள் ..அனுபவித்த வேதனையை ...அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்....புலம் பெயர்ந்து வாழ்த்தாலும்...விடுதலை உணர்வு...கடுகளவேனும் குறையாத உணர்வுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் அய்யா... தொடர்க உங்கள் ..வரலாற்றுப்பயணத்தை...என் வாழ்நாளில் இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதே எனது ஏக்கம்.. சிறப்பான எழுத்துநடை.. தொடர்க.
  17. அட இது இலங்கையில் நடந்ததாமே....அப்ப இந்த இனம் இலங்கையில் பலஸ் தீனத்திற்கு சத்தம் போடுவது நடிப்புத்தானா? (ஏன்னுடைய முகபுத்தகத்தில் வந்ததில் பிரதி பண்ணியது...) மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் கோயில் கட்டுவதெல்லாம் மனித குலமே வெட்கித் தலை குனியும் செயல். ஆனால் அதைக் கேட்டு தமிழீழத்தில் தமிழர் வழிபாட்டுத் தலங்கள், பண்பாட்டு அடையாளங்களை அழித்து விட்டு அந்த இடத்தில் பவுத்த விகாரைகளைக் கட்டும் அரச பயங்கரவாதத்தோடு ஒத்தோடும் சில தமிழர்களும், தென் தமிழீழத்தில் ஏராளமான சைவ ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டு உதாரணத்திற்கு சம்மாந் துறை காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல சைவக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) மாற்றி வைத்திருக்கும் தீவின் முஸ்லிம்களும் புலம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நல்லா இருக்கடா உங்க நியாயம்?
  18. மீன் இறக்குமதி செய்தாயிற்று..பில்லு கையில் வந்திட்டுது...அரசகாசும் ..மீன் கழிவகற்றினகாசும் அமைச்சரிடம் வந்திருக்கும்....அவர் மில்லியனேயர்....இதுதான் இலங்கை..
  19. உங்க கட்சியிலா ..அல்லது நாட்டிலா...விளக்குங்க.. அய்யா..
  20. பயணக் கதை நன்றாக தொடர்கிறது.... வாழ்த்துக்கள்
  21. சிங்கன் விளையாட்டுபிள்ளை...8 வருசத்துக்கு ஒன்று...இன்னமும் 2 தாரத்துக்கு பலன் இருக்கு..
  22. விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ....ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!...சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
  23. இந்த உண்மை உங்கள் வாயால் கேட்டதில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்...நன்றி நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.