Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ உணவுச் சாலைகளில் கரும்புலிகளின் சீருடைகளில் மேசைவிரிப்புக்கள் (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BT-4-100x100.jpg

தேச விடுதலைப் போரில் சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமாகும் உயிராயுதங்களான கரும்புலிகளின் சீருடைகளை உணவகங்களின் மேசைவிரிப்புக்களாகப் பயன்படுத்தி அவர்களின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் சந்திப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் உணவகம் ஒன்றில் உணவருந்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மேசைகளுக்கு கரும்புலிகளின் சீருடைத் துணிகளை விரிப்புக்களாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

போர் நிறைவு பெற்றதும் மாவீர்கள் நினைவிடங்கள், துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள் உட்பட்ட அனைத்து நினைவு எச்சங்களையும் அழித்து வருகின்ற இராணுவம் தற்போது கரும்புலிகளின் சீருடைகளைப் பயன்படுத்தி அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையைத் தோற்றுவித்திருக்கின்றது.

போரின் பின்னர் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து மணல் அகழப்பட்டு வீதிப் புனரமைப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட போது அந்த மண்கும்பிகளில் மாவீர்களின் சீருடைகள், தலை முடிகள் என்பன வெளி வந்ததை அடுத்து மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அந் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BT-1-1024x612.jpgBT-2-1024x612.jpgBT-3-1024x612.jpgBT-4-1024x612.jpgBT-5-copy-1024x612.jpg

எங்கள் மண்ணை நாங்களே ஆளும் நிலைவரும்வரை இப்படியான நிலையில்தான் வாழவேண்டிய நிலை :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து விருந்துண்ணுபவர்களும் நம்மவர்கள்தானே?? பிறகு எதற்கு நாங்கள் சிங்களவன் நோவான்???

கறண்ட்டும், பியரும், படமும், போதைவஸ்த்தும், இடைக்கிடை....களும் கிடைப்பதுதான் சுதந்திரம் என்று இன்றைக்குள்ள யாழ்ப்பாணத்துத் தமிழன் எண்ணும்வரையிலும் எமக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து விருந்துண்ணுபவர்களும் நம்மவர்கள்தானே?? பிறகு எதற்கு நாங்கள் சிங்களவன் நோவான்???

கறண்ட்டும், பியரும், படமும், போதைவஸ்த்தும், இடைக்கிடை....களும் கிடைப்பதுதான் சுதந்திரம் என்று இன்றைக்குள்ள யாழ்ப்பாணத்துத் தமிழன் எண்ணும்வரையிலும் எமக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை.

உண்மைதான்,

உங்களுக்கு ஒரு பச்சை குத்தலாம் என்றால் பச்சை முடிந்துவிட்டது :)

இதிலிருந்து விருந்துண்ணுபவர்களும் நம்மவர்கள்தானே?? பிறகு எதற்கு நாங்கள் சிங்களவன் நோவான்???

கறண்ட்டும், பியரும், படமும், போதைவஸ்த்தும், இடைக்கிடை....களும் கிடைப்பதுதான் சுதந்திரம் என்று இன்றைக்குள்ள யாழ்ப்பாணத்துத் தமிழன் எண்ணும்வரையிலும் எமக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை.

வெளிநாடொன்றில இருந்து கொண்டு, றெஸ்ட் எடுக்கிற நேரத்தில இப்படிப் பின்னூட்டம் போடுற உங்களை நினைச்சால் சத்தியமா சிரிப்புத்தான் வருகுது.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடொன்றில இருந்து கொண்டு, றெஸ்ட் எடுக்கிற நேரத்தில இப்படிப் பின்னூட்டம் போடுற உங்களை நினைச்சால் சத்தியமா சிரிப்புத்தான் வருகுது.......

சும்மா ஒரு பகிடிக்காவது...வெளிநாட்டிலை இருக்கிற தமிழன் என்ன செய்யோணுமெண்டதை ஒரு பட்டியல் போட்டு சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடொன்றில இருந்து கொண்டு, றெஸ்ட் எடுக்கிற நேரத்தில இப்படிப் பின்னூட்டம் போடுற உங்களை நினைச்சால் சத்தியமா சிரிப்புத்தான் வருகுது.......

என்னை நினைச்சுச் சிரிக்கிறது இருக்கட்டும், முதலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

நீங்களெல்லாம் தாயகத்தில களத்தில நிண்டு மாடா உழைக்கேக்க நான் ரெஸ்ட் தான் எடுக்கிறம்...!!!!!!!

உங்களைப் பொறுத்தவரையில் தாயகத்துக்கு வருஷத்துக்கு மூண்டு நாலு விசிட் அடிச்சுப்போட்டு வந்திட்டால் எல்லாக் கடமையும் முடிஞ்சுது அப்படித்தானே??? அந்தத் திறத்தில யாழ்ப்பாணத்தில நடக்கிறதைப் பற்றி எழுதினால் கோவம் பொத்துக்கொண்டு வரூது...!!!!!!

போய், வேற ஏதாச்சும் பிரியோசனமான வேலை இருந்தால்ப் பாரும், பிறகு சிரிக்கிறதப் பற்றி யோசிக்கலாம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இப்ப எல்லாம் எதிரியிடம் அதிகமாவே எதிர்பார்க்கிறம் போல...! எதிரி எப்பவும்.. எதிரியாவே செயற்படுறான். அவன் கொள்கை அளவில் கூட கொஞ்சமும் மாறேல்ல. ஆனால் நாங்களோ.. கொள்கைகளையே விட்டிட்டு.. சிங்கக் கொடி தூக்கிற அளவிற்குப் போயிட்டம் என்றால்.. அது யார் பலவீனம்... அப்படியான எங்கள் முன் கரும்புலிகளை என்ன.. தமிழ் தாயையே சீரழிச்சாலும்.. நமக்குத் தான்.. ஒன்றும் சேதமில்லையே எனும் போது.. நாம் ஏன்.. வருந்தப் போகிறோம்..! :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் உருவாகியிருக்கா விட்டால், இந்த இராணுவத்தினருக்கு, ஒரு தொழில் கிடைத்திருக்காது!

கோட்டையில் பிக் பொக்கட் அடித்துக்கொண்டு திரிந்திருக்க வேண்டியவர்கள்!

அந்த நன்றிக்கடனாக இருக்கும்!

Edited by புங்கையூரன்

சும்மா ஒரு பகிடிக்காவது...வெளிநாட்டிலை இருக்கிற தமிழன் என்ன செய்யோணுமெண்டதை ஒரு பட்டியல் போட்டு சொல்லுங்கோ?

குமாரசாமி அண்ணா... நீங்கள் வலு கோபமாயிருக்கிறியள் எண்டு தெரியுது... ஆனா இப்படி இணையத்தில் நீங்க என்ன செய்தீங்க... ? நான் என்ன செய்தன்.... ? எண்டு கருத்து யுத்தம் நடாத்துவதில் ஒன்றும் பிரியோசனமும் இல்லை எண்டு உங்களுக்கும் தெரியும் தானே...?

சும்மா இணையத்தில் எங்களுக்குள் கருத்து யுத்தம் நடாத்தாமல்... இன்னும் தாயகத்தில் துன்புறும் மக்களுக்கு நாங்கள் நேரடியாக என்ன செய்யலாம் என்று யோசிச்சு அவர்களுக்கு ஏதாவது செய்வம்

நன்றி

என்னை நினைச்சுச் சிரிக்கிறது இருக்கட்டும், முதலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

நீங்களெல்லாம் தாயகத்தில களத்தில நிண்டு மாடா உழைக்கேக்க நான் ரெஸ்ட் தான் எடுக்கிறம்...!!!!!!!

உங்களைப் பொறுத்தவரையில் தாயகத்துக்கு வருஷத்துக்கு மூண்டு நாலு விசிட் அடிச்சுப்போட்டு வந்திட்டால் எல்லாக் கடமையும் முடிஞ்சுது அப்படித்தானே??? அந்தத் திறத்தில யாழ்ப்பாணத்தில நடக்கிறதைப் பற்றி எழுதினால் கோவம் பொத்துக்கொண்டு வரூது...!!!!!!

போய், வேற ஏதாச்சும் பிரியோசனமான வேலை இருந்தால்ப் பாரும், பிறகு சிரிக்கிறதப் பற்றி யோசிக்கலாம். <_<

உங்கள நினைச்சாலும் சிரிப்புச் சிரிப்பாத் தான் வருகுது......

பின்ன.....

தாயகத்தில் நான் என்ன செய்தனான் நீங்கள் என்ன செய்தநீங்கள் என்டு போட்டி ஒன்றும் இங்கில்லை...

நானும் நிறையச் செய்திருக்கிறன், செய்து கொண்டிருக்கிறன்...

நீங்களும் என்னைவிட நிறையச் செய்திருப்பியள் செய்து கொண்டிருப்பியள்...

அதை நான் குறை சொல்லேல்ல....

இப்படி விதண்டாவாதமாக கதைக்கிறத விட்டிட்டு... தாயகத்தில கஸ்டப் படுகிற மக்களுக்கு நாங்க இனி நேரடியாக ஏதாவது செய்வம்(தனிப்பட்ட ரீதியில்) கண்டவனிட்ட காசைக் குடுத்து கரியாக்காமல்.. நேரடியாகச் செய்வம்....

இணையத்தில் இங்கு ஆளையாள் மாறி மாறி கேள்வி கேட்கிறதால ஒன்டும் ஆகிவிடப் போறதில்லை என்ணு தெரியும் தானே...

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.