Everything posted by alvayan
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
நானும் ஒரு அடிவிட்டன்
நன்றிங்க...உங்கள்..ஆரோக்கியமன ரசனைக்கு...இந்தமுறை...ஆண்டுவிழா மலரை ஒரு கை பாக்கிறது என்றுதான் இருக்கிறன்😁
-
நானும் ஒரு அடிவிட்டன்
நானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக்கு… அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல் அடித்தவனோ..இல்லை கோல் அம்பயர் ..மறுக்க அடிதடி… கோலிக்கு நின்ற எனக்கு கோபத்தின் உச்சம்… கோதாரி விழுந்தது.. கோலிக்கு நின்ற நான் ஹோலி யாகமாறி.. ஆறடி அம்பயரின் பிடரியில் அசத்தலான அடிவிட்டேன்.. ஆட்டமே அல்லோல கல்லோலம் அம்பயர் சொன்னார் ஆரடித்தாலும் பரவாயில்லை அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர் அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை.. அந்த பொலிசு அதிகாரியும் அம்பயர்…என் மைத்துனன் அவனை என் கண்முன்னால் அடித்த அந்த பிளேயர் ஆரென்றாராம்… ஆரவாரம் இப்ப டி இருக்க.. ஆட்கள் என்னைப் பிடித்து அலிஸ்பாண்டையும் பறித்து ஆளையும் உருமாற்றி அல்வாயுக்கு அனுப்பிய கதை.. அப்புறம் ஆறடி அம்பயர் என்றால்.. அந்தப் பக்கமே அடியேன் இல்லை…
-
வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் இல்லை : பௌத்த மரபுரிமைகளை மீறினால் கைதுகள் இடம்பெறும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வெடுக்குநாறிமாலையில் இரவு 08 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னரே 08 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும். இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். யாழின் நல்லிணக்க வாதிகள்...ஓழிந்து கொள்ளாமல் முன்வந்து உங்கள் ஆதரவைத்தரவும்..
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து நன்றாக இருக்கட்டுமே...
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
யார் குத்தினாலும்..அரிசி ஆமால் சரி....இருக்கவே இருக்குது..புலப்பெயர்வுக்கு கனடா...
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..
-
என் இந்தியப் பயணம்
இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அட இப்படியொரு பிரச்சினை இருக்கா....அப்பநான் நினைக்கவே முடியாது.. நல்லாகப் போகிறது....தொடருங்கள்..
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
அதை அவர் கையிலை வைத்திருக்கிறார்...சொச்சக் கணக்கு கேட்டால் போட்டுக் காட்டுவார்..🙃
-
என்னோட சாதி..
இவ்ருக்கு மட்டுமல்ல ..பல யூத் டியூப்பர்களுக்கும் கொமன்சில் இந்த சாதியைப் போட்டபடியே இருப்பார்கள்...அவர்கள் அதனை அசடடை செய்தபடியே கடந்து செல்வார்கள்....ஆனால் இவரோ ஓவர் பீலிங் செய்கின்ற மாதிரிப் பேசுகின்றர்....இது அழிக்கமுடியாத அடையாளமாய் எமது சமூகத்தில் புரையோடியுள்ளது....இவ்ர் அதனை அசட்டையாய் விட்டு கடந்துபோவதே நல்லது...கஸ்டப்பட்டு பாடி அவ்வார்டு எடுத்த கில்மிசாவே இப்படியொரு தாக்குதலுக்கு உள்ளான குழந்தை...சிலரை மாற்ற்வே முடியாதே..
-
தம்பி நீ கனடாவோ..?
உங்களுக்குத் தெரியுமோ..அப்ப ஒருகாலத்திலை.வடமராட்சிப் பகுதியிலை..எந்த ஒரு ஒழுங்கையில் நின்று வாத்தியார் என்று கூப்பிட்டாலும்...ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஓம் என்று குரல் கேட்குமாம்...இப்ப ..கனடாத் தம்பி என்றால் .. அதே நிலைதான்....இது வளர்ச்சி அய்யா...நக்கல் அல்ல...ஏனெனில் என்வீட்டிலே 3 வந்தாச்சு...இன்னும் 2 வெயிட்டிங்...😎.. நன்றி வரவுக்கு நூடில்ஸ் ஆவது நோகாமல் இருக்குக் ..இது கொத்துரொட்டி அய்யா... நன்றி வரவுக்கு நன்றி உங்கள் ரசனைக்கும் ...அனுதாபத்திற்கும்
-
என் இந்தியப் பயணம்
--------- இலிருந்து 60 வரை என்று போடலாமா? உவ்வளவு நினைவாற்றலுடன் கோர்வையாய் கொண்டு செல்கின்றீர்கள்... தொடருங்கள்....
-
தம்பி நீ கனடாவோ..?
நன்றி suvy....உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்..
-
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்த அமைச்சர்கள் - வவுனியாவில் அனுரகுமார
மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு இதுதான் தமிழரின் தலையாய பிரச்சினை போல் தெரிகிறது...
-
தம்பி நீ கனடாவோ..?
நன்றி தங்கள் வருகைக்கும் ...கருத்துக்கும்... புங்கையூரன்....நிலாமதி... உண்மை நிலாமதி...என்வீட்டிலேயே இதுதான் நிலமை.. முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.
-
தம்பி நீ கனடாவோ..?
தம்பி நீ கனடாவோ? வருடங்கள் உருண்டு விட்டன வயது போகுமுன் வருவேன் ஊருக்கென்று வாக்குக் கொடுத்தேன் வந்து இறங்கியும் விட்டேன்… வடிவான ஊராகிவிட்டது நம்மூரு.. வலம் இடம் தெரியவில்லை… வடிவான வீடும் ஆட்களும் வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு வாய் நிறைந்த சிரிப்புடன் வணக்கமும் சொன்னேன்.. வந்தார் கந்தையா அண்ணர் வயதும் வட்டுக்கை போயிட்டுது வந்தவுடன் கேட்ட கேள்விதான் வயித்தை கலக்கிப் போட்டுது விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன் கனடாவில் நிக்கிறான் கண்டனியோ… போத்தல் தண்ணி குடித்து தவண்டை அடித்த வாய்க்கு… கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக…. கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா.. ஆறுமுகத்தின்ரை மருமோன் விசிட்டர் விசாவிலை வந்தவர்…. வேலை கீலை ..செய்யிறாரோ…. பொட்டுக்கடை பொன்னையர் வீட்டடியால் போகையில் பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான் அண்ணை ..அண்ணை… அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர் வன்கூவரில்தான் ..இருக்கிறார்… அவர் எப்படி அண்ணை இருக்கிறார்.. பந்தடி வெட்டைக்குப் போகவும் பயமாக்கிடக்கு.. படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும் கூச்சமாக் கிடக்கு பள்ளித் தோழரையும் காணப் போகவும் பயமாக்கிடக்கு.. பலகால ஆசை….சொந்தங்கள் பந்தங்கள் ….காணுகின்ற ஆசை கனடா விசிட்டர் விசாவால். பாதியில் முடிந்ததுவே… ஏனென்று…கேட்பியள் முப்பது வருசம் முந்தி வந்த என்னிடம்.. மூத்தவனின் பேரனைத்தெரியுமோ மருமோனைத் தெரியுமோ வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால் நான் என்ன சொல்லமுடியும்… தம்பி நீ கனடாவோ என்ற கேள்வி வருமுன்… பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..
-
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
ஈழத்து + புலம்பெயர்ஸ், அப்ப நீங்கள் ஈழத்து புலம் பெய்ர் தமிழன் இல்லையென்றால் ஏன் யாழில் வந்து எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்கிறியள்.... அறியலாமா...பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாதல்லவா. சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமாமூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄
-
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 9 இலட்சம் ரூபா கடனாம்!
இப்பதானே அம்மணி ..க..பயிரிட ஆரம்பித்திருக்கிறா...அதுக்கிள்ளை போய் கடனைக் கேட்கிறிங்களடா?
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
கேள்வியின் நாயகனே ...என்கேள்விக்குப் பதில் ..என்னையா.....ஐயா நான் பாட்டுத்தான் பாடியிருக்கின்றேன்...அவ்வளவே...
-
தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன
புட்டுக்குழல் ஐஸ் கிறீ ம் வந்திட்டுது...வடக்கில் அது சாப்பிட்டால் கெத்து...இனி நீத்துப்பெட்டி ஐஸ் கிறீமும் வரும்....பலூடா வகை வகையாக....அப்ப சீனி வருத்தம் கூடுமோ கூடாதோ..
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாமியர்...இது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றதுதான்...இது..
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு - காபன் பரிசோதனைக்கான செலவீனம் தொடர்பில் அவதானம்
திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது. இந்த காசெல்லாம் எடுத்து விகாரை கட்டத்தானே பாவிப்பீர்கள்... கூடக்கேளுங்கோ...😁
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இல்லை சும்மிடம் அறவே கிடையாது...முழுப் பதவிமோகமும் ..பணத்தாசையும்தாசையும் உண்டு...தமிழரசுக்கட்டிசியை இயங்கா நிலைக்கு ஆக்கியது...அம்மா செத்து 10 நாள் ஆகுமுன் நரியுடன் சேர்ந்து கிரிக்கட்டு பார்த்தது...அதன் பலன் இன்று தனிப்பட்ட அழைப்பில் ஐ. எம் .எஃப்... மீட்டிங்கில் கலந்து கொண்டது...இதன்மூலம் ..பெரும் பணம் பெற்றிருப்பார்..அது அவர் உழைப்பு..உதைப்பு நம்மினத்திற்கு என்பதை கிஞ்சித்தும் யோசிக்க மாட்டார்....அதுசரி ..சுமாவுக்கு முட்டுக்கொடுப்பதில் கரிசனை உள்ள நீங்கள்.... இட்டிலிக்கு சட்டினி மாதிரி..அடிக்கை தமிழினத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பதிவையும் போட்டு நல்லவனாக நடிக்கிறீங்களே ... இது என்ன டிசைனுக்குள் வருகிறது சார்.. சொல்லமுடியுமா
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
படத்தில் அவரின் கையசைவில் தெரியவில்லையா ..இன்னும் கொடுக்கவில்லையென்று
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாமியர் பச்சை முடிஞ்சிட்டு...என்னுடைய பாராட்டுக்கள் நிழலி...அழுத்தமான் கருத்து..நன்றி.