Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிப்பட்ட சுதந்திரம் ?.

Featured Replies

தனிப்பட்ட சுதந்திரம் ?.

இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ......

" நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்"

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?. உங்களது அனுபவங்களை அல்லது கருத்துக்களை இங்கு பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு, ஹதீதி!

மனிதன், காடுகளில் தனியாகத் திரிந்த போதே,அவனது சுதந்திரம், அவனைவிடப் பலம் வாய்ந்த விலங்குகளால், கட்டுப்படுத்தப் பட்டிருந்தது!

சமூக அமைப்புக்குள் வந்த போது,அவன் விரும்பியோ, விரும்பாமலோ, தனது 'தனிமனித' சுதந்திரத்தை இழந்தேயாக வேண்டிய நிலைக்கு, அவன் தள்ளப் பட்டான். தனது தனி மனித சுதந்திரங்களுக்குச் சில விதிவிலக்குகளை, அவன் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது!

இதனை வின்ஸ்ரன் சேர்ச்சில், அழகாகக் கூறுகின்றார்,

ஒரு தனி மனிதனின் சுதந்திரம், அவன் காவிச் செல்லும், குடையின் நீளத்தின் அளவு வரை தான்!

இல்லாவிட்டால், வீட்டில் அவனோ அல்லது அவளோ சர்வாதிகாரியாவது தவிர்க்க முடியாமல் போய்விடும்!

உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்!

இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்"

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதனை தனி மனித சுதந்திரம் என்று வரையறுக்க விரும்பவில்லை. காரணம்.. மனிதன் சுதந்திரமான வாழ்வை இழந்து பல காலமாச்சுது. இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ.. சமூகத்தின் மற்றும் ஆட்சியாளர்களின் விதிப்புகளுக்கு கீழ் தான் எமது சுதந்திரம் என்பதை அனுபவிக்கிறோம். அது இயற்கை உயிரிக்கு இயற்கையாக வழங்கி உள்ள சுதந்திரத்திலும் குறைவானதே.

ஆனால் இதை எனது சுயம் என்பதனூடாகப் பார்க்கிறேன். எனது தனிப்பட்ட மன விருப்பு.. வெறுப்பு.. வாழ்க்கை முறை.. ரசிப்பு..களிப்பு.. துக்கம்.. புசி.. தூக்கம்.. உணர்வு.. ஆரோக்கியம்.. எண்ணம்.. கருத்து.. கல்வி.. செல்வம்.. தெரிவு இவை என்னோடே அதிகம் இருப்பவை. நானே அதிகம் தீர்மானிப்பவை. இதில் மற்றவர்கள் தலையீடு செய்வதை நான் அனுமதிக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும். பெற்றோராக இருந்தாலும் அனுமதிக்கமாட்டேன்..! ஆனால் மற்றவர்களின் வழிகாட்டல்களை ஆலோசனைகளை எனது தெரிவுக்கு ஏற்ப பின்பற்றுவேன். என்னாலும் மற்றவர்களுக்கு கருத்துக்களை.. வழிகாட்டல்களை.. ஆலோசனை வழங்க முடிந்தால் செய்வேன். திணிப்புக்களை எப்போதுமே ஏற்றுக் கொள்ளமாட்டேன். மற்றும்படி மற்றவர்களின் சுயத்திலும் நான் தலையிட மாட்டேன்.

தனி மனித சுதந்திரம் என்பது இன்றைய உலகில் இழக்கப்பட்டே உள்ளது. ஏதோ ஒரு வகைக்கு நாம் இந்த உலகில் மற்றவர்களால் அடிமைப்படுத்தப்பட்டே உள்ளோம்..! அது கருத்தால்.. விளம்பரத்தால்.. ஆயுதத்தால்.. சட்டத்தால்.. சமூக ஒழுங்கால்.. கலாசாரத்தால்... பண்பாட்டால்.. மதத்தால்.. மொழியால்.. உடையால்.. பணத்தால்.. ஊடகங்களால்.. தேவையால்.. என்று பட வடிவங்களில் நாம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அதற்குள் இழக்கப்படாதிருக்கும் சுயத்தையாவது காப்பதே எனது நோக்கம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சுதந்திரம் என்ற பொருளுக்குள் நிறைய விடயங்கள் உள்ளன.இருப்பினும் எமது சுதந்திரம்

சூழல் கட்டமைப்புக்குள் பொருதி உள்ளது . இதனை பிழையான விடயம் என்பதைக்காட்டிலும்

நிறைய நல்ல விடயங்களே உள்ளன.

இந்த மனிதர் மனிதனாக இருப்பதிட்கும் ஏனையர்வர்களை மதிப்பதிட்கும் சுதந்திரம் நிட்சயமாக

தேவை. ஆனால் குடும்ப அமைப்புக்குள் இது சாத்தியபடாத ஒன்றே . ஏனெனில் பாசம் என்கின்ற விடயத்தால்

இது சாத்தியமாகாமல் போகலாம் . உறவுகளுக்காக விட்டுகொடுக்கவேண்டி இருக்கும் .

எம்மை ஈந்த தாய், தந்தை , மற்றும் உறவுகளுக்காக செய்ய வேண்டிய நிலை வந்தே தீரும் .

இந்த சமயத்தில் எப்படி எமது தனி மனித சுதந்திரம் சாத்தியமாகும் . நீர் கல் நெஞ்சனாக இருந்ததால் ஒழிய இது சாத்தியமாகாது

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள வாழ்வு முறைக்கும் வேளி நாடுகளில் உள்ள முறைகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது...அங்கு வீட்டு உறவுகளில் இருந்து சொந்த,பந்தம் அயலவர் என்று இருக்கும் அனைத்து உறவுகளுமே மிகவும் அன்னோன்யமான பழகுவார்கள்..அப்போ எல்லாருக்கும்,எல்லா விடையங்களையும் பகிர வேண்டிய நிலை..வெளி நாடுகளைப் பொறுத்த மட்டில் சுதந்திரம் என்பது அவர்.அவர் மனதைப் பொறுத்தது....அதற்காக எடுத்த எல்லாவற்றுக்கும் நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவேணும் என்று சொல்ல வர இல்லை....உதாரணத்திற்கு நான் எனது பெற்றோர் விருப்பின்றி எதையும் செய்வதில்லை..மீறி செய்ய முனையும் போது எனது வாழ்வு முறையில் நிறையவே தடங்கல்கள் ஏற்படுகிறது....அந்த தடங்கல்களை ஏற்படுத்துபவர்கள் கூடப்பிறந்தவர்களாலயோ அல்லது உறவுகளாலயோ,கலாச்சாரம் என்றவற்றால் ஏற்படப் பார்க்கிறது..ஆகவே பெற்றோரின் ஒத்துளைப்போடு ஒரு விடையத்தை செய்யும் போது எனக்கு மனசுக்கு திருப்தியாக இல்லாது விட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய நிலை....ஆனால் எனக்கு விரும்பம் இல்லாத விடையத்தை நேர,நேரவே சொல்லிவிடுவேன்.

அதற்காக சகோதரங்கள் மற்றும் உறவுகள் என் தனிப்பட்ட விடையங்களில் தலையிடுவதையோ முற்றாக வெறுக்க வேண்டிய நிலை...எனக்கு எந்த முடிவுகளும் எடுக்க சுதந்திரம் இருக்கு நான் இப்படித் தான் நடப்பன் என்று சொல்பவர்களை தான் இப்போதைய காலத்தில் காணக் கூடியதாக இருக்கிறது....என் காதாலயே பலமுறை இப்படியான வார்ததைப் பிரயோங்களை கேட்டும் இருக்கிறன்..நட்புக்களாக,விருப்பத்திற்கு உரியவர்களாக இருப்பவர்களிடம் கூட சில பிடிக்காத விடையங்களை நீங்கள் இப்படி செய்வது தப்பு,எனக்கு இது பிடிக்க இல்லை என்று சொல்ல முடியாத காலமாகிட்டு...யாராவது என்னாவது சொன்னால் ஆ அப்படியா என்று கேட்டுக்கொள்வேன்...மற்றபடி மௌனம்.

Edited by யாயினி

நான் எனது சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அதேபோல் மற்றவர் சுதந்திரத்திலும் அதிகமாகத் தலையிடுவதில்லை. அதற்காக மற்றவர்கள் சொல்வதைக் காது கேட்காமல் இருப்பது என்றில்லை. அவர்களின் அறிவுரைகள், கருத்துக்களையும் கேட்பேன். ஆனால், மற்றவர்களின் ஆதிக்கம் என்மேல் இருக்காது.

  • தொடங்கியவர்

உங்கள் ஆழமான கருத்துக்களுக்கும், வெளிப்படையான பகிர்விற்கும் நன்றிகள்.

நான் இங்கு இந்த விடையத்தை அலச முற்ற்பட்டமைக்கு பிரதான காரணம் , பல ஆண்கள் தனிமனித சுதந்திரம் என்ற போர்வையில் வெளிநாடுகளில் நாகரீகம் அற்ற, பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதால் பல குடும்பங்களில் ஏற்ப்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் விவாகரத்துகள்.

குடும்பம், பிள்ளைகள் என்றான பின்னும் பல ஆண்கள் வெளிநாடுகளில் செய்யும் கூத்துகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அண்மையில் ஒரு தமிழ் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. அப்பெண்மணியும் அவரது மூன்று குழந்தைகளும் அவரது கணவரால் படும் வேதனைகள் மிகுந்த வலியை ஏற்படுத்தின. குடி பிரதான காரணியாக தெரிந்தது. வேலை முடிந்து வந்ததும் Pub இற்கு போய் தண்ணி அடிக்க துடிக்கும் அவரிடம், குழந்தைகளையும் மனைவியையும் வெளியே பார்க்கிற்றோ (Park ) அல்லது வேறு இடத்திற்கோ அழைத்து சென்று குடும்பம் சார்ந்த அந்த அழகிய கணப்பொழுதுகளை அனுபவிக்க தெரியவில்லை.

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை கட்டிஎழுப்புவதற்கு தேவையான பிரதான காரணிகளான நம்பத்தக்க தன்மை (reliability) ,மாறாமை (consistency) , மரியாதை (respect) , நியாயம் (fairness) , வெளிப்படை (openness) , சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயான ஒற்றுமை (congruence) அந்த ஆணிடம் தென்படவில்லை. இவ்வாறான பல குடும்பம் சார்ந்த பிரைச்சினைகளை இன்று நம் சமூகத்தினரிடையே நாம் சர்வ சாதாரனமாக காணக்கூடியதாய் உள்ளது. வெளி நாட்டில் வாழ்கைப்பட்டு தினமும் தமக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கும் நம் தமிழ்பெண்கள் ஏராளம்.

எப்போதோ படித்த பெண் கவி சிவரமணியின் சில கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன....

- தொடர்ந்து பகிர்வோம்

Edited by Hatheethi

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ....

இதற்கு பெண்களும் சளைந்தவர்கள் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.