Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோ ஐயோ.. இந்த தாத்தா தொல்லை தாங்க முடியல்ல..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் தொடர்பாக ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.... : கலைஞர்

kalaaignar%20supa%20vee.jpg

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்ந்ததும், பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் ஆகிய 5 நூல்களை எழுதி உள்ளார்.

இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமைதாங்கி, நூல்களை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர், ‘’தமிழர்கள் எங்கெல்லாம் அவதிக்கு ஆளாகிறார்களோ, அங்கெல்லாம் நம்முடைய கரம் நீண்டு அதனை காப்பாற்ற முன்வரவேண்டும் என்ற சூளுரையை ஏற்கின்ற நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது.

இன்று தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம்.

நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. நம்முடைய இன உணர்வுக்கு இன்று சவால் விடப்பட்டுள்ளது.

நம்முடைய சுயமரியாதைக்கு இன்றைய தினம் நெருப்பு மூட்டப்பட்டுள்ளது. நெருப்பு மூட்டப்பட்டால் மேலும் தளர்ந்து எரியவேண்டிய சுயமரியாதை, நாளைக்கு நம்மையே வீழ்த்தக்கூடிய அளவுக்கு நம்முடைய இனத்தையே வீழ்த்தக்கூடிய அளவுக்கு வந்துவிடுமோ என்ற கவலை என்னை வாட்டி வதைக்கிறது.

நான் விடுகின்ற கண்ணீர், நான் விடுகின்ற பெருமூச்சு, நான் படுகின்ற கவலை, இந்த இனத்தை தட்டி எழுப்ப, இந்த இனத்திற்கு உணர்ச்சியூட்ட பயன்படுமேயானால் நான் பெரியாருக்கு மாணவன் என்ற பெருமையை அடைவேன்.

அடுத்து இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு வீரமணி இடத்திலும், சுப.வீரபாண்டியன் இடத்திலும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்தஇருக்கிறோம்.

எல்லோரும் தமிழருடைய உரிமைக்காக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மாத்திரம் அல்ல, ஈழத்தில் உள்ள தமிழர்களுக்காகவும் பணியாற்றுகின்ற அந்த செயலில் ஈடுபட வேண்டும் என்பது இன்றைய தினம் என்னுடைய கோரிக்கையாகும். விரைவில் தனித்தமிழ் ஈழம் ஏற்பட நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.

தி.மு.க. சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதலமைச்சரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.

என்னிடம் ராஜீவ்காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார்.

இதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்.

வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோரையும் இன்னும் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று கூறுபவர்களின் ஆலோசனையையும் பெற்றுத்தான் மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த டெசோ இயக்கம் தொடர்ந்து பணியாற்ற ஈழத்தமிழகத்தை பெறுவது என்றால் ஆயுத போராட்டத்தால் அல்ல. அமைதியாக அறவழியில் எங்களை நாங்களே பலிகொடுத்துக் கொண்டாலும் கவலையில்லை. ஈழம் பற்றி அங்குள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவோம்’’ என்று கூறினார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் தொடர்பாக ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.... : கலைஞர்

......அறவழியில் எங்களை நாங்களே பலிகொடுத்துக் கொண்டாலும் கவலையில்லை. ஈழம் பற்றி அங்குள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவோம்’’ என்று கூறினார்.

Mystic5-ROFL.gif?et=SdRNwGogHWFIi7BnTSwO2Q&nmid=65359228

  • கருத்துக்கள உறவுகள்

<span style='font-size: 14px;'>

என்னிடம் ராஜீவ்காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார்.

இதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்.

அதுசரி ஏன் ராஜீவ் அனுப்பிய படையை கருணாநிதி வரவேற்க செல்லவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்தவனைக் காலம் மன்னிக்கும்!

ஆனால் அந்தத் தவறை, நியாயப் படுத்த எத்தனிப்பவனைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.