Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

மாவீரர் நினைவும் இல்லை நாட்டில் இருக்கும் அகதிகளை பற்றியும் இல்லை இவர்கள் கரிசனம் .

தங்களை கேட்காமல் தங்கள் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடாத்தினால் தங்கள் நிலை என்னாவது என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் .இவ்வளவு காலமும் நாட்டமைகளை கேட்காமல் எதுவும் செய்யமுடியாத நிலை இருந்தது உண்மைதான் ,அவர்கள் அனுசரணை ,அவர்களுக்கு ஒரு பங்கு இல்லாவிட்டால் ஊதுகுழல்கள் மூலம் ஊதித்தள்ளி விடுவார்கள் இவர்கள் சிங்களவரின் ஆட்கள் என்று .காலம் காலமாக நடந்து வந்த ஒரு விஷயம் இப்போ கையை மீறிப் போக வந்த எதிர்ப்புத்தான் இவ்வளவும் .

அகப்பட்டதை சுருட்டுவம் என்று அனைத்து ஊது குழல்களும் விளம்பரத்தை வாங்கி நிகழ்ச்சிக்கு எதிர்கருத்து வைக்க கூடாது என சொல்லிவிட்டார்கள் .அமைப்புகளும் மெல்ல நிலைமையை நாடி பிடித்து பார்த்து நிகழ்ச்சிக்கு கை ஓங்குவதை அறிந்து அது நடத்தலாம் தவறில்லை என்ற ரீதியில் அறிக்கைகளை விட தொடங்கிவிட்டார்கள் .

அவசரப்பட்டு ஆடு அறுக்க முதல் அதற்கு நின்றவர்கள் துவங்கி விட்டோம் இனி பின் வாங்க கூடாது என்பதற்காக முக்கி முனகிக்கொண்டு நிற்கின்றார்கள் .

எல்லாமே பணமும் இருப்பும் தான்.

[size=1]சொல் ஒன்று நீக்கம்[/size]

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

1. இன்று நேரடியாகவே பல அமைப்புகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு பணம் அனுப்பும் வசதி இருக்கும் போது, இத்தகையை நிகழ்ச்சிகளின் மூலம் பணம் பெறப்படல் மூலம் எதனை பெரியளவில் சாதிக்க போகின்றனர். டிக்கெட் அடிப்பதற்கான செலவு, அரங்கத்துக்கான செலவு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான செலவு (அலங்கரித்தல், ஆடைகள், போக்குவரத்து என்ற இன்ன பிற) போன்றவை போக எவ்வளவு பணம் மிஞ்சப் போகின்றது? அதில் எத்தனை பங்கு ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லப் போகின்றது?

2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றுக்கு கொடுக்கும் பணத்தில் வெறுமனே 25 வீதம் கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில்லை எனும் போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக இணைக்காமல் (நேசக்கரம் போன்று) ஏன் இப்படியான நிகழ்ச்சிகளின் மூலம் பெறப்படுகின்றது? கனடாவில் உள்ள பல ஊர்ச்சங்கங்கள் நேரடியாக நிதி சேகரித்து அங்குள்ள சனசமூகம். பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக நேரடியாக உதவி செய்யும் போது தமிழ் அவைக்கு ஏன் இப்படியான நிகழ்வுகள் அவசியமாகின்றன?

3. பணம் பெறப்பட்டு அது எவ்வாறு எவரின் ஊடாக ஈழத்துக்கு அனுப்பப்படும்? இலங்கை அரசின் அமைப்புகளின் ஊடாகவா அல்லது சர்வதேச நலன் அமைப்புகளின் ஊடாகவா? அது இலங்கை அரசின் அல்லது உளவுத் துறையின் கைகளில் வீழாது என்பதற்கான உத்தரவாதம் என்ன?

4. மிக முக்கியமாக இந்த நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைகின்றது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்?

5. இவ்வாறான நிகழ்வு வைக்க தமிழ் அவைக்கு எங்கிருந்து நிதி யாரால் எப்படித் தரப்படுகின்றது?

இது ஒரு வெறுமனே வர்த்தக நிகழ்வு என்றால் கண்டிப்பாக இப்படியான கேள்விகள் மனதில் எழாது, ஆனால் ஊர் மக்களுக்கு உதவுகின்றேன் என்று கூறுகின்றமையாலேயே நாம் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டிய தேவையை உணருகின்றோம்.

நன்றி

அது ...அது ....அது............அந்தக்கேள்வி, விழிப்புணர்வு, அவதானம் ...இதுதான் எமது ஒவ்வொரு விடயத்திலும் இருக்கவேண்டும் ........அன்று ...இது இல்லாமல்தான் எமக்கிடையே இன்று இவ்வளவு பிணக்குகளும் ..........இதன் ,இந்த மறை உண்மையின் nimiththame இந்த thiri இவ்வளவு நீண்டு போனது ............இதனை அர்த்தத்தை உணராதவர்களே ,புரியாதவர்களே

இளையராயா என்னும் மாபெரும் கலஞ்சனை இதற்குள் இழுத்தி தம் வாதங்கள் வெல்ல அவரை பாவித்தார்கள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.....

Link to comment
Share on other sites

சொப்னா,

சிலோன் தமிழர் என்று எங்களை அழைப்பதை தவிருங்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம்.

உங்க ஆசைய மதிக்கிறேங்க சபேசன் அண்ணன் . ஆனா நீங்க ஒண்ண புரிஞ்சிக்கணும் , இப்போ றீசண்டாதான் மீடியாவில உள்ளவங்க உங்களைய " ஈழத்தமிழர்ன்னு " சொல்றாங்க . சாதாரண கிராமத்தாளுங்களுக்கு சிலோன் ஆளுங்கன்னாதான் புரியும் . இப்போ கூட குன்னூர்ல கொஞ்ச ஃபமிலி இருக்காங்க சிலோன் ஆகளுங்கன்னாதான் மத்தவங்களுக்கு புரியும் . உங்க ஃபீலிங்சை புரிஞ்சுகிட்டு இனிமே ஈழத்தமிழர்ன்னு சொல்றேங்க . ஓக்கேயா சபேசன் அண்ணன் :) :) .

Link to comment
Share on other sites

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.
[/size]

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவை [/size][size=4]ஒரு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு. இதற்கு வாக்குகள் அளிக்காதவர்களும் அழித்தவர்களும் இவர்களின் தொடர்பு இலக்கத்தை அழைத்து தமது சந்தேகங்களை கேட்கலாம்.[/size]

[size=4]தனிப்பட்ட ரீதியில் இவர்கள் மீது பூரண நம்பிக்கை உள்ளது.[/size]

Link to comment
Share on other sites

நீங்க என்ன வேண்டுமானாலுலும் எழுதுங்கள் சொப்னா.

இன்றையநிலையில் நாங்க திருப்பி ஏதும் உங்கள் மனம் புண்பண்ணும்படியாக எழுதமாட்டம்

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........???

நீங்க கூட சிலோன் தமிழர் என்று வரிக்கு வரி எங்களை ஈட்டியால குத்திபோதும் நாங்க நாங்க ராமர் தடியில் மிதிபட்ட தவக்கையாக மௌனமாகத்தான் இருக்கின்றோம்.

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........??? :( :( :(

என்னங்க விசுகண்ணன் இப்புடி இமோர்சன் ஆகிறீங்களே ?? நான் கிராமத்து பெண்ணுங்க . எங்களபோல யங்ஜெனரசேனோட தார்மீக ஆதரவு எப்போதுமே உங்களுக்கு இருக்குங்க . பட் றீசண்டா தமிழக மக்கள கேவலப்படுத்திற மாதிரி கருத்துங்க யாழ் கருத்துகளத்தில வந்திட்டு இருக்கு . தமிழ்நாட்டில யாழ் இணையத்துக்குன்னு ரெம்ப உயர்வான இடம் இருக்கு . அதை தமிழக விரோத கருத்துக்கள போட்டு உடைச்சிடாதிங்க அண்ணனுங்களா அக்காளுங்களா :( :( .

Link to comment
Share on other sites

என்ன பேசுறிங்க அண்ணா இளையராஜா உட்பட அவளவு இசைக்குலினரையும் கொண்டு வரவே 100000 வந்திருக்கும் அவியல் hotel ல நிக்குறது உட்பட

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.[/size]

[size=4]இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?[/size]

[size=4]இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. [/size]

[size=4]அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.[/size]

[size=4]கனடாவின் [/size]The Globe and Mail இல் Oct 24 வந்தந்து..

[size=4]Fast-growing firms face office-space crunch[/size]

Three years ago, Dunstan Peter launched a business in the basement of his home in suburban Brampton, Ont.

Two moves to larger office spaces later, he has 120 employees and an aggressive expansion plan, and he’s negotiating to buy his own commercial building on the west side of Toronto.

“I never could have foreseen how fast we would be growing,” says Mr. Peter, president and chief executive officer of the green energy, automation and quality control company Trinity Tech Inc.

http://www.theglobeandmail.com/report-on-business/small-business/starting-out/fast-growing-firms-face-office-space-crunch/article4637888/

TVIஇல் வந்த பேட்டி.

நாமெல்லாம் இலங்கை தமிழராம்!

Link to comment
Share on other sites

[size=4]கனடாவின் [/size]The Globe and Mail இல் Oct 24 வந்தந்து..

[size=4]Fast-growing firms face office-space crunch[/size]

Three years ago, Dunstan Peter launched a business in the basement of his home in suburban Brampton, Ont.

Two moves to larger office spaces later, he has 120 employees and an aggressive expansion plan, and he’s negotiating to buy his own commercial building on the west side of Toronto.

“I never could have foreseen how fast we would be growing,” says Mr. Peter, president and chief executive officer of the green energy, automation and quality control company Trinity Tech Inc.

http://www.theglobea...article4637888/

நாமெல்லாம் இலங்கை தமிழராம்!

[size=4]இங்கே இந்த செய்தியின் மூல காரணி ஒரு பெரிய விற்பனை முகவர் அமைப்பு - [size=5]Cushman & Wakefield. [size=4]சரிந்து வரும் பொருளாதார நிலையில் தமது வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை பயன்படுத்தி உள்ளார்கள்.[/size][/size][/size]

[size=4]அடுத்து இந்த 'தமிழர்' : டன்ச்டர் பீட்டர். இவரை தமிழ் சமூகம் முன் பின் அறிந்திருக்கவில்லை. அதேவேளை ஒரு நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, நூற்றி இருபது பேரளவில் வேலைக்கு அமர்த்தி இப்பொழுது தமக்கென ஒரு இடத்தையும் வேண்டுவது என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை.[/size]

[size=4]அதேவேளை இவர் எமது மக்களை அவர்கள் இசை விருப்பத்தை தனது சுய இலாபத்திற்கு பாவிப்பதுடன் சமூக வளர்ச்சிக்கும் உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இங்கே இந்த செய்தியின் மூல காரணி ஒரு பெரிய விற்பனை முகவர் அமைப்பு - [size=5]Cushman & Wakefield. [size=4]சரிந்து வரும் பொருளாதார நிலையில் தமது வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை பயன்படுத்தி உள்ளார்கள்.[/size][/size][/size]

[size=4]அடுத்து இந்த 'தமிழர்' : டன்ச்டர் பீட்டர். இவரை தமிழ் சமூகம் முன் பின் அறிந்திருக்கவில்லை. அதேவேளை ஒரு நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, நூற்றி இருபது பேரளவில் வேலைக்கு அமர்த்தி இப்பொழுது தமக்கென ஒரு இடத்தையும் வேண்டுவது என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை.[/size]

[size=4]அதேவேளை இவர் எமது மக்களை அவர்கள் இசை விருப்பத்தை தனது சுய இலாபத்திற்கு பாவிப்பதுடன் சமூக வளர்ச்சிக்கும் உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.[/size]

இப்ப அவர் நடத்துறார் என்பது பிரச்சனையா இல்லை மாவீரர் மாதம் என்பது பிரச்சனையா?

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

அது கனடா நாட்டு அதிகாரிகளின் கவலை அதுக்கும் மாவீரர் மாதத்துக்கும் என்ன தொடர்பு?

Link to comment
Share on other sites

[size=4]

[/size]

[size=4]இந்த நிகழ்ச்சி கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் நடப்பதில் தனிப்பட்டரீதியில் ஆட்சேபணை இல்லை.

இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.

http://www.trinitytechinc.ca/

இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது. இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?

இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. பொதுவாக இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது இலகுவான விடயம் இல்லை. முன் பின் அனுபவம் இல்லாதவர்கள் நடாத்த முடியாது.

எனவே ஒரு பொறியியல் நிறுவனம் என்னென்று இசை நிகழ்ச்சியை நடக்க முனைந்தது? எவ்வாறு இது சாத்தியம் ஆகும்? அதாவது இந்த நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பலமான ஆதரவு இருக்கவேண்டும்.

அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.

பலம் பொருந்திய மிகவும் கெட்டித்தனமான சிங்கள எதிரிகள் எம்மை பிளவுபடுத்தக்கூடிய வகைகளை ஆராய்ந்தே திட்டம் தீட்டுவார்கள்.

இவ்வாறு அவர்கள் எம்மை பிரிக்க தேர்ந்து எடுத்த ஒன்றுதான் 'இசை'. இறுதியாக உன்னி கிருஷ்ணன் யாழ் சென்றதும், அங்கு டக்ளசால் பொன்னாடை போர்த்தப்பட்டதும், பின்னர் அவர் மன்னிப்பு கோர நாமும் மன்னித்ததும் சரித்திரம்.

[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

அப்படியென்றால் கனடாவில் நிறையக் கறுப்புப் பணங்கள் புழங்குகின்றது! போராட்ட காலத்தில் அதிகம் பணம் சேர்த்தவர்கள் அதனை "நல்ல பணமாக" மாற்றுவதற்கான பேர முயற்சி தோல்வியால்தான் திரி இத்தனை தூரம் நீண்டிருக்கின்றதோ?

நிழச்சி ரத்து, இளையராஜா வந்துவிட்டார்/வரவில்லை என்று நிறையக் குழப்பங்களை ஏற்படுத்தி எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்ற நிலைக்கு இறங்கிவந்தாயிற்று. ஆட்டத்தை தொடருங்கள். ^_^

Link to comment
Share on other sites

[size=4]கருப்பு பணம் இந்தியாவிலும் இருந்தும் இல்லை சிங்களத்தில் இருந்தும் வரலாம்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணம் இந்தியாவிலும் இருந்தும் இல்லை சிங்களத்தில் இருந்தும் வரலாம்.[/size]

அதாவது இந்த நிகழ்ச்சி இந்திய-இலங்கைக் கூட்டுச் சதி என்று ஒரு குச்சியைக் கொளுத்திப் போடுகின்றீர்கள்.. இன்னும் நிறைய கொளுத்திப் போடுங்கள்..

----------

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

--------------

Link to comment
Share on other sites

[size=4]யாவும் கருத்து சுதந்திரமே [/size]

[size=4]இதை ஏற்றே இங்கே இணைந்துள்ளோம்[/size]

[size=4]இந்தப்பழம் புளிக்க கூடாது![/size]

[size=4]கருப்பு பணம் இந்தியாவில் இல்லை சிங்களத்தில் வராது என முடிந்தால் நிரூபியுங்கள் :D [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணம் இந்தியாவில் இல்லை சிங்களத்தில் வராது என முடிந்தால் நிரூபியுங்கள் :D [/size]

என்ன சொல்லுகின்றீர்கள்? ஒரு குடும்ப உறுப்பினரை ஸ்பொன்ஸர் செய்யவே சரியான ஆதாரத்தோடு பணம் உள்ளதைக் காட்டவேண்டும். நூற்றுக்கு மேற்பட்ட குழுவினரை வரவழைக்க ஸ்பொன்ஸர் கனடாவில் இல்லாமல் இந்தியா/இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகின்றது என்று சொல்லமுடியுமோ?

இல்லையென்றால், இந்தியா/இலங்கையிலிருந்து கறுப்புப் பணத்தை கனடாவுக்கு அனுப்பி வெள்ளையாக்க முயல்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்களா?

ஒரு சின்ன முதலீட்டுக்கே சொற்ப பணம் அனுப்பும்போது கனடாக்காரர் அந்தப் பணம் எப்படி வந்தது என்று சில்லுக் கழட்டுகின்றார்க்ள்....

தமிழ் மக்களை எப்போதும் சொந்தமாகத் சிந்திக்கமுடியாத மந்தைக் கூட்டம் என்று நினைக்கும் மேய்ப்பர் குணம் இருப்பதால் எழுந்தமானத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்று நினைக்ககூடாது.. :)

Link to comment
Share on other sites

பலரது உண்மை முகங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க கூடியதாகிவிட்டது .

Link to comment
Share on other sites

பலரது உண்மை முகங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க கூடியதாகிவிட்டது .

:D விழுந்து விழுந்து சிரிக்கிறேன் :D ...............

Link to comment
Share on other sites

Trinity Events - http://www.facebook....212526588875765

Trinity Events regretfully informs that due to very recent unforeseen severe weather conditions in Chennai (India) and North America , the “Engeyum Eppothum Raja” scheduled for November 3rd has been postponed. The postponement comes as a result of severe impact on the travel arrangements and to ensure the safety of the entire crew coming to attend the show.

“We are sincerely apologetic to the fans for any inconvenience caused and we are doing everything we can to announce the new date as soon as possible".

Official Press release from Trinity Events will be held tonight and further details will be provided in regards to ticket purchases.

Thank you for your co-operation and stay tuned for more updates.

Link to comment
Share on other sites

[size=4]நன்றி பூச்சாண்டி. [/size][size=4]இதை உத்தியோகபூர்வ செய்தியாக எடுக்கலாம். [/size]

[size=4]இயற்கை அன்னை வட அமெரிக்காவிலும் தமிழகத்திலும்/தமிழீழத்திலும் ஒரே நேரத்தில் சீற்றமாக இருக்கின்றாள். அவளை யாரும் வெல்ல முடியாது.[/size]

Link to comment
Share on other sites

Trinity Events regretfully informs that due to very recent unforeseen severe weather conditions in Chennai (India) and North America , the “Engeyum Eppothum Raja” scheduled for November 3rd has been postponed.

அப்படி நடந்தால் இயற்கைக்கு நன்றி சொல்வேன்.... :D

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு விசையம் விளங்கேலை .......... ஒருக்கால் இந்த அறிவு குறைஞ்சவனுக்கு விளக்குவியளோ ?????? என்னண்டால் இந்த இயற்கை அன்னை 2009 மே மாசம் எங்கை போனவள் ????? எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கேக்கை!!!!!

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு விசையம் விளங்கேலை .......... ஒருக்கால் இந்த அறிவு குறைஞ்சவனுக்கு விளக்குவியளோ ?????? என்னண்டால் இந்த இயற்கை அன்னை 2007 மே மாசம் எங்கை போனவள் ????? எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கேக்கை!!!!!

எல்லாரும் ரவுண்டு கட்டி அடித்தது 2009 மே மாசம் என்பது மறந்துவிட்டது போலிருக்கு. :) இயற்கை அன்னை அப்ப விட்ட பிழையை இனியாவது திருத்திக்கொள்ளட்டும்... :)

Link to comment
Share on other sites

எல்லாரும் ரவுண்டு கட்டி அடித்தது 2009 மே மாசம் என்பது மறந்துவிட்டது போலிருக்கு. :) இயற்கை அன்னை அப்ப விட்ட பிழையை இனியாவது திருத்திக்கொள்ளட்டும்... :)

மிக்க நன்றி திருத்தம் செய்யப்பட்டுள்ளது :) .

Link to comment
Share on other sites

ஆனால் நிகழ்ச்சி நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஒரேயொரு ரசிகர் இருந்தாலும் கச்சேரி நடத்துவேன் என்றார் இளையராஜா.

இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டி புயல் தீவிரமடைந்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டதால் இளையராஜாவின் கனடா பயணம் ரத்து செய்யப்பட்டது. இசைக் கலைஞர்களும் போகவில்லை.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "சான்டி புயல் பாதிப்பு காரணமாக, எனது பயணம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை வேறு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாமல் வந்து எப்போதும் போல ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

இசை நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

That's Tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.