Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியக்குழு அழுத்தம் தரவில்லை, 13வது திருத்தம் குறித்தும் பேசவில்லை – ஜி.எல்.பீரிஸ் தகவல்

Featured Replies

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம்.

இந்த நடைமுறைப்படுத்தலுடன் தொடர்புடைய அமைப்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

13வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.

இந்த விடயம் நாடளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வுக்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளது.

இந்தியக் குழுவினர் எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து அவர்களுக்கு விபரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.“ என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இந்தியக் குழுவினர், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இதன்போது, சிறிலங்காவின் உண்மை நிலையை தமிழ்நாட்டில் வெளிப்படுத்துவதற்கு போதுமான பரப்புரையும் விழிப்பணர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு இனங்களுக்கும் இடையிலான சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120417106016

இலங்கைக்கான இந்திய நாடாளுமன்ற பரப்புரை குழுவாக மாறிவிட்டது இந்த இந்திய அரசியல் தூதுக் குழு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக்குழு அழுத்தம் தரவில்லை, 13வது திருத்தம் குறித்தும் பேசவில்லை – ஜி.எல்.பீரிஸ் தகவல்

அப்புறம் சுரைக்காய் கூட்டில் உப்பில்லை என்றா..? ஒழுங்கா சமைச்சி போடுங்கப்பா..அப்புறம் இலங்கை ப்யணம் குறித்தான பிரஸ் மீட்டில் சரியாக சாப்பாடு போடவில்லை என்று இவர்கள் கூறினால்.. அடுத்து எவனும் அங்கிட்டு வரமாட்டான்

அரசியல்தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் அடிப்படையாக அமையலாம்: சுஷ்மா ஸ்வராஜ்

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்;கு 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையாக அமையலாமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினரை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போதைய அரசாங்கமானது பல்வேறு கொள்கைகளையுடைய கட்சிகளினால் அமைக்கப்பட்டதெனவும் அதனால் தேசிய பிரச்சினை தொடர்பில் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இச்சந்திப்பின்போது கூறினார்.

இதனால், அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வுகாண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்ததாக கூறிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தெரிவுக்குழுவிற்கு தனது பிரதிநிதிகளை நியமிக்காததை விமர்சித்தார்.

ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கும் பொறுப்பை அலட்சியப்படுத்தியதாக இச்சந்திப்பில் பங்குபற்றிய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த வருடம் ஜனவரி மாதம் தமது கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது எனவும் ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என சம்பந்தன் எம்.பி கூறினார். கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் ஜனநாயக போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்பதையும் அந்நிலைமை தமிழ் ஆயுதகுழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தமையையும் அவர் விளக்கினார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆகியோரின் உரைகளை செவிமடுத்த இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா ஸ்வராஜ், இயன்றவரை விரைவாக அரசியல் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது முக்கியமானது என்றார். 13 ஆவது திருத்தச்சட்டம் அல்லது அதற்கு அப்பாலான அரசியல்தீர்வுக்கு இலங்கை வாக்குறுதியளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தமது தூதுக்குழு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்ததாகவும் அவர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்து விளக்கியதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அபிவிருத்திப்பணிகள் மாத்திரம் தமிழ் மக்களுக்கு போதுமானதாக அiமையாது என இந்திய தூதுக்குழு சுட்டிக்காட்டியது.

இதேதேவைள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்கும்வரை, தானும் தனது பிரதிநிதிகளை நியமிக்கப்பபோவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முக்கிய பங்குதாரர் எனவும் எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் த.தே.கூட்டமைப்பின் பங்குபற்றல் மிக முக்கியமானது எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க கூறினார்.

http://www.tamilmirr...39473--13-.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்கப்போகிறது. காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியதை வைத்து வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்க மற்றும் ஒரு நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா பிரயாணம் மேற்கொண்டு வந்த குழு, அரசியல் அழுத்தம் தரும் என்று... பீரிஸ் எதிர்பார்க்கலாமா?

இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்கப்போகிறது. காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியதை வைத்து வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்க மற்றும் ஒரு நாடகம்.

காங்கிரசுக்கு இந்த பயணம் அவ்வளவாக சாதகமானதல்ல . சென்ற தடவை கிருஸ்ணா, அப்துல் கலாம் இருவரின் பயணங்களும் இந்தியாவுக்கு படு தோல்வி. இந்தியா வடக்கில் அதை மூடி மறைத்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கருணாநிதியால் இனி மிண்டு கொடுக்க முடியாத நிலை. கருணாநிதிக்கும் இப்போ வடக்கில் நல்ல கூட்டு இல்லை. மத்திய தேர்தலை தனியேதான் சந்திக்க வேண்டி வரும். அதாவது பயணத்தில் ஈடுபட்டிருக்கும் நாலு M.P.களும் காங்கிரசுக்கு பெரிய பாரமாகிப்போய்விட்டர்கள். என்வே இந்த பயணம் எந்த வகையிலும் காங்கிரசுக்கு நன்மை தர போவதிலை(பயணம் வெற்றியளிக்குமா அல்லது தோல்வி போகுமா என்பது வேறு பிரச்சனை)

சுஸ்மாவுக்கு இனிமேல் காங்கிரசின் கதையை மட்டும் நம்பாமல் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிய வேண்டிய தேவை இருக்கு. வரப்போகும் அரசுக்கு இலங்கைப் பிரச்சனையை சர்வதேச அளவில் கையாள வேண்டிய தேவை இருக்கு. இனிமேல் இதுவரையும் காங்கிரஸ் விட்ட நரிச்சேட்டைகளை இலங்கை பிரச்சனையில் இந்தியா விட்டால் அது இந்திய அயல் நாட்டுக்கொள்கைகளை பாதிப்பதை தவிர்க்க முடியாததொன்றாக்கிவிடும். என்வே சுஸ்மா காங்கிரசுடன் ஒத்துழைக்க விரும்புவ. ஆனால் காங்கிரசின் கதைகளை மட்டும் நம்பி அரசியல் கொள்கைகள் வகுக்க முனைய மாட்டா. அவவுக்கு இந்த பயணம் வெற்றி அளித்தால் அதில் பிரயோசனம் உண்டு.

காங்கிரஸ் 13ம் திருத்தத்தை பிரேரணைக்குள் திணிக்க முயன்றது. பிரேரணை மூலம் சர்வதேச உதவியை வாங்கி, தீர்வு என்ற பேச்சை எடுத்தவுடனேயெ தனது பின்புறத்தில் எட்டி உதைக்கும் சிறிலங்காவை கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்து 13ம் திருத்தத்தை அமூல் ஆக்கிவிட்டால் இந்தியா நிம்மதியாக தூங்கமுடியும். ஒருவேளை 13ம் திருத்தத்தை கொண்டுவர UNPKF கொண்டுவர வேண்டுமென்றாலும் இந்தியா சிலசமையம் சம்மதிக்கலாம். அதாவது இந்தியாவின் தற்போதைய நிலை, இலங்கையை தான் பகைக்காமல் மேற்கு நாடுகள் 13ம் திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதையே விரும்புகின்றது. சுஸ்மா திரும்பி போய் எப்படி 13ம் திருத்தத்தை அமூல் படுத்தலாம் என ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் காங்கிரஸ் அதை கேட்டு நடக்க விரும்பும்.

அதனால்த்தான் எப்போதுமே தமிழருக்கு கெடுதலை செய்த காங்கிரஸ் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழரை தனது நிரந்தர அடிமைகளாக பிடிக்கவிடாமல் சம்பந்தர் பார்த்துக்கொள்ளவேண்டும். காங்கிரஸ் திணிக்காமல் 13ம் திருத்தம் தானாக வந்தால் அதை பயன் படுத்தி நாம் பழைய குற்றவாளிகள் எல்லோரையும் தண்டிக்க வேண்டும். அப்போது சிங்களத்தலைவர்கள், தாம் குற்றம் செய்தால் தண்டனை இருக்கு என்பதை புரிந்து கொள்வார்கள். அதன் பின் 13ம் திருத்தத்தால் தமிழருக்கு ஒரு அதிகார பூர்வமான ஆட்சி கிடைக்கும். இதை இந்தியா திணித்தால் சிங்களத்தலைவர்கள் தப்பி விடுவது மட்டுமல்ல, கடந்த 65 ஆண்டுகாலமும் எப்படி தாம் தமிழருக்கு எதிராக குற்றம் செய்து தப்பி வந்தார்களோ அதே நிலையைத்தான் நீடிக்க வைப்பார்கள். அதனால் நமக்கு ஒரு அதிகார பூர்வமான ஆட்சி கிடைக்க முடியாது. அதாவது 13ம் திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா இல்லையா என்பதில் தான் அது ஒரு தீர்வாக முடியுமா இல்லையா என்பது தங்கியிருக்கு. இந்தியா தலையிட்டால் தன்னையும், ராசபக்சா அன் கோவையும் காப்பாற்றியே ஆகும். எனவே அது தீர்வாவதற்கு சந்தர்ப்பம் இல்லை.

பல காரணங்களுக்காக இந்தியா 13ம் திருத்தத்தை நிறைவேற்றிவிடத்துடிக்கிறது. அது இந்த பயணத்தால் சாத்தியமாகுமானால் இந்தியா அதை செய்யும். அது காங்கிரஸ் மட்டுமல்ல சுஸ்மாவே விரும்பும் முடிவு. இது தமிழ்நாட்டு தேர்தலுக்கு மேலேயும், வெளியேயும் போகும் ஒரு விடயம். பீரிசின் பதில், காங்கிரஸ் வெளியே காட்டிக்கொள்ளமல் அழுத்தம் கொடுக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அதாவது வெளிப்படையாக தனது தோல்வி வெற்றிகள் தெரிய வரவிடாமல் காங்கிரஸ் நரித்தனத்தையே தொடர்கிறதென்பதுமாகும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.