Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபி உடன் பேச்சுவார்த்தை தோல்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு அழகான தோழியை.. கன நாளைக்குப் பின்.. சந்திச்சு மனம் நெகிழ பேசிப் பழகினதில் இருந்து மனசில் ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு நித்திரைக்குப் போனனா..

நடுநிசியில்.. பேச்சுவார்த்தைக்குப் போகச் சொல்லி மக்கள் சார்பில் ஒரு அழைப்பு...

யாரோட பேச்சு வார்த்தை..

வேற யாரு.. பிரபாகரன் அரசியலை விட்டு விலகினால் நான் அரசியல் செய்யாமல் விலகிக் கொள்வேன் என்று மார்தட்டித் தட்டியே யாழ்ப்பாணத்தை வன்னியை சிங்களவனோட சேர்ந்து சுடுகாடாக்கிய டக்கிளசு கும்பலோட தானாம்.

ஏன் அவையோட பேச்சு வார்த்தை..

பிரபாகரனை தானே உலகத்தை விட்டே விலக்கி வைச்சிட்டீங்க.. இருந்தும்.. நீங்க என்ன இன்னும் அரசியலில் இருந்தும் விலகல்ல.. கொலை.. கப்பம்... பஞ்சமா பாதகங்கள்... காட்டிக்கொடுப்புக்கள் செய்வதில் இருந்து இன்னும் பின்வாங்கல்ல.. எப்ப இதெல்லாம் நடக்கப் போகுது என்று மக்கள் கேட்டுவரச் சொல்லி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாங்க.

ஆரம்பத்தில ஒரு பயம். பேஸ்புக்.. யாழ் அதுஇதென்று புலி சார்பா எழுதிப்போட்டு.. படம் போட்டு படங்காட்டிட்டு.. ஊருக்கு எப்படி மக்கள் பிரதிநிதின்னு போய் பேச்சுவார்த்தையில நிற்கிறது என்று. பிடிச்சு உள்ள போட்டிடமாட்டாங்க. இருந்தாலும்.. தைரியத்தை வரவழைச்சுக் கொண்டு பேச்சு வார்த்தைக்குப் போனால்....

அங்க ஒரு வீடு. அதில் ஒரு கோல். அதில ஒரு ஈபிடிபி ஆள். அவர் அவையிட தலைவரின் பிரதிநிதியாம். சதா மொபைல் போனோட வீட்டு அலுவலை வீட்டுக்காரியோட பேசிக்கிட்டு இருக்கான். இடைக்கிடை.. வெளிநாட்டுக்கு ஆட்களை ஏத்திற வேலை பற்றியும் பேசுறான். வெளிநாட்டுக்கு ஆட்கடத்திற ஏஜென்சி வேலை செய்யுறவன் போல. ஆனால் நான் நினைச்சன் அவனட்ட ஆயுதங்கள் இருக்கும் என்று.. ஆனால் அவனட்ட ஆயுதம் ஒன்றும் இருக்கல்ல. மொபைல் போன் தான் நிறைய வைச்சிருந்தான்... என்னைப் பார்த்திட்டு.. என்ன அலுவல் என்றான்..

இப்படி பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறன். புலிகள் தான் செத்துப் போயிட்டாங்களே. இன்னும் அவங்கட பெயரால துரோக.. துரவ அரசியல் செய்துகிட்டு தானா இருக்கனும். ஒன்றில் உங்க தலைவர் சொன்னது போல.. அரசியலில் இருந்து விலகனும்.. இல்ல.. மக்கள் விரும்பிற தலைமைகளோட சேர்ந்து அரசியல் செய்யனும்.. எப்படி.. வசதி என்று மக்கள் கேட்கிறாங்க என்று பேச்சை ஆரம்பிச்சன்.

ஆரம்பத்தில.. பிரதிநிதி.. என் கதையை நல்ல அமைதியாத்தான் கேட்டுக்கொண்டிருந்தான்.. திடீர் என்று போனைக் கையில எடுத்தான்.. யாரோடையோ கதைச்சான்.. அவ்வளவும் தான் தலைவர் சொல்லிட்டார்.. பேச்சுவார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது. தலைவர்.. அரசியலில் இருந்து விலத்திறதோ..நோ சான்ஸ். நாங்க எவ்வளவு தான் கொடுமை செய்தாலும் சிங்கள அரசாங்கத்தோட தான் நிப்பம். போய் உங்க மக்களட்ட சொல்லுங்க என்று சொல்லிட்டு.. பொக்கட்டுக்குள்ள இருந்து போன் போனா எடுத்து யார் யாரோடையோ எல்லாம் கதைச்சுக்கிட்டு இருந்தான்.

நான் நினைச்சன் கோத்தாவுக்குத்தான் போன் போடுறான் போல.. புலி ஒன்னு வந்து நிற்குது என்று.. எடுத்தனோ ஓட்டம்.. அலறி அடிச்சுக் கொண்டு.

அப்பதான் பக்கத்தி ரூமில படுத்திருந்தவங்க வந்து கதவைத் தட்டி என்ன நித்திரையில அலறிறீங்க.. எதையோ பார்த்து பயந்திட்டிங்க போல...

ஓம்.. மக்கள் 20 வருசமா பார்த்து பயந்துகிட்டு இருக்கிற ஒரு கும்பலோட பேச்சுவார்த்தைக்குப் போனனா.. எல்லாம் தோல்வியில முடிஞ்சிட்டுது.... உயிருக்கே ஆப்படிக்க வெளிக்கிட்டாங்கள். அதுதான் அலறி அடிச்சுக் கொண்டு ஓடி வந்திட்டன் எண்டன்.

அவையும் ஊரில இருந்து கள்ளப் பொய் சொல்லி வந்து அசைலம் அடிச்ச ஆக்கள் தான்.. அவைக்கு புலி என்ன நிறமென்று கூடத் தெரியாது. அந்த வகையில.. அவைக்கு நான் சொன்னது புரிய வாய்ப்பில்ல.

ஏதோ.. சொல்லுறீங்க.. ஒன்றும் விளங்கல்ல. எழும்பி தண்ணிய குடிச்சிட்டு யன்னலை திறந்திட்டுப் படுங்கோ. காத்தோட்டம் இல்லப் போல.. என்று ஓசில நாலு புத்திமதி சொல்லிட்டு அவங்க போய்ட்டாங்க.

நானோ.. கனவிலையே கதை கந்தலாகுது.. இவங்க கூட பேசி என்னாகப் போகுது என்றிட்டு.. வெக்கையா இருந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்து மூடிக்கிட்டு.. மீண்டும் இருண்ட உலகத்துக்குள் என்னை வலிந்து தள்ளி.. நித்திராதேவியை அணைத்துக் கொண்டேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதானே... பாத்தன்,

ஈ.பி.டி.பி. யோடை... பேச்சுவார்த்தைக்கும் போன நாதாரி ஆரெண்டு.

கடைசியலில பாத்தா... அது, கனவா... :D

நெடுக்ஸ் துஸ்தர்களோடை கனவிலும் தொடர்பு வைக்க கூடாது. அவங்கள் கனவிலும் திருந்த மறுக்கும் கூட்டம்.

[size=4]இந்த தமிழரும் கனவு கண்டுகொண்டே இருக்கின்றார், வட மாகாண முதலமச்சராக வருவதற்கு.[/size]

இப்படி கனவிலேயே பலர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது.

அரசியலில சொல்லுகின்றதை எல்லாம் ஒருத்தரும் செய்வதில்லை.

திலீபனை உண்ணாவிரதத்திற்கு இருத்தும் போது இது ஒருதொடர் உண்ணாவிரதம் கடைசியில் தலைவரும் இருப்பார் என்று சொன்னார்கள் .அவ்வளவுதான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது தொடர் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்படவில்லை... மேலும் தலைவர் உண்ணாவிரதம் இருந்த போதும் அதே நிலை தான். இறுதியில் தலைவர் சொன்னபடி தான்.. அவர் தன்னையே சண்டைக் களத்தில் போராளியாக்கினார்..! ஆனால் மற்றவர்கள் எல்லாம் தாங்கள் தப்பிக் கொண்டு விட்டார்கள். உமாமகேஸ்வரன்..சித்தார்த்தன்.. டக்கிளஸ்.. வரதராஜப்பெருமாள்.. சுரேஸ் பிரமச்சந்திரன் உட்பட. எவரும்.. போராடிச் சாகவுமில்ல.. போராடி பொது எதிரியை வெல்லவும் இல்லை. ஆனால் மக்களை மட்டும் சாகடித்து விட்டார்கள்..!

ஒட்டுக்குழுக்கள் சொல்வதை செய்வதில்லை என்று சொல்லுங்கள்.. அது நியாயம். அதற்காக உலக அரசியல்வாதிகள் மற்றும் தியாகிகளை துரோகிகளுக்கு நிகராக்கி கதைப்பதை நிறுத்துங்கள்..! காரணம்.. நீங்கள் எதைச் சொன்னாலும் துரோகத்தை நியாயப்படுத்த முடியாது..!

Edited by nedukkalapoovan

நீங்கள் நாலு பேர்தான் உலகமானதும் ,அவர்கள் தான் தியாகிகள் ,துரோகிகளை நிர்ணயிப்பதுமாகித்தான் அழிந்து போனீர்கள்.

உலகம் ரொம்ப பெருசு தம்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நாலு பேர்தான் உலகமானதும் ,அவர்கள் தான் தியாகிகள் ,துரோகிகளை நிர்ணயிப்பதுமாகித்தான் அழிந்து போனீர்கள்.

உலகம் ரொம்ப பெருசு தம்பி.

உலகம் வந்து சொல்லுறதில்ல.. நீ தியாகி.. நான் தலைவன்னு. உலகம் நிர்ணயிச்சு எவனும் தியாகியும் ஆகல்ல... தலைவனும் ஆகல்ல..! அவனவன் தங்க சொந்த முயற்சியால செயலால் ஆனாத்தான் உண்டு. நீங்க உலகத்தைப் பார்த்து கொட்டாவி விடுற ஆக்களே தவிர.. உங்க கடமை என்பதை செய்ய மறந்த கூட்டம்.

ஆனால்...துரோகிகளை எப்பவும் மக்கள் ஏற்க மாட்டாங்க..! துரோகிங்க துரோகிங்க தான்..! அதை மக்கள் தீர்மானிப்பாங்க.. துரோகிங்களை செயலை வைச்சு.

மாவீரனுக்கும் மரணம் தான் பரிசு.. கோழைக்கும் மரணம் தான் பரிசு. அதற்காக..

மாவீரன் = கோழைன்னு எடுத்த முடியாது.. அண்ணன்களா..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்கள் நாலு பேர்தான் உலகமானதும் ,அவர்கள் தான் தியாகிகள் ,துரோகிகளை நிர்ணயிப்பதுமாகித்தான் அழிந்து போனீர்கள்.

[size=4]அண்மையில் கூட இங்கே நாம் நினைவு கூர்ந்தோம் பண்டாரவன்னியனை.[/size]

[size=4]காக்கைவன்னியர்களை யார் கண்டார்கள்?[/size]

அதைத்தான் நானும் கேட்கின்றேன் ,மேலுக்கு ஒரு பட்டியல் போட்டிருக்கு .அதை போட உங்களுக்கு உரிமை தந்தது யார் ?

மக்கள் மக்கள் என்று உங்கள் நாலு பேரை திரும்பவும் சொல்வது தான் அறியாமை என்கின்றேன் .அந்த சின்ன வட்டத்திற்குள் இருந்து வெளியில் எட்டி பார்க்க கூட உங்களால் முடியுதில்லை.

மாவீரன் வீட்டிற்கு கீழே நாலு அடுக்கு பங்கரில் வாழ்ந்ததும் கோழைகள் சைக்கிளில் மக்களுக்குள் உலாவந்ததும் உலகம் அறியும் அந்த நாலு பேரை தவிர .

அதைத்தான் நானும் கேட்கின்றேன் ,மேலுக்கு ஒரு பட்டியல் போட்டிருக்கு .அதை போட உங்களுக்கு உரிமை தந்தது யார் ?

மக்கள் மக்கள் என்று உங்கள் நாலு பேரை திரும்பவும் சொல்வது தான் அறியாமை என்கின்றேன் .அந்த சின்ன வட்டத்திற்குள் இருந்து வெளியில் எட்டி பார்க்க கூட உங்களால் முடியுதில்லை.

மாவீரன் வீட்டிற்கு கீழே நாலு அடுக்கு பங்கரில் வாழ்ந்ததும் கோழைகள் சைக்கிளில் மக்களுக்குள் உலாவந்ததும் உலகம் அறியும் அந்த நாலு பேரை தவிர .

[size=4]தமிழ் மக்களின் ஜனநாயகம், அதாவது உலகால் ஏற்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் தெரிவு.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள் மக்களை மக்கள் என்று ஏற்கும் பக்குவத்திற்கு வாருங்கள். உங்களுக்கு விருப்பமில்லாததைச் சொல்பவன்.. செய்பவன்.. மக்கள் இல்லை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நீங்கள் நிற்கிறீர்கள். அதனால் தான் உங்களின் செயல்கள் மக்களுக்கு துரோகமாகவும் உங்களுக்கு நியாயமாகவும் உள்ளது.

எப்பவும் நீங்க நாலு பேர் தான் உலகமுன்னு போராடினது உங்க ஒட்டுக்குழுக்கள் தான். மக்கள் என்று போராடினவன் தான் உண்மையான தலைவன்..! அவன் பின்னால மக்கள் அவன் இறப்பின் பின்னும் நிற்பார்கள். காரணம்.. அவன் நாலு பேருக்குத் தலைவனில்ல.. நாலாயிரம் பேருக்கு வழிகாட்டி..!

எங்களை பார்த்துச் சொல்வதை ஏன் உங்களைப் பார்த்து கேட்கிறீங்க இல்லை. அப்படி கேட்டிருந்தீங்கன்னா... துரோகத்தை செய்வதை குறைஞ்சது உணர்ந்தாவது செய்து இருப்பீங்க..! :lol:

நாங்கள் மக்கள் எங்களுக்கு துரோகத்தையும் துரோகிகளையும்.. தியாகத்தையும் தியாகிகளையும் சரிவர அடையாளம் காணத் தெரியும்..! ஏன்னா நாங்கள் இரண்டையும் தரிசிச்சிருக்கிறம். கூட்டத்திற்க இருந்து கும்மாளம் அடிப்பதை மட்டும் செய்யேல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கண்டது பேய்க்கனவு தான். பேயை கனவில் கண்டுவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை வாசிக்கும் போதே மகிழ்சியாக இருந்தது.தோல்வியில் மகிழும் மனிதன் நான் மட்டும் தான்.இந்தப் பேச்சு வார்த்தை வெற்றி பெற்றிருந்தால் இன்றைய எங்கள்தோல்வியில் சிந்திய கண்ணீரை விட கொடுமையான துன்பத்தை அடைந்திருப்பேன்.நன்றி நெடுக்காலைபோவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.