Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எம் பிக்களின் இலங்கைப் பயணம் வெறும் கண்துடைப்பு -ஜெ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்.

ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது.

இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக எம்.பி. ரங்கராஜன் இலங்கை செல்கிறார்.

இதையடுத்து டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி. ரபிபெர்னார்ட் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெறுவார் என்று டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய எம்.பி.க்கள் குழுவில் ரபிபெர்னார்ட் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த குழுவில் இருந்து அதிமுக எம்.பி. செல்லமாட்டார் என ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும், ‘’இந்த சந்திப்பு வெறும் கண் துடைப்பாகத்தான் அமையும். ஈழத்தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு.

இப்பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த பயணம் ஏதோ ஒரு சுற்றுலா பயணமாகவே அமையும். எனவே இப்பயணத்தில் அதிமுக இடம்பெறாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி:நக்கீரன்.கொம்

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுடன் விருந்துண்பதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வரும் ஏப்ரல் 16 நாள் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் கொழும்பு செல்லவுள்ளது.

21ம் நாள் வரை அங்கு தங்கியிருந்து, இவர்கள் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.

இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை இந்திய வெளிவிவகார மற்றும் நாடாளுமன்ற அமைச்சுக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்தக் குழுவில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னார்ட் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா செல்லும் குழுவில் அதிமுக உறுப்பினர் இடம்பெறமாட்டார் என்று அறிவித்துள்ளார்.

“சிறிலங்கா பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது.

பாரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை.

அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த பயணம் ஏதோ ஒரு சுற்றுலா பயணமாகவே அமையும்.

எனவே இந்தப் பயணத்தில் அதிமுக இடம்பெறாது.“ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120411105978

இதில் இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது.

பாரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

http://www.puthinapp...?20120411105978

தயவு செய்து செய்திகளை இணைப்போர், எழுத்து பிழைகளை கண்டு திருத்துங்கள். முக்கியமாக வேறு அர்த்தங்களை உடைய எழுத்து பிழைகளையாவது உடனடியாக திருத்தி இணையுங்கள்.

***** போரினால்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவின் விருந்தில் இந்திய எம்.பிக்கள் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பில் விளக்கம் இல்லாத நிலையில் இலங்கை செல்லும் இந்திய எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பி.,க்கள் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எம்.பி.,க்கள் குழு ராஜபக்ஷே அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் என தெரிகிறது. எனவே இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என கூறியுள்ளார். இதனிடையே இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குழு சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்கிறது.

இந்தக் குழுவில் சுஷ்மா சுவராஜ்(பா.ஜ.,), ரவி பெர்னார்ட்(அ.தி.மு.க.,), டி.கே.எஸ்.இளங்கோவன்(தி.மு.க.,), சித்தார்த்மொகபத்ரா(பீஜூ ஜனதா தளம்), சைலேந்திர குமார்(சமாஜ்வாடி), ஹல்தார்( திரிணமுல் காங்கிரஸ்), ஜேசுதாஸ் சீலம்(காங்.,), எம்.கிருஷ்ணசாமி(காங்.,), சுதர்சன நாச்சியப்பன்(காங்.,) மாணிக் தாகூர்(காங்.) என்.எஸ்.வி.சித்தன்(காங்.,), டி.கே.ரங்கராஜன்(சி.பி.எம்), பல்பீர் பஞ்சி ( பா.ஜ.,) பிரகலாத் வெங்கடேஷ்ஜோஷி, சிவானந்த் திவாரி ஆகியோர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாக்கு, காலணிகள், வைர காதணிகள், தங்க காஞ்சிபுரங்கள் என்றால் கொள்ளை ஆசை.

பரிசில்கள் அனுப்பி நன்றி பாராட்டலாம்.  

ஜெயா செய்திகள் இப்போ பார்த்தேன்.மிக தெளிவான காட்டமான அறிக்கை ஒன்றை ஜெயலலிதா சமர்பித்திருக்கின்றார் ,ஒரு சமூக ஆர்வலர்கள் இல்லை பத்திரிகையாளர்கள் இல்லை வெறுமன இலங்கை அரசின் விருப்பிற்கு சுற்றுலாவிற்கும், ராஜபக்சாவுடன் விருந்திற்கும் போக முடியாது,இது இலங்கையை உலகிற்கு நல்லாதாக காட்ட இந்தியா போடும் நாடகம் என்று சொன்னார் .

முதலமைச்சர் நடவடிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் என்ன செய்வாரோ தெரியாது, இப்போது நடந்துகொள்ளும் முறைக்கு முதலமைச்சர் நடவடிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ எங்களுக்கு நல்லது நடந்தால் சரி........அதுதான் ஈழவிரும்பிகளின் ஆதங்கமும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.