Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரோடு என் உடல் கரையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு என் உடல் கரையும்!

உன்னோடு நானிருந்து

உறங்காமல் விழித்திருந்து

கண்ணால் தழுவுவதும், - உன்

கவின் பூத்த புன்னகையில் நான்

காணாமல் போவதுவும்,

என்னிரு கை விரித்து

உன்னை நான் அணைப்பதுவும்,

உரிமையோடு ஆண்டு

நீயென்னை அடக்குவதும்

எப்போது நிகழுமென்று

என் நெஞ்சம் ஏங்குதிங்கு!

உள்ளங் காலடியில்

உன்மேனி உரசும் சுகம்

என் காயச் சிலிர்ப்பினிலே

கவி எழுதத் தூண்டிலிடும்.

கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட

கனித்தமிழ் காவிரியே!

தள்ளாடும் இதயமடி

தவிப்பணைக்க ஏது வழி?

உன்னடியில் தளமிட்டு

உலக உலா செல்வதற்கு

கண்ணடியில் கனவு சேர்த்துக்

காத்திருக்கேன் கண்ணாட்டி

வேளை வரும் என்று நீயும்

வெகுநாளாய் இயம்புகிறாய்

காலம் வரும் என்று நானும்

காதல் கள்ளில் ஊறுகின்றேன்.

சோலைக் குயிலே! - என்

சுந்தரச் சொப்பனமே!

தடை அகற்றி எனை அழைக்க

தயக்கமென்ன சொல் கண்ணே!

இங்கு

வழிகேட்ட பின்னால்த்தான்

வான்மதி திகைக்குதடி. - என்

வலி அறிந்த பின்னர்

எழில்முகிலும் புலம்புதடி.

ஊர்ச்சிறுக்கி நீ என்னை

உயிரோடேன் வாட்டுகிறாய்?

கார்காலம் கூட்டி என்னில்

காவியத்தீ மூட்டுகிறாய்!

மார்தட்டி மாய்ந்துபோக

மடிதேடிக் கிடக்கின்றேன். - இங்கு

வேர் விடாப் பயிராக

உயிர் வாடிச் சலிக்கின்றேன்.

தீராதவலியோடு திணறும் வாழ்விது

சோராது பார்த்திருப்பேன்

சொந்தநிலம் மீளும் வரை

இருப்பினும் அங்கு

ஆறாதபோரோடு அன்னைமண் நின்றாலும்

சீராட்டி என் சவத்தில்

தீ மூட்டும் பொழுதெனினும்

உற்றாரே! உறவுகளே!

ஊரோடு என் உடல் கரையும்!

<span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா</span>

Edited by valvaizagara

தீராதவலியோடு திணறும் வாழ்விது

சோராது பார்த்திருப்பேன்

சொந்தநிலம் மீளும் வரை

இருப்பினும் அங்கு

ஆறாதபோரோடு அன்னைமண் நின்றாலும்

சீராட்டி என் சவத்தில்

தீ மூட்டும் பொழுதெனினும்

உற்றாரே! உறவுகளே!

ஊரோடு என் உடல் கரையும்!

வாழ்த்துக்கள் உங்கள் கவி மிகவும் அருமை

உங்கள் ஏக்கமே எல்லோருடையதும் வெகு விரைவில் அந்த ஏக்கம் நிறைவேறும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீராட்டி என் சவத்தில்

தீ மூட்டும் பொழுதெனினும்

உற்றாரே! உறவுகளே!

ஊரோடு என் உடல் கரையும்!

நன்றி யாழ்பிரியா!

விடயத்தலைப்பை எப்படித் தமிழில் எழுதுவதென்று தெரியவில்லை :roll:

யாரேனும் சொல்லித் தருவீர்களா?

கதையோடு கதையாக சந்தியா உங்களையும் மறக்கேல்லை நன்றியை அனுப்புகிறேன் ஏற்றுக் கொள்க.

தீராதவலியோடு திணறும் வாழ்விது

சோராது பார்த்திருப்பேன்

சொந்தநிலம் மீளும் வரை

இருப்பினும் அங்கு

ஆறாதபோரோடு அன்னைமண் நின்றாலும்

சீராட்டி என் சவத்தில்

தீ மூட்டும் பொழுதெனினும்

உற்றாரே! உறவுகளே!

ஊரோடு என் உடல் கரையும்!

மீண்டும் நல்லதொரு ஏக்கத்துடன் வந்த உங்கள் கவிதைக்கு நன்றி.

விடயத்தலைப்பை எப்படித் தமிழில் எழுதுவதென்று தெரியவில்லை :roll:

யாரேனும் சொல்லித் தருவீர்களா?

கீழே தகவல் எழுதும் பெட்டியினில் விடயத்தலைப்பினை எழுதி பின்னர் அதிலிருந்து வெட்டி எடுத்து பின்னர் தலைப்பு எழுத வேண்டிய இடத்தில் பிரதி பண்ணிவிடவும்.

அல்லது கீமன் வன்னி மென்பொருள் பாவித்து நேரடியாக தமிழில் எழுதலாம்.

கீமன் வன்னி மென்பொருள்

சோலைக் குயிலே! - என்

சுந்தரச் சொப்பனமே!

தடை அகற்றி எனை அழைக்க

தயக்கமென்ன சொல் கண்ணே!

இங்கு

வழிகேட்ட பின்னால்த்தான்

வான்மதி திகைக்குதடி. - என்

வலி அறிந்த பின்னர்

எழில்முகிலும் புலம்புதடி.

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரமா, அருவி, கௌரிபாலன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் முக்கியமாக அருவிக்கு பிரத்தியேக நன்றி.

பரீட்சித்துப் பார்க்கவில்லை அடுத்த தலைப்பில் சோதனையில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்.

இங்கு வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாறா உங்கள் கவிக்கு நன்றி.

முதல் ஐந்திலும் காதலைப் பொழிந்துவிட்டு இறுதியில் மண்பற்றைக் கலந்தது சற்று வித்தியாசமாகவுள்ளது.

அப்படியென்றால் உங்கள் காதலி எம் தாய்மண்ணா?

அப்படியென்றால் சரி.

அருமை வாழ்த்துக்கள் :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து வாத்தியாரே!

:P :P :P

உலைக்களத்துக்கவிஞரே சொல்லியிருக்கிறார்

'காதலிக்கக் கற்றுக்கொள்"

காதலிப்பதென்று முடிவெடுத்துவிட்டாயானால்

யாரைக் காதலிக்கலாம்?

என்ற கேள்வியெடுத்து கவிதை யாத்திருக்கிறார்.

'புூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்"

எனும் நூலில் 87, 88 ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.

:wink: இங்கு வல்வை சகாறா.

ஊரோடு என் உடல் கரையும்!

உன்னோடு நானிருந்து

உறங்காமல் விழித்திருந்து

............................

உள்ளங் காலடியில்

உன்மேனி உரசும் சுகம்

என் காயச் சிலிர்ப்பினிலே

கவி எழுதத் தூண்டிலிடும்.

கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட

கனித்தமிழ் காவிரியே!

தள்ளாடும் இதயமடி

தவிப்பணைக்க ஏது வழி?

அருமை ..........அருமை..........

வாழ்த்துக்கள்............

கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட

கனித்தமிழ் காவிரியே!

................................

ஓகோ இந்தப் பிரச்சனை

உங்கள் கவிக்குள்ளுமா?........ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகறா

என்ன ஒற்றுமை! எமது தாயகக்கவியின் "புூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்" என்று நீங்கள் குறிப்பிட்ட அந்த நு}லை நான் தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 303 ஆம் பக்கத்திலிருக்கும் "நடக்கும் நதி" வரை இப்போது படித்துவிட்டேன்.

நீங்கள் கூறும் எங்கள் (உலைக்களத்துக்கவிஞரே?) தாயகக்கவி, தான் எழுதிய "வியாசனின் உலைக்களம்" என்கின்ற தனது

நு}லினை கையொப்பமிட்டு, தனது கைகளாலேயே எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். அதிலே பக்கம் 59-62 இல் "தாயகத்தைக் காதல்செய்" என்றொரு அருமையான கவிதையும் இருக்கிறது படித்துப்பாருங்கள்.

நான் உங்கள் கவியில் குறை கூற வரவில்லை. எனது சந்தேகத்தைத்தான் கேட்டேன்.

தாயகப்பற்று அப்படித்தான் இருக்கவேண்டும். எனக்கும் உங்களைப்போல்தான் ஆசை இருக்கின்றது. நாம் பல வருடங்களின் பின்னர் அண்மையில் தாயகம் சென்றிருந்தபோது எமது காலடிகள் யாழ் மண்ணில் பட்டபோது என் மனம் குளிர்ந்து, மகிழ்ந்ததை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.

உங்கள் கவிக்கு மீண்டும் எனது நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் எழுதியது

கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட

கனித்தமிழ் காவிரியே!

................................

ஓகோ இந்தப் பிரச்சனை

உங்கள் கவிக்குள்ளுமா?........

நன்றி அஜீவன்,

பரவாயில்லையே!

கவிதை ஆய்வில்

புூகோளரீதியில் உங்கள் மதி நன்றாக வேலைசெய்திருக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடரட்டும் உங்கள் பணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செல்வமுத்து வாத்தியாரே,

அதென்ன அடைப்புக்குறியோடு கேள்விக்குறி?

என்ன ஒற்றுமை! எமது தாயகக்கவியின் "புூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்" என்று நீங்கள் குறிப்பிட்ட அந்த நு}லை நான் தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 303 ஆம் பக்கத்திலிருக்கும் "நடக்கும் நதி" வரை இப்போது படித்துவிட்டேன்.

நீங்கள் கூறும் எங்கள் (உலைக்களத்துக்கவிஞரே?) தாயகக்கவி, தான் எழுதிய "வியாசனின் உலைக்களம்" என்கின்ற தனது

நு}லினை கையொப்பமிட்டு, தனது கைகளாலேயே எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். அதிலே பக்கம் 59-62 இல் "தாயகத்தைக் காதல்செய்" என்றொரு அருமையான கவிதையும் இருக்கிறது படித்துப்பாருங்கள்.

அதென்ன அடைப்புக்குறியோடு கேள்விக்குறி?

Edited by valvaizagara

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் பலவிதம்....

இக்களத்தில் உலவும் இளைய தலைமுறைக்காக......

ஊரோடு என் உடல் கரையும்!

உன்னோடு நானிருந்து

உறங்காமல் விழித்திருந்து

கண்ணால் தழுவுவதும், - உன்

கவின் புூத்த புன்னகையில் நான்

காணாமல் போவதுவும்,

என்னிரு கை விரித்து

உன்னை நான் அணைப்பதுவும்,

உரிமையோடு ஆண்டு

நீயென்னை அடக்குவதும்

எப்போது நிகழுமென்று

என் நெஞ்சம் ஏங்குதிங்கு!

உள்ளங் காலடியில்

உன்மேனி உரசும் சுகம்

என் காயச் சிலிர்ப்பினிலே

கவி எழுதத் தூண்டிலிடும்.

கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட

கனித்தமிழ் காவிரியே!

தள்ளாடும் இதயமடி

தவிப்பணைக்க ஏது வழி?

உன்னடியில் தளமிட்டு

உலக உலா செல்வதற்கு

கண்ணடியில் கனவு சேர்த்துக்

காத்திருக்கேன் கண்ணாட்டி

வேளை வரும் என்று நீயும்

வெகுநாளாய் இயம்புகிறாய்

காலம் வரும் என்று நானும்

காதல் கள்ளில் ஊறுகின்றேன்.

சோலைக் குயிலே! - என்

சுந்தரச் சொப்பனமே!

தடை அகற்றி எனை அழைக்க

தயக்கமென்ன சொல் கண்ணே!

இங்கு

வழிகேட்ட பின்னால்த்தான்

வான்மதி திகைக்குதடி. - என்

வலி அறிந்த பின்னர்

எழில்முகிலும் புலம்புதடி.

ஊர்ச்சிறுக்கி நீ என்னை

உயிரோடேன் வாட்டுகிறாய்?

கார்காலம் கூட்டி என்னில்

காவியத்தீ மூட்டுகிறாய்!

மார்தட்டி மாய்ந்துபோக

மடிதேடிக் கிடக்கின்றேன். - இங்கு

வேர் விடாப் பயிராக

உயிர் வாடிச் சலிக்கின்றேன்.

தீராதவலியோடு திணறும் வாழ்விது

சோராது பார்த்திருப்பேன்

சொந்தநிலம் மீளும் வரை

இருப்பினும் அங்கு

ஆறாதபோரோடு அன்னைமண் நின்றாலும்

சீராட்டி என் சவத்தில்

தீ மூட்டும் பொழுதெனினும்

உற்றாரே! உறவுகளே!

ஊரோடு என் உடல் கரையும்!

விழிவலையில் சிக்கத் தவறிய அழகிய கவிதையை காட்டிய சகாறாவிற்கு நன்றிகள். . .

***

Edited by வலைஞன்
தனிநபர் மீதான தாக்குதல் கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பரணீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.