Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலுச்சிஸ்த்தான் - இன்னொரு தமிழீழம் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தைப் போலவே பாக்கிஸ்த்தானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு தேசம்தான் பாலுச்சிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானுடன் இராணுவ ஆக்கிரமிப்பொன்றின் மூலம் பலாத்காரமாக இணைக்கப்பட்ட இந்த நாட்டின் தேசிய இனமான பாலுச்சிஸ்த்துக்கள் இன்றுவரை தமது தாய்நாட்டிற்கெதிரான ஆக்கிரமிற்கெதிராக ஆயுதப் போராட்டமொன்றினை நடத்தி வருகின்றனர்.

பாக்கிஸ்த்தானின் பெரும் கனியவளச் செறிவுடைய மாநிலமாகக் கருதப்படும் பாலுச்சிஸ்த்தான் மாநிலத்தினை எப்பாடுபட்டாவது தன்னுடன் இணைத்து வைத்திருக்க பாக்கிஸ்த்தான் அரசுகளும் இராணுவ நிர்வாகங்களும் முயன்று வருகின்றன. சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுப் போராடும் அத்தேசத்து மக்களை கடுமையான இராணுவப் பலம் கொண்டு அடக்கி வருகின்றன. இந்த இராணுவ அடக்குமுறைக்கெதிராக அத்தேசத்து மக்களின் ஆயுதப் போராட்டம் இன்று முனைப்புபெற்று வருகிறது.

ஈழத்தைப் போலவே அரசாங்கத்தால் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று அலைக்கழிக்கப்பட்ட பாலுச்சிஸ்த்தான் மக்கள் கண்டதெல்லாம் ஏமாற்றங்களும், தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளும், காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகளும், தவறாமல் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தவுடன் நடைபெற்ற பாரிய பாக்கிஸ்த்தானின் இராணுவ நடவடிக்கைகளும்தான்.

2009 முள்ளிவாய்க்களுக்கு ஒத்த நிகழ்வொன்றினை பாலுச்சிஸ்த்தான் மக்களும் கண்டார்கள். அவர்களின் ஒப்பற்ற தலைவரையும் அவரது 32 தளபதிகளையும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றின்மூல பாக்கிஸ்த்தான் அரசு கொன்றுதள்ளியது. தேசியத் தலைவரின் திருவுடலை கண்காட்சிப் பொருளாக வைத்து சிங்களம் ஆடிய நாடகத்தை ஒத்த நிகழ்வொன்றினை பாக்கிஸ்த்தானிய அரசும் செய்தது. கொல்லப்பட்ட பாலுச்சிஸ்த்தான் தலைவரின் திருவுடலை பூட்டுப் போட்டு மூடிய பிரேதப் பெட்டிக்குள் வைத்து ஊர்வலம் சென்று தனது வக்கிரத்தை தீர்த்துக்கொண்டது. இதன் மூலம் பாலுச்சிஸ்த்துக்கள் தமது விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்தது. ஆனால், பாக்கிஸ்த்தானிய அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக தமது தலைவரின் கொலை பாலுச்சிஸ்த்தான் தேசமெங்கும் அடிமைப்பட்டுகிடந்த அம்மக்களை ஒன்றுதிரட்டியது. தமது விடுதலைக்கான ஒரே மார்க்கம் ஆயுதமேந்திப் போராடுவதுதான் என்னும் எண்ணத்தை அவர்கள் மனதில் ஆளமாகப் பதித்தது. வயோதிபர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என்று தேசமெங்கும் விடுதலை உணர்ச்சியும், தாயக விடுதலைக்கான வேட்கையும் வளரத் தொடங்கியது.

இன்று பாக்கிஸ்த்தான் ஆக்கிரமிப்பு அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான எதிர்த்தாக்குதல்களை அந்த மக்கள் இராணுவம் நடத்தி வருகிறது. "எங்கள் குழந்தைகளையும் பெண்களையும் அவர்கள் சகட்டுமேணிக்குக் கொன்று குவிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை, நாங்கள் திருப்பித் தாக்குவோம், அவர்களின் பாஷையிலேயே அவர்களுக்கு எங்களை வலியைப் புரிய வைப்போம். விமானத் தாக்குதல்களுக்கான எங்களின் பதிலடி அவர்களின் பிரதான நகரங்களில் அமைந்திருக்கும்" என்று அவர்களின் பிராந்தியத் தளபதி ஒருவர் கூறுகிறார்.

"தமிழீழத்தின் விடுதலைப் புலிகள் போல நாங்கள் ஒன்றும் கட்டமைக்கப்பட்ட ஒரு மரபுவழி இராணுவம் கிடையாது. எங்களுக்கு தலமைக் காரியாலயமோ, கோட்டையோ கிடையாது, அவர்கள் போல இராணுவச் சீருடை கூடக் கிடையாது. ஆனால் புலிகளைப் போல எங்களையும் அழிக்க முனைபவர்களுக்கு நாங்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறோம். எந்தக் கட்டமைப்புகளாலும், இராணுவக் கேந்திர மைய்ய அமைப்பாலும் புலிகள் அழிக்கப்பட்டார்களோ, அந்தத் தவறை நாங்கள் விடப்போவதில்லை. ஆனால் காலம் வரும்போது எமக்கான தலமைக் காரியாலயத்தை நாங்கள் அமைப்போம்" என்று தமது போராட்டத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் அந்த தளபதி.

"நாம் வேறுபட்ட இனம், கலாச்சாரத்தாலும், பாரம்பரியத்தாலும் நான் பாக்கிஸ்த்தானியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், நாம் எமக்கான தனி நாட்டை அமைப்பதிலோ அல்லது சுயநிர்ணய உரிமை கேட்டுப் போரிடுவதிலோ எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று குமுறுகிறார் பாலுச்சிஸ்த்தானின் முன்னால் மன்னரின் பேரன்.

முள்ளிவாய்க்காலில் கைதுசெய்யப்பட்டு பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட எமது இளம் தலைமுறையைப் போலவே பாலுச்சிஸ்த்தான் மக்களும் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். பலரின் உடல்கள் அந்த வானந்ந்தரமெங்கும் பரவிக் கிடந்ததை உறவினர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பாலுச்சிஸ்த்தான் மக்களின் மனவுறுதியையும், விடுதலை வேட்கையையும் இராணுவ ரீதியில் மட்டுமல்லாமல் அபிவிருத்தி என்கிற மாய வலைக்குள்ளும் வீழ்த்திவிட பாக்கிஸ்த்தானிய அரசு முயன்று வருகிறது. பள்ளிக்கூடங்கள், வர்த்தக கட்டிடங்கள், சினிமாக்கள் என்று பாக்கிஸ்த்தான் அரசு கடை விரிப்பதோடு, "பாலுச்சிஸ்த்துக்கள் தனிநாடு கேட்கவில்லை, ஒரு சில பயங்கரவாதிகளே தனிநாடு கேட்கிறார்கள், பாலுச்சிஸ்த்தான் மக்களை இந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக பாக்கிஸ்த்தான் இராணுவம் பாரிய தியாகங்களைச் செய்துவருகிறது" என்று சிங்கள ஆக்கிரமிற்குச் சற்றும் சளைக்காமல் பாலுச்சசிஸ்த்தானில் முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் பாக்கிஸ்த்தான் இராணுவத்தின் தளபதி கூறுகிறார்.

ஆனால், விடுதலை ஒன்றே தமது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாலுச்சிஸ்த்தான் தேசிய இனம், தமது விடுதலைக்காக எதையும் இழப்பதற்குத் தயாராகி இருப்பதுடன், பாக்கிஸ்த்தான் அரசின் கைங்கரியத்தையும் நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. தனது குறிக்கோளை அடையும் வழியில் அது தொடர்ந்து பயணிக்கிறது.

"நாம் எவரையும் எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்கவில்லை, ஆனால் யாராவது உதவ முன்வந்தால் நாம் மறுக்கப்போவதுமில்லை, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி" என்று கூறுகிறார் இன்னொரு பாலுச்சிஸ்த்தான் பெரியவர்.

2009 முள்ளிவாய்காலுக்குப் பின்னர் எல்லாவற்ரையும் இழந்துவிட்டோம் என்று சோர்ந்திருக்கும் ஈழத் தமிழினத்துக்கு வீரம் கொண்ட பாலுச்சிஸ்த்தான் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒரு பாடமாக அமையட்டும்.

இதோ அல்ஜசீராவில் வந்த அந்த மக்களின் உணர்வுபூர்வ விடுதலைப் போராட்டம் பற்றிய விவரணப் படம். 99% ஒருமைப்பட்ட எமதிரு போராட்டங்களையும் நான் பார்த்தேன் என்பதால் இதனை இங்கே மொழிபெயர்ப்புச் செய்து இணைத்திருக்கிறேன். நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.

http://topdocumentaryfilms.com/balochistan-pakistans-other-war/

ரகுனாதன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எமது கதை.....

http://topdocumentaryfilms.com/sri-lankas-killing-fields/

இணைப்புக்கு நன்றி நண்பா

இன்னும் கொஞ்சம் அதிகமாக யாழில் எழுதலாமே? அடிக்கடி காணக்கூடியதாக இல்லை உங்களை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுமளவிற்கு நான் அரசியலிலோ அல்லது தமிழிலோ அறிவுடையவனோ அல்லவே நிழலி. என்னைப் பாதித்த விடயங்களை எனது அரைகுறைத் தமிழில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவுதான்.

மனவுளைச்சலும், தோற்றுவிட்டதான உணர்வும், இனி என்ன செய்யப்போகிறோம் என்கிற ஏக்கமுமே என்னை எதிலிருந்துமே ஒதுக்கிவிடுகின்றன. நான் எழுதாவிட்டாலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது யாழுக்கு வருகிறேன். சிலரின் கருத்துக்களைப் பார்க்கும்போது பதில் எழுதவேண்டும் போலத் தோன்றும், ஆனால் அப்படிப் பதில் எழுதுவதால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறதென்கிற சிந்தனையும் கூடவே வந்துவிடுவதால் அப்படியே வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறேன்.

எமக்காகப் போராடி மடிந்த அந்த மனிதர்களையும், சேர்ந்தே மரணித்த அந்த மக்களையும் நினைக்கும் போதெல்லாம் எதுவுமே எழுதத் தோன்றுவதில்லை.

எனது பதில் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

இனவழிப்பு - போரைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானது.........

இன்னுமொரு விவரணம்

http://topdocumentaryfilms.com/genocide-worse-than-war/

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ரகுநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நம்பிக்கையூட்டும் பதிவு ரகுநாதன்..!

tt1.jpg

2009 மே யில் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை போராட்டம் எனியும் ஆயுதப் போராட்டமாக நீளக் கூடாது என்ற முடிவில் இருந்திருக்கக் கூடும். ஏலவே இது பற்றி புலிகள் சொல்லிக் கொண்டு தான் இருந்தவர்கள். எனி வரப்போவது தோற்றாலும் வென்றாலும் இறுதி யுத்தமே என்று.

35 வருட போராட்டமும்.. மக்கள் அவலமும்.. சாரை சாரையான வெளிநாட்டு இடம்பெயர்வுகளும்.. போராட்டக் களத்தைப் பலவீனமாக்கிக் கொண்டிருப்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்தார்கள். இதனை 1990 களிலேயே உணரவும் செய்து தான்.. சில குடிபெயர்வுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தார்கள்.

மக்கள் இல்லாமல் நிலங்களுக்காகப் போராடி என்ன பயன்.. என்ற ஒரு மனோநிலை புலிகள் மத்தியிலும் ஒரு கட்டத்தில் வந்திருக்கிறது..!

நிச்சயமா.. உலகிலேயே 4 வது பெரிய இராணுவத்திற்கு எதிராக ஒரு கெரில்லா படையை நடத்திய தேசிய தலைவருக்கு.. சிறீலங்கா படைகளுக்கு எதிரான மரபு வழி அமைப்பை கெரில்லா அமைப்பாக மாற்றிக் கொள்ள அதிக நேரமோ.. வளமோ தேவைப்பட்டிருக்காது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. காரணம்.... ஆயுதப் போராட்டச் சுமைகளை எனியும் மக்கள் தாங்க முடியுமோ.. இந்த ஆயுதப் போராட்டம் உலகின் கண்களில் இருந்து எமது போராட்ட நியாயத்தை மறைத்து.. பயங்கரவாதமாகவே நிலை பெற்றிருமோ என்ற பயம் கூட அங்கு அவர்களின் அந்த முடிவுக்கும் தங்களையே அதற்கு ஆகுதி ஆக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கலாம்.

நிச்சயமா.. சண்டைக்களங்களில் இருந்து படையணிகளை விலக்கும் போது தலைவர் உணர்ந்தே இருப்பார். சுற்றிவர கிட்டத்தட்ட 60 ஆயிரம் சிங்களப் படைகள் மத்தியில் நிற்கிறோம்.. அதன் சுடுவலு.. எவ்வளவோ மடங்கு எங்களை விட அதிகம்.. இந்த நிலையில்.. ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் போராட்ட இயங்கு தளத்தைக் கொண்டு செல்வது என்பது தற்கொலைக்குச் சமன் என்று..! சில நம்பிக்கைகள்.. உத்தரவாதங்களின் அடிப்படையில் கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும்.. தலைவர் அவற்றை எல்லாம் உடனடியாக நம்பக் கூடிய ஒருவரும் அல்ல..!

மக்களை.. கடைநிலை.. இடைநிலை.. மற்றும் காயப்பட்ட போராளிகளை எப்படியாவது உயிரோடு மீட்டுக் கொடுத்திட வேண்டும் என்ற ஒரு நிலை தான்.. வன்னிப் போரில் இறுதியில் தலைவருக்குத் தோன்றி இருக்கும். புலிகளாப் போய் ஒரு பொறியில் சிக்கிக் கொண்டது என்பது.. புரியாத புதிராக இருந்தாலும்.. ஆயுதப் போராட்ட சுமையை மக்கள் எனியும் சுமக்க முடியாது என்பதும்.. ஆயுதப் போராட்டம் மக்களின் விடுதலை நியாயத்தை உலகம் புரிந்து கொள்ளச் செய்வதில் ஏற்படுத்திய கால தாமதமும்.. அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இதற்கு எமது போராட்ட களம் சார் புவியியலும் முக்கியம். நாம் 3 பக்கமும் கடலால் சூழ்ந்த இலகுவில் விண்ணில் இருந்து கண்காணிக்கப்படக் கூடிய இன்றைய அதிநவீன இராணுவ உளவு உலகில்.. இருந்து போராடிக் கொண்டிருந்ததும்.. ஒரு காரணம்.

உலகின் வலுமிக்க.. நேட்டாவால்.. ஆப்கானிஸ்தானில்.. 10 வருடங்களுக்கு மேலாகப் போராடி.. தலிபான்களை அழிக்க முடியவில்லை. அதேபோல்.. மேற்குப் பாகிஸ்தான்.. பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை.

காரணம்... அவர்களின் போராட்டக் கள புவியியல் தோற்றம் அவர்களுக்கு அங்கு கைகொடுக்கிறது. இதே ஆப்கானிஸ்தானில்.. உலகின் இன்னொரு வல்லரசான.. சோவியத் யூனியனும் தோற்று ஓடியது..! மரபு யுத்தத்தில் ஆயுதப் பலமும் ஆட்பலமும்.. புவியியல் அமைப்பும் அதிகம் செல்வாக்குச் செய்கின்ற நிலையில்.. பலவீனமான தலிபான்கள் கெரில்லா போர் முறையையே அதிகம் தெரிவு செய்து வருகின்றனர். அதுவே அவர்களின் போராட்ட நீட்சிக்கு உதவியும் வருகிறது. அவர்கள் நடத்துவது மண்மீட்டு விடுதலைப் போராட்டமல்ல. ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். அவர்களுக்கு கெரில்லா போர்முறை கூட அதைச் செய்ய உதவும்.

ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை.. கெரில்லாப் போர் முறையில் தொடர்ந்து நின்று கொண்டிருப்பது சொந்த மக்களை மண்ணை.. நிரந்தரமாக இழக்கும் நிலைக்கே கொண்டு செல்லும் என்ற நிலையில் நிலம் மீட்பு என்பது கட்டாயமாகியது. நிலம் மீட்புக்கும்.. பாதுகாப்பிற்கும் மரபுவழி இராணுவம் அவசியம். புலிகளால் குறைந்தளவு ஆளணியை அதற்கு ஏற்ப கண்டுபிடிக்க முடிந்த போதிலும்.. அவர்களால் கனரக இராணுவ வளமற்ற.. மனித உடல்களை கவசமாக்கிய.. மென் மரபுவழி இராணுவமாகவே இருக்க முடிந்தது.

புலிகளிடம் மரபு வழி இராணுவத்திற்கு அவசியமான போதிய அளவு.. கனரக வாகனங்கள் கிடையா. வலுவான விமான எதிர்ப்பு படைக்கலம் இருக்கவில்லை. வலுவான விமானப்படை இருக்கவில்லை. கனரக ஆயுதங்கள் போதியளவு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக.. துல்லியமாக எதிரியின் நடமாட்டங்களைக் கண்டறிந்து தகவல் வழங்கும் சர்வதேச.. உளவு உதவி அவர்களுக்கு இருக்கவில்லை.

ஈழப்போர் 4 இல்.. சற்றலைட்டுக்களும்.. ஆளற்ற உளவு வானூர்திகளுமே போரின்.. வெற்றியை தீர்மானித்தன. புலிகளின் போராட்டக் களம்.. இவற்றின் கண்காணிப்புக்குள் இலகுவாக வர முடிந்ததும்.. போராட்டம் பின்னடைவை சந்திக்க முக்கிய காரணமாகும்.

ஆப்கானிஸ்தானின் மலைக்குன்றுகள்.. இந்த உளவுகளின் தேவைகளுக்கு குறுக்காக உள்ளன. கொலம்பிய கடும் காடுகள்.. அங்கும் கிளர்ச்சியாளர்களைக் காத்து நிற்கின்றன. ஆனால்.. மரபுவழி இராணுவமாகி.. வெட்டை வெளிகளில்.. நிலை கொண்டிருந்த புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் நகர்வுகள் வெளிப்படையாக ஒரு பலம் பொருந்திய தேசம் செய்வது போன்றிருந்தமை.. எதிரிக்கு வெற்றியை சாதகமாக்கியது. புலிகள் மரபுவழி இராணுவமாக இயங்கியமை.. மிக இலகுவாக சர்வதேசத்தால் அவர்கள் இலக்கு வைக்கப்படச் செய்தது.

இதே புலிகள் கெரில்லா போர்முறைக்கு மீண்டும் போயிருந்தால்.. நிச்சயம் ஆயுதப் போராட்டம் இன்றும் நீடித்திருக்கும். பிடித்த நிலங்களை இழந்து.. தொடர்ந்து ஒரு தலைமறைவு ஆயுதப் போராட்டம் என்பது மக்களுக்கு நில விடுதலை சார்ந்த தமிழீழ விடுதலை சாத்தியமில்லை என்பதையே தெளிவாகச் சொல்லியும் இருக்கும்.

இந்த நிலையில்.. அந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து மக்களை.. மண்ணை.. மண்ணின் வளத்தை பறிக்கவே உதவும்.. என்ற நிலையில்.. புலிகள் ஆயுதப் போராட்டத்திற்கு முடிவு கட்ட எண்ணி இருக்கக் கூடும்.

எனவே வெறுமனவே இராணுவ பரிமானத்தில் மட்டும் வைச்சு.. புலிகளின் தோல்வியை எடைபோடக் கூடாது. புலிகளால் ஒரு வல்லாதிக்க இராணுவத்தை கெரில்லா போர்முறையில் எதிர்கொள்ள முடிந்தது என்றால் அதை அவர்களால்.. சிறீலங்காப் படைகளுக்கு எதிராக மேற்கொள்வதில்.. பெரிய இடர்பாடு இருக்க வாய்ப்பில்லை..!

வன்னி இறுதிப் போரில்... சிங்களம் இறுதிவரை காடுகளை முற்றாக கைப்பற்றவும் இல்லை..! கைப்பற்றவும் முடியாது. ஆனால் வழங்கல்களை கட்டுப்படுத்தலாம்.

மரபுவழி ஆளணியாக இருந்த புலிகள்.. கெரில்லாவிற்கு ஒரே இரவில் மாறவும் முடியாது. காரணம்.. ஆளணி.. அதற்கு தேவையான வளம்.. வழங்கல்.. அவற்றின் பரம்பல்.. என்று எத்தனையோ பிரச்சனைகளின் மத்தியில் தான் புலிகளின் தீர்மானங்கள் வந்திருக்கும்.

1987 இல் புலிகளின் ஆளணி.. கெரில்லா போர்முறைக்கு ஏற்ப சிறிதளவாக இருந்தது. 2009 இல் ஆளணி மரபு வழிக்கு ஏற்ப இருந்தது. ஆனால்.. படைக்கலம்.. எதிரியின் சுடுவலுவை எதிர்கொள்ளப் போதிய படைக்கல வலு.. அல்லது வளம் கொண்டதாக இருக்கவில்லை. தொடர் வழங்கல்களும் இருக்கவில்லை.

அதுமட்டுமன்றி.. புவியியல் அமைப்பு எதிரிக்கும் அவனுக்கு உளவு பார்ப்பவர்களுக்கும் அதிக வசதியாக அமைந்தது. இந்த நிலையில்.. புலிகளிடம் இருந்த தெரிவு... செய் அல்லது செத்து மடி தான்..! புலிகளின் மரபு வழி போர்முறை பற்றி ஒப்பீடு செய்யும் போது அவர்களின் இயங்கு தள புவியியல் சார்ந்தும்.. இன்றைய அதிநவீன போரியல் முறை குறித்தும்...நோக்கப்பட வேண்டும். பாகிஸ்தான்.. புவியியல் அமைப்பும்.. ஈழத்தீவின் புவியியல் அமைப்பும் அதிநவீன இராணுவ வளங்களின் முன் ஒன்றல்ல..!

எமது புவியியல்.. இன்றைய அதிநவீன இராணுவ வளங்களின் முன் கெரில்லா போர்முறைக்கு உகந்ததே அன்றி... மரபுவழியாக செயற்பட நாம்.. பெரும் படைக்கல.. மற்றும் இராணுவ உதவிகளை தொடர்ந்து பெறும் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இன்னொரு வலுவான நாட்டின் உதவி தேவை. ஆனால் அது 2009 இல் எமக்கு இருக்கவில்லை. அதை எமக்கு யாரும் சும்மா தரவும் மாட்டார்கள்..!

இப்போதும் எமக்கு கெரில்லா போர் முறை உகந்ததாக உள்ளது. ஆனால்.. இதன் மூலம் மண் மீட்புக்கான உத்தரவாதங்களை அதனை நோக்கி உலக ஆதரவை பெறவோ.. வழங்கவோ முடியாது. இன்னொரு கெரில்லா போர் மூலம்.. மக்கள் மீது மீண்டும் மீண்டும் இராணுவ அழுத்தங்கள் தான் கூடுமே தவிர... விடுதலை சாத்தியமாகாது.

அந்த வகையில்.. நாம்... இன்றைய உலகின் அதிநவீன இராணுவ வள பரிமானத்தின் முன் நின்று நோக்கினால்.. இன்றை நிலையில் எமக்கு உகந்தது.. உலக அங்கீகாரத்துடன் கூடிய எமது நியாயத்தை உலகம் புரிந்து கொள்ளச் செய்யக் கூடிய ஒரு போராட்ட முறைமையே.

அதன் பால் 2009 மேக்குப் பின் ஈழத்தீவில்.. தமிழர்களின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். எனி நாம் ஜனநாயக வழியில் போராடித் தான் எமது இலக்கை இந்த உலகில் எட்ட முடியும். குறிப்பாக.. இராணுவ தொழில்நுட்ப பரினாம வளர்ச்சியில் நாம் முன்னேறாத வரை.. அதுவே எமக்கு உகந்ததும் கூட..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ரகுநாதனின் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள். எல்லா தமிழர் அனைத்திலும் புரட்சி தீ எரிய வேண்டும். சினிமாக்கரர்களுக்கு தேங்காய் உடைத்து பால் அபிசேகம் செய்யும் நாம் இளையவர்கள் மத்தியில் போராட்ட சிந்தனை வருமா என்பது கேள்வி குறி.

சரியாக சொன்னீங்க நெடுக்ஸ். அதி நவீன இராணுவ தொழில் நுட்பம் கிடைக்கும்வரை நாம் அமைதியாக போராடுவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வதில் அனைவர்க்கும் உடன்பாடு உள்ளது. மறுபுறத்தே பார்க்கும்போது. இறுதிப் போரில் உயிராயுதம் அதிகமாகவே பாவிக்கப்பட்டது. என்ன கடந்தகாலங்களில் சிங்களத்தை புறந்தள்ள ஓரிரு கரும்புலிகளே களப்பலியாகினர், ஆனால் முள்ளிவாய்க்கால் அப்படியல்ல எமதுபக்க நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கும் அதைக் கேட்பதற்கும் முன்பு நாம் ஒரு பெரும் உயிர்விலையைக் கொடுக்கவேண்டியிருந்தது. அன்றேல் நாம் கவனிக்கப்படாது போயிருப்போம். பங்கிமூன், மேற்குலகம், தமிழர் விரோததேசம் இந்தியா இவை அனைத்தும் தாங்கள் நினைத்தபடி தமிழர்களது விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலுடன் முடக்கப்பட்ட பின்பும், இன்னொரு புள்ளியிலிருந்து ஆரம்பித்துவிட்டது எனப்பார்த்துத் திருட்டு முழி முழிப்பது இதனால்தான். போலி ஜனநாயகம் பேசும் இம்முகமூடி வேசதாரிகளது சாயம் கழுவுப்பட்டுப்போனதற்குக் காரணம், முள்ளிவாய்க்காலில் அள்ளிக்கொடுக்கப்பட்ட பல்லாயிரம் மனித உயிர்கொடையே.

மாறாக இறுதிக்கணத்தில் அங்கிங்கெணாதபடி, சிங்களம் தேசத்துரோகிகளை முள்ளிவாய்க்கலுக்கு முன்பே விதைத்துவிட்டிருந்தது. யார் எவர் என அடையாளம் காணமுடியாதபடி எங்குமே தேசத்துரோகிகளும் ஆழ ஊடுருவோரும் எமது மக்களுக்குள்ளும் போராளிகட்குள்ளும் நிறைந்திருந்தனர். இறுதிக்கட்டத்தில் ஒரேயொரு தெரிவு மட்டுமே தலைமைக்கும் தளபதிகட்கும் இருந்தது தாங்கள் இல்லாதொழிந்தாலொளிய மற்றப்படி இவர்களை அழிக்கமுடியாது எனும் நிலைப்பாடே அது. ஆகவே விடுதலைத் தீ உலகப்பந்தின் அனைத்து விளிம்புகளுக்கும் பரவும் வண்ணம் தங்களைத் தாங்களே பலிகொடுத்து எமது எதிரிகளை ஒழிப்பதற்குமுன்பு துரோகிகளை தம்முடன் சேர்ந்தே அழித்து விடுதலைப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கும் நேரத்துக்கும் ரகுனாதன் அவர்களுக்கு நன்றிகள்.

இது போன்ற பதிவுகள் அவசியமானது. தமிழினம் படித்தறிய வேண்டியதும் கூட.

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. இது ஒரு நல்ல பதிவு மட்டும் அல்ல சோர்ந்து போய் இருக்கும் எம் மக்களுக்கு உட்ச்சாகம் உட்டகூடியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.