Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்டாதிச் சனி

Featured Replies

[size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size]

புரட்டாதிச் சனி

r1010043-1.jpgபுரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும்.

இமய தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னி ராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர்.

எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன், இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்று கூறுவர்.

அரிச்சந்திர மகாராஜரின் அரசிழந்து சுடலையில் காவல்காரனாதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.

இராணுவனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து சந்திரனாத் பின் சிவன் அல்லது விஷ்ணு சந்நிதானத்தை அடைந்து சனிதோஷம் நீங்கப் பிரார்த்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5 இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனி என்றும், 12 இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனி என்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள் விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிரார்த்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும்.

நன்றி தினகரன்

எங்கடை சனம் ஆருக்கு விரதம் பிடிக்காட்டியும் இவருக்கு மறக்காயினம் . அவ்வளவு பாசம் இவரில . இனி புலத்து கோயிலுகள் எல்லாம் இவரால கல்லா கட்டும் . எனக்கு இவரில நம்பிக்கை இல்லை . வன்னி சனமெல்லாம் கூண்டோட கைலாயம் போகேக்கை இவரே அவையை பிடிச்சிருந்தவர் :( :( ??? மேலும் இதை மெய் அறிதல் அல்லது நிகழ்தல் அறிதல் பகுதியில போட்டிருந்தியள் எண்டால் நல்லாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள் அலைமகள் :) . இப்பிடி ஏதாவது நல்ல வேலையள் செய்யுங்கோ :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

அலை யாழில் காகம் தேடி வந்தா...காகம் ஒன்றையும் காண இல்லை....இதை பதிந்துட்டு போய்ட்டா...அப்படிதானே அலை.. :lol:

Edited by யாயினி

இனி மூன்று மாதங்களுக்கு நான் பட்டினிதான். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறக்கும் போது,சனீஸ்வரன், எனது ஜன்ம லக்கினத்தில் உச்சஸ்த்தானமாம்!

அண்டையில இருந்து, இவருக்கு என் மீது, ஒரு விதமான ஒருதலைக் காதல்!

மனுசன், அங்கால், இஞ்சால ஆளை அசைய விடுகுதில்லை! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனம் ஆருக்கு விரதம் பிடிக்காட்டியும் இவருக்கு மறக்காயினம் . அவ்வளவு பாசம் இவரில . இனி புலத்து கோயிலுகள் எல்லாம் இவரால கல்லா கட்டும் . எனக்கு இவரில நம்பிக்கை இல்லை . வன்னி சனமெல்லாம் கூண்டோட கைலாயம் போகேக்கை இவரே அவையை பிடிச்சிருந்தவர் :( :( ??? மேலும் இதை மெய் அறிதல் அல்லது நிகழ்தல் அறிதல் பகுதியில போட்டிருந்தியள் எண்டால் நல்லாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள் அலைமகள் :) . இப்பிடி ஏதாவது நல்ல வேலையள் செய்யுங்கோ :lol::D .

நாங்கள்,நீங்கள்,மற்றவையள் எண்டு கொஞ்சப்பேர் வெளிநாட்டிலை இருக்கிறம்.நாங்கள் வெளிநாட்டுக்கு வருவம்....இப்பிடி வாழுவம் எண்டு சின்னன்லை யோசிச்சு பாத்திருப்போமா :rolleyes: ? அதுக்கு என்ன காரணம்?ஏன் வந்தம்?ஆராலை வந்தம்?என்னத்துக்கு இஞ்சை வந்தம்? அவையள் சாக நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தம்? இருபது வருசத்துக்கு முந்தி எங்கடை எதிர்பார்ப்பு எப்பிடியிருந்தது?பத்து வருசத்துக்கு முதல் எங்கடை எதிர்பார்ப்பு எப்பிடியிருந்தது?பொய் சொல்லி அகதியானவனும் உண்மையாகவே அகதியாக்கப்பட்டு விட்டான்.....முதல்லை ஆறுமாத விசா.....பிறகு ஒரு வருச விசா....இப்ப சிற்ரிசன்.......இனியென்ன நடக்குமோ....யாரறிவார்? வன்னியின் அழிவை எதிரிகள் கூட இவ்வளவு சுகமாக முடியுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.எல்லாம் விதி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.