Jump to content

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள்

[Thursday, 2012-10-11 11:27:20]

பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா செல்லும் முகமாக அவர்களது உறவினர்களும் குறித்த வீட்டில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட நகைகள் இணைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வர்த்தகராக விளங்கும் இவர்களது வீட்டில் நட்பு ரீதியாக உறவாடிய நபர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் சந்தேகமடைந்த நபர் ஒருவரை பொலிசாருக்கு அடையாளப்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட திருடனை அவர்கள் நெருங்கி விட்டதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த திருடர்கள் கைது செய்யப்பட்டால் பலரது கொள்ளைகள் அம்பலத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்த இன்றைய நகைகளின் பெறுமது எழுபதாயிரம் பவுண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது நகர்வுகளை தீவிரமாக்கியுள்ளனர்.

http://seithy.com/breifNews.php?newsID=68197&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவ்வளவு பணத்தையும் வீட்டில் வைத்திருப்பதற்கு அனுமதி இருக்கா..???!

இவ்வளவு நகைகளும் எப்படி வந்தன..?????????!

இப்படியான கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில்.. கூட்டிய காப்புறுதித் தொகை பெறுவதற்காக திருடர்களைச் செற்றப் செய்து தங்கட நகை பணத்தை தாங்களே கொள்ளை அடிக்கவும் வைக்கக் கூடியவர்கள் தமிழர்கள்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கருத்து, கவனிக்கப் படவேண்டியது.

ஆறு இடங்களில்... மறைத்து வைத்த, நகையையும்... பணத்தையும் திருடர்கள் சரியாகக் கண்டு பிடித்துள்ளார்கள் என்றால்..... :o

காப்புறுதிப் பணத்துக்காக செய்யப் பட்ட, உள் வீட்டு திருட்டாக இருக்கலாம்.

அல்லது... வர்த்தராக இருக்கும், அந்தத் தமிழருக்கு... ஓட்டை வாயாக இருந்து... கடைக்கு வாற, போற எல்லாரிடமும்.. தனது நகை ஒளித்து வைக்கிற‌ கெட்டித்தனத்தை... கள்ளம், கபடமில்லாமல் சொல்லியிருக்க வேண்டும். :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

இவ்வளவு பணம், நகை வைத்திருப்பதற்கு அனுமதி தேவையில்லை. காப்புறுதியும் இவ்வளவு பணத்துக்கும் நகைக்கும் கொடுக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் வரையரை உள்ளது. அதிக மதிப்புள்ள நகைகள் வீட்டில் இருந்தால் அதற்கேற்ப மேலதிக காப்புறுதிப்பணம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, வீட்டின் பூட்டுக்கள் போன்றவை தரமானதாக இருக்க வேண்டும் என்று காப்புறுதி நிறுவனம் அறிவுறுத்தும்.

எனவே, காப்புறுதிக்காக செய்யப்படிருக்க நியாயமில்லை. ஆனாலும் இவ்வளவு, பணம், நகையை வீட்டில் வைப்பது மொக்குத் தனம் என்றே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு, நகையும் பணமும் எப்படி வந்தது, எண்டு ;வருமானவரிக் காரன், கலைக்க மாட்டானா?

ஒரு 'அலார்ம்' போட்டிருந்தா மொபைல் போனில தெரியுமே!

இன்னும் வேட்டி கட்டிற சனமா, இருக்கும்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

]இந்தியா செல்லும் முகமாக அவர்களது உறவினர்களும் குறித்த வீட்டில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட நகைகள் இணைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதிலை களவுக்கான காரணமும் இருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக வீட்டினில் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கவேண்டும் அந்த அடிப்படையில் பார்த்தால் திருடர்கள் வீட்டில்தான் இருக்கின்றார்கள் பொலிசார் வீட்டில் இருப்பவர்களை விசாரித்தால் பல தகவல்கள் கிடைக்கும்.

இந்தியாவிற்கு போனவர்கள் கொடுத்த நகையை அபேஸ் பண்ணவும் இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கலாம் ?

இந்தியாவிற்கு போனவர்கள் ஏன் வங்கி லாக்கரில் வைக்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கருத்து, கவனிக்கப் படவேண்டியது.

ஆறு இடங்களில்... மறைத்து வைத்த, நகையையும்... பணத்தையும் திருடர்கள் சரியாகக் கண்டு பிடித்துள்ளார்கள் என்றால்..... :o

காப்புறுதிப் பணத்துக்காக செய்யப் பட்ட, உள் வீட்டு திருட்டாக இருக்கலாம்.

அல்லது... வர்த்தராக இருக்கும், அந்தத் தமிழருக்கு... ஓட்டை வாயாக இருந்து... கடைக்கு வாற, போற எல்லாரிடமும்.. தனது நகை ஒளித்து வைக்கிற‌ கெட்டித்தனத்தை... கள்ளம், கபடமில்லாமல் சொல்லியிருக்க வேண்டும். :D:lol::icon_idea:

என்னது லண்டனிலை இருக்கிறவையை ஓட்டைவாயள் எண்டு நினைச்சியளே? அதுவும் கடைமுதலாளி??????.....எல்லாம் ஒரு செற்றிங்ங்ங்ங்ங் எண்டு நினைக்கிறன் :lol:

Link to comment
Share on other sites

இங்கு பாவிப்பதற்கு மிகக் குறைவான நகைகளை வீட்டில் வைத்து விட்டு மிகுதியை வங்கி லாக்கரில் வைப்பார்கள். தாலியைக் கூட வீட்டில வைத்திருக்க விரும்புவதில்லை. இது கொஞ்சம் ஓவராக் கிடக்கு.

இப்ப தங்கமும் நல்ல விலை. பாவம் இன்சூரன்ஸ் கொம்பனிக்காரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள்

[size=5]அங்குதான் கொள்ளை என்றால் இங்கு நான் எழுதும் கருத்தும்கூட கொள்ளையடிக்கப்படுகிறதே! அட கடவுளே கடவுளே![/size]

Link to comment
Share on other sites

[size=5]அங்குதான் கொள்ளை என்றால் இங்கு நான் எழுதும் கருத்தும்கூட கொள்ளையடிக்கப்படுகிறதே! அட கடவுளே கடவுளே![/size]

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.