Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடன்குளம் அணுமின் திட்டத்தையே நிறுத்தி வைப்போம்! சுப்ரீம் கோர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kudankulam-27-09-2012-01.jpg

மக்களே முக்கியம்! கூடன்குளம் அணுமின் திட்டத்தையே நிறுத்தி வைப்போம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூடங்குளம் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வேறு சிலரும் வழக்குகள் தொடர்ந்தனர். சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

கடந்த மாதம் 31-ந்தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் போலீசார் தடியடியில் முடிந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஐகோர்ட்டு கொடுத்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஐகோர்ட்டில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த என்ஜீனியர் சுந்தர்ராஜன், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதில் குறைபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமரசம் கிடையாது. கூடங்குளத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை பற்றி மத்திய அரசு பதில் தர வேண்டும். அணுஉலைக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். தேவைப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைப்போம்' என்று தெரிவித்தனர். கூடங்குளம் அணுஉலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறித்து ஒரு வாரத்திற்குள் சுப்பரீம் கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கூடன்குளம் பகுதி மக்களுக்கு இன்று (27-9-2012) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கரிசனத்துடன் கூறிய இந்தக் கருத்துக்கள் ஆறுதலானவை.

-சி.என்.இராமகிருஷ்ணன்-

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம் நிறுத்தப்படும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Posted Date : 11:44 (27/09/2012)Last updated : 15:02 (27/09/2012)

supreme-court-3%2810%29.jpgபுதுடெல்லி:கூடங்குளம் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கூடங்குளம் அணு உலை மின் திட்டத்தையே நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டியது வரும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இத்திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு பணம் செலவானது எனபது முக்கியமல்ல; மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறினர்.

எனவே கூடங்குளம் பகுதி மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அத்திட்டத்தையே நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டியது வரும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்

மேலும் கூடங்குளம் அணு உலைக்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்றிதழ் கொடுத்தது குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ளவர்களுக்கு இந்த விடயத்தில் நிபுணத்துவத்துடன் கருத்துக்கூறும் தகுதி இருக்கும் என நினைக்க இடமில்லை.. ஏற்கனவே அணு உலையினால் அழிவுகளைச் சந்தித்த நாடுகளின் நிபுணர்களைக்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படவேண்டும்..

செர்னோபில் அல்லது ஜப்பானிய நிபுணர்களை அணுகலாம்.. செர்னோபில் யுக்ரேனில் உள்ளது என நினைக்கிறேன்.. அவர்கள் தொழில்சார் நேர்மையுடன் நடப்பார்களா என்கிற சந்தேகம் இருப்பதனால் ஜப்பானிய நிபுணர்களை அணுகலாம்.. அப்படி அணுகினால் நிறைய ஓட்டைகளைக் கண்டுபிடிப்பார்கள்...!

போராட்டக்காரர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கையெழுத்திட்ட அதிகாரிக்கு எந்தவிதமான நிபுணத்துவம் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் கேட்கவேண்டும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சர்வதேச நிபுணர் குழவின் அறிக்கையே நீதியானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ளவர்களுக்கு இந்த விடயத்தில் நிபுணத்துவத்துடன் கருத்துக்கூறும் தகுதி இருக்கும் என நினைக்க இடமில்லை.. ஏற்கனவே அணு உலையினால் அழிவுகளைச் சந்தித்த நாடுகளின் நிபுணர்களைக்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படவேண்டும்..

செர்னோபில் அல்லது ஜப்பானிய நிபுணர்களை அணுகலாம்.. செர்னோபில் யுக்ரேனில் உள்ளது என நினைக்கிறேன்.. அவர்கள் தொழில்சார் நேர்மையுடன் நடப்பார்களா என்கிற சந்தேகம் இருப்பதனால் ஜப்பானிய நிபுணர்களை அணுகலாம்.. அப்படி அணுகினால் நிறைய ஓட்டைகளைக் கண்டுபிடிப்பார்கள்...!

போராட்டக்காரர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கையெழுத்திட்ட அதிகாரிக்கு எந்தவிதமான நிபுணத்துவம் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் கேட்கவேண்டும்.. :rolleyes:

ஜேர்மனிய நிபுணர்களை அணுகச்சொல்லுங்கள்....அவர்கள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கள்....பிறநாட்டு அணுசக்தி கழிவுகளையும் இவர்கள்தான் ஆற வைத்து பராமரிக்கின்றார்கள்.அணுசக்தி அழிவுகளில் பாதிக்கப்படாமலே........அணுசக்திக்கு முற்றிப்புள்ளி வைக்கின்றது ஜேர்மனி..... :wub: :wub: :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.