குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
Everything posted by குமாரசாமி
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
உப்பிடித்தான் உங்கை/இஞ்சை எண்டு கனபேர் பொதுவெளியிலை சாமியும் இல்லை சாம்பிறானியும் இல்லை எண்டு முழங்கிப்போட்டு வீட்டுக்க போனால் கப்சிப்.😂 சினிமா பாட்டுக்கள் கேட்பதில்லையோ? எதுக்கும் குசினிக்கை போய் புட்டுக்குழல் எந்த நாட்டு தொழில்நுட்பம் எண்டதை ஒருக்கால் பாருங்கோ 🤣
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
எல்லாருக்கும் முன்னுதாரணமாய் வெளிநாட்டில் வசிக்கும் வடமராட்சி மக்கள் பணம் சேர்த்து இரண்டு பேரூந்துகளை வாங்கி அன்பளிப்பு செய்தால் என்ன?😎
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
புலம்பெயர் தேசங்களில் இன்றும் மணமகன் மணகள் இன்ன இன்ன சாதி என்று குறிப்பிட்டுத்தான் வரன் தேடுகின்றார்கள். நாகரீகமடைந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளே இந்த மனநிலையில் இருக்கும் போது......அந்த மண்வாசனை சும்மா விடுமா?
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂 உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
நீங்கள் வெள்ளை பெயின்ற் வாளியும் கையுமாய் திரிஞ்சாலும் அப்பப்ப பல்டி அடிக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...பிடிச்ச பிடியை விடாதேங்கோ 😂 பெயின்ற் வாளிய சொன்னனான்..😎
-
விமர்சனம் : இட்லி கடை!
உந்த சின்ன வயசிலையே ஆள் பெரிய கில்லாடி போல கிடக்கு... படமெல்லாம் வாங்கி விக்க வெளிக்கிட்டாச்சு.... அடுத்தது நடிப்பு துறையிலையும் இறங்கிடுவார்....😂
-
“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்
சினிமாக்காரன் இல்லை என்றால் தமிழ்நாட்டு அரசியல் அசையாது அரங்காது என்பது தம்பியருக்கு இன்னும் தெரியேல்ல போல... கரூரில் விஜய்யண்ணாவுக்கு திரள் திரளாய் படையெடுத்து வந்த வாக்காள பெருமக்கள் சிறப்புகளை இன்னும் கண்ணில் படவில்லையாக்கும்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்☹) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது. இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை. நிலைமை இப்படியிருக்க.... சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா? சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமானுக்கும் விஜயலச்சுமிக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை பல வருடங்களாக இருந்துள்ளது. இங்கே பாலியல் குற்றம் ஏதுமில்லை.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் குடும்பம் நடத்தியுள்ளனர். இங்கே சீமான் அசிங்கப்பட வேண்டிய அவசியமில்லை. பொதுவான மனிதர்கள் வாழ்க்கையில் இது சர்வ சாதாரணம். ஆணும் பெண்ணும் திருமணத்தை நோக்கியே பல வருடங்கள் கூடி வாழ்வார்கள். இடையில் மன முறிவுகள் ஏற்பட்டால் பிரிந்து செல்வது இயல்பான நடவடிக்கையே. விஜயலச்சுமி அவர்கள் வேறு அமைப்புகளின் உந்துதலால் பொது வெளியில் அசிங்கமாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் உங்களை போன்றவர்களுக்கு சரி என்றால்......சீமான் உங்கள் மதிப்பிற்குரிய விஜயலச்சுமியை விட்டு விலகியதும் சரியே.
-
“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்
சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கின்றார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் எக்காலத்திலும் உணரமாட்டார் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகின்றது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது. தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.
-
அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை
நல்ல விடயம். பொலித்தீன் பாவனைகளை ஓரளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும். அறவே பொலித்தீன் பாவனையை ஒழிக்க முடியாது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂 சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விஜய் அவர்கள் மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தட்டும்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎
-
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
20 நிபந்தனைகளை கொண்டு வருவதற்காக தான் அவசரம் அவசரமாக 65ஆயிரம் அப்பாவிகளை பலியெடுத்தார்களா?
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் வந்துதான் ஜோதிட தொழில் பார்க்கின்றனர். முக்கியமாக சுவீஸ்,ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த இந்திய ஜோதிடர்களை காணலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமாக் சொல்வார்கள்.😂
-
சிரிக்கலாம் வாங்க
அவசரத்திற்கு என்னை பயன்படுத்துங்கள்...☝ ஆரோக்கியத்திற்கு என் குருநாதரை பயன்படுத்துங்கள்...👇
-
எனது மரணச்சடங்கு.🖤
என் இறுதி சடங்கிற்கு வருபவர்களுக்கு இனிப்பு கலந்த நீராகங்கள் வழங்க வேண்டும். அந்த நேரத்தில் இந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும்.❤️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அனைவருக்கும் ஆயுத பூஜா வாழ்த்துக்கள்.😎
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
யாருக்கு எந்த நேரம், எப்படி,என்ன நோய் வரும் என்ற அச்ச காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
நடந்தது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல.காவல் துறையை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருப்பதற்கு. சர்வ சாதாரண தேர்தல் பிரச்சார கூட்டம்.சினிமா கவர்ச்சியால் கடவுள் மாதிரி திரிபவர்கள் அரசுடன் தொடர்பு கொண்டு சொந்த செலவில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இன்றைய கால தமிழ்நடிகர்களின் அளவிற்கு மீறிய பில்டப்பால் அவர்களை எனக்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் கருவூர் சம்பவத்தின் பின்னர் அஜித் ஒரு தீர்க்கதரிசியாக எனக்கு தெரிகின்றார்.ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்தை நன்றாகவே நாடி பிடித்து பார்த்திருக்கின்றார். ரசிகர் மன்றமும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை.எனது படத்தை பிடித்தால் பார். இல்லையேல் உன்ர வேலையை பார் பீலிங்....😎
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!