Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல்

Featured Replies

இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை?

யாராவது விளக்குங்களேன்.

நன்றி

தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்

  • கருத்துக்கள உறவுகள்

அதை ஏன் துயர் பகிர்வு/ நினைவுகூறல் பகுதியில் இணைத்துள்ளீர்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் பதிந்து உள்ளபோதிலும் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. எனவே தமிழர் தரப்பு நியாங்களை அரசியல்வாதிகளுடன் விவாதிப்பதற்கு கடினமாக உள்ளது. எனவே தமிழர்கள் எல்லோரும் நடைபெறவிருக்குக்கும் தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள்.

யாருக்கு வாக்களிப்பது என்பது உங்களின் சுதந்திரமான முடிவு.

ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து எந்தக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று அறியத்தாருங்கள்

img_libdem_logo.gif

லிபரல் கட்ச்சிக்குத்தான் பல சிறுபான்மையினர் வாக்களிப்பதாக சொல்கிறார்கள்... குறிப்பாக முஸ்லீம்கள்...

இந்த தேர்தலில் பல தமிழ் வேட்பாளர்கள் லேபர் கட்ச்சி சார்பாக போட்டியில் இருக்கிறார்கள்... முதலில் அவர்களை எல்லாம் நம்பலாமா தெரியவில்லையே...! :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

quote="கந்தப்பு"]அதை ஏன் துயர் பகிர்வு/ நினைவுகூறல் பகுதியில் இணைத்துள்ளீர்?

லண்டனில் சட்பரி பகுதியில் தொழில்கட்சியின் தேர்தல் வேட்பாளராக களத்தில் நிற்கின்றார் நண்பன் கண.நாகேரதன்.

லண்டனில் சட்பரி பகுதியில் தொழில்கட்சியின் தேர்தல் வேட்பாளராக களத்தில் நிற்கின்றார் நண்பன் கண.நாகேரதன். தொழில் கட்சியின் நீண்டகால உறுப்பினரான இவர் பிறான் வடக்குத் தொகுதியின் தொழில்கட்சி முக்கியஸ்தராகவம் கணக்காளராகவும் செயற்பட்டு வருகிறார். 2006 ம் ஆண்டு தொழில்கட்சி உறுப்பினர்களின் மஞ்சஸ்ரர் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இவர் நடேஸ்வரா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் செயலாளராக செயற்பட்டு வருகிறார். தமிழ் பாடசாலைகளின் விளையாட்டுத்துறைகளின் கூட்டமைப்பின் செயற்குழு அங்கத்தவரான இவர் காங்கேசன்துறையினை தனது புூர்வீகமாக உடையவர். நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான இவர் கிங்பரி பகுதியில் கணக்காளராக செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களுக்கும், தாயகத்திற்கும் உதவி செய்ய விரும்புவதாகவும், தன்னார்வ தொண்டனாகவும் செயற்பட விரும்பவதாகவும் தெரிவிக்கின்றார்.

நிதர்சனம்.

  • தொடங்கியவர்

இவர் இதுவரைக்கும் இன்னா பண்ணினார் என்று யாருக்கும் ஏதாவது தெரியுமா?

எந்த மாதிரி எமக்கு உதவி பண்ண போகிறார்?

இவர் இதுவரை தமிழருக்கு ஒண்டும் பன்னவில்லை.

எனக்கு தெரிந்த அளவில் தயா இடைக்காடரை பல விடயங்களில் நாங்கள் ஆதரிக்கலாம்.

அவர் புகளை தேடாமல் இரகசியமாக தொழில்படும் ஒருவர்.

தனிப்பட்ட நல்ல உறுவுகளை பல மட்டங்களில் வைத்திருப்பவர்.

நான் அவருக்கு புகள் தேட வரவில்லை ஆனால் அவரிடம் பல விசேட குணாதிசயங்கள் இருக்கு.

  • 2 weeks later...

தயா இடைகாடருக்கு வாக்கு போடுங்கள். கரோ பிரதேசத்தில் தமிழ் தேசவிரோதகளை அளிக்க சிறந்த ஒருமனிதன்.

வெம்பிலி உண்டியல் திருடனிடம் நீதி கேக்க ஒரு உகந்த உத்தமன்.

தேர்தலில் வெண்டால் துரொகிகளுக்கு செம்ம சொற்பணம்.

a61.JPG

a41.JPG

a1.jpg

a2.jpg

a3.jpg

idaikkaa.JPG

பிரித்தானிய தேர்தல் ஒருதருக்கும் பிடிக்கல்லையோ ஒருதரும் கரத்து எழுதுறியள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயல் பிடிக்கிற நாயை முகத்தை வச்சே கண்டு பிடிக்கலாம் என்டு ஏதோ ஒரு பழ மொழி இருக்கு. இதுவள் வந்தால் தமிழ் ஆக்களுக்கு ஏதாவது பண்ணாட்டிலும் லண்டலன் காறங்களுக்காவது பண்ணுவினமே? இந்திய அரசியல் வாதியள் மாதிரி இருக்கு. நம்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை ஆதரிக்க உண்மைத் தன்மையுடையவர்களாக இவர்கள் அடையாளப்படுத்துவதால், இவர்ளை எம் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

ஆமாம், இந்தத் தேர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம்! நாம் எம் குரல்களை ஒலிப்பதற்கும், எமது பலத்தை பிரித்தானியாவிலுள்ள கட்சிகளுக்கு காட்டவும் இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பிரித்தானியாவில் தமிழ்த்தேசியத்திற்கு தடை விதிக்கப்பட்ட பின் ஓடி ஒளியாமல், எமக்காகக் குரல் கொடுத்துவரும் வேட்பாளர்களுக்கு எமது வாக்குகளை அழிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

உந்தத் தேர்தலில் நிற்கிற "தயா இடைக்காடர்" வெல்லுவது உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான்!! ஆனால் தேர்தலின் பின் தான் உண்டியலானுக்கு வேட்டு விழும்! பரி காடினர் பூச்சாண்டி அரசியல் மிரட்டல்கள், பொலிஸ் பயமுறுத்தலுகள், மொட்டைக்கடிதங்கள் எல்லாம் உண்டியலான் இனிக் காட்ட ஏலாமல் வரப் போகுது!!

உண்டியலானே! வாறம் நாமும் அரசியல் பின்னனியோடை!!! ... அதுக்கிடையில் ஓடித்தப்பு!!!!!!

அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

இன்று நடைபெற இருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் பல ஈழத்தமிழர்கள் போட்டியிட்டாலும், எமக்காக உழைக்கும்-எம் தேசியத்திற்காக குரல்கொடுத்துவரும் வேட்பாளர்கள் வெற்றியடைய நாம் வாழ்த்துவதோடு, அப்பகுதிகளிலுள்ள அவ்வேட்பாளர்களுக்கு எமது வாக்குக்களை உடனடியாக செலுத்துவோம். குறிப்பாக இத்தேர்தலில் கரோ கவுன்ஸில் எம்மவர்களின் வாக்குகளால், பிரித்தானிய அரசியல் சக்திகளின் பார்வைக்கு கொண்டு வரப்படலாம். எல்லாம் எம் கையிலேயே உள்ளது.

http://www.nitharsanam.com/?art=16965

அரோகரா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் பல தமிழர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் ஒரு பகுதியினர் தமது பெயருக்காகவும், புகழுக்காகவும்தான் போட்டியிடுகின்றார்கள். சந்தர்ப்பவாதிகளும் இதிலே அடங்குவர். இவர்களை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்க்கும்போது இது தெளிவாக இருக்கின்றது. இப்படியானவர்களை இனங்கண்டு ஒதுக்கவேண்டும்.

சேவை செய்வதற்கு பதவிகளும் பட்டங்களும் விளம்பரங்களும் தேவையில்லை.

பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு இன்னும் சில நிமிடங்களில் முடிவடைய இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு முதல் வெளியிடப்படும்.

முடிவுகள் பிபிசி இணையத்தின் இந்த முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

http://news.bbc.co.uk/1/hi/in_depth/uk_pol...006/default.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்

பிரித்தானியாவை ஆண்டுவரும் தொழில் கட்சிக்கு இந்த தேர்தலில் பலத்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளை அடிப்படையில் இதுவரை 251 கவுன்சிலர்களையும் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தையும் இழந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்

இவர்கள் வெற்றி பெற்றபின்பு தேசியப் போராட்டத்திற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா!!

தயா இடைக்காடர் என்பவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.