Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

பிரித்தானிய அரசின் விசெட அனுமதியுடன் பாராளுமன்ற வாசலில் 2 திகதிமுதல் 6 திகதிவரை 101 மணிநேர உண்ணாவிரதம்.

பிரித்தானிய அரசின் விசெட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2 திகதிமுதல் 6 திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வளங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூண்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்ச்சியாக நடைபெறும் இந்த உண்விரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்கு சுற்றவர நிப்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன்ஊடாக பெறமுடியும் எண்று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்தக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வாக்கு போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு புரியும் விதத்தில் தெரியப்படுத்தவதே தனது பூரண விருப்பம் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் மிதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமானமுறையில் கொல்லபடுவதை முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அளுத்தம் கொடுக்கவேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல்வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவவேண்டும். எண்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவை கொடுக்க இருப்பதாக அறியமுடிகிறது.

thayaid.JPG

  • Replies 167
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதலில் எனது நன்றிகளை திரு தயா இடைக்காடருக்கு அனைத்து புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பிலும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

நிச்சயமாக உங்கள் இந்தப் போராட்டம், காலத்தில் செய்ய வேண்டியதும், புலத்திலிருந்து எம் தேசியத்திற்காக செய்ய வேண்டியதுமான செயல்!!

நாமெல்லாம் உங்களுக்கு உரமாக இருந்து இப்போராட்ட மூலம் எம்மக்களின் அவலங்களை பிரித்தானிய அரசுக்கு எடுத்துரைப்போம்.

பிரித்தானிய பாரளுமன்ற முன்றலில் சரித்திரம் படைப்போம்! எத்தடைகள் வரினும், எம் தேசியப் பயணம், அதன் வெற்றி இலக்கை அடையும் வரை நாம் ஓயோம் என உலகிற்கு எடுத்துரைப்போம்.

  • தொடங்கியவர்

தயா இடைக்காடர்.

ஹரோ.

23 வைகாசி 2006

அன்புடையீர்,

* தாயகத்தில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஆவன செய்ய கோரியும்,

* இலங்கையின் வடக்கு கிழக்கு மக்;கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கௌரவமான சமாதான தீர்வை வலியுறுத்தியும்,

* பிரித்தானியா உடனடியாக மத்தியஸ்தம் வகித்து பேச்சுக்களை ஆரம்பிக்க கோரியும்,

எதிர் வரும் ஜுன் மாதம் 2ம் திகதி 100மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய பாரளுமன்றத்தின் முன்னால் நான் நடாத்த உள்ளேன்.

;

1947இல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியை சிங்கள தலைமைகளிடம் ஒப்படைத்த பிரித்தானியா அரசின் கடமைப்பாட்டை உணர்த்தவே இந்த போராட்டத்தை நான்; பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக செய்ய உள்ளேன்

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களும் பங்களிப்பை நல்குவதுடன், அனைத்து ஊடகங்களும் தமது ஆதரவை தந்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

தயா இடைக்காடர்.

தொடர்புகளுக்கு

0208 933 1031

0781 2028 741

முதலில் இந்த துணீகரமான போராட்டத்தை நடாத்த முயலும் தயாவிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் நான். திரு தயா அவர்கள் புலிகள் மீது பிரித்யதானிய போட்ட தடையை உடன் நீக்கும் பட்சத்திலேயே பிரித்தானியா பேசச்சுக்களில் மத்தியஸ்தம் வகிக்க முடியும் என்ற ராஜதந்திரத்தை பாவிப்பதற்கு நான் திரு தயா அவர்களிங்கு ஒரு சபாஸ் சொல்லத்தான் வேண்டும். வெறுமனே பிhரித்தானிய அரசை புலிகள் மீதான தடை நீக்கு என கேட்டால் அதை கேட்க எந்த ஒரு அரசியல்வாதியும் தயாவை நெருங்க மாட்டார்கள். ஆனால் மிக சாதுரியமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் மிகவும் அருமையாக பிரித்தானிய அரசை பதில் சொல்லும் வகையில் உள்ளது. தயாவின் அரசியல் சாதுரியத்திற்கு எனது பகாராட்டுகள். தயாவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். யதா உண்ணாவிரதம் இருப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை, ஆனால் இந்த போராட்டம் பிரித்தானிய அரசிற்கு ஒரு நல்ல செய்தியை சொல்லுவதுடன், பிரிததானிய தமிழ் மக்களின் தொடர்ந்த போராட்டத்தறிகான ஒரு அத்திவாரமாகவும் இது அமையும்.

  • தொடங்கியவர்

முற்றிலும் உண்மை!

இப்போராட்டமானது, பிரித்தானிய அரசிற்கு எமது நியாயப்பாட்டை எடுத்துரைக்கும் அதேவேளையில், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்திருக்கும் எம்மவர்க்கும் பல செய்திகளை சொல்லுகிறது .. "நீங்கள் எங்கள் மீது தடைகள் மேல் தடைகள் கொண்டுவரும்போது, நாங்கள் எம் தேசியத்தை மிக இறுக இறுக பற்றுகிறோம்".

ஒன்றுபடுவோம்! எம் குரல்களை உரக்க ஒலிப்போம்!!

தயாவின் உண்ணவிரதத்தை தொடர்ந்து இன்னுமொரு தமிழ் கவுன்சிலரும் தமிழ் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின்(டவுனிங் வீதி) முன் தனது உண்ணா விரதத்தை நடாத்த திட்டமிட்டுள்ளாராம். அவுஸ்திரேலியாவில் பரவலாக இந்த செய்தி பேசப்படுவதாகவும். வெகு விரைவில் இந்த கவுன்சிலர் தனது முடிவை வெளியல் அறியப்படுத்துவா எனவும் தெரிய வருகிறது. தமிழ் மக்களின் செல்வாக்கால் இன்று கவுன்சிலராகியிருக்கும் இந்த அரிசியல் வாதிகளின் செயலை நாம் அனைவரும் பாரராட்ட வேண்டும். தொடர்ச்சியான இவர்களின் போராட்டம் நிச்சயம் எமக்கு வெற்றியை தரும்!

http://www.nitharsanam.com/?art=17023

தயா இடைக்காடர் போராட்டம் நடாத்த இருந்த இடத்தில் ஈராக் யுத்தத்தை எதிர்த்து முகாமிட்டிருந்தவரை பிரித்தனிய பொலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அவர் வைத்திருந்த பெரிய காட்ச அட்டைகளை அங்கிருந்து நீக்கிய பொலீசார் 3 மசதுர மீற்றருக் குட்பட்ட பாதகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என கூறியுள்ளனர். இதனை எதிர்த்து இந்த நபரும் தற்போது உண்ணாவிரதத்தி;ல் குதிக்க முடிவு செய்துள்ளார். பரவாயில்லை தயாவுக்கு துணையாக ஒருவர் அருகில் இருக்கப்போகிறார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நன்றிகள் தயா!

இன்று "ஐ.பி.சி", "ரி.ரி.என்", "சன்றைஸ்", ... என்பன மிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் போராட்ட செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குமேல் தமது தார்மீக ஆதரவையும் வெளிப்படுத்தியும், இதற்கு எம்மக்கள் ஆதரவு பகிங்கரமாக வெளிப்படுத்த வேண்டிய தேவைகளையும் எடுத்து கூறிக் கொண்டிருக்கிறது.

வரும்நாட்களில் இப்போராட்டத்தை பிரித்தானிய ஊடகங்களின் கவனங்களை ஈக்கவும் முயற்சிகள் தொடங்கியிருக்கிறது.

இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தயாவின் போராட்டம் ஆரம்பமே! இதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பற்பல கவனயீர்ப்புப் போராட்டங்களும், விளிப்புப் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற இருக்கின்றது. தயாவின் போராட்டத்தை அடுத்து பிரித்தானிய கரோப்பகுதி ஈழத்தமிழ் பெண் கவுன்ஸிலரும் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது.

களத்திலை தேவை இல்லாமல் அரட்டை அடிக்கிற பலரும் இத்தய நபர்களுக்கு ஒரு வாழ்த்து எண்டாலும் எழுதலாம். இது அது ஒண்டும் இல்லை யாழ் களம் சப்பெண்டு இருக்கு

தயா இடைக்காடருக்கு சற்று முன்னர் றாமறாஜனின் பிறான்ஸ் பொறுப்பாளரும் றாமறாஜனின் வானொலியில் வாரத்தில் 2 தடவை நிகழ்சி நடாத்துபவரும் பல்வேறு புனை பெயரில் வந்து விடுதலைப் பலிகளை விமர்சிப்பவரும் றாஜறாஜனின் மனைவியுடன் றாமறாஜன் சிறைக்கு சென்ற பிறகு லண்டனில் வந்து தங்கி இருந்துவிட்டு சென்றவரும் றாமறாஜனுடன் சுவிசுக்கு கூடச் சென்று றாமறாஜன் பொலஜசாரால் கைது செய்தபிறகு தப்பி ஓடிவந்தவருமான சுந்தரம் அல்லது சுந்தரமூத்தி அல்லது தென்முனையான் அல்லது பிரதெசவாதத்தான் என்று பலராலும் கூறப்படுபவர் கொலை அச்சறுத்தல் விட்டுள்ளார்.

பிரித்தானியிய உளவுத்துறையான இஸ்கொட்லன் யாட் தற்போது இன்ரபோல் ஊடாக இந்த கொலை மிரட்டல் விட்டவரை பிறான்ஸ்ல் கைது செய்யும் என்று அறியமுடிகிறது. கொலை மிரட்டல் விட்டவர் தவறுதலாக தனது சொந்த வீட்ட இலக்கத்தில் தொடர்புகொண்டதால் பொலிசாரால் இலக்கம் இலகுவாக கண்டறியபட்டுள்ளது.

0033172383650

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லிடயம் ஆனால் இதனால் பயனெதுவும் இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இங்கே எழுதப்படும் பல விடயங்கள் கள உறவுகளுக்கு முழு நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதனால்தான் பலர் கருத்தெழுத முன்வரவில்லை என்று எண்ணுகிறேன்.

உதாரணம்:- Thaya Idaikkadar எழுதப்பட்டது: திங்கள் வைகாசி 22, 2006 10:14 am Post subject:

இந்த உண்ணா விரதத்தால் வரக்கூடிய நன்மை தீமைகளை யாராவது கூறுங்களேன்?

இதன் நன்மை தீமை தெரியாமலா போராட்டம் செய்யப் போகின்றார்?

சிலரால் இங்கே பாவிக்கப்படும் வார்த்தைப்பிரயோகங்கள் படிப்பதற்கு நாகரீகமாகவும் இல்லை.

அன்னை புூபதி, தியாகி திலீபன் அவர்களை இங்கே ஒப்பிடுவது சிறிதும் பொருத்தமில்லாதது. அவர்களுக்குக் கிட்ட நெருங்கும் தகுதியை முதலில் பெறவேண்டும்.

ஒன்றை ஆரம்பித்தால் அது ஆரம்பித்த நோக்கம் நிறைவுறும்வரை போராடவேண்டும். ஒன்றை ஆரம்பித்துவிட்டு மற்றவர்களைத் தொடருங்கள் என்று விடக்கூடாது.

பாராளுமன்றத்தின் முன்பாக ஈராக் போருக்கெதிராக போராடுபவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இரவு பகலாக அங்கேயே இருக்கிறார். பாராளுமன்றத்திலிருந்து 1 கி.மீட்டர் சுற்றளவிற்குள் பொலீஸ் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள் செய்ய முடியாது. இது கடந்த வருடத்திலிருந்து சட்டமாக உள்ளது.ஈராக் போராட்டம் நாடாத்துபவர் அங்கே இருப்பது சட்டபுூர்வமானதா என்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கவுள்ளார்கள்.

இவர் பற்றிய விபரங்களையும், ஏனைய விபரங்களையும் பி.பி.சி இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.

பொதுவாக கவுன்சிலர்களுக்கு நேரம் கிடைப்பதே அருமை. அதிலும் தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள் எப்படி இவருக்கு களத்தில் வந்து அனைவரது கருத்துக்களையும் படித்துக் கருத்தெழுத நேரம் கிடைக்கின்றது?

தாயகம், தேசியம் என்பன விளையாட்டுப்பொருள்கள் அல்ல. எனவே இந்தப் போராட்டத்தினால் எமக்கு நன்மை கிடைத்தால் இவர் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பெறுவார். எனவே அதற்குரியவர்கள் வந்து தெளிவுபடுத்தினால் அனைவரது ஆதரவுகளையும் பெறலாம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் திரு.தயா அவர்களுக்கு. பல புலம் பெயர்ந்த மக்களிடையே விளிப்புணர்ச்சியினை ஏற்பட வழிவுகுக்கும். உண்ணவிரதம் வெற்றி பெற அவுஸ்திரெலியாவில் இருந்து கொண்டு வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் இருப்பதால் இந்த நாட்டில் எவ்வித பயனுமில்லை பல வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடு ஒன்றில் உண்ணாவிரதமிருந்தவர்களுக்கு உருளைக்கிழங்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த வெள்ளைக்காரர்களும் இங்கு இருக்கிறார்கள்

ஒருவர் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறார். அதில் உள்ள நல்ல விடயத்தை பாராது அதை விமர்சிப்பது தான் தமிழனின் சொந்த புத்தி! திரு இடைக்காடர் அவர்கள் இந்த உண்ணாவிரத்தை இருப்பாதல் ஏற்படும் சில பயன்களை முதலில் கூறுகிறேன்.

1. பிரித்தானியவால் ஆழும் கட்சியின் லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர். கடந்த முறையை விட 800 அதிக வாக்குககள் பெற்றவர். ஒரு அரசியல் வாதி! இவர் போட்டியட்ட ஹரோ பகுதியல் லேபர் கட்சி தோல்வியை தழுவியபோதும் அங்கு வென்ற சிலரில் தயாவும் ஒருவர்.

வென்று விட்டேன் என்ற மமதையில் திழைக்காது உடனடியாக தனக்கு வாக்கு போட்ட மக்களிற்கு என்ன செய்யலாம் என நிதை;த போது ஐரோப்பிய தடை நம் தேசியத்தை வெருட்டியது. தனது தேசியத்தின் மீதான பற்றுதலால். இந்த தருணத்தில் தனது அரசியல் செல்வாக்கை எப்படி இங்கு பாவிக்க முடியும் என்ற அவரின் சிந்தனையினக் வெளிப்பாடே இந்த உண்ணாவிரதம். ஐரோப்பிய நாடொன்றில் யாரோ ஒருவர் உண்ணவிரதம் இருப்பதற்கும், பிரித்தானியாவின் ஆளும் கட்சியில் பல அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகிய ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பல கவுன்சில்ர்கள் தேர்தலில் தெரிவாகியுள்ளனர். இது சிறிய விடயமல்ல. படுதோல்வியை சந்தித்த தொழில் கட்சிக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கு செல்வாக்கு பற்றி அடித்து சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த உண்ணவிரதம் இன்று நாளை ஒரு தீர்வை தராவிட்டாலும் நமது தேசம் மலரும் போது ஒரு சிறிய துருப்புச்சீட்டாக ஆவது இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.

பிரித்தானிய பாராளு மன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருப்பது ஒரு கவனயீர்ப்புக்காகவே. இங்கு வரும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு நமது பிரச்சனை பற்றிய நம் பக்க வாதத்தை எடுத்தியம்ப ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தாயகத்திலேயே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர்கள் ஆசியுடன் தான் தயா அவர்கள் இந்த போராட்டத்தை நடாத்த உள்ளார். இந்த போராட்டம் முலம் என்ன உடனடியாக கிழிக்கிறார்கள் என்பதை விடுத்து நீண்ட து}ர நோக்கில் இதை பாருங்கள். இது நிச்சயம் ஒரு அரசியல் வெற்றியாக அமையும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

தயா இடைக்காடர் ஒரு எளிமையான மனிதர். அதனால் தான் அவர் தன் பதவி, கல்வி அனைத்துயும் ஒரு மூலையில் வைத்து வி;ட்டு இங்கு வந்து நம்முடன் சமமாக பழகுகிறார். அது தவறா?

உங்கள் தரவழிக்கு அரைகுடம் தான் சரி! நிறைகுடம் தளம்பாது என்பதற்கு நல்ல உதாரணம் தயா! ஒரு கவுன்சிலருக்கு 24 மணிநேர வேலை கிடையாது. வாரத்தில் இரண்டு அல்லது 3 நாடகள் பகுதி நேரமாகத்தன் வேலை, அதாவது கூட்டங்கள் நடைபெறும்.

வெறுமனே வாய் வார்தை nபுசி வெட்டிக்கிழக்கும் உங்கள் அனைவருடன் ஒப்பிடுகையில் தயா மிகவும் உணரத்தில் நிற்கிறார். அவர் பேராட்டம் நிச்சயம் அவரை ஒரு செயல் வீரனாக காட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா, நன்றிகள்.

உலகம் ஆயிரம் சொல்லும்.அகிம்சை என்றாலும் குற்றம்சொல்லும்,ஆயுதம் தூக்கினாலும் குற்றம் சொல்லும்.

தலைவர் சொன்னா செய்யவேன்டியதுதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணா விரதமிருப்பதால் பயனில்லை என்று சொல்பவர் பயனுள்ள 5 விடயங்களை கூறவும். அதிலிருந்து நீர் எப்படி பட்ட ஆள் என்பதை அறியலாம். சும்மா "என்னத்தை .." எண்டு பெசிமிஸ்ட் ஆக இருக்கிறதை விட்டு விட்டு.. எதையும் பொசிட்டிவ் ஆக பார்க்கப் பழகும் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்தாலும் நாங்கள் ஐரோப்பியர்களின் செருப்புதான் முதியவர் தனியாக உண்ணாவிரதம் இருப்பதை விட இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தால் நல்லது

தயா இடைக்காடார் செய்யவேண்டிய பணி அதிகம் இருக்கு... உடல் நலத்தில் கவனமாக இருப்பது நல்லது...!

வசம்பு மாதிரி வலசு ஏதாவது சாகும்வரை இருந்தால் நல்லது... ஆனா அது இட்ருக்குமா...???

அப்பு தலா

கவலைப்படாதையும் உம்மைப் போல புலம்பல்கள் இருக்கும் வரை தெளிவுபடுத்த நானும் இருப்பேன். :P :lol:

அப்பு தலா

கவலைப்படாதையும் உம்மைப் போல புலம்பல்கள் இருக்கும் வரை தெளிவுபடுத்த நானும் இருப்பேன். :P :lol:

ஓ பெரிய மேதை எண்ட நினப்பாக்கும் இந்த சோதைக்கு..... :lol::lol::lol:

முதலில 2ம் வகுப்பை பாஸ்பண்ணுமோய்....!

தலா எழுதியது:

ஆனா அது இட்ருக்குமா...???

நானாவது பறுவாயில்லை 2 ம் வகுப்பு எப்பவோ தாண்டி வந்து விட்டேன். ஆனால் சிலது இன்னும் பாலர்வகுப்பே தாண்டவில்லையே?? :roll: :cry: :roll: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலோ அச்சுவேலி Y.C.கிரு... சாறி வம்பார்!

ஒங்கடை 2ம் வகுப்பு படிப்பு, ஏதோ ஒறு வானொலியில் ஒலகசாதனை செய்தவவக்கு காட்டீனீறாம்! நீர் செயத 2ம் வகுப்பு வேலையை மற்ற பாலர் வகுப்புகளால் செய்ய இயலாதுதான்???

பி.கு: கள உறவுகளே, இந்த புலனாய்வாளனின் பலவற்றை கள நிர்வாகத்தின் கத்திக்குப் பயந்து அடக்க வேண்டியிருக்கிறது. கிளறி விட்டால் ... நாறும்!!!

நன்றி இடைக்காடார் ஐயா அவர்களே.

நிச்சயம் நீங்கள் அரசியல் வாதிகளுக்கப்பால் ஒரு படி மேல் சென்று விட்டீர்கள் .ஈழத்தமிழின் வாழ்வுக்காக ஆங்கிலேய பாராளுமன்றம் முன்னால் கொட்டில் போட்டு ஒரு தமிழ் மகன் உண்ணாவிரதம் இருந்தான் என்ற வரலாற்றின் சிறப்பை நீங்கள் தட்டிச்செல்கிறீர்கள். நிச்சயம் போராட்ட பக்கங்களில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்...

ஜநா சபைக்குள் சென்று தமிழீழம் என்று குரல் எழுப்பிய வைகுந்தவாசனை தமிழீழ வரலாறு மறக்கவில்லை.

காலத்தின் தேவை கருதி சரியான நேரத்தில் சரியானதை செய்கிறீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகிறோம் தமிழர் சார்பாக

இந்த விடயத்திற்கு தமிழ் மக்கள் அதிக ஆதரவு கொடுத்தால் தயா இடைக்காடர் தனது அடுத்த நடவக்கையை மிகவிரில் தொங்குவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.