Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் (Photo in)

Featured Replies

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.

ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

jaffna_18512_3.jpgjaffna_18512_2.jpg

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் இல்லை என்பதற்கும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியே நிலவுகிறது என்பதற்கும் மற்றுமொரு சான்று,

தமக்கு இருக்கும் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த கொள்கையில் மாணவர்கள் உறுதியாய் இருப்பது மெச்ச வைக்கிறது.

இந்த நிலையும் ஒரு நாள் மாறும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த நாள் வெகுவிரைவில் வரவேண்டும் என்பதே வேணவா!

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

18_05_2012_Jaffna_01.jpg

யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடிய தூக்கிப் பிடிச்ச சம்பந்தனும் ஐக்கிய இலங்கை.. சுமந்திரனும்.. இனப் பேரழிவில் இறந்து போன மக்களுக்கு ஒரு மெழுகுவர்த்தி கூட கொழுத்தேல்ல..! இந்த நிலையில்.. இந்த மாணவர்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டு இப்படியான அரச பயங்கரவாதத்தை தடுக்க குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

வேணும் என்றால்.. ஐக்கிய இலங்கைக்குள்.. சமாதான சகவாழ்வு என்று ஒரு கருத்தரங்கு வைச்சால்.. சுமந்திரன் ஓடோடி வந்து சிங்களம் உருக உருகப் பேசுவார். இப்படியான எதிரிக்கு அடிவருடும்.. அரசியல்.. சூழ்நிலைகளை எப்படி நாங்க மாற்றப் போறம்.. சிங்கள அரச பயங்கரவாதத்தை எப்படி சரிக்கட்டப் போறம். ஈபிடிபி.. புளொட்...ஈபி போன்ற துரோகிகளை எப்படி சமாளிக்கப் போறம்... இதுகள் மாறாமல்.. தமிழீழ மண்ணில் குருதி ஓடுவது நிற்கப் போறதில்ல..! சிந்திக்க வேண்டியதும்..செயற்பட வேண்டியதும் மக்களே..! :icon_idea::(

படம் தமிழ்நெட்

University student leader attacked in Jaffna

[TamilNet, Friday, 18 May 2012, 09:25 GMT]

A four-member squad on Friday morning attacked the secretary of the Jaffna University Student Union (JUSU) using iron-rods near a Sri Lanka Army camp at Kaladdi in Jaffna with causing serious injuries to the 25-year-old student leader, who was on his way to the University in a bicycle to observe Mu'l'livaaykkaal Remembrance. Despite the threats by the Sri Lanka military intelligence, the students of Jaffna University went ahead with the memorial event stating that it was their democratic right to mark the remembrance day and protested against the military operated administration of civil affairs in the peninsula. Tension prevails at the University of Jaffna where students have gathered in thousands.

http://www.tamilnet....=13&artid=35190

Edited by nedukkalapoovan

ஆயிரம் பிரச்சார கூட்டங்கள் செய்ய முடியாத உதவியை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. மக்களை என்றும் விழிப்புடனே வைத்திருந்து புலிகள் பற்றிய உணர்வுகளை ஊட்டி வருவதன் மூலம் இராணுவத்தினர் செய்யும் பேருதவி மெச்சத்தக்கது

மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நேரத்தில் சிஙகள இராணுவத்தின் வக்கிரங்கள், வறுமை, நிர்க்கதியான நிலமை, யாருமற்ற நிலை போன்றவற்றால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்ற சித்திரவதைகளை அனுபவிக்கின்ற விரக்தியின் விளிம்பில் நிற்கின்ற முன்னாள் போராளிகள் பொதுமக்கள் ஆகியோருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

முள்ளிவாய்க்கால் காலகட்டத்தில் நாம் எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு சர்வதேசம் இருந்தது. எமது மன்றாட்டங்களை வேண்டுமென்றே ஊடகங்கள் மறைத்தன. ஆனால் இன்றைய நிலை வேறு. சிங்கள அரசாங்கத்திற்குக் கடிவாளம் போடுவதற்காகவேனும் எம் போராட்டங்களை முன்னிலைப்படுத்த பலரும் தயாராயுள்ளனர்.

ஆனால் அதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க யார் தயாராயுள்ளனர். முள்ளிவாய்க்கால் கால் கட்டத்தில் நடந்ததைப் போன்ற ஒரு பாரிய கவனயீர்ப்பைத் திட்டமிட்டு நடத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவையேற்படுத்துவதற்கான வாய்ப்பு எம் கைகளில் உள்ளது. அதற்கு எத்தனை புலத் தமிழர்கள் தயார்?

காலனின் வாயிலில் நின்று கொண்டு தம் கடமையைச் செய்யும் பல்கலை மாணவர்களைப் பார்த்த பிறகாவது இந்த நிலை புலத்தில் வருமா? இதுவே என் ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழமே இப்படியான வன்முறைகளுக்கு நிரந்தரமான தீர்வு என்பதை தொடர்ந்து மக்களுக்கு உணர்த்துவதற்கு சிங்கள அரசுக்கும் அடி ஆட்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் பூரண குணமடையா வேண்டுகின்றேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நேரத்தில் சிஙகள இராணுவத்தின் வக்கிரங்கள், வறுமை, நிர்க்கதியான நிலமை, யாருமற்ற நிலை போன்றவற்றால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்ற சித்திரவதைகளை அனுபவிக்கின்ற விரக்தியின் விளிம்பில் நிற்கின்ற முன்னாள் போராளிகள் பொதுமக்கள் ஆகியோருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

மகா யாகம் செய்வோம் !!

இந்த அட்டூழியத்தை அறிக்கைகளை விட்டு அரசியல் நடாத்தும் பச்சோந்திகள் சம்பந்தனும், சுமந்திரனும் கண்டிக்கவில்லை.

உத்தியோக பூர்வ பேச்சாளர் பிரேமச்சந்திரனும் கண்டிக்கவில்லை! மாவையும் கண்டிக்கவில்லை!

சிறுபிள்ளைத்தனமாக உளறித்திரியும் சரவணபவானும் க்கவில்லை!

யாழ் மாணவர்களின் துணிச்சலுக்கு தலைவணக்கம்!

சிங்கள அரச பயங்கரவாதிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நடாத்திய மிலேச்சத் தனமான தாக்குதலில் காயமடைந்த தர்சானந் விரைவில் பூரண குணமடையட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.