Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனுக்குத்தான்..........

Featured Replies

ஆகா அந்த வீதிகள் ,இடங்கள் எல்லாம் அன்று நடந்தவயை நிச்சயம் மறந்திருக்காது...............வி அண்ணா உங்கள் கதை போல் எனக்குள்ளும் மறக்க முடியாத பல நினைவுகள் ,கதைகள் சில நேரம் என் மனதை ஊடுருவும் ........என்ன செய்வது காலத்தின் கோலம் .... நேரம் இருந்தால் எனது பசுமயான ,இனிமயான அந்த நாள் ஞாபகங்களை கதையாய் எழுதுகிறென்.

பழைய பூங்கா வீதியில் முடிவில்,இரு வீடுகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....அதில் ஒன்றில் தான் எனது குடியிருப்பு[அறை வாடகை] இருந்தது.விடுதிச்சாலையில் இருந்து வெளியெறியபின் [துரத்துப்பட்டபின்].

சரி இத்துடன் நிறுத்துகிறேன்.......விட்டால் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றயும் எழுதி விடுவேனோ என்ற பயத்தினால்.........

பி.குறிப்பு ......1989 தொடக்கம் 1993 காலப்பகுதியில் நீங்கள் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும்....னன்றி அண்ணா.

:( :(

அண்ணா நீங்களும் கதையாக எழுதுங்கோ. :( நாங்கள் வாசிப்பம். :) உங்கள் ஒருவரையும் எனக்கு தெரிய வாய்ப்பில்லை. :D

  • Replies 91
  • Views 8.4k
  • Created
  • Last Reply

அண்ணா நீங்களும் கதையாக எழுதுங்கோ. நாங்கள் வாசிப்பம். &ன்ப்ச்ப்;&ன்ப்ச்ப்;உங்கள் ஒருவரையும் எனக்கு தெரிய வாய்ப்பில்லை.

[/ஃஉஒடெ]

நன்றி கதால் [துளசி] தாங்களும் அதெ இடம் என்றுதான் நினைக்கிறென்.am i correct????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பழமொழி சொல்லுவாங்கள் பேயனாக்கலாம் **************************** ஆக்கக்கூடாது என்று :wub: :wub:

தொப்பி அளவான ஆக்கள் போட்டுக்கொள்ளுங்கோ.. :unsure:<_<

நன்றி கதால் [துளசி] தாங்களும் அதெ இடம் என்றுதான் நினைக்கிறென்.am i correct????

இல்லை அண்ணா, ஆனால் அதற்கு கிட்ட உள்ள வேறொரு இடத்தில் வாடகைக்கு ஒரு வீட்டில் இருந்தோம். ஆனால் 96 ஆம் ஆண்டிலிருந்து. (இடம்பெயர்ந்து சென்று திரும்ப வந்த பின்). அப்ப நான் சின்னப்பிள்ளை. ஆனால் வளர்ந்த பின் அப்பகுதியால் வந்து போய் இருக்கிறன். அது வரை நீங்கள் அங்கு இருந்திருக்க மாட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான உண்மைச் சம்பவத்தை, கதையாக கூறிய விசுகருக்கு பாராட்டுக்கள் :) .

பலர் உண்மைச் சம்பவங்களை, துணிந்து எழுத தயக்கம் காட்டுவார்கள்.

நீங்கள் அதையும் தாண்டியது மகிழ்ச்சி.

அடுத்த கதையை... தந்தை ஸ்தானத்திலிருந்து எழுதுவதை வாசிக்க, ஆவலாக உள்ளேன்.

ஆகா அந்த வீதிகள் ,இடங்கள் எல்லாம் அன்று நடந்தவயை நிச்சயம் மறந்திருக்காது...............வி அண்ணா உங்கள் கதை போல் எனக்குள்ளும் மறக்க முடியாத பல நினைவுகள் ,கதைகள் சில நேரம் என் மனதை ஊடுருவும் ........என்ன செய்வது காலத்தின் கோலம் .... நேரம் இருந்தால் எனது பசுமயான ,இனிமயான அந்த நாள் ஞாபகங்களை கதையாய் எழுதுகிறென்.

பழைய பூங்கா வீதியில் முடிவில்,இரு வீடுகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....அதில் ஒன்றில் தான் எனது குடியிருப்பு[அறை வாடகை] இருந்தது.விடுதிச்சாலையில் இருந்து வெளியெறியபின் [துரத்துப்பட்டபின்].

சரி இத்துடன் நிறுத்துகிறேன்.......விட்டால் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றயும் எழுதி விடுவேனோ என்ற பயத்தினால்.........

பி.குறிப்பு ......1989 தொடக்கம் 1993 காலப்பகுதியில் நீங்கள் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும்....னன்றி அண்ணா.

நான் 90 களில் கச்சேரியடியில் இருந்திருக்கின்றேன் (1 வருடம்) இடங்களை மறந்து விட்டேன்.

ஒரு பழமொழி சொல்லுவாங்கள் பேயனாக்கலாம் **************************** ஆக்கக்கூடாது என்று :wub: :wub:

தொப்பி அளவான ஆக்கள் போட்டுக்கொள்ளுங்கோ.. :unsure:<_<

என்ன ஜீவா அண்ணா திடீரென்று சம்பந்தமில்லாமல் கதைக்கிறீர்கள்? :unsure:

நான் 90 களில் கச்சேரியடியில் இருந்திருக்கின்றேன் (1 வருடம்) இடங்களை மறந்து விட்டேன்.

அப்படியா அலை மிக்க மகிழ்சி .........சில வேளைகளில் உங்களை எனக்கு தெரிந்திருக்கும் .............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறை வீதியை சொல்லுறீங்களோ? சபேசன் சேரிடம் படித்தாரா? :D (எனக்கு ஆளை தெரிய வாய்ப்பில்லை. பயப்படாமல் சொல்லுங்கள்.)

அது தான்

சின்னக்கடைக்குள் எனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் கடை வைத்திருந்தார்

அவர்தான் எனது பாதுகாப்புப்பிரிவு.

வாகன ஒழுங்குகளையும் அவர்தான் செய்வார்.

எனவே அந்தப்பகுதி முழுவதும் தெரியும்.

இவரை வீட்டில் விட்டுவிட்டு அவர் இரவு கடை பூட்டியதும் ஐந்துலாம்புச்சந்தியில் பேபாய் நல்ல மாடடிறைச்சியுடன் ஒரு வெட்டு வெட்டுவோம். அங்கு தங்குவதென்றால் இரவு படம் பார்ப்போம். அல்லது அவர் வாடகைக்கு வாகனம் வைத்திருந்தார். அதில் வீட்டுக்கு வந்துவிடுவோம்.

இன்று நினைத்தாலும் இனிக்கும் பருவமது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு காதல் கதை ....நன்றிகள் உங்கள் அனுபபகிர்வுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜீவா அண்ணா திடீரென்று சம்பந்தமில்லாமல் கதைக்கிறீர்கள்? :unsure:

உங்களுக்கு கூடவா சம்பந்தம் இல்லாமல் தெரியுது.. :(

ஷேம்...ஷேம்.. <_< <_<

விசுகண்ணை 3 எண்டு எழுதினார் நான் எதையெண்டு எழுதுறது?????? :lol: :lol: :icon_mrgreen::icon_idea:

:lol: :lol: :lol:

உங்களுக்கு கூடவா சம்பந்தம் இல்லாமல் தெரியுது.. :(

ஷேம்...ஷேம்.. <_< <_<

புரியும்படி சொல்லுங்கோ.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுக்கு, மூன்று பிள்ளைகள்.

அதைப் பற்றித்தான்... அடுத்து மூன்று என்று குறிப்பிட்டுள்ளார் என நம்புகின்றேன்.

கணக்குப் பார்த்தால்... விசுகு, மொத்தமாய் ஆறுக்கு குறி வைத்துள்ளார் போலுள்ளது. :D:lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

நேரமின்மை காரணமாக இதற்குள் வரமுடியவில்லை.

சில மாதங்களுக்கு முனன் கனடாவிலிருந்து கண்ண மச்சான் இங்கு வந்திருந்தார். அப்போ எனது மனைவி எனது இரண்டாவது மகன் வீட்டில் படிப்பதில்லை. உயர்தரம் எடுக்கின்றான். அதனால் பயமாக உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு அவர் அவனுடன் சில நிமிடங்கள் கதைத்துவிட்டு எனது மனைவியிடம் பயப்படாதே அவன் வெற்றி பெறுவான் என்று சொல்லிச்சென்றுள்ளார்.

தற்போது அவன் பாசானதும் தொலைபேசியில் எனது மனைவி கேட்டுள்ளார் அவரிடம் எப்படி அவ்வளவு தெளிவாக சொன்னீர்கள் என்று. அதற்கு அவர் அவனுக்கு அப்பனின் மூளை. அவனது அப்பனை நானும் இப்படித்தான் தவறாக கணக்கு போட்டேன் ஆரம்பத்தில் என்றாராம்.

பாருங்கள் ஒரு உண்மை எவ்வாறு பயணிக்கிறது எமது வாழ்வோடு சேர்ந்து என்று.

மைத்துணர் அனுமதி தந்ததால் எனது நல்லூருக்கான வருகை அதிகரித்திருந்தது.

அத்துடன் 1983 கலவரத்தின் பின்

யாழே எனக்கு வாழ்க்கையானது.

எனது நண்பர்கள் திருநெல்வேலி

கச்சேரியடி

அல்வாய்

என இருந்ததால் நல்லூரும் சின்னக்கடையும் எனது தங்குமிடங்களாக மாறியிருந்தன.

அந்த நேரத்தில் மாமா விசுவமடுவில்தான் தலைமை ஆசிரியராக இருந்தார். அதனால் வெள்ளி இரவு வருவார். திங்கள் காலையில் போவார்.

அவர் வந்தால் வீட்டில் கேட்கும் முதலாவது கேள்வி மருமகன் எப்போ வந்தார். எப்போ போகிறார்? என்று தானிருக்கும். எனது மனைவி என்னிடம் சொல்லும் போது நான் சிரிப்பேன். அதுவே பின்னர் எனக்கு ஒரு சிரிப்புக்குரிய சொல்லாகிவிட்டிருந்தது. நானே மனைவியிடம் கேட்பேன் அப்பா கேட்கலையோ என.

ஆனாலும் அவர் எனது சொந்த மாமனார். அவர்மீது பெரும் மரியாதை இருந்தது. அநேகமாக எனது 3 மைத்துணரில் ஒருவரேனும் நின்றால் மட்டுமே நான் அங்கு தங்குவேன். இது அவர்களுக்கும் என்னில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

சில நேரங்களில் நான் வீட்டில் நிற்கும்போது அவர்கள் எல்லோரும் வெளியில் போகவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகவும் சிரமப்படுவதை கண்டுள்ளேன். பின்னர் அதை உணர்ந்து நானே வெளியில் போய்விடுவேன்.

சிலநேரங்களில் எனது மனைவிக்கு அதிகமான வேலைகளைக்கொடுத்துவிட்டுச்செல்வார்கள். அவர்கள் வருவதற்குள் அவற்றை செய்து முடிக்கவே முடியாதபடி. ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து செய்து முடித்துவிட்டு யாலியாக உட்கார்ந்து பேசுவோம்.

இப்பவும் எனது மனைவி சொல்லுவாள். அந்த நேரம் எல்லாவேலைகளையும் செய்து தந்த ஆளை தற்போது காணவில்லை என்று.

இப்போ இதையெல்லாம் இங்கு ஏன் எழுதுகின்றேன் என்று யோசிக்காதீர்கள்.

காரணம் இருக்கு.

இப்போது நான் என் மாமனாரின் நிலையில்.

என் பிள்ளைகளுக்கு எத்தனை கட்டுப்பாடு

அதிலும் பெண் பிள்ளைகளுக்கு. கேட்கவே வேண்டாம்.

வாழ்க்கை ஒரு சக்கரம்.

அது தனது சுழற்சியில் எல்லோரையும் படிப்படியாக எல்லாநிலைக்கும் கொண்டு வரும். எனது மக்கள் இதுவரை எவரையும் காதலிக்காதபோதும்......

ஒவ்வொரு நிமிடமும் அவர்களது பொழுது எனது கண்காணிப்புக்களுக்கு மத்தியிலேயே செல்கிறது.

அப்படியாயின் எனது மாமனாரின் மனம் எந்தநிலையில் இருந்திருக்கும். அவரது கணண்காணிப்பு எனக்கு பகீடியாக இருந்ததே ஒரு வயிதில்.

என்னை இன்று காலச்சக்கரம் எனது மாமனாரை நினைக்கவைக்கிறது.

ஒரு மனிதனுடைய சுயவிமர்சனத்தை அவன் எழுதுவதென்பது எவ்வளவு கடினம் என்பதை இதை எழுதும்போது நான் முற்றுமுழுதாக உணர்கின்றேன். ஆனால் பொய்களை எழுதி என்னை பூசிமெழுக விரும்பவில்லை.

இது சிலருக்கு பயன் பெற்றால் அதுவே எனக்கு திருப்தி தரும்.

Edited by விசுகு

புரிகிறது அண்ணா ..........சுய சரிதையை எழுதுவது எவ்வளவு கடினம் .ஆனால் பொய் எழுதுவது ரொம்ப சுலபம் ..........

உங்கள் சுயசரிதையை அதாவது உங்கள் வாழ்க்கை அனுபவங்களை எம்மோடு பகிர்ந்த உங்களுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றிகள்.

பல பாடங்களையும் ,அனுபவங்களையும் என்னால் பயிலக்கூடியதாய் இருந்தது ....

ஒன்றின்மீது அதிக பற்றும் நம்பிக்கையும் வைப்பது நல்லதில்லை என்பது எனது கருத்து . தொடருங்கோ விசுகர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.