Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாண மே தின ஊர்வலத்தில் புலிக்கொடியுடன் ஓடிய நபர் ! . (காணொளி)

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, மானம் உள்ள நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர்.

குறைந்தபட்சம் 5 நபர்கள் , தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ழ்ச்சியாக இருக்கிறது.. ஆனால் கூட ஒரு கவலையும்..

(படம்)

??????????????????????????????

enkayapa??

  • தொடங்கியவர்

<p>யாழ் மே தின ஊர்வலத்தில் சிங்கள புனலாய்வு பிரிவினரால் புலிக்கொடி கொண்டுவரப்பட்டதா ?? (காணொளி)

(இரண்டாம் இணைப்பு ) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின்   மேதின ஊர்வலத்தில் தழிழீழ  புலிக்கொடியுடன் சிலர் கலந்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஐதேக தலைமையிலான எதிரணியினரின் மேதின ஊர்வலம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமானது.

அதில் சிவப்பு மஞ்சல் கொடிகளுடன் கூட்டமைப்ன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்  பிரேமச்சந்திரன் தலைமையில் சிலர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்கள் , அவர்களுக்கு இடையில்  சிலர் தமிழீழ படம் பொறித்த பெனியன்களை  அணிந்திருந்ததுடன், ஒருவர் புலிக்கொடியையும் கொண்டுவந்ததைக் காணமுடிந்தது. இவர்கள் காணொளிக்கு துக்கி  புலிக்கொடியை துணிச்சலாக காட்டிவண்ணம்  வருகிறது சந்தேகங்களை எழுப்புகிறது . நாம் யாழில் தொடர்பு கொண்டு சிலரை கேட்ட பொழுது. இவர்கள் சிங்கள புனலாய்வு பிரிவினர் என்று தெரிவித்துள்ளனர்.சம்பவம் நடந்த பகுதியில் தான் அங்கஜனின் அலுவலகம் இருக்கிறது அங்கிருந்து வந்தவர்கள் தான் புலி கொடியை எடுத்து வந்தார்கள் என்று சொல்கிரார்கள் .

இவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை.

நாம் முதல் பிரசுரித்த செய்தி திருத்தம்.

யாழ்ப்பாண மே தின ஊர்வலத்தில் புலிக்கொடியுடன் ஓடிய நபர் ! . (படம்)

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவனின்ட வேலையாய்த் தான் இருக்கும்

  • தொடங்கியவர்

சம்பவம் நடந்த பகுதியில் தான் அங்கஜனின் அலுவலகம் இருக்கிறது அங்கிருந்து வந்தவர்கள் தான் புலி கொடியை எடுத்து வந்தார்கள் என்று சொல்கிரார்கள் .

இவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை.

இதனால்த்தான் சம்பந்தர் சிங்க கொடி பிடிச்சவர். அதாவது நாங்கள் சிங்கள குறுக்கு கட்டி, கண்டி நடனம் ஆடினாலும் கோமாளி அரசு அதற்குள் ஒரு திருட்டு தனம் காட்ட ஆயத்தமே அல்லாமல் தீர்வு என்ற சொல்லை உச்சரிக்காது என்பதை அகில உலகிக்கும் எடுத்துக்காட்டவே. தீர்வு என்று எந்த வகையில் வந்தாலும் தான் போர்க்குற்றத்திற்கு கம்பி எண்ணுவதை தவிர்க்க முடியாது என்பதும் தெரியும். புலம் பெயர் மக்கள் அல்ல, NGOக்கள் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றன எங்கே ஒரு இடைவெளி வரும் அதனூடு தாம் கையை நீட்டி குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று.

Edited by மல்லையூரான்

வடபகுதியில் தமது செல்வாக்கினை காலூன்ற வைக்கும் திட்டத்தில் குள்ளநரி.

may_1_4.jpgவடபகுதியில் தமது செல்வாக்கினை காலூன்ற வைக்கும் திட்டத்தில் குள்ளநரி அவர்கள் மேதினம் ஆர்ப்பாட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதில் கொழும்பு தமிழ்க்கட்சிகள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு இறுதியில் கூட்டமைப்பினையும் அரவணைத்தார். அதன் பின்னர் வடபகுதியின் ஒட்டுக்குழு ஓனாயுடனும் இரகசிய சந்திப்பினை மேற்கொண்டார். ஏனென்றால் அந்த ஓநாய்க்கு இருக்கும் ஆதரவுகளையும் தம் பக்கம் இழுக்கும் எண்ணமாம். இதனாலேயே கூட்டமைப்பும் இறுதி நேர பத்திரிகையாளர் மா நாட்டில் கலந்துகொள்ளவில்லை என அறியப்படுகின்றது. மே தினக்கூட்டத்தில் முக்கிய கருப்பொருளாக விலைவாசி உயர்வு பற்றியே உரத்து உரைக்கப்படும் என மாவை சேனாதிராஜா விளம்பரப்படுத்தினார். தற்போதைய சூழலில், தமிழர்க்கு இருக்கின்ற பிரச்சினைகளில்,தமிழர்பக்கம் சர்வதேச பார்வைகள் குவிகின்ற நேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வாக்குகளைப் பெற்று நின்ற கூட்டமைப்பு ஒரு மேதின கூட்டத்தை தனித்து நடத்த முடியாத நிலையிலா உள்ளீர்கள்? நடத்த முயற்சி செய்து நடக்காமல் போனாலுக் அரசாங்கம் குளப்பினாலும் அதுவும் நன்மைக்கே ஆனால் இப்படி ஒரு சிங்கள குள்ள நரியுடன் சேர்ந்து மேதினம் நடத்தி அதில் என்ன பலனை அடையப்போகின்றீர்கள்.

ஒட்டுக்குழு ஓனாயுடன் கூட்டம் போட்டபின்னர் கூட ஊகிக்க வேண்டும். நெடுந்தீவில் மக்கள் ஈபிடிபினரால் தொல்லை என குள்ள நரியிடம் முறையிட்டார்கள். ஆனால் அதற்கு ஆமா போட்ட குள்ள நரி அடுத்த நாளே அந்தக் குழுவுடன் உல்லாசமாக பேசியது ஆனால் நெடுந்தீவுப் பிரச்சினை பற்றி ஏதும் கதைக்கவில்லை. இதில் இருந்து ஏன் கூட்டமைப்பின் பழுத்த கனிகளும் குள்ள நரியிடம் இன்னும் படிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது சிங்கள புலனாய்வு துறையினரின் வேலை என்பது தெரிகின்றது,

இந்த ஊர்வலத்தில் புலிக்கொடி காட்டுவது அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று நன்கு உணர்ந்த யாழ் மக்கள் இதை செய்யும் அளவுக்கு ஒன்றும் முட்டாள்கள் கிடையாது

சிங்கள புலனாய்வு இப்படி செய்வதன் ஊடாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்வதற்கும் யாழில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களை புலிகள் செய்கின்றார்கள் என்பது போல் வெளிநாடுகளுக்கு காட்ட புலிகள் இருப்பது போல் ஒரு தோற்றப்பாட்டை காட்ட வேண்டிய தேவை உள்ளது அதற்காகவே ஸ்ரீலங்கா புலனாய்வு துறையினர் இதை செய்திருப்பார்கள்.

Edited by தமிழரசு

கூட்டமைப்பினர் இவரை நம்ப மாட்டார்கள். இவருக்கு பிரதமர் பதவி கிடைத்தபோது வேண்டுமென்றே கூட்டமைப்பை ஒதுக்கி வைத்தவர். அதன் பின் தானும் ஒதுக்க பட்டார்.

யாழ் மே தின ஊர்வலத்தில் அரச புனலாய்வு பிரிவினரால் புலிக்கொடி கொண்டுவரப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மேதின ஊர்வலத்தில் தழிழீழ புலிக்கொடியுடன் சிலர் கலந்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐதேக தலைமையிலான எதிரணியினரின் மேதின ஊர்வலம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமானது. அதில் சிவப்பு மஞ்சல் கொடிகளுடன் கூட்டமைப்ன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் சிலர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்கள் , அவர்களுக்கு இடையில் சிலர் தமிழீழ படம் பொறித்த பெனியன்களை அணிந்திருந்ததுடன், ஒருவர் புலிக்கொடியையும் கொண்டுவந்ததைக் காணமுடிந்தது. இவர்கள் காணொளிக்கு துக்கி புலிக்கொடியை துணிச்சலாக காட்டிவண்ணம் வருகிறது சந்தேகங்களை எழுப்புகிறது . நாம் யாழில் தொடர்பு கொண்டு சிலரை கேட்ட பொழுது. இவர்கள் சிங்கள புனலாய்வு பிரிவினர் என்று தெரிவித்துள்ளனர்.சம்பவம் நடந்த பகுதியில் தான் அங்கஜனின் அலுவலகம் இருக்கிறது அங்கிருந்து வந்தவர்கள் தான் புலி கொடியை எடுத்து வந்தார்கள் என்று சொல்கிரார்கள் .

jaffna-may-day-sl-army-spy.jpg

அங்கஜனின் ஆட்களே இதனை செய்துள்ளனர். புலிகளோடு இணைந்து ஐ.தே.கட்சியினர் மேதினத்தை கொண்டாடுகிறார்கள் என தென்பகுதியில் பிரச்சரம் செய்யப்பட்டு வந்த நிலையில், திட்டமிட்டு இந்த நடவடிக்கையில் அரசும் அதன் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டுள்ளது.

புலிக் கொடியை தாங்கி ஓடிச் சென்ற வேளை அரச புலனாய்வுப் பிரிவினரே புகைப்படமும் எடுத்தனர். இவர்கள் அனைவரும் சாம்பல் நிறமான சேட் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelamview.com/2012/05/01/jaffna-may-day-sl-army-spy/

சிங்கள அரச பயங்கரவாதிகள் புலிக்கொடியை நிரந்தரமாக ஏந்திச் செல்லும் காலம் வரும்!

தமிழர்கள் எக் காலத்திலும் புலிகள்தான் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.