Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

[size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size]

[size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size]

[size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது இலட்சியம் என்ற கொள்கை வரித்துக்கொண்ட இந்த மாவீரர்கள் தமது மக்களையும் மண்ணையும் அவ்வளவுக்கு நேசித்தார்கள். தங்களது இறப்பின் ஊடாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தவேண்டும். அந்த வலியில் ஆக்கிரமிப்பாளன் எமது தேசத்தை விட்டகலவேண்டும் என்ற கொள்கையுடன் தேசத்துக்காக உயிர் நீத்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]அவர்கள் தங்களது வாழ்வை பற்றிக்கவலைப்படவில்லை. தங்களது ஆசா பாசங்களை பற்றி கவலைப்படவில்லை. தமக்கு விடுதலைவேண்டும் என்றுகூட ஆசைப்படவில்லை. அடுத்தகணம் உயிர்துறப்பதற்கு தயாராகி கந்தகசுமையுடன் எதிரியுடன் மோதத்துணிந்தவர்கள் தமக்கு விடுதலைவேண்டும் என்ற போராடவில்லை. தமது மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலைவேண்டும் என்ற இலட்சியத்துடனேயே போராடினார்கள்.நெஞ்சிலே குண்டேற்று வீழ்ந்தார்கள். [/size]

[size=4]எமது தேசத்தின் ஆன்மாவையும் தேசியத்தின் உறுதியையும் இனத்தின் வெற்றியையும் இன்று பாரெங்கும் உள்ளவர்கள் உற்றுப்பார்த்து உறைந்து போயுள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த மாவீரர்கள். வீரம் செறிந்தது தமிழினம் என்று எட்டுத்திங்கும் பறைசாற்றிவிட்டு சென்றவர்கள் இவர்கள். எமது இனத்துக்கு ஒரு விடிவை சிங்களதேசம் வழங்க மறுப்பினும் சர்வதேசமும் அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எழுதாத விதியை தமது உயிரால் எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தமிழீழ தாகத்தையும் விடுதலைப்புலிகளையும் ஒற்றைச் சொற்களுக்குள் அடக்கிவிடமுடியாது என்ற உண்மையை உலகஅரங்கிலே இன்று இந்த மாவீரர்களின் இறப்பு எழுதிச்சென்றிருக்கிறது. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடி இறந்திருக்கிறார்கள் என்றால் அதனை எவருமே ஒரு கிள்ளுக்கீரையாக ஒதுக்கிவிடமுடியாது. ஒரு இனம் தனது நியாயமான உரிமைகளையும் அபிலாஷைகளையும் வேண்டி சத்தியத்தின்வழி நின்று போராடியது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த இனத்தின் வேண்டுதலை நிறைவுசெய்யவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்திச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்று வித்தியாசமான பரிமாணத்தை எடுத்திருக்கிறது. இந்த மாவீரர்களின் மீது சத்தியம் செய்து அவர்களின் இலட்சியக்கனவுகளை அமைதிவழியில் சென்று அடைவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லல்படும் எமது மக்களுக்கு அமைதிவேண்டும் என்றும் அவர்களுக்கு அவர்களது உரிமைகள் வேண்டும் என்பதே மாவீரர்கள் அவா. நிறைவேறாத அவர்களது ஆசையை நாங்கள் நிறைவேற்றவேண்டிய வரலாற்று பொறுப்பாளிகளாக நாங்கள் இங்கு நின்றுகெண்டிருக்கிறோம். விதைகுழியில் தூங்குகின்ற மாவீரச்செல்வங்களின் நெஞ்சிலே கனன்ற இலட்சிய நெருப்பு எமது நெஞ்சிலும் எரியவேண்டும். அவர்களை போல கழுத்திலே நஞ்சுடன் களத்தில் நின்று போராடவேண்டிய தேவை இன்று இல்லை. அவர்களது இலட்சிக்கனவை நாங்கள் பொறுப்பேற்று விடுதலைக்காக அவர்கள் அமைத்த உறுதியான பாதையில் பயணம்செய்தாலே, அவர்களின் கனவுக்கு உரமூட்டும் பாரிய பணியாக அமையும்.[/size]

[size=4]சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.[/size]

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்.[/size]

[size=4]-பகலவன்[/size]

http://www.tamilleader.com/mukiaya/7596--21-27-.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்[/size].

உறுதி எடுத்துக்கொள்வோம்.

[size=4]

சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.
[/size]

[size=4]தொடர்ந்து சர்வதேசம் ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெற ஒற்றுமையாக பயணிப்போம். [/size]

[size=1]

[size=4]"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உறுதி எடுத்துஒற்றுமையாக பயணிப்போம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நடந்து செல்லும், கரடு முரடான பாதையில், ஒரு மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம்!

இன்னும் ஒரு சில காலத்திற்கு நகர்த்தப் படவேண்டிய, நகர்வுகளிலேயே, எமது தலைவிதி தங்கியுள்ளது!

மாயை, தனது பல முகங்களை, இனித் தான் கடுமையாகக் காட்டும்!

அதனை அடையாளம் கண்டு, பயணிப்போம்!

3911_350481391714097_1964048894_n.jpg

[size=4]மாவீரர் தமிழீழ மண்ணில் எழுதினரே மந்திரம்

அதை புலத் திசையாவும் மீட்டனரே

எம் எதிர்கால தலைமுறையினர்

மலை போன்ற உறுதி ஐயா உம்மிடம்

எங்கள் மனதெல்லாம் உம நினைவின் செம்தடம் .....[/size]

[size=5](முகநூல்) [/size]

காலம் கனிந்து வரும் கார்த்திகையை மூட வந்த கார் மேகங்கள் விலகும்.

பல மதங்கள் கொண்டாடும் இந்த ஒளிமாதம் முழுவதும் ஒரு நாள் ஒரு தனி திருநாளாக மலரும்.

அன்று வரை ஒரே நோக்காக, ஒரே இனமாக போராடி தமிழீழம் அமைப்போம்.

தமிழ் மக்களை கருத்தில் கொண்டு, சிங்களத்தை பொது எதிரியாக கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.