Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருனாநிதியின் துரோகம்.

Featured Replies

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று ஜெயா டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள்.

* ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன்.

அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று கூறித்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கியிருக்கிறது என்றார்.

இது சோனியா காந்திக்குக் கூட தெரியுமே என்றார். இதையடுத்து சோனியா காந்தி அம்மையாரிடிம் சென்று கேட்டேன். அவரும் பிரதமர் சொன்னதையே கூறினார்.

எங்கள் எம்.பிக்களையும் தங்கள் கட்சி எம்பிக்கள் என்று கணக்கு காட்டி, எங்களை அடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கியுள்ளது திமுக.

எங்களது எம்.பிக்களையும் சேர்த்துத்தான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிய விஷயம் பற்றி திமுகவிடம் நான் இதுவரை பேசவில்லை.

நான் ஜீரணித்துக் கொண்டேன். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் எம்.பிக்களைக் காட்டி அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்களே, அப்படி என்றால் யார் யாருக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்?

நாங்களா துரோகம் செய்திருக்கிறோம்? தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்து கொண்டே கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக் கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இதை நான் எந்த இடத்திலும் சொல்ல முடியும். இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுடன் வைகோ எப்படி பேச்சு நடத்துகிறான் என்று கேட்கிறார்கள். ஒரு திறந்த புத்தகமாகத்தான் எங்கள் இயக்கத்தின் அணுகுமுறையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பொதுக்குழுவிலும் அதைத்தான் சொன்னேன். நீங்கள் இப்படி நடத்துவீர்களேயானால் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று டாக்டர் கலைஞரிடமும் சொன்னேன்.

* முரசொலி மாறனின் இறுதிச்சடங்கிலே பெசன்ட் நகரிலே கலந்துகொண்டுவிட்டு வாஜ்பாய் இந்த பக்கம் விமானத்தில் ஏறி போகிறார்.

அவருக்கு டாட்டா காண்பித்துவிட்டு அதற்குப் பிறகு காங்கிரசுடன் உடன்பாடு வைக்க போய்விட்டார்கள் என்று கூட நான் சொல்லவில்லை. அந்த காலகட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று டாக்டர் கலைஞர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள முக்கியமான தலைவர்கள் என்னிடத்திலே சொன்ன உண்மை. இப்போது கூட்டணி காரணமாக வெளியில் சொல்ல மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்று 2003-ம் ஆண்டு பிற்பகுதியிலேயே தொடங்கவிட்டார்கள். இப்படிதான் கூட்டணி வரும் என்பது கலைஞர் பேச ஆரம்பித்துவிட்டார். இது திடீரென்று ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. இதற்கு காரணம் தேடினார்கள். வெங்கையா நாயுடு சாதாரணமாக சொன்ன ஒரு விஷயத்தை காரணம் சொல்லிவிட்டு நாங்கள் வெளியே போகிறோம் என்று சொன்னார்கள். அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.

வாஜ்பாய் அரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் அதுமாதிரி ஈடுபட்டார்கள். ஆனால், நான் அதுமாதிரி எதுவும் செய்துவிடவில்லை. எங்களது கொள்கைகளை, லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நாங்கள் சிலவழிமுறைகளை தேர்ந்தெடுத்தோம். மனமகிழ்ச்சியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது என்று சொல்வதற்கு காரணம் சில நிகழ்ச்சிகளை கோர்வைப்படுத்திச் சொன்னால் சரியாக இருக்கும்.

2 மாதங்களுக்கு முன்பே வைகோ முடிவெடுத்துவிட்டார் என்று மதிப்பிற்குரிய அண்ணன் கலைஞர் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன்.

2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே போடப்பட்ட தோழமைக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க.வின் பெயர் கிடையாது. எங்கள் கட்சியை விட்டுவிட்டீர்களே என்று போனிலேயே நான் கேட்டேன். அதற்கு சட்டமன்றத்திலே அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என்று பதில் சொன்னார்கள். பொதுக்கூட்டம் சட்டமன்றத்திலேயே நடக்கவில்லையே பொது இடத்தில்தானே நடக்கிறது என்று நான் சொன்னேன். அதன்பிறகு மறுநாள் எங்கள் கட்சியின் பெயரைச் சேர்த்து வெளியிட்டார்கள்.

எனது நடைபயணம் முடிந்து 7 நாள் கழித்து செப்டம்பர் 23-ந்தேதி முரசொலியில் டாக்டர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், மிகக் கடுமையாக எங்களை நிந்தித்து, "இவர்கள் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தவர்கள். கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள், துரோகிகள், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? இவர்கள் வட்டமிடும் கழுகுகளாக, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்களாக, வளைத்துவிட்ட மலைபாம்புகளாக சுருக்கமாகச் சொன்னால், வசந்த சேனையின் வடிவமாக இவர்கள் வாள்நீட்டிப் பார்த்தவர்கள். வலைக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கே இருந்தது. உடனே கலைஞரை சந்தித்து கேட்டேன். ஏதோ ஒரு கோபத்தில் அப்படி எழுதிவிட்டேன் என்று சொன்னார். கோபப்படும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லையே என்று சொன்னேன்.

நடை பயணத்தில் ஆலடி அருணா எப்படி வந்து பேசலாம் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை அவராகத்தான் வந்தார் என்று சொன்னேன். அவர் வேற ஒன்றும் பேசவில்லை. வருங்கால முதல்வராக வைகோவை நான் பார்க்கிறேன் என்று சொன்னார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன். அதற்காக கோபப்பட்டார்கள்.

இப்போது வருங்காலம், வராத காலம் என்று தினம்தினம் போஸ்டர் அடிக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்று கலைஞரின் மகனை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். விளம்பரம் பண்ணுகிறார்கள்.

இதற்கு கருணாநிதி எந்த விதமான விளக்கமும் சொல்ல முடியாது.

வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பதை விட கூட்டணியில் நான் நீடிப்பதை அவர்களைச் சுற்றியுள்ள சில சக்திகள் விரும்பவில்லை.

* இதுதான் இயல்பான கூட்டணி. இயற்கையான உணர்ச்சி. 1972-ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் டாக்டர் கலைஞரின் குடும்ப நலனுக்காக தூக்கி எறிந்தார், என்ன காரணத்திற்காக? சுயநலம், குடும்ப நலம். அதேபோல்தான் 1993-ம் ஆண்டு எந்த இயக்கத்திற்காக என் வாழ்நாளை நான் முழுமையாக அர்ப்பணித்தேனோ என் வாழ்வின் ஜீவனும் சுவாசமும் எல்லாம் நான் ஏற்றுக்கொண்டா அண்ணா உருவாக்கிய இயக்கமான தி.மு.க. என்று இருந்த என்னை குற்றமற்ற என்னை கொலைகாரன், சதிகாரன் என்று பழிசுமத்தி தூக்கி வெளியே எறிந்தார்கள். ஒரு கட்சியில் உள்ள ஒருவரை நீக்குவதற்கு குற்றச்சாட்டுகள் சொல்வது வழக்கம்.

ஆனால், கட்சிச் தலைமையை கொலைசெய்ய சதித்திட்டத்திலே ஈடுபட்டிருக்ககூடும் என்று குற்றம்சாட்டி கட்சியை விட்டு நீக்கியது எனக்கு தெரிய உலகத்திலே வேறு எங்குமே நடக்கவில்லை. எவ்வளவு பெரிய மனக்காயங்களுக்கு நான் ஆளாகியிருப்பேன்.

என்னை நீக்குவது கொடுமை என்று 5 தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள். அவர்களின் படங்களை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டுத்தான் தினமும் வெளியே போவேன். அவர்களை எனது காவல் தெய்வங்களாக நினைக்கிறேன்.

ஆனாலும் கூட எந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேனோ அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் என்னோடு வந்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்கு முகவரி. அவர்களால்தான் இன்று அரசியலில் இருக்கிறேன்.

அந்த தொண்டர்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கரம் கோர்த்துள்ளதற்கு என்ன காரணம்? இது அடிப்படையில் இயல்பாக ஏற்படுகிற உணர்ச்சி.

* திமுக தலைமை தன்னை எப்படியெல்லாம் புறக்கணித்தது, சன் டிவி தன்னை எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்தது என்பதை எல்லாம் மிக விளக்கமாகவே கூறிய வைகோ, பொடா குறித்த கேள்விக்கு மட்டும், அது ஊழ் வினை.. காலத்தின் தீர்ப்பு.. அது ஒரு அரசியல் நடவடிக்கை என்று பதிலளித்துவிட்டு நழுவிக் கொண்டார்.

நன்றி>இட்லிவடை

வைகோவைப் பற்றி இலங்கைத் தமிழர்கள் வேண்டுமானால் இனி புளங்காங்கிதம் அடையலாம்...

அவரை தமிழ்நாட்டில் "வையகத்து கோமாளி"யாகத் தான் பார்க்கிறார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

எங்களூக்கு தேசிய தலமையும் போரளிகளூம் தவிர மற்றாவர்கள் வையகத்து கோமாளிகள் தான்

அப்படியா.... வையகம் உங்களை "கோமாளிகளாக" பார்க்கப் போகிறது.... கொஞ்சம் சாக்கிரதையாக இருங்கள்.... :lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க சந்தர்ப்ப வாத கூட்டனி அமைத்தது என்று சொல்லகின்ற வைக்கோ ஏன் கடைசி வரை பா.ஜ.க வுடன் இருந்து இருக்கலாமே? திரு வைகோ அவர்களே பா.ஜ.க கூட்டனியில் உங்கள் கட்ச்சியை சேர்ந்த உருப்பினர்களும் அமைச்சைர்களாக இருந்தது அ.தி.மு.க வுக்கு போன உடன் மறந்திட்டிங்களாக்கும்? தி.மு.க சேர்ந்த அதே காங்கிறஸ் கூட்டனியில் தானே நீங்களும் சேர்ந்திங்க?

உண்மைய சொன்னால் உங்களுடைய சொந்த மாவட்டத்திNலையே உங்கள் செல்வாக்கு குறைந்து விட்டதாமே? :evil: :evil: :twisted:

திமுக ஒண்ணரை ஆண்டுகளுக்கு முன்னாலேயே திமுக துரோகம் செய்தது என்கிறார்.... ஆனால் போன மாதம் கலைஞரை முதல்வராக்க மதிமுக உறுதி பூண்டிருக்கிறது என்றார்..... வைகோ அண்ணே உங்களுக்கு எத்தனை நாக்கு?

அரசியல்ல இதெல்லாம் சகஐம்பா..

சகஜம் தான்....

ஆனால் வைகோவிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.... அவருக்கென வேறு மாதிரி இமேஜ் இருந்தது.....

அதையும் பார்ப்பம். இன்னும் ஒரு ஆண்டு பொறுத்திருங்கோ.

அப்படியா.... வையகம் உங்களை "கோமாளிகளாக" பார்க்கப் போகிறது.... கொஞ்சம் சாக்கிரதையாக இருங்கள்....
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா எங்களை வையகம் எங்களை 1983 இற்கும் முன்பிருந்தே கோமாளிகளாகத்தான் கருதுகிறது. ஒரு பிஸ்டலிலல் ஆரம்பித்து உழங்கு வானு}ர்திகளையும் ஆகாய விமானங்களையும் உருவாக்கிக்கொண்ட உலகக் கோமாளிகள் ஈழத்தமிழர்கள்.

ஆனால் நீங்களோ திராவிட நாட்டுக் கோரிக்கையில் தொடங்கி அதைக்காற்றில் அண்ணா பறக்கவிடக் கூட இருந்து நு}லறுத்த கருணாநிதியின் வாரிசு அரசியலையும், அட்டைக்கத்தி வீரர்களின் ஹீரோத் தனங்களையும் அரசியல் முதலீடுகளாகப் போட்டு மிகவும் ஜாக்கிரதையாக வியாபாரம் பண்ணும் புத்திசாலிகள். உங்களால் இன்று தமிழ் ஓகோ ஓகோ என்று வாழ்கிறதை மீடியாக்களில் இளஞ்சிறுசுகளின் பேட்டிகளைப் பார்த்தே புரிந்துகொள்ள முடிகிறது. மானிலத்தில் சுயாட்சி என்று சர்க்கஸ் காட்டியபின் வாலைச் சுருட்டிக்கொண்ட கருணாநிதியுடன் ஈழத்தமிழரின் அசைக்க முடியாத இலட்சிய வேட்கையையும் தியாகத்தையும் ஒப்பிட முயலாதீர்கள். அது வேறு இது வேறு.

ஐயா எங்களை வையகம் எங்களை 1983 இற்கும் முன்பிருந்தே கோமாளிகளாகத்தான் கருதுகிறது. ஒரு பிஸ்டலிலல் ஆரம்பித்து உழங்கு வானு}ர்திகளையும் ஆகாய விமானங்களையும் உருவாக்கிக்கொண்ட உலகக் கோமாளிகள் ஈழத்தமிழர்கள்.

ஆனால் நீங்களோ திராவிட நாட்டுக் கோரிக்கையில் தொடங்கி அதைக்காற்றில் அண்ணா பறக்கவிடக் கூட இருந்து நு}லறுத்த கருணாநிதியின் வாரிசு அரசியலையும், அட்டைக்கத்தி வீரர்களின் ஹீரோத் தனங்களையும் அரசியல் முதலீடுகளாகப் போட்டு மிகவும் ஜாக்கிரதையாக வியாபாரம் பண்ணும் புத்திசாலிகள். உங்களால் இன்று தமிழ் ஓகோ ஓகோ என்று வாழ்கிறதை மீடியாக்களில் இளஞ்சிறுசுகளின் பேட்டிகளைப் பார்த்தே புரிந்துகொள்ள முடிகிறது. மானிலத்தில் சுயாட்சி என்று சர்க்கஸ் காட்டியபின் வாலைச் சுருட்டிக்கொண்ட கருணாநிதியுடன் ஈழத்தமிழரின் அசைக்க முடியாத இலட்சிய வேட்கையையும் தியாகத்தையும் ஒப்பிட முயலாதீர்கள். அது வேறு இது வேறு.

¾õÀ¢ ®Æò¾Á¢Æ¡ ! «ñ½¡ ±¨¾ôÀÈì¸Å¢ð¼¡÷ ±É ¯í¸û ¨Å§¸¡ Å¢¼õ §¸ðÎ À¢ý ¾Ã×í¸û ¯í¸û ¸Õò¨¾.«ð¨¼ì¸ò¾¢ Å£Ã÷ ±ýÈ¡ø «¾¢ø Ó¾ø ÀÃ¢Í Â¡÷ ¦ÀÚÅ¡÷ ±ýÚ ¾Á¢ú¿¡ðÊø §¸ðÎôÀ¡Õí¸û. º¢Å¡ƒ¢ ¸§½ºý þÈó¾§¾ ¾ý¨É Å¢¼ º¢Èó¾ ¿Ê¸ý ´ÕÅý ¨Å§¸¡ ±ýÈ ¦ÀÂâø þÕôÀ¾É¡ø ¾¡ý ±ýÚ ´Õ º¢üÈïºø ¯ÄŢ즸¡ñÊÕ츢ÈÐ.¸Õ½¡¿¢¾¢ ±ó¾ þ¼ò¾¢§ÄÔõ Á¡¿¢Äò¾¢ø Í¡𺢠±ý¸¢È Å¢¼Âò¾¢ø Å¡¨Ä ÍÕð¼Å¢ø¨Ä.þÂì¸ò¾¢ø þÕóÐ ¦ÅÇ¢§ÂüȢ À¢ý ¿¼ó¾ Ó¾ø Üð¼ò¾¢§Ä§Â ¾ý «Ãº¢Âø ±¾¢Ã¢ ¦ƒ.¦ƒÂÄÄ¢¾¡¾¡ý ±ýÚ ÓÆí¸¢Â(94 ±Øîº¢ô§Àý¢) ¨Å§¸¡Å¢ý þý¨È §¿ü¨È ¿¢¨ÄôÀ¡Î¸û ºÃ¢Â¡? ¦ÅÚõ µðÎ측¸Å¡ ÀÆ.¦¿ÎÁ¡Èý ±Ûõ ¾¢Â¡¸ò¾¢ÕÅ¢ÇìÌ ±ó¿¡ðÊø ´Ç¢÷óЦ¸¡ñÊÕ츢ÈÐ.

À¢Š¼Ä¢ø ¯í¸û §À¡Ã¡ð¼õ ÐÅí¸¢Â¢Õì¸Ä¡õ, ¯ÄíÌ Å¡Ï÷¾¢ìÌ ¯îºõ ¦ÀüÚ þÕì¸Ä¡õ, ¾Á¢Æý ±ýÈ ´§Ã ¸¡Ã½òÐ측ö ,¸¡Ã¡¸¢Ã¸õ (º¢¨È) ²Ìõ ±ý §¾¡Æ÷¸¨Ç þÆ¢×ÀÎò¾¡¾¢÷¸û. ¸Õ½¡¿¢¾¢Ô¼ý ¡Õõ ¡¨ÃÔõ ´ôÀ¢¼ Ó¨ÉÂÅ¢ø¨Ä. ¯í¸Ç¢ý À¡¨¾ §ÅÚ.

§¾¨ÅÂüÚ ±ý ¸Ä¡îº¡Ãõ Á£Ð ±Ã¢îºø §ÅÚ ÀðÎûÇ£÷¸û. §Åñ¼¡õ Å¢Á÷ºÉõ. ¿¡õ àüȢ즸¡ñ¼¡ø «Ð ±ÉÐ ±¾¢Ã¢ìÌõ ¯í¸û ±¾¢Ã¢ìÌõ ¾¡ý º¡¾¸¡Á¡ö «¨ÁÔõ ,ºÃ¢¦ÂýÈ¡ø Å¢Á÷º¢ì¸ò¾Â¡÷.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரா! யார் யாரை இழிவுபடுத்தினார்கள்? நீங்களதான் ஈழத்தமிழாகளைக் கோமாளிகள் என்றீர்கள். அதற்குத்தான் நான் பதில் கூறினேன். ஈழத்தமிழர் கலாச்சாரத்திற்கும் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்திற்கும் பெரிய வேறபாடுகளில்லை. ஆனால் தமிழ் pநாட்டுத் தமிங்கிலத்தைத்தான் சகிக்க முடியவில்லை என்று கூறிவைத்தேன். ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் கட்சியரசியலுக்கு வெளியே நின்று எல்லோருடனும் அனுசரித்துப் போகவேண்டியவர்கள். எங்களை ஆதரிப்பவர் வைகோ அவர் இன்று எங்கிருந்தாலும் இருக்கட்டும். திருமாவளவனும் போய்விட்டார்தானே. பாமக திமுகவிலிருந்தாலும் கூடிய தொகுதிகளைப்பெற்று வெற்றிபெறவேண்டும். மற்றும்படி கருணாநிதியோ ஜெயலலிதாவோ என்னவானாலும் எங்களுக்கென்ன? தயவு செய்து இதைப் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் தமிழினம் என்று பார்க்கிறோம். அன்று சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டு அழிந்ததுபோல இன்று கட்சியரசியலில் நீங்கள் என்னவாவது செய்துகொள்ளுங்கள் ஆனால் ஈழப்போராட்டத்தையோ, கோரிக்கையையோ இழிவுபடுத்த முனையாதீர்கள். சுய அரசியல் இலாபத்திற்காக எங்களைப் பகடைக்காய்களாக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், விழித்தெழுந்தவர்கள். நீங்கள் உங்கள் கட்சி அரசியலை எங்கள் ஈழப்போராட்டத்துடன் ஒப்பிடாதிருந்தால் வீண் வாதங்கள் ஒருபோதும் ஏற்படாது. நாம் உறவினர்கள் ஆனால் எங்கள் பிரச்சனை வேறு மறந்துவிடதீர்கள்

þɢ áƒ¡ ! ¿¡ý ±ó¾ þ¼ò¾¢Öõ ®Æò¾Á¢Æ¨É ¿£í¸û ÌÈ¢ôÀ¢ð¼ÀÊ Å¢Á÷ºÉõ ¦ºö¾¾¢ø¨Ä,«ôÀÊ Â¡Ã¸¢Öõ Å¢Á÷ºÉõ ¦ºö¾¢Õ󾡸 ¯ñ¨Á¢ø «Åý ¾¡ý §¸¡Á¡Ç¢.þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø ¾Á¢ØìÌ 'º¢ÈôÒ Æ ¸Ãõ" ´ýÚ¾¡ý ÅÕ¸¢ÈÐ ,¬É¡ø ®Æò¾Á¢ÆÛ째¡ «Ð Á¢¸îº¢ÈôÀ¡ö þÃñ¼¡ö (®"Æ"ò ¾Á¢"Æ"ý) ÅÕ¸¢ÈÐ «ó¾ þÃñ¼¡ÅÐ º¢ÈôÒ¾¡ý "¾õÀ¢"¡ö «Å÷¸ÙìÌ Å¡öò¾¢Õ츢ȡý ±ýÚ ¦ÀÕ¨Á¡ö Å¢Çì¸õ¾ÕÅÐñÎ.

¨Å§¸¡ Å¢ý Á£Ð À¡ºõ þÕì¸ô§À¡öò¾¡ý þíÌ ¸ÕòÐ ¦¾Ã¢Å¢òÐ ÅÕ¸¢§Èý. «§¾ §Å¨Ç «Å÷ ¾ÅÈ¢¨Æ¾¡ø ¸ñÊìÌõ ¯Ã¢¨Á,þ¾üÌ Óý «¨ÉòÐ §¾÷¾ø¸Ç¢Öõ «ÅÕìÌ Å¡ì¸Ç¢ò¾Åý ±ý¸¢È Ũ¸Â¢ø ±ÉìÌ Ôâ¨ÁÔñÎ ±ý§È ¿¢¨É츢§Èý.«§¾ §À¡ø ¾Á¢ú¿¡ðÊø 91 ¾Å¢÷òÐ ¯í¸¨Ç ±ó¾¸¡Äò¾¢Öõ ¾Á¢ú¿¡ðÎ «Ãº¢Âø Å¡¾¢¸û À¸¨¼ì¸¡ö¸Ç¡ö ÀÂý ÀÎò¾¢Â¾¢ø¨Ä ±É ¯Ú¾¢ÂǢ츢§Èý. ¿¡í¸û ±ô§À¡Ðõ ±í¸û ¸ðº¢ «Ãº¢Â¨Ä ®Æô§À¡Ã¡ð¼Ð¼ý ´ôÀ¢ð¼¾¢ø¨Ä.¿¡õ ¯ÈÅ¢É÷¾¡õ ÁÚôÀ¾ü¸¢ø¨Ä, «§¾ §Å¨Ç ¯í¸û À¢Ã¨É ±ýɦÅýÀÐ ÓüÚÓØ¾¡¸ ¦¾Ã¢Ôõ «ýÀ§Ã.

  • கருத்துக்கள உறவுகள்

திரு தம்பியுடையான்

மன்னிக்க வேண்டுகிறேன். லக்கிலுக் கோமாளிகள் என்று எழுதியதற்கு நான் மறுப்பெழுதினேன். அதற்கு நீங்கள் பதிலளித்ததால் உங்களுக்கும் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது. ஏதோ ஒருவகையில் அறிமுகமானது மகிழ்ச்சியழிக்கிறது. மீண்டும் சந்திப்போம்

º§¸¡¾Ã¡ ±ýÚ «¨ÆòÐÅ¢ðÎ ÁýÉ¢ôÒ §¸ð¸¡¾£÷ . ¿ÁìÌû ¸ÕòÐ ÀâÁ¡È¢ì ¦ ûÇ ¯Ã¢¨ÁÔñÎ.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாதத்தில் வந்த பாரிஸ் குண்டுசியின் ஆக்கம்

http://www.tamilnaatham.com/articles/2006_...osi20060322.htm

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஒரு கருத்து மட்டுமே சொல்லமுடியும். கருணாநிதியையோ, அல்லது ஜெயலலிதாவோ உதவி செய்வார்கள் என்பதற்காக ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இது எம் உரிமைப் பிரச்சனை!!

எனவே கருணாநிதியோ, ஜெயலலிதா எம் விடுதலைப் போராட்டத்துக்கு உண்மையான ஆதரவு தந்தால் வரவேற்போம். அவ்வளவு தானே தவிர இவர்களால் எம் தேசம் விடுதலை பெற ஒன்றுமே ஆகப்போவதாக நான் கருதவில்லை!!

83ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, 91ஆம் ஆண்டு ஈழத்தமிழரை ஆதரித்ததாக கூறி ஆட்சி நீக்கம் செய்யப்பட்ட கலைஞர் தூயவனை நினைத்து ரொம்பவும் மகிழ்ச்சி அடைவார்.....

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எவ்வித சுயநலம் இன்றி தான் செய்ததாக கலைஞர் உண்மையாக நம்புவதாக இருந்தால் அதை வாழ்த்துகின்றேன் :wink: :P

தூயவன்,

உண்மையைச் சொல்லுகிறேன்.... ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் கலைஞருக்கு நிறைய நஷ்டம் தான்.... சொல்ல வேதனையாக இருந்தாலும் இது உண்மை தான்....

அமைதிப்படையை வரவேற்க தமிழக முதல்வரான கலைஞர் செல்ல மறுத்ததால் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டார்.... 91ஆம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பத்மனாபா சம்பவம் காரணம் காட்டப்பட்டது.... ராஜீவ் கொலைப்பழி அவர் மீது சுமத்தப்பட்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார்.... அவரது கழக முன்னோடி சுப்பலட்சுமி ஜெகதீசன் தடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.... ஜெயின் கமிஷன் கலைஞர் மீதும், திமுக மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறியது..... ஒரு முறை இந்திய பாராளுமன்ற தேர்தல் நடக்க இதுவே காரணமாகியது.....

புரிகிறதா? ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால் அவருக்கு லாபம் ஏதுமில்லை என்பது.... அதற்காக அவர் ஆதரிக்காமல் இருக்கப் போவதில்லை.... ஆதரிக்காமல் இருந்தால் அவர் என் தலைவனும் இல்லை.....

செப்டம்பர் 22இ 2003

பொடாவை உடனே வாபஸ் பெற வேண்டும்: கருணாநிதி

விழுப்புரம்:

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை திமுக அனுமதிக்காது என கருணாநிதி கூறினார்.

திமுக மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர் கூறியதாவது:

பொடா சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முறை தவறிய செயல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானால்இ சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து யோசிப்பேன் என பிரதமர் வாஜ்பாய் என்னிடம் உறுதிமொழி தந்தார்.

நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தில் கைது செய்தது தவறு என தமிழக அரசை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவருக்கு ஜாமீனும் தந்துள்ளது. பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்ன உறுதியான ஆதாரம் வேண்டும்.

பொடா விவகாரத்தில் வாஜ்பாய் எங்களை கைவிட்டுவிட்டதாகவே நினைக்கிறோம்.

தமிழ் 2இ000 ஆண்டு பழமை வாய்ந்தது. நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாக இருக்க தமிழுக்கு முழுத் தகுதியும் உண்டு. உலகின் தொன்மையான இந்த மொழியை மத்திய அரசு உடனே செம்மொழியாக அறிவித்து உரிய அங்கீகாரம் தர வேண்டும்.

அயோத்தி விவகாரத்தில் திமுக தனது நிலையில் தெளிவாகவே உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டக் கூடாது. இது தொடர்பாக பா.ஜ.க. சட்டம் கொண்டு வர முயன்றால் அதை திமுக திட்டவட்டமாக எதிர்க்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை.

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட முனைந்தால் மதக் கலவரம் தான் வெடிக்கும். ராமருக்கு நாங்கள் எதிரிகளும் அல்ல. அவருக்கு சர்ச்சைக்குள்ளான இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டுமா? என கருணாநிதி கூறினார்.

இதெல்லாம் சரி தான் தம்பி !! அவர் வைகோ மேல் சொன்ன கொலை பழி பத்தி என்ன சொல்றீங்க !! நிஜமாகவே வைகோ புலிகள் உதவியுடன் கலைஞரை கொலை செய்ய முயற்சி செய்தாரா அல்லது கலைஞர் பொய் சொன்னாரா?

ராஜாதி ராஜா,

உங்களுக்கு ஜெ. தெய்வமாக இருக்கலாம்... அதற்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது....

கலைஞர் வைகோ மீது கொலைப்பழி எப்போதும் சுமத்தியதில்லை.... உளவுத்துறை கொடுத்த அறிக்கையைத் தான் கொடுத்தார்... அதை அவர் நம்பினாரா இல்லையா என்பதை இது வரை சொன்னதில்லை....

புதன், பிப்ரவரி 22, 2006

நீர்த்துப்போன கொள்கைகள் - வாஸந்தி

கருணாநிதியைப் பேட்டி காணும் தருணம் இது என்று நான் தயாரானேன். ஆச்சரியமாக கருணாநிதி உடனடியாகப் பேச சம்மதித்தார். அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு காலை ஒன்பது மணிக்குச் சென்றபோது, நான்கைந்து கட்சிக்காரர்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். குறுகலான மாடிப்படிகளைக் கடந்து கலைஞரைச் சந்திக்கச் செல்லும்போது, யாரோ, ‘‘முதுகிலெ குத்தினமாதிரி’’ என்று சொல்வது கேட்டது.

கருணாநிதி அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் பேசும்போது, கவலையோ, பீதியோ, ஏதோ ஒன்று அவரது கண்களில் நிழலாடியதாகத் தோன்றிற்று. பத்திரிகை உலகத்தில் அவரது கவலைகளைப் பற்றிப் பலவிதமான அலசல்கள் இருந்தன. ‘வை.கோ.வின் அதிகரித்துவரும் செல்வாக்கு அவரை அச்சுறுத்துகிறது; தமக்குப் பின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயாரித்து வருபவருக்கு, வை.கோ. ஒரு நீக்கப்படவேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்’ என்று பரவலாகக் கருதப்பட்டது.

கருணாநிதியுடன் நடந்த அந்த நீண்ட பேட்டியின்போது ஒன்று தெளிவாயிற்று. ‘வை.கோ.வின் செல்வாக்கு, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற உண்மையான கவலை அவருக்கு இருக்கக்கூடும். ஆனால் வைகோ.வை வெளியேற்ற வேண்டுமென்றே, புலனாய்வுத்துறையின் செய்தி முகாந்திரமாக உபயோகிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே பீதியில் துவண்டிருந்தார்; ஊழ்வினையை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் இருப்பவர்போல.

‘‘ஆமாம், வை.கோ.வை என் உறைவாள்னு சொல்லியிருக்கேன். ஆனால் என் நல்லெண்ணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு வருஷமா தலைமைப் பதவியைப் பிடிக்கிற முயற்சியில் இருக்கார். 1989இலே, தி.மு.க. ஆட்சியிலே இருக்கிறப்ப, கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பா, எங்கிட்ட சொல்லாம கொள்ளாம, பிரபாகரனைச் சந்திக்க சிலோனுக்குப் போனார். இது விஷயமா அவரை நான் கடுமையா கண்டிச்சேன். அப்பவே கட்சியிலேந்து அவரை நீக்கியிருக்கணும். அது பண்ணாதது தப்புதான். ஆனா, மன்னிச்சுக்குங்க! மன்னிச்சுக்குங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதுக்குப் பிறகும் அநேகத் தப்புகளுக்கு மன்னிக்கச் சொல்லிக் கேட்பார். உண்மையைச் சொல்றேன், ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கட்சிலே ரொம்பத் தெளிவான முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைச்சா சந்தோஷப்படுவோம்; ஆனா, தமிழ் ஈழத்துக்கு ஆதரவா கோஷம் போடமாட்டோம்னு.

ஆனா, இந்த ஆள் தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தறார். வெளிப்படையாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவா பேசறார். கடந்த ஓராண்டு காலமா என் தலைமைக்குப் பதிலா வை.கோ.வுடைய தலைமை வந்தா நல்லதுன்னு கனடாவுலே, பாரிஸ்ஸிலெ, யாழ்பாணத்திலெ, எல்.டி.டி.ஈ.யுடைய பிரச்சாரம் பத்திரிகை மூலமாவும் வலைத்தளங்கள்ளேயும் நடப்பது எனக்குத் தெரிஞ்சிருக்கல்லே; சிஙிமிலேந்து தகவல் வர்ற வரைக்கும்.’’

அவரது பேச்சை எனது ஒலி நாடா பதிவு செய்கையில், அவரது உதவியாளர் சண்முகநாதன், விறுவிறுவென்று தனது கையேட்டில் குறித்துக்கொண்டிருந்தார். பலவித பத்திரிகை கட்டிங்குகள், குறிப்புகள் தயாராக மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. ‘‘தகவல் கிடைச்சதும் வை.கோ.வை நேரிடையாக விளக்கம் கேட்டிருக்கலாமே’’ என்றேன். '‘‘பத்திரிகையாளர் கூட்டம் ஏன்?’’

‘‘CBI தகவல் ‘கோபால்சாமிக்கு வழிவகுக்கும் [tஷீ யீணீநீவீறீவீtணீtமீ] கொலைத் திட்டம்னு சொன்னதே தவிர, அதுக்குப் பின்னாடி கோபால்சாமி இருந்ததாச் சொல்லல்லே. அவரை எதுக்குக் கேட்கணும்? CBI தகவலை லேசா எடுக்கக் கூடாதுன்னு மக்கள்கிட்ட போக வேண்டியதாகிவிட்டது.’’ ‘‘எனக்கு முதல்லே நம்பமுடியல்லே’’ என்று கருணாநிதி தொடர்ந்தார். ‘‘ஆனா கோபால்சாமி நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா இப்ப சந்தேகம் வலுப்படுகிறது. ‘‘CBI அனுப்பிச்ச கடிதம் தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்திச்சு’’ன்னு சொல்றார். ‘‘ஆனா என்னைக் கூப்பிட்டு ஏன் பேசல்லே?’’ நான் அவரோடு பேசத்தான் விரும்பினேன். ஆனா அகப்படல்லே. சென்னையிலே இருந்துகிட்டே இல்லேன்னு போக்குக் காட்டறார். பத்திரிகைக்கு அறிக்கை விடறார், அவரை கட்சியிலேந்து நீக்க இது ஒரு சூழ்ச்சின்னு. நாற்பது நாள் காத்திருந்து பிறகுதான் கட்சியிலேந்து நீக்கினோம்.’’

அவருடைய பார்வை மேஜையில் இருந்த புலிகளின் பத்திரிகை கட்டிங்குகள் மேல் பதிந்தது. ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது CBI கடிதத்துலே உண்மை இருக்கணும்னு சந்தேகம் வருது, வெளியிலே அவருக்கு ஆதரவு இருக்கலாம்னு; திட்டம் ஏதோ இருக்கணும்னு தோன்றுகிறது."

‘‘புலிகளுடன் தனக்கு இப்போது தொடர்பு இல்லை’’ என்று வை.கோ. சொன்னதைச் சொல்கிறேன்.

‘‘அவர் உண்மை பேசறாரா என்பதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல்லே’’ என்றார் கருணாநிதி.

‘‘உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்கள், திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று...’’

கருணாநிதியின் முகத்தில் சட்டென்று எரிச்சல் படர்ந்தது. "நான் எப்பவும் சொல்றேன். தி.மு.க., சங்கர மடமோ, மன்னர் ஆட்சியோ நடத்தவில்லை, வாரிசு அரசியல் செய்ய. பிரதமர் நரசிம்மராவின் மகன் மாநிலத்தில் அமைச்சர். ரங்கராஜன் குமாரமங்கலத்துடைய அப்பாவும் தாத்தாவும் மந்திரிகளா இருந்தார்கள். அதைப் பத்தி யாரும் பேசறதில்லே. என்னைப் பத்தி மட்டும்தான் தப்பு சொல்கிறார்கள். ஏன்னா நான் சூத்திரன்."

"உங்க கட்சியிலேயே அப்படி ஒரு கருத்து இருக்கு" என்று நான் இடைமறித்தேன்.

"அது விஷமத்தனமான பேச்சு" என்றார் அவர். "வாரிசு அரசியல் செய்யணும்னா 1989 இலே தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே செஞ்சிருக்கலாமே.?" அதற்குமேல் அதைப் பற்றிப் பேச ஏதும் இல் முதல் முதலில் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் சந்தித்தது, தமிழர்கள் இலங்கையில் படும் சிரமங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டு பதைத்தது, பிரபாகரனின் இளமையும் கள்ளமில்லா முகமும் தன்னை வெகுவாக ஈர்த்தது, கடைசியில் அவர்களது செயல்கள் தன்னை அதிரவைத்தது, எல்லாவற்றையும் கதைபோல் அவர் சொல்லி வருகையில் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அவர் மறந்து போனதுபோல் இருந்தது. அவர்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் முதுகில் குத்தப்பட்டதாக உணர்வதுபோல் சொன்னார். "நம்பமுடியல்லெம்மா. நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சோஃபாவுக்கு நேர் எதிரத்தான் அவங்க உட்கார்ந்திருந்தாங்க, ஏதுமறியாப் பிள்ளெங்க போல. அவங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தப்படுத்த முடியாத தோற்றம். சென்னையிலேயே பத்மனாபாவையும் அவருடைய சகாக்களையும் கொலை செஞ்சபோது அதிர்ச்சியா இருந்தது. ராஜீவ் காந்தியுடைய படுகொலைக்குப் பிறகு இனிமே எந்தத் தொடர்பும் இருக்கமுடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்."

லை என்பதுபோல் அதை ஒதுக்கிவிட்டு, மீண்டும் புலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

கருணாநிதி மீண்டும் தலை அசைத்தார். '‘‘நம்பமுடியல்லே!" கண்களில் நிழலாடிய பீதி, முகத்தில், தசைகளில், திரையாய் போர்த்திற்று. அடுத்த இலக்கு தாமாக இருக்கலாமோ என்கிற பீதி. ‘‘முதுகிலெ குத்தினது போல’’ என்று கீழே யாரோ சொன்னதற்குப் புதிய பரிமாணம் சேர்ந்தது போலத் தோன்றிற்று.

நன்றி - தீராநதி

இதுவே என் கருதல்ல- சிலவற்றில் உடன்பாடுமல்ல

அதாவது கருணானிதி என்ன சொல்றார்ன்னா ..குழ்ந்தை பெத்துகணுமாம் ஆனால் கல்யாணம் மட்டும் பண்ண கூடாதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.