Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தையார் தினத்தின் நினைவாக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/WXM2mrk8mfw

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/jedQnLEmkds

  • தொடங்கியவர்

முகவரி தந்த கவிதை- தந்தையார் தினத்திக்காக...

உலகுக்கு முகவரி

தந்த என் தந்தையே

உத்தம புருசர்களுள்

முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து

பாமகனாய் வளர்ந்து

உம் புகள் பாட

எனக்கொரு திருநாள்

தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்

மகன் உலகில் சிறக்க

நீர் கொண்ட வேடம்

மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த

ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து

பாசத்தின் நித்திலமாய்

மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்

உம் வியர்வையில் நனைந்த

அழியாத்தடங்களாய்

வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்

ஈருலக வெற்றியில்

உம் சுகமான வாழ்வுக்காய்

உமக்காக இரைஞ்சுகிறேன்.

http://www.eegarai.net/t31910-topic

  • தொடங்கியவர்

தந்தை பாசம்

தண்டச் சோறு என்று

ஊர் சுற்றிஎன்று

சதா சர்வகாலமும்

திட்டினாலும்

நான் எடுப்பேன்

என்று தெரிந்தே

ஓரம் கிழிந்த

அவர் சட்டைப் பையில்

என் அப்பா வைக்கும்

அந்த

நூறு ரூபாய்த் தாளில்

வியர்வைக் கரையில்

தெக்கி நிற்கிறது எனக்கும்

என் தந்தைக்குமான பாசம்

(அபி)

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தந்தையருக்கும் எனது வாழ்த்துக்கள்!

(நீங்கள் தந்தை ஆனது தெரியாமல் வாழும் தந்தையருக்கு? இப்ப வேண்டாம் வேறு ஒரு திரியில்)

தந்தை என்பது மிகவும் பொறுப்பு உள்ள பதவி.

புலம்பெயர் தேசத்தில் எமது அநேகமான தந்தையர் குடியும் வெறியுமாக திரிகிறார்கள்........... அவர்களுடைய பிள்ளைகள் அந்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு அவர்களது எதிர்காலம் பாழாவதை கண்டுகொளாது இருப்பது வெறுப்பை கொடுக்கிறது.

நல்ல பதிவு குட்டி.

ஒருவனுக்கு, நல்ல தகப்பனும் தாயும் ஆசானும் கிடைப்பது பெரிய வரம்.

என்றும் மறவா, எனது தந்தையைப் பற்றி எழுத எனக்கு எழுத்தறிவு போதாது.

பதிவுகளைத் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமது பிள்ளைகளுக்கு விரும்பியதையெல்லாம் வாங்கி கொடுத்து மறைமுகமாக தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிகிரார்கள்.

கடந்த மாதம் ஐரோப்பா சென்றிருந்தேன் பத்து முதல் பதினைந்து வயதுக்கு உள்ளபட்ட அனைத்து சிறார்களின் கைகளிலும் ஐ போன் இருப்பது எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்த்தது.

அவர்களது பெற்றோர் அதை பெருமையாக கூறிகொள்வது கவலை தருகின்றது.

எதிர்கால படிப்பு பற்றிய எந்த சிந்தனையும் இல்லை.

இருந்தால் ஏன் இப்போது ஐ போன் என்ற கேள்வி நிச்ச்ச்சயம் வரும்......... அது வரவில்லை எனும்போதே எதிர்கால திட்டங்கள் தெரிகின்றது.

அது பதுமை வயது பாலியல் துச்பிரயோகத்திட்கே வழிகாட்டும்.

பின்பு வீணாக இளைய தலைமுறையை நோக போகிறார்கள். அதற்கு அத்திவாரம் போட்டவர்கள் பெற்றோரே என்பது கவலையானது.

ஒரு ஆங்கில பழ மொழி

"A parents gives everything to their children they gives nothing"

  • தொடங்கியவர்

மருதங்கேணி, தப்பிலிக்கு நன்றி... :)

------

[media=]

  • தொடங்கியவர்

----------

[size=4]நெகிழ வைத்த ஒரு கவிதை[/size]

[size=5]"அப்பா..." [/size]

[size=4]எப்படி எப்படி

எல்லாமோ

தன் பாசம்

உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு

கைஅழுத்தத்தில்

எல்லாமே

உணர்த்துவார்

அப்பா...[/size]

[size=4]முன்னால்

சொன்னதில்லை

பிறர் சொல்லித்தான்

கேட்டிருக்கிறேன்

என்னைப்

பற்றி பெருமையாக

அப்பா

பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா

எத்தனையோ முறை

திட்டினாலும்

உறைத்ததில்லை

உடனே

உறைத்திருக்கிறது

என்றேனும்

அப்பா

முகம் வாடும் போது

உன் அப்பா

எவ்வளவு உற்சாகமாக

இருக்கிறார் தெரியுமா

என என் நண்பர்கள்

என்னிடமே சொல்லும்

போதுதான் எனக்குத்

தெரிந்தது

எத்தனை பேருக்குக்

கிடைக்காத தந்தை

எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே

கொடுப்பதற்கு

முடியாததால் தான்

அப்பாவை அனுப்பி

இருக்கிறாரோ

கடவுள்..?

சிறுவயதில்

என் கைப்பிடித்து

நடைபயில

சொல்லிக்கொடுத்த

அப்பா

என் கரம் பிடித்து

நடந்த போது

என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்

தடுமாறினாலும்

பதறும் அப்பா

இன்று நான்

தடுமாறிய போது

பதறாமல் இருக்கிறார்

மீளா துயிலில்...

அம்மா செல்லமா

அப்பா செல்லமா

என கேட்டபோதெல்லாம்

பெருமையாகச் சொல்லி

இருக்கிறேன்

அம்மா செல்லமான

அப்பா செல்லம் என

இன்று

அப்பா சென்ற பின்னர்

நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர்

நான் இருக்கிறேன்

எனச் சொன்னாலும்

அப்பாவை போல்

யார் இருக்க முடியும்..?

சொல்லிக்

கொடுத்ததில்லை

திட்டியதும் இல்லை

இல்லை என்றும்

சொன்னதுமில்லை

வேண்டாம் எனக்

கூறியதும் இல்லை

இருந்தும் ஏதோ

ஒன்றினால்

கட்டுப்படுத்தியது

அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை

அவரும் காட்டியதில்லை

எங்கள் பாசத்தை...

இருந்தும் காட்டிக்

கொடுத்த கண்ணீரைத்

துடைக்க இன்று

அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்

பாசத்தையும்

அப்பாவிடம்

நேசத்தையும்

இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்

இல்லாமலும் போகலாம்...[/size]

http://salemdistpres...g-post_478.html

Edited by குட்டி

என் வாழ்கையின் மாதிரி (Roll Model ) என் அப்பா தான். இதை நான் அவரிடம் நேராகவே சொல்லி இருக்கிறேன். இந்த வாழ்கையின் எவ்வளவு பாடங்களை ஒரு நண்பனாக எனக்கு இன்றும் சொல்லி கொண்டிருக்கிறார்.

அவர் இன்றும் எனக்கு சொல்லும் ஒரு வசனம், தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று. குடி,வெத்திலை, பெண் சகவாசம், பொய், களவு போன்ற எந்த குறையையும் நான் அவரிடம் கண்டதில்லை. நான் குடிபதையும் அவர் தடுப்பதில்லை.

இன்றைய தந்தையர் தினத்தில் அவரை வாழ்த்துவதோடு, ஆசீர்வாதமும் வேண்டி நிற்கிறேன்.

நன்றி குட்டி உங்கள் கவிதைக்கு. அருமையாகவும் தந்தையர் பெருமை சொல்லுவதாகவும் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தந்தையர் தின நாளில் எனது அப்பா (ஐய்யா)வுக்கு விருப்பமான பாடல் ஒன்றை இணைத்துள்ளேன் .[/size]

http://youtu.be/-gyJT1nQDnM

இன்று அவர் எங்களுடன் இல்லை ஆனாலும் எங்களின் உள்ளங்களில் வாழ்கின்றார் .

இதனை பகிர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த யாழ் இணையத்துக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் .

  • தொடங்கியவர்

...

நன்றி குட்டி உங்கள் கவிதைக்கு. அருமையாகவும் தந்தையர் பெருமை சொல்லுவதாகவும் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.

உங்கள் வரவுக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி பகலவன்.. நான் இந்தத் திரியில் பதிந்த கவிதைகள் எதுவும் எனது சொந்த ஆக்கம் இல்லை.. அவற்றிக்கான மூலத்தைக் கீழே குறிப்பிட்டுளேன்.. இணையத்தில் தேடித் படித்ததில் மனதிற்குப் பிடித்திருந்தது, அதனால் பகிர்ந்து கொண்டேன்.. உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சியே... :)

நல்லதொரு பாடல் தமிழரசு இணைப்பிற்கு நன்றி... :) அழகான தந்தையின் பாடல்களை இந்தத் திரியில் இணைத்த யாயினிக்கு மீண்டும் நன்றிகள்! :)

-----

என் தந்தையின் நினைவுகளை நெஞ்சிருக்கும்வரை சுமந்தபடி...

[media=]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[media=]

குட்டியருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனது மகளின் நடன நிகழ்ச்சி எங்கள் நகர கடற்கரை மண்பத்தில் நடந்தது நிகழ்வு இறுதியில் தந்தையர் தின வாழ்த்து சொல்லி அனைவரும் தங்கள் தந்தைகள் மீது பூங்கொத்துக்காளை எடுத்து எறிந்தார்கள் எனது மகளும் நடனத்தின் இறுதியில் பூங்கொத்து ஒன்றை எடுத்து மேடையில் இருந்து என்னை நோக்கி வீசினாள் மகிழ்ச்சிதான் ஆனால் கடந்த வருடம் அவளது நடனத்தை யாழில் பகிர்ந்ததுபோல் இந்த வருடம் நான் பகிரவில்லை காரணம் ஏன் எனில் கடந்த வருடம் மகளின் ஒளிப்பதிவை வைத்து யாழில் என்மீது சிலர் தங்கள் காழ்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்கள் பெயரை நான் எழுதப்போவதில்லை எனது மகளை கேவலமாக எழுதியவருக்கும் நான் பச்சை குத்தியிருந்தேன் பின்னர் யாழ் நிருவாகம் அதை முழுவதுமாக நீக்கியிருந்தது :) :)

  • தொடங்கியவர்

உங்கள் வரவுக்கும் கருத்துப்பகிர்விற்கு நன்றி சாத்திரி... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.