Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுகிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

trinco-oil-tanks.jpg

திருகோணமலையில் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா அரசாங்கம் மீளப்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திருகோணமலையில் அமைந்துள்ள இந்த எண்ணெய்க் குதங்களை கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்கா பெற்றோலிய அமைச்சு, 33 ஆண்டு குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது.

ஐதேக ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நிறுத்தி விட்டு, எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

“இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்லாத காணியில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு விடும் உடன்பாட்டில் சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சு கையெழுத்திட முடியாது“ என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த உடன்பாட்டை நிறுத்தி விட்டு எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவது குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த எண்ணெய்க் குதங்கள் பொருத்தமான முறையில் வழங்கப்படவில்லை என்றும் பெற்றோலியத்துறை அமைச்சு கருதுகிறது.

அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக தாம் எதையும் அறியவில்லை என்று லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

“புதிய முன்னேற்றங்கள் குறித்து எமக்கு தகவல் தரப்படவில்லை. நாம் ஏற்கனவு இந்த எண்ணெய்க் குதங்களை புதுப்பிக்க பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளோம்.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக, லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் சுமார் 12 மில்லியன் டொலர் வரை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.puthinapp...?20120609106358

சும்மா கதையளக்காமல் அதை சீனாவுக்கு கொடுத்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

“இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்லாத காணியில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு விடும் உடன்பாட்டில் சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சு கையெழுத்திட முடியாது“ என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுதான் சிங்களவனின் தந்திரம்.. மோட்டுத்தனமாக மோதாமல் சட்டத்தைக் காட்டி காரியம் சாதிப்பது.. வடக்கையும், கிழக்கையும் பிரித்தது போல..

இன்று ஏதாவது தீர்வு வந்தால்கூட, நாளடைவில் அதை நிர்மூலம் ஆக்க சிங்களவன் திட்டங்களை வைத்துக்கொண்டுதான் தருவான்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

“இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்லாத காணியில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு விடும் உடன்பாட்டில் சிறிலங்காபெற்றோலியத்துறை அமைச்சு கையெழுத்திட முடியாது“ என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சந்தோசமான செய்தி

இதன்படி

அது தமிழீழத்துக்கு சொந்தமானது என்கிறார்.

இடம் வாங்கி மடம்பிடிக்க திட்டம் போட்ட கிந்திய கதைகளின் முடிவுகள் எல்லாம் .........

"நாராயணா! சிவஸ்ங்கரா ! அரூப நிரூபம்மாதாயே!" தவிடுபொடியாகிறதே

குரங்கின் இருதயத்தை தின்ன வெளிக்கிட்ட முதளையின் கனவாகிறதே!

இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுகிறது சிறிலங்கா

எம் தேசியத்தலைவரின் சிந்தனை மகிந்தாவின் சிந்தனையை விட சிறந்தது என்பதை இங்கு பார்க்கிறேன்........................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இன்னுமொருக்கால்.... ஸ்ரீலங்காவிடம் கெஞ்சிப் பாத்தால், எண்ணெய்க் குதம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அடுத்த ஐ நா மனித உரிமைக்குழுவின்

அமர்வு வரை இப்படியான இழுபறிகள் நடக்கும்.

வெல்லப் போவது இலங்கையா அல்லது இந்தியாவா

அல்லது இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும்

ஈழத்து மக்களா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இடம் வாங்கி மடம்பிடிக்க திட்டம் போட்ட கிந்திய கதைகளின் முடிவுகள் எல்லாம் .........

"நாராயணா! சிவஸ்ங்கரா ! அரூப நிரூபம்மாதாயே!" தவிடுபொடியாகிறதே

குரங்கின் இருதயத்தை தின்ன வெளிக்கிட்ட முதளையின் கனவாகிறதே!

இந்தியா அவமானத்துடன் ஒதுங்கப்போவது தவிர்க்க முடியாதது.. :rolleyes: ஆனால் விரைவில் இலங்கைத்தீவில் அவர்கள் மீண்டும் காலடி பதிக்கும் நிலை வரலாம்.. :unsure:

இந்தியா, இன்னுமொருக்கால்.... ஸ்ரீலங்காவிடம் கெஞ்சிப் பாத்தால், எண்ணெய்க் குதம் கிடைக்கும்.

முதலில் எண்ணைக் குதத்தைக் குடுத்திட்டு இப்ப இன்னொரு குதத்தைக் காட்டிவிட்டானே சிங்களவன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது!

தனக்குக் கிடைக்கவேண்டியத்தை, இன்னொருவன் எடுத்துவிட்டால், கொலை கூடச் செய்யத் தயங்காதவர்கள்!

அது பெண்ணாக இருந்தாலென்ன அல்லது பொருளாக இருந்தாலென்ன, வேறு பாடில்லை!!

இவர்களது, பழிவாங்கும் தன்மைமையே, ஈழத் தமிழர்களின் அழிவில் முடிந்தது!

இதுவே சிங்களவர்களுக்கும் நடக்கலாம்!

தமிழீழ யாகத்தின், அவிர் பாகத்தின், போட்டிகளே, எமது தலை விதியையும் நிர்ணயிக்கும்!

இந்தியாவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது!

தனக்குக் கிடைக்கவேண்டியத்தை, இன்னொருவன் எடுத்துவிட்டால், கொலை கூடச் செய்யத் தயங்காதவர்கள்!

அது பெண்ணாக இருந்தாலென்ன அல்லது பொருளாக இருந்தாலென்ன, வேறு பாடில்லை!!

இவர்களது, பழிவாங்கும் தன்மைமையே, ஈழத் தமிழர்களின் அழிவில் முடிந்தது!

இதுவே சிங்களவர்களுக்கும் நடக்கலாம்!

ஜனநாயக வேடம் போட்டிருக்கும் சிங்களக் காட்டுமிராண்டிகளிடம் இந்தியக் காட்டுமிராண்டிகள் பிச்சை எடுக்கத்தான் லாயக்கு.

இந்தியக் காட்டுமிராண்டிகள் சிங்களப் பயங்கரவாதிகள், ரஷ்ய-சீன சந்தர்ப்பவாதிகள், பாகிஸ்தான் - ஈரான் பயங்கரவாதிகளின் மறைமுக துணையோடு தான் ஈழத்தமிழரை படுகொலைசெய்ய, பழிவாங்க முடிந்தது. இந்திய ஓநாய்கள் தனித்து சிங்களவனை பழிவாங்குவது பகற்கனவு!

ஒருவேளை மன்மோகன் சிங்கையும், பிரணாப் முகர்ஜியையும் அலரி மாளிகையின் மலசல கூடம் கழுவும் வேலைக்கு அமர்த்துவதன் மூலம் சில சாதகங்களைப் பெற இந்தியக் காட்டுமிராண்டிகள் முயலலாம். இது தான் இன்றைய நிலைமை.

Edited by ஆராவமுதன்

இவ்வாறான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு தரப்பு மீறும்பொழுது பல கோடிகள் நட்ட ஈடாக வழங்கவேண்டும்.

அடுத்து இந்தியாவை பழிவாங்கும் முயற்சிகள் (ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்) சிங்களத்தின் பொருளாதார நலன்களை, பொருளாதார முதலீடுகளை சீனா, உருசியா தவிர்ந்த நாடுகள் மத்தியில் பாதிக்கும்.

இவற்றை தனியார் வர்த்தக உடன்படிக்கைகளாக கருதமுடியாது. இவை அரச வர்த்தக உடன்படிக்கைகள் போன்றவை. நாரயண், சிவசங்கர் போன்றோர் காலத்து உடன்படிக்கைகள், இந்தியா-இலங்கை சம நிலையில் இருந்து செய்திருக்க முடியாது. உடன்படிக்கை முறிவு சட்டங்களில் இரண்டு பக்கமும் சரியாக இருந்திருக்க முடியாது. இங்கிலாந்து-பெற்றோலியம் கார்பறேசன், எயார் லங்கா - அராப் எமிரேட் போன்ற உடன் படிக்கைகள் போன்று இது இருக்க முடியாது. இவர்களின் காலங்களின் பின்னர் இந்தியாவால் வரியிலா வர்த்தக உடன்படிக்கையையோ அல்லது, மூதுர் அனல் மின்சாரத்தை, அல்லது சீனாவிடம் தோற்றுப்போன பல வர்த்தக உடன்படிக்கைகளையோ கைச்சாத்திடமுடியாமல் இருப்பது, இலங்கைக்கு, இந்திய அவர்கள் காலம் போல விட்டு கொடுபதில்லை எனபதையே காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.