Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பணம் பலதும் செய்யும்! தனது வாதத்திறமையை காட்டினார் சிறீகாந்தா - சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளி விடுதலையானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Srikathi-200_1.jpg

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்க விட்டுள்ளார்.

பாலியல் குற்றவாளிகளை பெரும் தொகைப் பணத்தை பேரம் பேசி எடுத்து பாலியல் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தே ஆவேன் என ஊடகவியலாளருக்கு சலால் விடுத்திருந்தார்.

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இச்சந்தேக நபர் மீதான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றசாட்டில் இச்சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பிலான பொலிஸாரின் புலன்விசாரணைகள் முடிவடைந்துள்ளது எனவும் அவரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க வேண்டாம் என சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா வாதாடினார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.சுகாஸ் மற்றும் மணிவண்ணன் ஆஜராகி சந்தேக நபரின் குற்றங்கள் பாரதூரமானது இவரைப் பிணையில் விடுதலை செய்தால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்பு இருப்பதாக தனது வாதத்தில் சுட்டிக் காட்டினார்.

இருவரின் வாதங்களைக் கேட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசாராச இதனை அடுத்து சந்தேக நபரை நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்யதார்.

சந்தேக நபர் 50,000 ரூபா காசுப்பிணையிலும் தலா 300,000 ரூபா மூன்று ஆட்பிணையிலும் ஆட்பிணையாளிகள் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் ஒரு ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் தானே வந்திருக்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகவில்லை தானே..!

அதுவும் ஓரளவு கடும் பிணை நிபந்தனைகளுடன்...

சந்தேக நபர் 50,000 ரூபா காசுப்பிணையிலும் தலா 300,000 ரூபா மூன்று ஆட்பிணையிலும் ஆட்பிணையாளிகள் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் தானே வந்திருக்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகவில்லை தானே..!

அதுவும் ஓரளவு கடும் பிணை நிபந்தனைகளுடன்...

நெடுக்கர், குற்றத்தைக் கவனியுங்கள்!

பதின்மூன்று வயதுக் குழந்தையுடன், பாலியல் வல்லுறவு!

இவர்களுக்கெல்லாம் பிணையக் கூட நியாயப் படுத்தக் கூடாது!

கோகிலாம்பாளுக்காக வழக்காடிய சிவசிதம்பரம் காலத்திலிருந்து, இன்று வரை அந்த வர்க்கத்தின் அடிப்படை எள்ளளவும் மாறவில்லை என்பதையே, இந்தச் சம்பவம் காட்டுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

கோகிலாம்பாளுக்காக வாதாடியது சிவசிதம்பரம் இல்லை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோகிலாம்பாளுக்காக வாதாடியது சிவசிதம்பரம் இல்லை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.

ஆனால்.. ஜி ஜி பொன்னம்பலம் எல்லோ வெண்டது என்று சொல்லுறாங்க நம்ம பெரிசுங்க..!

யாருக்காக யார் வாதாடியது என்று தெளிவாகச் சொன்னால் நல்லா இருக்கும்..! :)

நெடுக்கர், குற்றத்தைக் கவனியுங்கள்!

பதின்மூன்று வயதுக் குழந்தையுடன், பாலியல் வல்லுறவு!

இவர்களுக்கெல்லாம் பிணையக் கூட நியாயப் படுத்தக் கூடாது!

கோகிலாம்பாளுக்காக வழக்காடிய சிவசிதம்பரம் காலத்திலிருந்து, இன்று வரை அந்த வர்க்கத்தின் அடிப்படை எள்ளளவும் மாறவில்லை என்பதையே, இந்தச் சம்பவம் காட்டுகின்றது!

சில சட்டத்தரணிகள்.. பண வருவாய்க்காக எதனையும் செய்வார்கள். அது அவர்களின் தொழில். அவர்களிடம் போய் நாங்கள் நியாயம் அநியாயம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

உண்மையில் இது பாரதூரமான குற்றம் தான். இந்த நபர் பிணையில் வந்திருந்தாலும்.. மனித உரிமை அமைப்புக்கள்.. பெண்கள் அமைப்புக்கள்.. சமூக அமைப்புக்கள் இவரின் விடுதலையைக் கண்டிக்கலாம். இவருக்கு பிணை வழங்கியதால் இவரால் இன்னும் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது என்ற அடிப்படையில் பொதுநல வழக்கையும் தாக்கல் செய்யலாம்.

எனவே சட்டத்தரணி 8 அடி பாயுறாணுன்னா.. நாங்கள் 16 அடி பாயனும். அதைவிட்டிட்டு..ஐயோ.. அவனைப் பார்.. ஈவு இரக்கம் இல்லாதவனுன்னு திட்டிக் கொண்டு நிற்பதால் அவர்கள் மாறப் போறதில்லை..! சட்டம் என்பது ஒன்றும் சட்டத்தரணிகளுக்கு மட்டுமானதல்ல. மக்கள் நாங்களும் அதனைப் படிச்சு விளங்கி பாவிக்கலாம். பாவிக்கிற அறிவை வளர்த்துக்கனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோகிலாம்பாளுக்காக வாதாடியது சிவசிதம்பரம் இல்லை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.

நன்றிகள், இளஞாயிறு!

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினரான... மறைந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களை, ஸ்ரீலங்கா கொலை செய்த பின் தான்....

அந்த, இடத்தை நிரப்ப வந்தவர் சிறீக்காந்தா. மனச்சாட்சி இருந்தால்.... மாமனிதர் ரவிராஜின் ஊரின் பெயரைக் கூட... கெடுக்காமல் இருந்திருக்கலாம்.

பொங்கு தமிழ் கணேசலிங்கம் கேஸ் என்ன மாதிரி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் எல்லாம் ஒரு ஜென்மங்கள்.

மன்னிக்கோணும்......உப்பிடி பாக்கப்போனியளெண்டால் தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி.காங்கிரஸ் கட்சி எண்டு எல்லாத்திலையும் இருந்த அநேக எம்.பி மாரேல்லாம் லோயர் வேலைதான் செய்தவை......அதிலையும் ஜீ.ஜீ பொன்னம்பலம் மேடர்கேஸுக்கும் பாலியல் வல்லுறவுகேஸுக்கும் பேர் போனவர்.....எல்லாமே கள்ளர் கூட்டங்கள் தான்..........

யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசாராசவிற்கு ஏன் தெளிவில்லாமற் போயிற்று?

  • கருத்துக்கள உறவுகள்

60களில் 70களில் கூட்டணி, தமிழ் காங்கிரசு உறுப்பினர்கள் பலர் வாதாடுவதிலும் சட்ட நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற வலக்கறிஞர்களாக இருந்தார்கள். இவர்களின் வாதத்திறமையினால் சில குற்றவாளிகள் தண்டனையில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். காசுக்காக நியாயத்துக்கு எதிராக சில வலக்கறிஞர்கள் அக்காலத்தில் நடந்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்தா இதுபோன்ற ஈனச் செயல்களுக்கு துணை போகத்தான் லாயக்கு என நிரூபித்துள்ளார்!

டெலோ கும்பலின் கைங்கரியங்கள் இப்படித்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.