-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
அணு சக்தி இன்றைய உலகிற்கு முக்கியம் தேவையானது. அதை மிக பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எரி சக்தி விடயத்தில் ஜேர்மனி நடுத்தெருவில் நிற்பது போல் வேறு எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்பதால் எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன். 😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
ஈழத்தமிழர் விடயமாக நீங்கள் ஆதரிக்கும் அல்லது முன்னுதாரண அரசியல்வாதி யார்? இப்படியா? ஆரத்தழுவி அரவணைத்து செல்வதும்.....கருவாடுகளை ஏற்றுவது போல் ஏறுவதும் உங்களுக்கு நியாயம் என்றால்........?
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்கள உறவுகளை கருத்து சொல்லும் படி அழைத்தது நீங்கள். அதற்கு பதில் நாகரீகமாக பண்பாக எழுதியுள்ளேன்.அதே போல் சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியின் முக்கிய நபர். அதனால் அவரின் மறு பக்கத்தையும் எழுதினேன். மற்றும் படி உங்கள் மன பக்குவத்திற்கு ஏற்ப கருத்துக்கள் சொல்ல ஏதுமில்லை.
-
வணக்கம்.
வணக்கம் சகோதரம் வாங்கோ. சுகங்கள் எல்லாம் எப்படி? கண்டு கனகாலம்.
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா? இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா? சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.
-
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
உலகம் முழுவதும் தீப்பெட்டி அளவில் இலையான் மாதிரி திரியும் இந்த வாகனங்களை தடை செய்ய 50வீத சுற்ற சூழல் மற்றும் காற்றின் தரமும் அதிகரிக்கும்.
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை எதிர்த்த/எதிர்க்கும் சுமந்திரனை தோளில் சுமந்து திரிவது கேவலத்திலும் கேவலம். கடந்த 10 வருடங்களில் சுமந்திரர் ஈழத்தமிழர் சம்பந்தமாக என்ன செய்தார் என கேட்டுப்பாருங்கள். அனைவரும் அந்த நிமிடம் தொடக்கம் பல நாட்களுக்கு கோமா நிலைக்கு சென்று விடுவர்.🤣
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
எனக்கு சிங்களவன் எவ்வளவோ மேல் என உணர்வை ஊட்டியவர் கவி அருணாச்சலத்தின் சிரித்திரன்கள் என்பது பலருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாதியற்று நடு வீதியில் நிற்கும் ஈழத்தமிழனுக்கு .... இப்படிப்பட்ட கேலி சித்திரங்கள் இன்னும் வேண்டும். இஸ்டாலின்,கோத்தபாய கொம்பனிகள்,அனுர போன்றவர்களின் கேலிச்சித்திரங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பாரம்பரியங்கள் சில காலத்திற்கு காலம் மாறும். ஆனால் பழமையானவைகள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அதை அழிக்கவே கூடாது.இது பற்றி மேலைத்தேய வன,மர பாதுகாப்பு நிறுவனங்களிடம் இவர்கள் பாடம் படிக்க வேண்டும். நவீனங்கள் இன்றைய உலகிற்கு அவசியமானது. அது பழமைகளை அழித்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்மை நாமே குழிக்குள் தள்ளுவதற்கு சமம். மற்றும் படி..... சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்பவர்களே பல விட்டுக்கொடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கும் போது.... அதே அவர்கள் பாமரன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பதும் ஒரு வித மேட்டுக்குடித்தனம்.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பிரபாகரனை பற்றி கொஞ்சம் இழுத்து விட்டது உங்களுக்கு பிடிக்கேல்ல போல.....😎 யார் யாரெல்லாம் பிரபாகரனையும் ,போராளிகளையும்,மாவீரர்களையும் போற்றி பாடவேண்டும் என ஒரு வரையறை வைத்திருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அந்த பட்டியலை இங்கு இணைத்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உதவியாக இருக்கும்.😋
-
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!
அரச செலவில் ஒரு தெய்வீக வழிபாடு......சிறப்பு. 😎
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
பழைய கனவில் இன்றும் இருக்கின்றார்கள் என்பது கிந்தியின் கடந்த 10 வருட ஸ்ரீலங்கா மீதான அரசியல் அம்மணமாகவே தெரிகின்றது. சிங்களத்துடன் ஒத்து ஓதிக்கொண்டே இருப்பார்கள். சிங்களம் கொஞ்சம் சீனா பக்கம் நகர்ந்தால் அல்லது வேறு வழிகளை தேடினால் கிந்தி உடனடியாக தமிழர் பிரச்சனையை தூக்கிப்பிடித்து தங்கள் அரசியல் லாபம் தேடுவது.. இதுதான் காலம் காலமாக நடக்கின்றது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வெளியேற்றம் பற்றி தலைவர் அறிக்கை விட்ட பின்னரும்.... முஸ்லீம்களின் வெளியேற்றம் இன சுத்திகரிப்பு என சமாந்திர சுமந்திரனார் அறிக்கை விட்டதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லையோ? 😂
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
சிங்களம் எந்த தீர்வையும் தர தயாரில்லை என அன்றே தலைமைப்பீடத்திலிருந்து சொல்லப்பட்ட வாக்கியம். அதை விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து முன்னேற்றம் முன்னேற்றம்,மாற்றுவழி என விலகியவர்களாலும் எதனையுமே இன்றுவரை சாதிக்க முடியவில்லை.நீங்களோ அதே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கின்றீர்கள். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முன் சிங்களம் சர்வதேசத்திற்கு புலிகள் இல்லையென்றால் நாங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என ஒரு வாக்குறுதி கொடுத்ததாக தகவல் உண்டு.