Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

” தமிழீழம் ” உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு !! (காணொளி)

Featured Replies

வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது.

குருதிஸ்தானில் (வட இராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர்.

இவ்வாறு தமிழீழ அணிக்காக பிரித்தானியாவில் இருந்து சென்று விளையாடிய வீரர்கள் இரவு (10-06-2012) லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி New Federation Board ஆல் நடாத்தப்படுகிறது.

காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டு வீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் இவர்களுக்கு தாங்கள் தமிழீழத்தைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் என்னும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

தம் தாய் நாட்டின் சார்பாக ஒரு சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவது என்பது பெருமைப் படக்கூடியதொன்றாகும். இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி தமிழீழ அணியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றனர்.

இவ்வாண்டு வீவா சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம், டார்பூர், இராக்கி குருதிஸ்தான், வட சைபிரசு, ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்சு, மேற்கு சகாரா மற்றும் சான்சிபார் ஆகிய ஒன்பது அணிகள் மோதியிருந்தன.இவ்வணிகள் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்துக்காக கடுமையாக போட்டியிட்டன. தென் ஆபிரிக்காபின் முன்னால் அரச அதிபர் நெல்சன் மண்டேலா தன் மக்களின் விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடினார். அவரின் நினைவாகவே இவ்வெற்றிக் கிண்ணத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இச்சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கு பற்றியமை, தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மற்றொரு ஒரு பதிவாகும்.தமிழீழ அணியைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் தங்கள் கைகளில் தமிழீழ தேசிய கொடியை ஏந்தி போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

ரோஸ் ஸ்ரீ அவர்களின் நேர்காணல் :

Tamileelam-8.jpgTamileelam-7.jpgTamileelam-6.jpgTamileelam-5.jpgTamileelam-4.jpgTamileelam-3.jpgTamileelam-1.jpgTamileelam-2.jpg

http://thaaitamil.co...ம்-உதைப்பந்தாட/

துணிச்சலான, வரலாற்றில் தேவையான பதிவு. இதன்மூலம் ஒரு பெரிய பரப்புரையும், குறிப்பாக விளையாட்டு பிரியர்கள் ஊடக செய்யப்பட்டுள்ளது. இந்த இளையவர்களை அனைவரும் ஊக்குவிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Bravo!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் தமிழீழ உதைபந்தாட்ட அணியை நிறுத்தி விடாமல்

வேறு பல நாடுகளில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களையும்

இணைத்துப் பயிற்சி அளித்து பல நட்பு ரீதியிலான விளையாட்டுக்களை

ஒழுங்கமைத்து அவர்களின் திறமைகளுக்கு இன்னும் மெருகூட்ட வேண்டும்.

காலம் நேரம் என்பன ஒத்துழைத்தால் நிச்சயமாக தமிழீழ அணி

ஒரு சிறந்த அணியாக உலகில் வலம் வரும்.

தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு எனது நல்வாழ்த்துகள்! அதன் உருவாக்கம்,செயற்பாடுகள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர்கள்

மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். வேறுபட்ட புலம்பெயர்நாடுகளில் இருந்து வந்தவர்களை ஒழுங்குபடுத்தி,ஒன்றுபடுத்தி செயற்படுத்திய

பணி மிகுந்த சிறப்பானது. சுதந்திரமான தமிழீழம் பற்றிய போராட்டப்பாதையில் ஒரு படிக்கல் எனலாம். இதுபோன்ற பல பல செயல்களில்

திறமையும் ஆற்றலும் உள்ள தமிழர்கள் முன்வந்து ஈடுபடவேண்டும். ஏனெனில் இதுபோன்ற பல வேறுபட்ட பல்துறைச் செயற்பாடுகள்

நம்மை விடுதலைக்கு தகுதியானவர்களாக உயர்த்திவிடும். இதனோடு தொடர்புபட்டவர்களுக்கு மீண்டும் நல்வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.